Monday, December 30, 2013

இந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..

                 


                       நான் பொதுவா என் காரிலேயே குறைவா யூஸ் பண்றது ரிவர்ஸ் கியர் தான். ஏன்னா முன் வச்ச டயர பின் வைக்க வேண்டாமேன்னு தான். நம்ம 'வாத்தி' ராஜா "திரும்பிப் பார்க்கிறேன்" ன்னு சொன்னதும் நான் வருடக் கடைசில எழுதிக்கலாம்ன்னு அப்படியே விட்டுட்டேன்..  நேத்து ட்ராப்ட்ல பார்த்தப்போ தான் இதை மறந்துட்டஞாபகம் வந்தது. அது என்னன்னு பார்ப்போம்.  இந்த வருடம் ஆவிக்கு நிறைய 'சம்பவங்கள் நிறைந்த வருடமாக' (Eventful Year - Translation அது!).இருந்தது.


                      வருடத் துவக்கத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்த கடவுளின் திரைப்படம் சில அரசியல் காரணங்களுக்காய் தடை செய்யப்பட்டு, அதை காணவேண்டி கோவையிலிருந்து நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து கேரளா சென்று படம் திருப்தி அடைந்தேன். அதே சமயத்தில் என் வாழ்வில் நானும்  ஒரு மீள முடியாத சோகத்தில் இருந்த போது தான் "திரைக்கடவுள்" படத்தை வெளியிடாவிட்டால் நாட்டை விட்டே போவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடே துணை நின்றது. எனக்கு ஆதரவாக பாஸ்கர், ஆனந்த குமார் இருவரும் நின்ற போது இடிந்து போகாமல் பிடித்து நிற்க முடிந்தது. உற்ற துணையாய் நின்ற 'SAM' என்கிற சமீரா  என் வாழ்வில் எனக்கு கிடைத்த அற்புதமான தோழி.


                     புண்ணிய ஸ்தலமான வெள்ளியங்கிரி பயணம் கோவை நேரம் ஜீவா, ஆனந்தகுமார், உதய் ஆகியோருடன் சென்று வந்தது மனதுக்கு இதம் தந்தது. தங்கையின் திருமண வேலைகள் என்னை பிஸியாக வைத்திருந்தது. கல்யாணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் என் வீட்டிற்கு வலது "டயர்" எடுத்து வைத்து உள்ளே வந்தாள் அனாமிகா. (Hyundai i20) அமெரிக்காவில் "இன்பினிட்டி" என்று ஒரு சொகுசு கார் உண்டு. அதில் இருந்த எல்லா வசதிகளும் அனாமிகாவில் இருந்தது கண்டு அதிசயித்தேன். தங்கையின் திருமணம் விமரிசையாக குருவாயூர் கோவிலில் நடந்தது. வாத்தியாரின் (பாலகணேஷ்) கோவை வருகை மகிழ்ச்சி தந்தது. கவியாழி ஐயாவின் வருகையும் சந்திப்பும் கோவையில் நடைபெற்றது. புலவர் ஐயா வீட்டில் வைத்து சில இணைய நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி கொடுத்தது. குறிப்பாக அன்று அறிமுகமான மஞ்சுபாஷிணி அக்காவின் அன்பும் பாசமும் மெய்சிலிர்க்க வைத்தது. கவிஞர் மதுமதி மற்றும் சேட்டைக்காரன் ஐயாவையும் அன்று சந்திக்க முடிந்தது.



                     நண்பர்களுடன் குற்றாலம் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். வரும் வழியில் திண்டுக்கல் தனபாலன் அவர்களை சந்தித்த அனுபவம் இனிமை. நண்பர் ஜீவாவுடன் (கோவை நேரம்) முதன் முதலாய் நீச்சல் குளத்திற்கு சென்று ஆழம் தெரியாமல் காலை விட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த அனுபவம் மறுபிறப்பை போல் உணர வைத்தது. அதைத் தொடர்ந்து நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நண்பன்/உறவினன் பிரகாஷ் சவுதியிலிருந்து திரும்பியது இன்னும் உற்சாகத்தை கூட்டியது. இருவரும் தியேட்டர்கள், உணவகங்கள், மால் என பல இடங்களுக்கும் சுற்றி பால்ய கால நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டோம். அதே ஜோரில் இருவரும் கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் முப்பது கிலோமீட்டர் வேகத்திலும், எதிரே வாகனங்கள் எதுவும் வராத போதும் விபத்தில் சிக்கிய போது "விதி" என்ற ஒன்றின் மேல் நம்பிக்கை வந்தது.


                     அடிபட்டு ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டு போடும்போதும் அலப்பறைகள் விட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ரெண்டு கைலையும் எலும்பு நொறுங்கியிருக்கு எப்படி சிரிச்சு சிரிச்சு பேசறீங்க என்று சுற்றி நின்ற சிஸ்டர்களிடம் இதை விட பெரிய காயங்கள் ஏற்கனவே தாங்கிக் கொண்டதால் இது மிகவும் சிறியதாக தோன்றுகிறது என்று நான் கூறவில்லை. ஆஸ்பித்திரியில் இருந்த சமயத்தில் அன்புடன், ஆதரவுடன் போன் செய்தும், நேரில் வந்தும் என்னை உற்சாகப்படுத்திய நண்பர்கள், இணையத் தோழர்கள், முகநூல் அன்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்.


                    ஒரு மாதம் வீட்டிற்குள் கழித்த நேரத்தை பதிவர் சந்திப்பு பாடல் எழுதி பயனுள்ளதாய் மாற்றிக் கொண்டேன். பதிவர் சந்திப்பு விழாவிற்கு முன்னரே சென்று உதவ எண்ணியிருந்த நினைப்பு நிறைவேறா விட்டாலும் சந்திப்பிற்கு பத்திரமாக சென்று வர உதவிய நண்பர்  ஜீவா, கலாகுமரன் சார், எழில் மேடம், அகிலா மேடம், கோவை சதீஷ் ஆகியோருக்கு நன்றிகள். பதிவர் சந்திப்பில் அதுவரை தொலைபேசியிலும் இணையத்திலும் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த சீனு, ரூபக், ஸ்கூல் பையன், அரசன், ராஜி அக்கா, "தீவிரவாதி" சதீஷ், ரேவதி சதீஷ், "தென்றல்" சசிகலா, ரமணி ஐயா, KRP செந்தில், "தளிர்" சுரேஷ், 'தமிழ்வாசி பிரகாஷ், 'ராஜபாட்டை' ராஜா, 'இரவின் புன்னகை வெற்றிவேல்', ஆரூர் மூனா செந்தில்,  நீண்ட நாள் பதிவுலக நண்பர் குடந்தையூர் சரவணன், ரஞ்சனி அம்மா, அப்துல் பாசித்  திண்டுக்கல் தனபாலன்,உணவுலகம் ஆபிசர் சங்கரலிங்கம்,  ஆகியோரை கண்டது மகிழ்ச்சி. சுப்பு தாத்தாவை கண்ட போதும் அளவளாவ முடியாமல் போனது வருத்தமே. (இன்னும் பலரை சந்தித்த சந்தோசம் மனதில் உண்டு, இங்கு குறிப்பிடாமல் மறந்து இருந்தால் மன்னிக்கவும்.)




                    சந்திப்பின் பிறகு "வாத்தியார்" என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டதும், சீனு, ரூபக் போன்றோர்கள் நண்பர்களாக ஏற்றுக் கொண்டதும், என்னை அண்ணனா காயத்ரி (ஜி.டி) தத்து எடுத்துக் கொண்டதும் சந்தோஷமான நிகழ்வுகள். என் எழுத்துகளுக்கு ஊக்கம் கொடுத்து பல பதிவுகள் எழுத ஆதரவு அளித்த அனைத்து வாசகர்களுக்கும் குறிப்பாக, வடிவு பாஸ்கர், நண்பன் ஜெயராஜ் ஆகியோருக்கு நன்றிகள். வருடக் கடைசியில் வந்த "சென்யோரீட்டா" (மஹிந்த்ரா செஞ்சுரோ) சந்தோஷங்களை இரட்டிப்பாக்கியது. நான் நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட "கடவுள் எனும் கோட்பாடு" பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன். அருண், அகிலா மற்றும் விக்கியுடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி.




                    உலக சினிமா ரசிகன் அவர்களுடன் கோவையிலும், சென்னையிலும் (உலக சினிமா திருவிழா) பார்த்த படங்கள் குதூகலம் மட்டுமல்லாது அவர் என்னுடன் பகிர்ந்த சினிமாவின் நுணுக்கங்கள் பற்றிய அறிவும் அளப்பரியது. முகநூலில் இவருடைய சொல்லாடல்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். டிசம்பரில் சீனுவின் வருகை உவகை அளித்தது. இந்த வருடம் பல சோகங்களையும், சந்தோஷங்களையும் கொடுத்திருந்தாலும் அது சிறப்பானதாகவே உணர்கிறேன். அடுத்த வருடம் எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.. வாசகர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!!

H A P P Y   N E W   Y E A R   -    2 0 1 4  !!!







Thursday, December 26, 2013

ஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி!



                 
                               நீண்ட நாட்களாய் பூட்டிக் கிடந்த ஆவி's கிச்சனின் கதவை தட்டித் திறந்து விட்ட 'அந்த' பிரபல பதிவருக்கு நன்றிகள் பல கூறிக் கொண்டு ஒரு முக்கிய விஷயத்தை சொல்ல விழைகிறேன். சுடு தண்ணி வைப்பது எப்படி என்பதை சிறுவயதில் Physics கிளாஸில் லேப் எக்ஸ்பெரிமென்ட் செய்யும் போது மல்லிகா டீச்சரின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்த பசங்க எல்லாம் பதிவாய் போடுவதை பார்த்த போது பாரதிக்குப் பின் நெஞ்சு பொறுக்காமல் போனது எனக்குதான்! அந்தப் பதிவ படிச்சுட்டு யாரும் "பாதரச மானி" ய உள்ள விட்டு பார்த்து "பாத விஷ பானி" ய உருவாக்கிடக் கூடாதே ன்னு ஒரு நல்ல எண்ணத்துல தான் இந்த பதிவ சுடச்சுட எழுதறேன்..!

                                 
 சுடு தண்ணி 
முன்குறிப்பு: 
                      
                           பாய் கடையில ஈசியா பரோட்டா போடறாங்க ங்கிறதுக்காக பரோட்டா போடறது எப்படி ஈசி கிடையாதோ, அது போல தான் சுடு தண்ணியும். நாம கேட்டவுடனே அம்மாவோ, மனைவியோ இல்ல பல வருஷம் கிச்சன் கில்லாடியா இருந்த அப்பாவோ சில நிமிஷத்துல போட்டுக் கொடுத்தாங்க ங்கறதுக்காக அதை ஈஸியான வேலையா நினைச்சிட கூடாது. சைக்கிள் ஓட்டும் போது தள்ளிப் பழகறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமையலில் சுடுதண்ணி வைக்கப் பழகுவது. அதை "முறையா" எப்படி வைக்கிறது ன்னு இங்கே பார்ப்போம்..



தேவையான பொருட்கள்:
                              

சென்ற ஆவிஸ் கிச்சன் பதிவை படித்த என் வாசகர்களுக்கு இந்நேரம் அடுப்பு, லைட்டர் இத்யாதிகளெல்லாம் தெரிந்திருக்கும். அப்படி தெரியாதவர்கள் இங்கே கிளிக்கி தெரிந்து கொள்ளவும்.

ஒரு காப்பர் பாட்டம் பொருத்தப்பட்ட தட்டையான அடி உள்ள பாத்திரம். (எரிபொருள் மிச்சப் படுத்த)

தண்ணீர் உப்புத்தண்ணியோ நல்ல தண்ணியோ எதுவானாலும் பரவாயில்லை. ஏன்னா கொதிக்க வைப்பதே அதை சுத்தப்படுத்தி நம் உட்கொள்ளும் பொருளாய் மாற்றுவதற்கு தானே!

தண்ணீரின் அளவு பாத்திரத்தின் விளிம்பு வரை இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். இங்குதான் பெரும்பாலான "அப்ரசண்டிகள்" தவறு செய்கின்றனர். தண்ணீர் கொதிக்கும் போது விளிம்பு வரை இருந்தால் களிம்பு போடும் நிலை நமக்கு வரும்.. ஆகையால் சர்வ ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம்.

கருங்காலி வேர் (கேரள முறை)            

மிக்ஸர் (அ) பிடித்தமான நொறுக்குத் தீனி 


செய்முறை விளக்கம்: 
  1. பற்ற வைத்த அடுப்பின் மேல் பாத்திரத்தை வழக்கம் போல் அடி துடைத்து வைக்கவும்.
  2. கருங்காலி வேரைப் போடவும் (இது நம் ரத்தத்தை சுத்தம் செய்ய உதவும்)
  3. தண்ணீர் கொதிக்கும் வரை நேரத்தை வீண் செய்யாமல் அடுத்து செய்ய இருக்கும் சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்குவது, வெங்காயம் உரிப்பது போன்ற பயனுள்ள வேலைகளை செய்யலாம்.
  4. வேறு வேலை எதுவும் இல்லையென்றால் கொஞ்சம் மிக்ஸர் அல்லது உங்களுக்கு பிடித்தமான நொறுக்குத் தீனியை கொறிக்கவும்.
  5. அவ்வாறு செய்கையில் ஏதாவது படத்தின் கதையையோ, சீரியலையோ மனதில் அசை போடவும். ஏனெனில் "Idle Brain is the Devil's Workshop" என்றொரு பழமொழி உண்டு. சும்மா இருந்து நாமாகவே சாத்தானை கூப்பிடுவானேன்?
  6. சிறு வயதில் பபிள்கம் சாப்பிட்டு அதில் மொட்டு விட்டு களித்திருப்போம். அது போன்ற ஒரு மொட்டு மெல்ல பாத்திரத்தின் அடியிலிருந்து மேலே வரும். 
  7. ஒற்றை குமிழாய் இருந்தது கொஞ்சம் கொஞ்சமாய் பெருக்கமடைந்து கூட்டம் நிறைந்த கல்கத்தா வீதியில் அலையும் மக்கள் கூட்டம் போல் பல குமிழ்கள் பொங்கி வரும் போர்வீரர்கள் போல் பாத்திரத்தின் அடிப் பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு தங்களால் எப்படியும் வந்து சேர முடியும் என்று திடங்கொண்டு போராடி  மேலே வரும்.
  8. தண்ணி சூடானதை சோதனை கூடத்தில் வைத்து பரிசோதிப்பது போல பாதரச மானியெல்லாம் தேவையில்லை. தண்ணீரின் மேல்பரப்பில் குவிந்திருக்கும் எண்ணிலடங்கா குமிழ்களும், வெற்றிகரமாய் விண்ணைத் தொட புறப்படும் "ஆவியும்" தான் அளவுகோல். 
  9. அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சிறிது ஆற விடவும். (பச்சை தண்ணீர் கலந்து குடிப்பது தண்ணீர் சுட வைத்த நோக்கத்தையே வீணடித்து விடும்)
  10. சிறிது நேரம் கழித்து சுவையான சுடு நீரை குடித்து மகிழலாம். 

(மேற்சொன்ன வழிமுறைகள் குடிப்பதற்கான சுடு தண்ணி வைக்க மட்டும் தான். குளிக்க ஏதாவது ஒரு நல்ல ஹீட்டரை வாங்கி மாட்டிக்கிங்க, எரிவாயுவ வீணாக்காதீங்க. )
( பி.கு) : போதும் இத்தோட நிறுத்திக்குவோம். வேற யாரும் "நாங்களும் வெப்போம்லே சுடுதண்ணி" ன்னு ஒரு பதிவு போடாதீங்க.. நாடு தாங்காது.

                                                   **************

(இது என்னுடைய இருநூற்று ஐம்பதாவது பதிவு. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசக கண்மணிகளுக்கு என் கோடானு கோடி நன்றிகள்)


Wednesday, December 25, 2013

ஆவி டாக்கீஸ் - ஜில்லா (Music)


                           ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் இளையதளபதி விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருக்கும்  படம் ஜில்லா. டி.இமானின் இசையில் இப்படத்தின் பாடல்கள் எப்படி இருக்குன்னு இங்கு பார்ப்போம்..




                   1. "எப்ப மாமா ட்ரீட்டு" - இமான், பூஜா மற்றும் ஸ்னிக்தா குரலில் பார்ட்டி சாங் போல் இருக்கிறது. படமாக்கும் விதத்தில் ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

                    2.    இளையதளபதி விஜய், ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியிருக்கும் டூயட் பாடல் "கண்டாங்கி கண்டாங்கி" முதல் முறை கேட்கும் போதே பிடித்து போகிறது.விஜய் முன்பே பல பாடல்கள் பாடியிருந்தாலும் இதில் ஒரு தேர்ந்த பாடகரை போல் பாடியிருப்பது இன்னும் சிறப்பு. வைரமுத்துவின் வரிகள் பாடலுக்கு அழகு சேர்க்கிறது.

                   3."ஜில்லா Theme" -  வழக்கமான நாயகன் புகழ் பாடும் பாடல். மோகன்லாலுக்கும் சேர்த்து போட்டதாலோ என்னவோ ஆங்காங்கே செண்டை மேளம் கொட்டி மலையாள வாடையுடன் வாசித்திருக்கிறார் இமான். எப்பவும் போல விஜயின் இந்த அறிமுகப் பாடலையும் எழுதியிருப்பது  கவிஞர் விவேகா தான்!

                    4.  " வெரசா போகையில" -  பார்வதி எழுதியிருக்கும் இந்தப் பாடலையும் இமான் தான் பாடியிருக்கிறார். ஏனோ கும்கி பாடலை மீண்டும் கேட்பது போன்றிருக்கிறது. இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது.

                   5. சுனிதி சவ்ஹான் ரஞ்சித்துடன் இணைந்து பாடியிருக்கும் குத்து பாடல் "ஜிங்குனமணி". கிளைமாக்ஸுக்கு முந்தைய பாடலாக இருக்கலாம். தாளம் போட வைக்கும் இசை கண்டிப்பாக சி சென்டர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

                   6. சிம்மக் குரலுக்கு சொந்தக்காரர் ஷங்கர் மகாதேவனும், 'நம்ம' SPB யும் பாடியிருக்கும் பாடல் "பாட்டு ஒண்ணு". விஜய் மற்றும் மோகன்லால் இணைந்து திரையில் தோன்றும் பாடல் இது.
"சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா,
எதிர்க்க நின்னா எவனும் தூசுடா" 
                      வரிகள் நிச்சயம் இளைய தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.


                          தன் தனித்துவமான இசையால் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான இசை படைக்கும் இமான் இதிலும் அசத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

                     

Tuesday, December 24, 2013

ஆவி's டாப் 10 மூவீஸ் - 2013

                       2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் நான் ரசித்த திரைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த ஆண்டு பார்த்த மொத்த படங்களின் எண்ணிக்கை 116. (தமிழ் 58, ஆங்கிலம் 14, ஹிந்தி 13, தெலுங்கு 6, மலையாளம் 15 உள்பட)



ஒரே நாளில் அதிகபட்சம் பார்த்த படங்கள் 4. (சென்னை திரைப்பட விழாவில் பார்த்தது)

ஆவி's டாப் டென் 2013

5 வது இடம் 

           ஆரம்பம்       (தமிழ்)



           ஹரிதாஸ்    (தமிழ்)




           மூடர் கூடம் (தமிழ்)



           நேரம்             (தமிழ் / மலையாளம்)



           OLYMPUS HAS FALLEN (ஆங்கிலம் )






4 வது இடம் 

           BLUE IS THE WARMEST COLOR (பிரான்ஸ்)



           சிங்கம் II   (தமிழ்)




           SPECIAL 26 (ஹிந்தி)





3 வது இடம்

           சூது கவ்வும்     (தமிழ்)





           ராஜா ராணி     (தமிழ்)



           பாண்டிய நாடு (தமிழ்)



  
         
2 வது இடம்

           THE PAST  (பிரான்ஸ்)



           THE HUNT (டென்மார்க்)




           PARVIZ      (ஈரான்)\



           THE AMAZING CATFISH (மெக்ஸிகோ)




           செல்லுலோயிட்    (மலையாளம்)




           மும்பை போலிஸ் (மலையாளம்)



           ஓநாயும் ஆட்டுக்குட்டியும் (தமிழ்)



           விஸ்வரூபம்                           (தமிழ்)





முதலிடம்

          நார்த் 24 காதம் (மலையாளம்)



          GRAVITY               (ஆங்கிலம் )



          THE LUNCH BOX (ஹிந்தி)
         
                                     


* SHIP OF THESEUS, கேப்டன் பிலிப்ஸ், 5 சுந்தரிகள், திர, புண்ணியாளன் அகர்பத்திஸ் ஆகிய படங்கள் இந்த கவுண்ட் டவுனில் சேர்க்கப்படவில்லை..



Monday, December 23, 2013

ஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)


இன்ட்ரோ  
                          பிரம்மாண்டமாக படம் எடுத்து விட்டால் நாம் லாஜிக் மீறல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நம் இந்திய சினிமாவில் எழுதப் படாத ஒரு விதி. பொதுவாக அமீர்கானின் படங்களில் ஓரளவு எதார்த்தம் இருக்கும். பக்கா கமர்ஷியல் சினிமா என்பதாலோ என்னவோ பல வெள்ளைக் காக்கைகளை பறக்க விட்டிருக்கிறார் இயக்குனர்.



கதை         
                            தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாய் தவணை கட்டாத சர்க்கஸ் கம்பெனியை தன் வசம் எடுத்துக் கொள்ள ஒரு வங்கி முயல, கடைசியாக ஒரு "சிறப்பான" ஒரு மேஜிக் ஷோ செய்து காட்டி சர்க்கஸை தன் வசம் வைத்துக் கொள்ள ஜாக்கி ஷெராப் முயல, ஆனால் வங்கி அதிகாரி மேஜிக் ஷோ சர்க்கஸில் ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி நிராகரித்து சர்க்கஸை அபகரிக்க வருத்தத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறக்கிறார், இதை கண்ணேதிரே பார்த்துக் கொண்டிருந்த சிறுவயது அமீர்கான் அந்த சர்க்கஸை மீட்டெடுத்து அந்த வங்கியையும் திவாலாக்குகிறார்.. கைது செய்ய வரும் அமெரிக்க போலீசுக்கும், இந்திய சூரப்புலி போலிஸ் அபிஷேக் பச்சனுக்கும் எப்படி டேக்கா கொடுக்கிறார் என்பதே கதை.
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                                 அமீர், அமீர், அமீர்... படம் முழுக்க அமீர்கான் அன்றி வேறொன்றும் இல்லை. முந்தைய படங்களில் இவருடைய "மாஸ்டர் பீஸ்" களை ரசித்து விட்டதாலோ என்னவோ இதில் இவர் செய்யும் "மாஸ்" பீஸ்கள் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. தவிர முக்கியமான ஒரு ட்விஸ்ட் கிளைமாக்ஸுக்கு முன்பே உடைந்து விடுவதால் பின்பாதி கொஞ்சம் இழுவையாய் தெரிகிறது. (கிறிஸ்டோபர் நோலனின் ப்ரெஸ்டீஜ் படம் பார்த்தவர்களுக்கு அந்த ட்விஸ்டும் புஸ் தான்..) அபிஷேக் பேருக்குதான் சூரப்புலி ஆபிசர், ஒவ்வொரு முறையும் அமீரிடம் தோற்கும்போதும் நமக்கே பாவமாக இருக்கிறது.. கூட வரும் உதய் சோப்ரா முந்தைய தூம்களில் இவர் சேட்டைகளை பார்த்து விட்டதால் வெறுப்பு தான் மிஞ்சுகிறது.

                                  படத்தின் ஒரே ஆறுதல் கத்ரீனா கைப். "கம்லி" பாடலில் கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடத்திற்குள் ஜிம்னாஸ்டிக்குடன் இவர் போடும் அசத்தல் நடனம் அமீரின் மனசை மட்டுமல்ல நம்முடைய மனசையும் கவர்கிறது. கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் கத்ரினாவிடமிருந்து அமீர் லிப் டு லிப் பெறும்போது எல்லா இளவட்டங்களின் வெறுப்புக்கும் ஆளாகிறார். கயிற்றின் மேல் பைக் ஓட்டுவது, நாற்பது அடுக்கு மாடியின் மேலிருந்து ஒற்றை கயிற்றின் உதவியுடன் இறங்குவதும், பாலத்தை பறந்தபடியே தாண்டுவதும் மசாலா பட விரும்பிகளுக்கு அருமையான விஷுவல் ட்ரீட்.

இசை-இயக்கம்
                                 சுனிதி சவ்ஹான் பாடிய கம்லி மற்றும் தூம் டைட்டில் பாடலை தவிர வேறெந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. மூன்றாம் முறை தூம் படத்திற்கு இசையமைத்திருக்கும் ப்ரீத்தமின் பின்னணி இசை ஒகே. சுதீப் சாட்டர்ஜியின் அசத்தல் ஒளிப்பதிவு படத்திற்கு ப்ளஸ். விஜய் கிருஷ்ண ஆச்சார்யா படத்தை இயக்க நிச்சயம் உழைத்திருக்கிறார்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்தபடி நடனத்திலிருந்து அக்ரோபாட் மூவ்மேண்டுகளுக்கு மாறும் கத்ரீனாவின் அறிமுக காட்சி. பின் பாதியில் அமீர்கானின் உடல்மொழி. எழில் கொஞ்சும் சிகாகோ மாநகரம். (இவ்வளவு சொல்லிட்டு எங்க ஊரப் பத்தி சொல்லலேன்னா எப்படி)

                  Aavee's Comments - Hi-tech Masala.




ஆவி டாக்கீஸ் - வீரம் (Music)

                                                     

                       "ஆரம்பம்" பட வெற்றிக்கு பின் அஜித்குமார் தமன்னாவுடன் இணைந்து நடித்து அடுத்து வரவிருக்கும் தமிழ்ப்படம் "வீரம்". தேவி ஸ்ரீ பிரசாத் (DSP ) இசையமைக்க அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார் விவேகா. கிராமிய பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா வெள்ளியன்று வெளியிடப்பட்டது.

            1. இசையமைப்பாளர் DSP தான் இசையமைக்கும் எல்லா படத்திலும் நாயகனுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஒரு பாடலை  பாடி அசத்துவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். இதில் வரும் அறிமுகப் பாடல் "நல்லவன்னு சொல்வாங்க" அதிகம் இரைச்சல் இல்லாமல் நாயகனின் பெருமை பேசுகிறது. "யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்க தான்" என்ற வரிகள் 'தல' ரசிகனை நிச்சயம் திருப்தி படுத்தும்.

              2. "இவள்தானா" பாடல் சாகர் மற்றும் ஸ்ரேயா கோஷலின் குரல்களில் ஒலிக்கும் டூயட். 'டிஜிட்டலில் செதுக்கிய குரல் இவள்தானா' என்ற வைரமுத்துவின் வரிகளுக்கு பொருத்தமாய் இருக்கிறது ஸ்ரேயா கோஷலின் தித்திக்கும் குரல்.

              3. 'வெண்கலக் குரலோன்'  அதனன் சாமி, பிரியதர்ஷினி இணைந்து பாடியிருக்கும்  "தங்கமே, தங்கமே" பாடல் முதல் முறை கேட்கும் போது 'காத்தாடி போல என்னை சுத்த வைக்கிற' பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.  துடிப்பான இந்தப் பாடலுக்கு 'தல' போடப் போகும் நடனத்தை நினைத்தால் தான் இப்பவே கொஞ்சம் கண்ணை கட்டுகிறது.

              4. "ஜிங் சக்கா" கிராமிய குத்துப் பாடல் புஷ்பவனம் குப்புசாமி, மகிழினி மணிமாறன் பாடியிருக்கின்றனர். ஊர் மக்கள் பாடும் பாடலாக வரும் பாடல் அருமையான குத்துப் பாடல். மைனாவின் ஜிங்கு ஜிங்கு பாடலையும் கும்கியின் சொய்ங் சொய்ங் பாடலையும் சரிவிகிதத்தில் கலந்தது போல இருக்கிறது.

              5. வீரம் பட ஆல்பத்தின் சிறப்பான படைப்பு "ரத கஜ துரக பதாதிகள்" பாடல். சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஒரு சில நொடிகளே வந்து போகும் டீசரில் இந்தப் பாடலுக்கென படமாக்கப்பட்ட காட்சி மக்களின் பாராட்டை பெற்றது. பாடலை கேட்டவுடன் உள்ளுக்குள் வீரம் பொங்க வைக்கும் பாடல் 'தல' படப்பாடல்களில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.

                 
              அஜித்தின் நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு இருக்கும்படி இசையமைப்பாளரிடம் இயக்குனர் சிறுத்தை சிவா கூறியிருப்பாரோ என்னவோ, வேகமான இசை "ரத கஜ" பாடலை தவிர எதிலும் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கே DSP க்கு ஒரு "ஓ" போடலாம். வீரம் படப் பாடல்கள் "தல" ரசிகர்களை மட்டுமல்ல எல்லோரையும் குஷிப்படுத்தும்.

பின்வரும் சுட்டியில் பாடல்களை கேட்டு மகிழலாம்..
http://gaana.com/album/veeram





Saturday, December 21, 2013

ஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை


இன்ட்ரோ  
                          நட்பு மட்டுமே கடைசி வரை தொடர்ந்து வரும், காதலும் கல்யாணமும் வலிகளையே பரிசளிக்கும் என்று சொல்ல வந்திருக்கும் படம். இன்றைய இளைஞர்கள் பற்றி நல்லதாக சொல்ல எவ்வளவோ விஷயங்கள் இருக்க சமீபத்திய தமிழ்ப்படங்கள் அவர்கள் குடிப்பதையும்,  தெரு ஓரங்களில் சிறுநீர் கழிப்பதையும் காண்பிப்பது வழக்கமாகிவிட்டது.. இதற்கு இந்தப்படமும் விதிவிலக்கல்ல.




கதை         
                            கோபம்  என்பதை சரியான முறையில் காண்பித்து,  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் பெற்ற தந்தை மற்றும் சிறுவயது தொட்டே ஒன்றாக வளரும் நண்பர்கள் எல்லோரையும் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதற்காக அவர்களுடன் பேசுவதை நிறுத்திவிடும் ஜீவா எப்படி தான் காதல் வயப்பட்டதும் மற்றவர்களை வெறுத்த தன் குணத்தை மாற்றிக் கொண்டு எல்லோரையும் நேசிக்கும் கதையை நகைச்சுவையோடு சொல்லியிருக்கும் படம் தான் என்றென்றும் புன்னகை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              ஜீவா இதற்கு முன் பார்த்த எல்லா படங்களை விட இதில் மிகவும் அழகாக இருக்கிறார். ஆனால் ஈ, கற்றது தமிழ் படங்களோடு ஒப்பிடும் போது நடிப்பு மிகச் சுமார் தான். வினய் நண்பன் கதாப்பாத்திரத்தில் அருமையாக பொருந்துகிறார். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் மின்னலே படத்தில் அப்பாஸின் நிலைமை தான் இவருக்கும். இருந்தாலும் கிடைத்த கேப்பில் கிடா வெட்டியிருக்கிறார். சந்தானம் இஸ் பேக் என்றே சொல்ல வேண்டும். ஏகப்பட்ட ஒன் லைனர்களை வைத்துக் கொண்டே முதல் பாதியை குபீர் பாதியாக்கிய பெருமை இவரையே சேரும். இரண்டாம் பாதியில் வரும் ஸ்லாப்ஸ்டிக் வகை காமெடி கண்டிப்பாக ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும்.

                               நாசர் ஜாலியான அப்பா வேடத்திலும் சரி உருக்கமான காட்சிகளிலும் சரி பட்டையை கிளப்புகிறார். திரிஷா நகைச்சுவை சரக்கிற்கு நடுவே தொட்டுக்கொள்ள பயன்பட்ட ஊறுகாய். (கொஞ்சம் முத்தின மாங்காய் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊறுகாய்). கதைப்படி நாயகியாய் வரும் ஆண்ட்ரியா கவர்ச்சி எனும் பெயரில் கண்றாவியாக இருக்கிறார். வேறு புதுமுகத்தை போட்டிருக்கலாம். சுவாமிநாதன் மற்றும் பலர் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.


இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 இசை ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் பின்னணி இசை இரண்டிலும் படத்தை அழகாக நகர்த்திச் செல்கிறார். சிறப்பான இசையில் காதல், கோபம், கேலி, கொண்டாட்டம் என எல்லா உணர்வுகளையும் கதாப்பாத்திரங்களோடு சேர்த்து நம்மையும் அனுபவிக்க வைக்கிறார். இயக்கம் புதுமுக இயக்குனர் அஹமது. கன்னி முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். "ஊருக்கு உபதேசம்" என்பது இந்தப் படம் ஒரு உதாரணம். குடிக்கக் கூடாது, காதல் செய்யக் கூடாது என்றெல்லாம் அரசியல் பேசுபவர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களில் இது இல்லாமல் படமெடுக்க முயற்சிகாதது ஏன்?

                                                                                                                       ஒளிப்பதிவு

                                    மதியின் கேமிரா வண்ணத்தில் மேஸ்மரைஸ் ஆகிறோம். ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு "ரிச்" பீலிங் கொண்டு வந்திருக்கிறார். வெளிநாட்டு காட்சிகளில் உள்ளத்தை கவர்கிறார். குறிப்பாக சுவிஸ் காட்சியும், ஜீவா த்ரிஷா புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சியும் புகைப்படத்தில் ஓர் கவிதை  என்றே சொல்லலாம். மற்றும் ஒரு காட்சியில் மொட்டை மாடியில் கம்பி மீது அமர்ந்திருக்கும் ஜீவாவை அழகாக 180 டிகிரி கோணத்தில் சுற்றி வரும் போதும், அவருடைய மதுக்கோப்பை மேலிருந்து கீழே விழும்போதும் திக் திக் நிமிடங்களாய் மாற்றிய பெருமை அவரையே சேரும். ஹேட்ஸ் ஆப் மதி!! (இவருடைய ஜாலத்தை கண்டிப்பாக முழுமையாக ரசிக்க திரையரங்கில் மட்டுமே சாத்தியப்படும்)


                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 முத்து முத்தான பாடல்கள். எல்லா ஒன் லைனர்கள். நண்பர்கள் அடிக்கும் லூட்டிகள். சந்தானத்தின் ஸ்லாப்ஸ்டிக் காமெடி.

                  Aavee's Comments - Not just Smile, it's a Fun Riot.




ஆவி டாக்கீஸ் - பிரியாணி


இன்ட்ரோ  
                           த்ரில்லர் எனும் பாத்திரத்தில், கார்த்தி எனும் பாஸ்மதி அரிசி போட்டு, ஹன்சிகா என்ற சிக்கனையும், மேன்டி என்ற மட்டனையும், நாசர் எனும் நெய்யை ஊற்றி, பிரேம்ஜி வெங்காயத்தையும் சம்பத் இஞ்சியையும், ராம்கி எனும் தக்காளியையும் வதக்கி, கொஞ்சம் கொத்தமல்லி சுப்பு பஞ்சு மற்றும் பட்டை-கிராம்பு உமா ரியாஸ், ஜெயபிரகாஷ் எல்லாம் சேர்த்து வெங்கட் பிரபு எனும் செப் கிண்டியிருக்கும் இந்த பிரியாணி மேல் பகுதி வேகாமலும் கீழ்பகுதி அதிகமாக வெந்தும் இருக்கிறது.



கதை         
                            ஜாலியாக, பார்க்கும் பெண்களை எல்லாம் எளிதில் கவர்ந்துவிடும் கலியுக கண்ணனாக வலம் வரும் கார்த்தி, நண்பனுக்காக தன் காதலை எல்லாம் தியாகம் செய்யும் நண்பன் பிரேம்ஜி, இவர்கள் இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு கடத்தல் சம்பவத்தில் போலீசால் தேடப்படுகின்றனர். கடத்தப்பட்ட நாசர் கொலை செய்யப்பட்டதை உணரும் இருவரும் அந்த வழக்கில் இருவரையும் திட்டமிட்டு ஜோடிக்கப் பட்டிருப்பதை கண்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               கேஷுவலாக நடிக்கிறேன் பேர்வழி என்று காமெடி, ரோமென்ஸ் எல்லாவற்றிலும் மீண்டும் சொதப்பல் நடிப்பு கார்த்தியுடையது. அவருடைய நடிப்புக்கு சற்றும் சளைக்காது போட்டி போட்டு மொக்கை போட்டிருக்கும் பிரேம்ஜி, இருவரும் காமெடி என்ற பெயரில் கழுத்தை பதம் பார்க்கின்றனர். நாசர் சிறிது நேரமே வந்தாலும் அருமையான நடிப்பு, அதிலும் பிரேம்ஜி போல் இவர் நடிக்கும் போது செம்ம அப்ளாஸ் தியேட்டரில். ராம்கி, சம்பத், ஹன்சிகா, மதுமிதா, சுப்பு பஞ்சு,  படவா கோபி ஆகியோர் பெரிதும் சொல்லும்படி ஒன்றுமில்லை.  அறிமுக நடிகை மேன்டி தன் கிளாமர் நடிப்பை தாரளமாக வழங்கியிருக்கிறார்.

                                கடைசி ஒரு மணி நேரம் விறுவிறுப்பான திரில்லர் மக்களை நிச்சயம் கவரும், ஆனா அதுக்குள்ள டயர்ட் ஆகிவிட்ட மக்கள் கதை ஸ்பீட் எடுக்கும் நேரத்தில் கொட்டாவி விடுவதை இயக்குனாரால் தடுக்க முடியவில்லை. த்ரில்லர் கதையில் முடிந்தளவு லாஜிக் ஓட்டை இல்லாமல் இருத்தல் அவசியம். ஆனால் இதில் ஓசோனில் விழுந்த ஓட்டையாய் நம்மை மூச்சை அடைக்கிறது.


இசை-இயக்கம்
                                யுவனின் நூறாவது படம்,  கொஞ்சமும் குறைவின்றி திருப்திகரமாக செய்திருக்கிறார். பாடல்களிலும், பின்னணி இசையிலும் கலக்கி இருக்கிறார். ஆனால் ஏனோ இந்தப் படத்திற்கு அது ஒட்டாதது போல் ஒரு பீலிங். வெங்கட் பிரபு எனும் இயக்குனர் கொஞ்சம் கதைக்காக மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. இருந்தாலும் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் பலப்படுத்தி இருக்கலாமோ? அதிலும் முதல் பாதி கார்த்தி ஒரு ப்ளே பாய் என்று சொல்லவும், அவரிடம் ஒவ்வொரு முறையும் பிரேம்ஜி ஏமாறுகிறார் என்பதை ரசிகர்களுக்கு  உணர்த்த இவ்வளவு காட்சிகள் தேவையில்லை. குறிப்பாக அந்த கம்பெனியில் மூன்று பெண்களையும் ஒரே நேரத்தில் கரெக்ட் செய்யும் காட்சி படத்திற்கு கொஞ்சமும் அவசியமில்லாதது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்!

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 "எவ்வளவோ பண்ணிட்டோம்" என்று பிரேம்ஜி ஸ்டைலில் நாசர் சொல்வது செம்ம காமெடி, உமா ரியாஸ்கானின் ட்விஸ்ட், சூப்பர் பாஸ்ட் இரண்டாவது பகுதி.

                  Aavee's Comments - Not Cooked Properly.




Thursday, December 19, 2013

ஆவி டாக்கீஸ் - நிமிர்ந்து நில் (Music)

                                 
                        சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவரும் படம். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் அமலா பால் மற்றும் ராகினி திவேதி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதன் இசை சரிகாமா குழுமத்தினரால் புதனன்று வெளியிடப்பட்டது.



                 1.  ராஜாதி ராஜா- கவிஞர் கபிலன் எழுதிய இந்தப் பாடல் அறிமுகப் பாடலாய் வருகிறது. நாயகன் தன்னைத் தானே உயர்த்திப் பாடும் வழக்கமான தமிழ் சினிமா பாடல். ஹேமச்சந்திராவின் குரலில் ஆர்பாட்டமில்லாமல் ரசிக்கும்படி இருக்கிறது.

                 2. நெகிழியினில்.. வைரமுத்துவின் கைவண்ணம் அப்படியே பெற்றிருக்கிறார் மதன் கார்க்கி. நாயகன் நாயகி மன வருத்தத்தில் ஒருவரை ஒருவர் நினைத்துப் பாடும் பாடல். காதல் ரசம் சொட்டும் பாடலை ஹரிசரணும், மிஸஸ்  ஜீவியும் பாடியிருக்கிறார்கள்.  ஆனாலும் இசை ரொம்ப மெல்லியதாக இருப்பதால் அரங்கில் வரும்போது ரசிகர்கள் தூங்கிப் போக வாய்ப்பிருக்கிறது.

                3. தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸியான பாடகர் கானா பாலா எழுதி பாடியிருக்கும் பாடல் "Don't Worry Be Happy" டென்ஷன் ரிலீப் பாடல் என்றாலும் வரிசையாக எல்லாப் படத்திலும் இவருக்கு ஒரே போல பாடல் கொடுப்பது அலுப்பு தட்டுகிறது.

               4. GITA VERSES.. ஹரிசரனின் கம்பீர குரலில் கீதையின் வரிகள் கதாநாயகனுக்கு உத்வேகம் கொடுக்கும் பாடலாக வருகிறது.  பகவான் கிருஷ்ணரின் பாடல் வரிகள் இந்தக் கால அர்ஜுனனுக்கு எப்படி ஊக்கம் அளிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

               5. காதல் நேர்கையில்.. ஜாவேத் அலி, சாஷா மற்றும் ஜீ.வியின் குரல்களில் இனிமையாய் ஒலிக்கிறது. கபிலனின் வரிகள் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது..

                  "பாறை போல வாழ்ந்த நானே சிற்பமாகிறேன்- உன்னாலே" போன்றவை காதலின் பெருமை பேசும் வரிகள்.


                ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜீவி இசையமைத்திருக்கும் பாடல் அது போல் முதல் முறை கேட்டவுடன் மனதில் ஒட்டவில்லை என்றாலும் சில முறை கேட்டலுக்கு பின் நிறைவாய் இருக்கிறது.


Wednesday, December 18, 2013

உலக சினிமாவும் உப்புமா ரசிகனும்!! (பகுதி-1)


                    இந்திய படங்கள் அல்லாது மற்ற எல்லா நாட்டு படங்களும் உலக சினிமா என்று நான் நினைத்திருந்த காலம் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக சினிமா எப்படி பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். ஒளி, ஒலி, காட்சியமைப்புகள், திரைக்கதை, உடல்மொழி என பல விஷயங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். சினிமா ஆர்வம் ஒரு கட்டத்தில் தீவிரமாக ஒரே நாளில் (ஒரு நியு இயர் அன்று) இரவு பனிரெண்டு மணிக்கு படம் பார்க்க ஆரம்பித்தவன் மறுநாள் காலை, மதியம், இரவுக்காட்சி, செகண்ட் ஷோ என ஒரே நாளில் ஐந்து சினிமா பார்த்து புளங்காகிதம் அடைந்தவன். அதே போன்ற ஒரு உணர்வு நீண்ட நாட்களுக்கு பின் இப்போது சென்னையில் நடக்கும் உலக சினிமா திருவிழாவில் நிறைவேறியது. கோவா மற்றும் கேரளாவில் நடந்த விழாக்களுக்கு உலக சினிமா ரசிகன் அழைத்த போது நேரமின்மையால் கலந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவருடன் சேர்ந்து நம் தமிழ் மண்ணில் உலக சினிமா பார்ப்பது தினமும் பேரானந்தம் தருகிறது.



                     படம் பார்க்க வந்த ஜாம்பவான்களுக்கிடையில் நான் வெறும் உப்புமா ரசிகன் என்றாலும், என் பார்வையில் நான் பார்த்த படங்களை இங்கே உங்களுக்காக பகிர்கிறேன்..

 CHEAP THRILLS : என்னை வாழ வைத்த அமெரிக்க தேசத்திலிருந்து தேர்வாகி வந்திருந்த படமிது. இந்தப் படம் என்னை பெரிதாக கவரவில்லை என்ற போதும் ஒரு சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்தது.
பணம் எந்த ஒரு மனிதனையும் மாற்றிவிடும் என்பதை இரு நண்பர்கள் ( ஒரு "குடும்பஸ்தன்" ஒரு "பிரம்மச்சாரி" ) பணத்திற்காக ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு போவது தான் கதை.  இது உலக சினிமா தரத்தில் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.




THE HUNT: தன் மேல் சுமத்தப்பட்ட வீண் பழியால் தன் குடும்பம், தொழில், சமூகத்தில் நல்ல பெயர் என எல்லாவற்றையும் இழந்து சிறைக்கும் செல்லும் நாயகனை நன்றாக பழகிய நண்பர்கள், தன் சக பணியாளர்கள், தன் கேர்ள் பிரண்ட் என எல்லோரும் சந்தேகப்பட வாழ்க்கையின் ஓரத்திற்கே செல்லும் அவன் சமூகத்தை விட்டு தள்ளி தன் மகனுடன் வாழ, கிளைமாக்சில் வேட்டைக்கு தன் மகனுடன் செல்லும் அவனை யாரோ சுட முயல யாரென்று பார்க்கும் போது அது தன் மகன் என்று அறிந்து வேதனையுடன் நிற்பதோடு கதை முடிகிறது. டென்மார்க்கை சேர்ந்த இப்படத்தில்  ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக எடுத்திருப்பார்கள்.



BLUE IS THE WARMEST COLOR: பிரான்ஸிலிருந்து பட விழாவிற்கு வந்திருந்த படங்களில் இந்தப் படத்திற்கு திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகள் என்று கேள்விப்பட்டேன். அரை மணி நேரம் முன்னதாகவே சென்று இடம் பிடித்து அமர்ந்தோம். இடம் இல்லாமல் மக்கள் நின்று கொண்டே படம் பார்க்கவும் செய்தார்கள். அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதே கேள்வியுடன் தான் நானும் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு பெண், அவளுடைய தினசரி நடவடிக்கைகள், கல்லூரி வாழ்க்கை என சென்று கொண்டிருந்த அவள் வாழ்வில் ஒரு நீலப் புயல் அடிக்கிறது. ஒரு பெண் வடிவில். அவள் பால் ஈர்க்கப்பட்ட இந்தப் பெண் அவளுக்கு தன்னையே கொடுக்கிறாள், இன்பம் பெறுகிறாள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நேர்கிறது.  பிரிகையில் உண்டாகும் சோகத்தோடு படம் நிறைவடைகிறது.



                 முதல் நாள் பார்த்த மூன்று படங்கள் இவை.. இரண்டாம் நாள் பார்த்த ஒரு அற்புதமான திரைப்படத்தோட உங்களை சந்திக்கிறேன்..


                    

Saturday, December 14, 2013

ஆவி டாக்கீஸ் - இவன் வேற மாதிரி..


இன்ட்ரோ  
                            நல்ல விஷயங்களுக்கு போராட நாம் பாதிக்கப் படவேண்டும் என்றோ, தீவிரமான காரணம் ஒன்று வேண்டுமென்றோ கிடையாது. அதை செய்ய நல்ல மனதும், கொஞ்சம் பலமும், நிறைய தைரியமும் இருந்தால் போதும் என்று கொஞ்சம் காதலையும் மிக்ஸ் பண்ணி சொல்லியிருக்கிறார்கள்.                      


கதை         
                         அரதப் பழசு கதை. சொன்ன விதம் தான் வேற மாதிரி. பதவி வெறி பிடித்த மந்திரி, அதற்கு உதவும் அவர் தம்பி. தன் சுயநலத்துக்காக சட்டக் கல்லூரியில் கலவரத்தை தூண்டி விடும் மந்திரியை சமார்த்தியமாக பதவியில் இருந்து இறக்கி ஒவ்வொரு சாமான்ய மனிதனும் மனதில் நினைப்பதை நிறைவேற்றுகிறான் நாயகன். இடையே வலிய வலிய வந்து வழியும் காதலியையும் லவ் பண்ணி கடைசியில் அவரைத் திருமணம் செய்யாமல் வேறொருவருக்கு தாலி கட்டுகிறார். இந்த சின்ன விஷயத்தை கொஞ்சம் ஜவ்வாக இழுத்து மூன்று மணி நேரம் கதை சொல்கிறார் இயக்குனர்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                          சத்தமில்லாமல் நாட்டுக்கு நல்லது செய்யும் கேரக்டர் ஹீரோவுக்கு.. இவர் வண்டியோட்டும் போது எந்த ஒரு இடத்திலும் இண்டிகேட்டர் போடவோ, கைகளால் திரும்புவதற்கு சிக்னலோ செய்வதாய் காட்டவே இல்லை. தவிர பொது இடத்தில் மூச்சா வேறு போகிறார். அதை தடுக்கும் நாயகியின் வீட்டுக்கு சென்று பாத்ரூமிற்கு செல்கிறார்.. மொதல்ல இந்த சின்ன சின்ன விஷயங்கள்ல எல்லாம் ஒழுங்கில்லாம இவர் நேதாஜி, வாஞ்சிநாதன் பத்தி பேசும்போது ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. விக்ரம்பிரபு கும்கி படத்தை விட இதில் கொஞ்சம் நடிக்க ஸ்கோப் இருக்கிறது.. இரண்டாவது படத்திற்கு இது பரவாயில்லை.. காதல் காட்சிகளில் சாத்சாத் "சபாபதி" என்றொரு பழைய படத்தில் "சபாபதி" என்று ஹீரோ அல்லாது மற்றொரு கேரக்டர் இருக்குமே, அவருடைய அதே மேனரிசம் இவரிடமும் தெரிகிறது. ஹீரோயின் சுரபி "இளிச்சவாயினி" காண்டெஸ்டுக்கு போட்டியிடுபவர் போல் இளித்துக் கொண்டே இருக்கிறார். தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப் பெண் கேரக்டர்..

                             வில்லன் மற்றும் அவர் தம்பி கதாபாத்திரங்கள் நிறைவாய் செய்திருக்கின்றனர். கணேஷ் வெங்கட்ராமன் இன்னும் இரண்டு படங்கள் இது போல் நடித்தால் தமிழ் திரையுலகை விட்டு ஓடி விடுவது உறுதி.  நாயகனின் அமைதியான அறிமுகம், அறைக்குள் சிக்கிய வில்லனின் சாதுர்யம், ஆகியவை சபாஷ் போட வைக்கும் காட்சிகள்.. கொஞ்சம் நீளத்தை குறைத்தால் நிச்சயம் அவசியம்.                                                         
                                 
இசை-இயக்கம்
                               இதில் உள்ள ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளை நாம் கண்டுகொள்ளாமல் படம் பார்க்க வைப்பது இயக்குனரின் திறமை.. வித்தியாசமான காட்சியமைப்புகள், நல்ல ஒளிப்பதிவு.. தேவையான இடங்களில் மட்டும் "நச்" விமர்சனங்கள் நம்மை ரசிக்க வைக்கின்றன.. சத்யாவின் இசையில்  (குரலில்) லவ்வுல பாடலும் என்னை மறந்தேன் பாடலும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் இனிமை.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                           கட்டிப்போட்டிருக்கும் தன்னை கோத்த வரும் காக்கையிடம் "நான் இன்னும் சாகல, நாளைக்கு வா" என்று சொல்லும் நாயகி, அலுவலகத்தில் தன் ஒரு நாள் சம்பளம் பெரும் காட்சி.. எங்கேயும் எப்போதும் படத்தின் எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால் படம் நல்ல என்டர்டெயினர். ஒரும முறை பார்க்கலாம்.

                  Aavee's Comments - He is No Different.




Friday, December 13, 2013

சீனு!


மு.கு: பின்வருவன யாரையும் குறிப்பிடுவன அல்ல.. முழுக்க முழுக்க கற்பனையே.. அதை TR ஸ்டைலில் படிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.




கிரிக்கெட்டில் அசத்திடுவான் ஸ்டெயினு- 
பதிவுலகை கலக்கிடுவான் நம்ம சீனு..

தண்ணிக்குள்ள மிதந்தா அது மீனு - கன்னி
மனசுக்குள்ள இருந்தா அவன் சீனு..

சிரிக்க சிரிக்க பேசிடுவான் பீனு (Bean)
சிரிச்சுகிட்டே அசத்திடுவான் சீனு..

படையோட வந்திடுவான் டான்-உ (DON)- கோவைக்கு
மழையோட வந்திடுவான் எங்க சீனு..

சேலம் வழி கோவை வரும் டிரெயினு- 
தென்காசி வழி வந்திடுவான் நம்ம கானு.. (Khan)

மலையவே தூக்கிடுவான் சூப்பர் மேனு- 'காணி' 
இக்கட லேது அந்த்த சீனு..

ஆண்டிராயிடு போனு வச்சிருக்கேன் நானு - அந்த 
ஆண்ட்ரியாவையே வச்சிருக்கான் (ஹார்ட்டுல) இந்த சீனு..

கண்ணாடி போட்டிருக்கும் மானு - அவனிடம் 
கதை கேட்க இறங்கிடுமே சீலிங் பேனு.. (Fan)

தமிழோட பெருமைய நீ  பேணு- அதுக்கு தன்
எழுத்தால துணை நிப்பான் சீனு!





Wednesday, December 11, 2013

ஆவி டாக்கீஸ் - ரஜினி எனும் நடிகன்..!

                                         
                               கமலின் தீவிர பக்தனான நான் சினிமாவின் ஆராதகன் என்பதால் ரஜினி படங்களும் பார்ப்பதுண்டு. ஒரே பார்முலாவில் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் ஆறேழு வித்தியாசங்கள் தவிர கிட்டத்தட்ட அதே சாயலில் இருக்கும் அவர் படங்கள். சிகை அலங்காரத்தில் கூட பெரிய வித்தியாசம் இருக்காது. படு வேகமான தமிழ் உச்சரிப்பு சிறுவனாக இருக்கும்போது சில வசனங்களை புரிந்து கொள்வதில் பல முறை சிரமப்பட்டிருக்கிறேன். சமகால நடிகரான கமலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தான் நடிக்கும் படங்களில் எந்த ஒரு பரிட்சார்த்த முயற்சிகளும் எடுக்கத் தயங்குபவர்.  இதுதான் ரஜினியை பற்றி நான் புரிந்து வைத்திருந்த விஷயங்கள்.




                                கொஞ்சம் சினிமாவின் வட்டத்தை பெரிது படுத்திய காலத்தில் எண்பதுகளின் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது எனக்கு. முதலில் "நல்லவனுக்கு நல்லவன்" என்ற படத்தை பார்த்த போது அதில் ஒரு திருடனாக, நல்ல கணவனாக, திருந்தி நல்லவனாக, ஒரு தொழிலாளியாக, பின் அந்த தொழிற்சாலைக்கு முதலாளியாக, ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக நடித்திருப்பார். அதில் வரும் " சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு" பாடலில் ஓரிரு கண்ணீர் துளிகள் நம் கண்ணில் நம்மையும் அறியாமல் எட்டிப் பார்க்கும். அந்தப் படத்தில் தான் நான் முதலில் ரஜினி என்ற நடிகனைப் பார்த்தேன்..  அவ்வளவு நேர்த்தியாக அந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.



                                 பின்னர் "முள்ளும் மலரும்" எனும் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அண்ணன் தங்கைக்கு இடையே உள்ள பாசம். காளி என்பவன் தன்னுடைய கர்வத்தை, தன்மானத்தை சற்றும் விட்டுக் கொடுக்காமல் ஊரையே எதிர்த்து நிற்கும் நடிப்பில் சத்தியமாக வேறு எந்த நடிகரும் இவ்வளவு அழகாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதிலும் கடைசி காட்சியில் ஊரார் சொல்வதை கேட்காமல் தங்கை அண்ணனின் பக்கம் வந்து நிற்கும் போது ஒரு பெருமிதப் பார்வையோடு ஊராரை கேலி பேசும் இடத்தில் அசத்தல். கையிழந்த சோகமும் தெரியக்கூடாது. தலைக்கனமும் கர்வமும் ஒருசேர கலந்த அதே சமயம் பாசமுள்ள அண்ணன் என்ற அந்த எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கொடுத்திருப்பார்.


                                சமீபத்தில் "அவள் அப்படித்தான்" என்ற படத்துல பெண்கள் என்றால் வெறும் போகப் பொருள் மட்டும் தான் என்று நினைக்கும் ஒரு கேரக்டர். அதில் அவர் கமலிடம் பேசும்போதெல்லாம் பெண்களை அவ்வளவு தரக் குறைவாக பேசுவார். கமலின் கதாப்பாத்திரம் எவ்வளவு நல்லவனாக சித்தரிக்கப் பட்டிருக்குமோ அவ்வளவு எதிர்மறையான கதாப்பாத்திரம் இவருக்கு.. மனிதர் கொஞ்சமும் இமேஜ் என்பதை பார்க்காமல் நடித்திருப்பார். அதில் ஸ்ரீப்ரியா ஒரு சமயம் தாளிடப்பட்ட அறைக்குள் ரஜினியை அவமானப் படுத்துவது போல் ஒரு காட்சி இருக்கும். இன்றைய தலைமுறை நடிகர்கள் யாரும் சத்தியமாக அப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க துணிவார்களா என்பது சந்தேகமே.



                              இவையல்லாமல் "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் காமெடியனாக பல பல்புகளை வாங்குவார். இரு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலே இருவருக்கும் சரிசமமாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு நடிக்கும் இன்றைய நடிகர்கள் எங்கே, கமல் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக, ஜோக்கராக எல்லாம் நடித்திருப்பார். இவை வளரும் சமயத்தில் என்றாலும், ஹீரோ அந்தஸ்திற்கு வந்த பின்னும் அந்த கர்வம் துளியும் இல்லாமல் சில படங்களில் நடித்திருப்பார். இதை எல்லாம் பார்த்த பிறகு தான் ரஜினி என்னும் நல்ல நடிகனை தமிழ் சினிமா எவ்வளவு வீணடித்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். "வெறும் பஞ்ச் டயலாக்குகளும், ஸ்டைலும்" கொடுத்து அவரின் நல்ல நடிப்பை தேடி எடுக்காமல் விட்டுவிட்டது இயக்குனரின் குற்றமா.. இல்லை தன் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்காதது சூப்பர் ஸ்டாரின் குற்றமா.. எது எப்படியோ இன்று சிறு குழந்தைகளுக்கும் பிடிக்கும் நடிகராகவும், உலகெங்கும் பிரபலமாக உள்ள நடிகராகவும் இருக்கும் ரஜினி ஒரு நல்ல மனிதர் என்பதும் எல்லோரும் அறிந்ததே.. அவருடைய பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்துவதில் பல கோடி ரசிகர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்!!



How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...