Thursday, December 8, 2022

How to sell your Infosys stocks through buyback?

Buyback:

What?

When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program.

Why? 

Basically a company announces a buyback to boost the value of an under valued stock. And to reward it's investors.

How?

Buyback is basically of two major types ( though there are other options) 
Tender Offer and Open Market offer. A tender offer has a fixed price at which each shareholder can participate, but that is not the case in the open market route. A company may declare a maximum price for an open market buyback, but that does not mean that each investor will get the same price as buying happens in tranches at varying prices.

Infosys Buyback:




In October 2022, Infosys announced it's buyback program and conducted a Voting in November. As most of the investors voted to conduct the buyback it commenced the Buyback Program on December 7th.

How to Sell your stocks through Infosys Buyback:

As infosys buyback is through Open Market, you don't need to do much.
As per ICICI Securities: 

Since the buyback is of the Open market there is no special participation required. Any equity shareholder holding the shares in Demat form can participate in the buyback offer through their stockbroker.
The shareholder needs to inform their broker on the details of the Equity shares they wish to sell. The broker will place a sell order whenever the company places a buy order for the buyback. The trade would get executed at the offer price or lesser only when the price offered by the shareholder matches with the buy order placed by the company. 

Infosys Buyback!



Happy Investing!

Disclaimer : I'm not SEBI registered.. Contents are for educational purposes only.

Friday, April 24, 2020

கரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்

கரோனா அவுட்பிரேக்கை ஆவி எப்படி சமாளிக்கிறார்ன்னு என் ரசிகப் பெருமக்கள் பலர் (சரி, சரி, நாலைஞ்சு பேர்) கேட்டதால இங்கே ஷேர் பண்றேன். இது அட்வைஸ் கிடையாது. அனுபவ பகிர்தல் மட்டுமே!
.
ஆல்ரைட். கரோனா அவுட்பிரேக், லாக்டவுன், யாருக்கு போன் பண்ணினாலும் போரடிக்குது, என்ன பண்றதுன்னே தெரியலன்னு ஒரே புலம்பல்ஸ் ஆஃப் கரோனாவா இருக்கு. ஆனா எனக்கு அப்படி எதுவும் வெறுப்பு எல்லாம் உண்டாகல.
.
காலையில ஆறே கால், ஆறரைக்கு எழுந்தா அரை மணி நேர வாக்கிங் (மொட்டை மாடில), அப்புறம் டீ குடிச்சுட்டு கொஞ்சம் நியுஸ். அப்புறம் குட்டிப் பையன் பாக்கிற மாதிரி சிறுவர்களுக்கான படம் ஒண்ணு, அப்புறம் ஓரு பேய் படம், அப்புறம் ஒரு மலையாளம் அல்லது தமிழ் படம் (ஆங்கில, தெலுங்கு டப்பிங் படங்களும் இதில் அடங்கும்). மாலையில் கொஞ்ச நேரம் புத்தக வாசிப்பு. ( பனி மனிதன், அனல் காற்று முடிச்சாச்! இப்போ ஸ்ரீரங்கத்துக் கதைகள் பை தலைவர் படிச்சுண்டிருக்கேன்!)
.
இரவில் நேரடி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் கொரியன் என்று சப்டைட்டில் உதவியோடு ஒரு திரைப்படம். சரியா சொல்லணும்னா இதுக்கே நேரம் பத்தல. பை தி பை எங்க வீட்டுல கேபிள் கனெக்சன் கிடையாது. ஒன்லி பிரைம், ஹாட்ஸ்டார், ஜீ ஃபை போன்ற ஓடிடி பிளாட்பார்ம்களின் உதவியோடுதான்.(நன்றி: அதிவிரைவு ஹேத்வே இன்டர்நெட் )
.
தமிழ் - 57
ஆங்கிலம் - 25
மலையாளம் - 24
ஹிந்தி- 6
தெலுங்கு- 18
கன்னடம்- 1
கொரியன்- 1
___________
மொத்தம் - 135 ( Mar 24- Apr 23)

.
ஆனா, அதிலும் ஒரு பிரச்சினை என்னன்னா, கடைசி பெஞ்ச் கார்த்தி, மீண்டும் ஒரு மரியாதை, மூன்று பேர் மூன்று காதல் போன்ற மொக்கைகளை சகித்துக் கடக்க வேண்டியிருந்தது. அதிலும் அந்த க.பெ.கார்த்தி படத்தை பார்த்தபோதுதான் பரத் ஏன் சினிமா சான்ஸ் இல்லாம இருக்கார்னு புரிஞ்சுது.
.
இது இல்லாம எங்களோடது இசைக் குடும்பம்ங்கிறதால (?!!!) அப்பப்ப யூட்யூப்ல கரோக்கி ப்ளே பண்ணிட்டு, பாடல்கள் பாடி பதிவு செய்து அப்பவே டெலிட் பண்ணி (ஆமா, அதை வெளியிட்டா அப்புறம் கரோனா பாதிப்பை விட அதிகமா இருக்கும்ல) விளையாடுவோம்.
.
ஸோ, மொத்தத்துல நான் சொல்ல வர்றது என்னன்னா ஹகுணா மடாடா! (தெரியாதவங்க லயன் கிங் படம் பாருங்க. இல்லேன்னா கூகிளண்ணாவை கேளுங்க!



Friday, January 17, 2020

தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144!


உண்மைய சொல்லணும்னா நான் பக்கா நோலன் ஃபேன்.. பல்ப் பிக்சன் சேர்த்து நான் பார்த்தது மொத்தம் நாலு டாரண்டினோ படங்கள். அதுல பல்ப் பிக்சன் தவிர மற்ற படங்கள் என்னை, எனக்குள் இருக்கும் ஒரு ரசிகனை, சினிமா காதலனை ஈர்க்கவில்லை என்பதே உண்மை. டாரண்டினோவை கிறிஸ்டபர் நோலனோடு ஒப்பிடுவது எந்த வகையிலும் முறையல்ல என்றாலும், நோலனின் படங்களில் உள்ள ரசிகனை சிந்திக்க வைத்துக்கொண்டே இருக்கும் விஷயங்கள் எதுவும் டாரண்டினோவின் படங்களில் இருந்ததாக நான் உணர்ந்ததில்லை. மெமண்டோ, இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார் மாதிரியான படங்களை வேறு எந்த ஒரு ஹாலிவுட், ஏன் உலக இயக்குனர்கள் இயக்கிவிட முடியுமா என்று மார்தட்டி கேட்டிருக்கிறேன். அதே சமயம் டார்க் நைட் போன்ற படங்களையும் இயக்கி, தான் ஒரு கமர்ஷியல் இயக்குநரும் கூட என்று நிரூபித்திருக்கிறார். சரி, நோலன் புராணத்தை நான் பிறிதொரு நாளில் பகிர்கிறேன். இப்போடாரண்டினோவை பார்ப்போம்.



சீனு, இந்தக் கட்டுரைகளைக் கொடுத்து பிழைத்திருத்தம் செய்யுமாறு கூறியபோது நான் டாரண்டினோவைப் பற்றி மேற்சொன்ன  அதே மனநிலையோடுதான் இருந்தேன். முதலில் அனுப்பியிருந்த படம் ஹெட்புல் எய்ட். கௌபாய் கதை,தான் என்றபோதும், சீனுவின் எழுத்துகளில் அந்தக் கதாப்பாத்திரங்களின் பெயர்களைத் தவிர ஒரு அந்நியத் தன்மை எங்குமே புலப்படவில்லை. திருத்தம் செய்வதை நிறுத்திவிட்டு ஒருமுறை முழுமையாகப் படித்தேன். மீண்டும் ஒருமுறை வாசித்தேன். கதையின் போக்கு என்னை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டியது.இடையிடையே டாராண்டினோவைப் பற்றிய குறிப்புகள் சுவாரஸ்யத்தைக் கூட்டின.

அடுத்து படிக்கத் துவங்கியது ஜங்கோ அன்செயின்ட் திரைப்பட அலசல். நான் ஏற்கெனவே பார்த்திருந்த போதும், அவர் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் அந்தத் திரைப்படத்தை நான் காணுகையில் தவறவிட்டதாய் இருந்தன. கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைதான் கதை. தன் மனைவியைத் தேடி அலையும் கணவன் என்று கிட்டத்தட்ட கபாலியை நினைவுபடுத்தும் ஒரு சில
காட்சிகளை குறிப்பிட்டிருந்தால் வெகு ஜன மக்களும் தொடர்புபடுத்திப் படித்திருப்பார்க்லே என்று என் கருத்தைக் கூறியிருந்தேன். பார்க்கிறேன் பாஸ், என்றவர் அதை சேர்க்காமல் விட்டிருந்தார். இப்போது சிந்தித்துப் பார்த்தால், இந்த கட்டுரைத் தொகுப்பிற்கு அந்த ரெபரன்ஸ் தேவையற்றதாகத்தான் தோன்றுகிறது.

கில் பில் – ஆளவந்தானால் ஈர்க்கப்பட்டு சில காட்சிகளை வைத்துள்ளதாக இந்திய இயக்குநர் அனுராக் காஷ்யப்பிடம் டாரண்டினோ கூறியதாக வந்த செய்தியைக் கேட்டு அவசர அவசரமாக பார்த்த படம். சத்தியமாக உமா தர்மனுக்காக அல்ல என்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். அந்தத் தகவல் மட்டுமல்லாது தீவிரமாக “கிரவுண்ட் வொர்க்” செய்து ஏராளமான தகவல்களை வாசகர்களுக்குத தருகிறார் சீனு. மேலும் தன்னுடன் (டாரண்டினோவுடன் , சீனுவுடன் என்று நீங்கள் புரிந்துகொண்டால் நான் பொறுப்பல்ல) பணிபுரிந்த “Sally” பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.

அதுமட்டுமா, கதை திரைக்கதை எழுதுவதில் பெயர்பெற்ற டாரண்டினோ வேறொருவரின் கதையை வாங்கி படமாக்குகிறார். அந்த சுவாரஸ்யமான கதையை மேலும் சுவையுடன் நமக்கு பகிர்ந்தளிக்கிறார். அதிலும் கதைப்படி வெள்ளை இனத்தவரான கதாநாயகியை தன் திரைப்படத்திற்காக கறுப்பினப் பெண்ணாக ,மாற்றி, திரைக்கதை எழுதிவிட்டு, அதை ஆசிரியர் ஒப்புக்கொள்வாரா என்று கைகளைப் பிசைந்தபடி டாராண்டினோ காத்திருந்த தருணங்களை எல்லாம் அழகுற பதிவு செய்து அந்தத் திரைப்படத்தை பார்த்தவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்திவிட்டார் நண்பர் ஸ்ரீநிவாசன். இந்த கட்டுரைத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையும இந்த :"ஜாக்கி பிரவுன்” கட்டுரையே!

இங்க்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ் – தலைவன் பிராட் பிட்டுக்காக பார்த்த படம். ஆனால், சத்தியமா சொல்றேன். படம் பார்த்தப்போ தலையும் புரியல. வாலும் புரியல. ஆனா, சீனுவின் கட்டுரையை படித்த போதுதான் இது வரலாற்றின் மீது புனையப்பட்ட ஒரு புனைவுக் கதை என்ற விவரமும், மேலதிக தகவல்களும் கிடைத்தது. இப்போ அந்த படத்தை மறுபடியும் பார்க்கத் தோனுச்சு. பார்த்துடுவேன். (பிரைம், ஹாட்ஸ்டார் எதுலயும் டாராண்டினோ காட்சி தருவதில்லை. நெட்பிலிக்ஸ் இருந்தாலே அவர் அருள் கிடைக்கும்) பார்ப்போம்.

அதற்குப் பிறகு, டாரண்டினோ எடுத்து எனக்கு மிகவும் பிடிச்ச பல்ப் பிக்சன். இந்த கதை மூணு நாள்ல நடக்குதா, நாலு நாள்ல நடக்குதான்னு வாசகர்களிடம் கேள்வி கேட்டு நம்மையும் யோசிக்க வைக்கிறார் தலைவர் ஸ்ரீநிவாசன். இந்த கேள்வி எனக்கு படம் பார்க்கும்போது வரலை. ஏன்னா நான் பார்த்த காலகட்டம் அப்படி. சினிமாவை அலசும் மனநிலை எல்லாம் அப்போ இல்லை. சோ, இப்ப பாக்க வேண்டிய படங்கள்ல பல்ப் பிக்சனும் சேர்ந்திருச்சு. இப்படி ஒரு நோலன் ரசிகனை மெல்ல மெல்ல தன் எழுத்துகளால் டாரண்டினோ ரசிகனா மாத்தின பெருமை தம்பி சீனுவுக்குத்தான் சேரும்.

இதெல்லாம் இருக்கட்டும். கட்டுரைத் தொகுப்பு சிறப்பா வந்திருக்கு. அது அப்படித்தான் வரும்னு எனக்குத் தெரியும். ஆனா, உலகம் சீனுகிட்ட இருந்து ஒரு நாவலை எதிர்பார்க்குதுங்கிற விஷயத்தை அன்னாருக்குத் தெரிவிப்பதோடு, “யுவ புரஸ்கார்” இளைஞர்களுக்கு மட்டும்தான் வழங்குவார்கள் என்ற மேலதிக தகவல்களையும் கூறிக்கொண்டு, இந்த விமர்சனத்தை முடிக்கிறேன்!

பி. கு: இப்போ வாசகசாலையில் தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் புத்தகத்திற்கு 144 விலை நிர்ணயித்திருக்கிறார்கள். (இன்னைக்குள்ள வாங்கினா 15% டிஸ்கவுன்ட். முந்துங்கள்! )

https://www.commonfolks.in/books/d/tharcheyalin-pin-olinthirukkum-kadavul

Thursday, December 12, 2019

ஐயப்பன் கடவுளா, மனிதனா? - (Story of Ayyappan)

                கடவுள் இருக்கிறாரா, இல்லையா? அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணம், கேள்வி தொடர்ந்து மத நம்பிக்கை அற்றவர்களால் மட்டுமன்றி இறை நம்பிக்கை உள்ளவர்களாலும் தொடுக்கப்படும் கேள்வி. அறிவியலை நம்புவோர்கள்  இயற்கையை (Force) நம்பாவிட்டால் எந்த சமன்பாடும் மெய்யாகாது. அந்த அறிவியலை நம்புவோர் இயற்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். இறையை நம்புவோர் இயேசு என்றும், ராமன் என்றும், அல்லா என்றும் ஒவ்வொரு பெயரில் அழைக்கின்றனர். கடையும், பொதியும் வெவ்வேறானால் என்ன, உள்ளிருக்கும் இனிப்பு ஒன்றுதானே?

இயேசு கிறிஸ்து பூமியில் மனிதராய் பிறந்து, மக்களுக்காக வாழ்ந்து மறைந்த பெருந்தகை. மக்களுக்குச் சேவை செய்யும் நற்பண்புகளைக் கொண்டிருந்ததால் அவரை "தேவதூதன்" என்று மக்கள் அழைத்தனர். (கடவுள் தன்மை கொண்ட மனிதராய் வாழ்ந்தவர்). அப்படி உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் அவ்வப்போது தேவதூதர்கள் (எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் மக்கள் சேவையில் தங்களை அர்பணித்துக்கொண்டவர்கள்) தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றனர். 



பந்தள மகாராஜா ராஜசேகரனுக்கு நீண்ட நாட்களாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த வேளையில், பிள்ளை வேண்டி சபரிமலையில் குடிகொண்டிருக்கும் தர்மசாஸ்தாவிடம் மனமுருகி வேண்டினான். ஒருநாள் தன் பரிவாரங்களுடன் வேட்டைக்காக சென்றபோது, பம்பை நதிக்கரைக்கு அருகே கிடைத்த ஒரு குழந்தை அழும் ஓசை கேட்டு சென்று பார்த்த போது, பம்பை ஆற்றுக்கு அருகே ஒரு குழந்தை இருப்பதைப் பார்த்து, அகமகிழ்ந்து, அதை எடுத்து வந்து தன் பிள்ளையாய் பாவித்து வளர்த்து வந்தான்.

கழுத்தில் மணி ஒன்றை அணிந்திருந்ததால் அதை மணிகண்டன் அன்று பெயரிட்டு அழைத்து வந்தான். அரசனும் அரசியும் அகமகிழ்ந்த போதும் 
அந்த சமஸ்தானத்தின் திவான் ஒருவருக்கு காட்டில் கிடைத்த பிள்ளை, மன்னருக்குப் பின் அரசாளப் போவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குருகுலத்தில் சென்று பயிலத் துவங்கிய பாலகன் மணிகண்டன், குருநாதர் கற்றுக்கொடுத்த வித்தைகளை எளிதில் செய்து காண்பித்து அசத்தியதோடு, குருநாதரின் வாய் பேச முடியாமல் இருந்த பிள்ளையை பேச வைத்து அதிசயிக்க வைத்தார்.






இந்த நிலையில் மகாராணி கர்ப்பம் தரித்து ராஜராஜன் எனும் மகவைப் பெற்றெடுத்தார்.அரசன் மணிகண்டனை தன் மூத்த மகனாகப் பாவித்து திவானிடம் கூறி, தனக்குப் பின் அரியாசனத்தில் அமர வேண்டியது மணிகண்டன்தான் என்றும் கூறினார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத திவான், மணிகண்டனைக் கொல்ல பல வழிகளையும் கையாண்டார்.
தன் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடையவே, திவான் மகாராணியிடம் சென்று எங்கோ காட்டில் கிடைத்த பிள்ளைக்கு அரியாசனம் கொடுப்பது தவறு, ராணியின் வயிற்றில் பிறந்த பிள்ளைக்கே அதற்கு முழு உரிமை உள்ளது என்றும் தவறான போதனைகள் செய்தார். ராணியும் அந்த சூழ்ச்சியில் மனம் மாறினார்.

தனக்குத் தீராத தலை வலி உள்ளதென்றும், அதற்கு தக்க மருந்து புலிப்பாலை அருந்துவது மட்டும்தான் என்றும், காட்டிற்கு சென்று புலிப்பால் கொண்டு வருமாறும் மணிகண்டனைப் பணித்தார். காட்டில் கொடிய மிருகங்கள் மணிகண்டனைக் கொன்றுவிடும் என்று எதிர்பார்த்திருந்த திவான் மற்றும் மகாராணிக்கும், மனமில்லாமல் அனுப்பி வைத்த மன்னனுக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.

காட்டிற்குச் சென்ற மணிகண்டன், அங்கே அழுதா நதிக்கரையின் அருகே தன்னைத் தாக்க வந்த மகிஷி யுடன் போரிட்டு, அவள் தலை மீது நர்த்தனம் செய்து, வதம் செய்து, சாப விமோசனம் அளித்தார். பிறகு, அங்கே இருந்த புலியின் மீது அமர்ந்து, ஒரு புலிக்கூட்டத்துடன் அரண்மனையை நோக்கி பயணம் செய்தார். (தேவேந்திரனே புலியாக, மணிகண்டனின் வாகனமாக வந்ததாக கதைகள் கூறுவர்). புலிக்கூட்டத்துடன் வந்த மணிகண்டனைப் பார்த்தா மகாராணி மனம் திருந்தினார்.

இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமான திவானைத் தண்டிக்கும்படி அரசன் கூற, அதை மறுத்த மணிகண்டன், நிகழ்ந்தவை எல்லாம் விதிப்பயனே என்றும்,  அவரை மன்னித்து விட்டுவிடும்படி கூறினார். மேலும் தர்மசாஸ்தாவிற்கு ஒரு கோவில் பணியும்படியும் அரசனிடம் வேண்டிக்கொண்டார். அரசனும் அவ்வாறே செய்தான். மணிகண்டன் அம்பெய்து காண்பித்த சபரிக்கு அருகே ஒரு சந்நிதானத்தை எழுப்பினான். அந்த சன்னிதானத்திற்கு வரும் பக்தர்களை, காட்டு விலங்குகளிடம் இருந்தும், கொள்ளையர்களிடம் இருந்தும் காக்கும் பணியை மணிகண்டனும் அவர் உயிர்த் தோழன் வாவரும் கவனித்துக்கொண்டனர். சபரிமலையை அழிக்க போர்தொடுத்து வந்த உதயணன் என்பவனை இவ்விருவரும் கடுத்தா சகோதரர்களுடன் சேர்ந்து   அழித்தனர். பலப்பல வெற்றிகளைக் குவித்த போதும்  இறுதியில் எரிமேலிக்கு அருகே நடைபெற்ற போர் ஒன்றில் நண்பர்கள் இருவரும் உயிர் துறந்தனர்.



இன்றும் அவர்கள் நினைவாக வாவர் மற்றும் மணிகண்டனுக்கு அங்கே கோவில்கள் அமைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். தங்களை வழிப்பறிக் கொள்ளையர்கள் மற்றும் காட்டு விலங்குகளிடமிருந்து காத்து உயிர் நீத்ததால் மணிகண்டனை, அய்யன் என்றும், அப்பன் என்றும் கூறி வந்தனர். காலப்போக்கில் இது "ஐயப்பனாக" மருவி அவரை தர்மசாஸ்தாவின் மறு உருவமாக வணங்கத் துவங்கினர். எல்லையில் காக்கும் அய்யனை இன்றும் "அய்யனார்" என்ற பெயரிலும் அழைத்து வருகின்றனர். தேவதூதர்களை அவர்கள் செய்த நற்செயல்களால், கடவுள்களாகவே வணங்கத் துவங்குகின்றனர். 


சுவாமியே சரணம் ஐயப்பா!



Saturday, November 30, 2019

ரவுடி பேபி 2.0 - ஹிட்மேன்

.

தயவு செய்து சற்று கீழே ஸ்க்ரோல் செய்து படிக்கவும். 


































.


































.












































































































.
.
























































ஹிட்மேன்:









Tuesday, November 12, 2019

ஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..

சினிமா பார்க்கறது ஒரு சுகமான அனுபவம்னா, புதுப்புது தியேட்டர்ல போய் பார்க்கிறது அதைவிட ஒரு அலாதி சுகம் தர்ற அனுபவம் எனக்கு. கோவையில் இருந்த வரை பெரும்பாலும் எல்லா தியேட்டருக்கும் ஒரு விசிட் விட்டிருக்கேன். இப்போ இருக்கிற ஜெனரேஷனுக்கு ப்ரோஃஜோன் மால், ப்ரூக்பீல்ட்ஸ், ஃபன் சினிமாஸ்தான் சுகம். அவங்களுக்கு கேஜி, கற்பகம் காம்ப்ளக்ஸ், செந்தில் குமரன், சென்ட்ரல், பாபா காம்ப்ளக்ஸ் தெரிஞ்சிருந்தாலே பெரிய விஷயம்.

ஆனா என் பால்ய காலத்துல (அதாவது ஒன்ஸ் அபான் எ டைம் இன் கோவை) ராயல், கர்னாடிக், மாருதி, டிலைட், ராஜா, நாஸ், இருதயா, கீதாலயா, ஜிபி, சாந்தி, உக்கடம் லட்சுமி தியேட்டர், சிங்காநல்லூர் மணீஸ், அம்பாள், ஜெயசாந்தி, கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர்ன்னு நான் படம் பார்த்த லிஸ்ட் கொஞ்சம் நீளமாவே இருக்கும்.

சென்னை வந்தப்புறமும் ஸ்டார் தியேட்டர், சைதை ராஜ், ஆனந்த் தியேட்டர்,  மேடவாக்கம் குமரன், வில்லிவாக்கம் நாதமுனிவரை தேடித் தேடி பார்த்தது ஒரு பசுமையான அனுபவம். சமீப காலமா அந்த அனுபவங்களை எல்லாம் அசைபோட்டபடி படம் பாக்கணும்னா கமலா தியேட்டர்னு செட்டில் ஆகி சைலண்ட்டா இருந்தப்போதான் ஒருநாள் உள்ள உறங்கிகிட்டு இருந்த உலகநாயகன் விழிச்சுகிட்டு, புது தியேட்டர் போயி ரொம்ப நாள் ஆச்சேன்னு எங்கே போலாம்னு தேடின போதுதான் கார்னிவல் சினிமாஸ் கண்ணுல பட்டுது. என்னடா இது புதுசா இருக்கே, ஈசிஆர் மாயாஜால், கோயம்பேடு ரோகினி, மவுண்ட் ரோட்டுல சத்யம், தேவி, புரசைவாக்கம் ஹைவேல சங்கம், ஈகா, பக்கத்துல ஆல்பட், பெரம்பூர் எஸ்2, ஆலந்தூர் மார்லன் சினிமாஸ் வரை நாம எல்லா தியேட்டரிலும் படம் பார்த்து, கங்கை கொண்ட சோழனின் பெருமிதத்துடன் அமர்ந்திருந்த வேளையில் இத பார்த்ததும் எப்படி மிஸ் பண்ணினோம்னு ஒரு சிந்தனை.எவ்



ரைட்டு, அது எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு லக்கேஜ்களோட (முன்ன மாதிரி தனியா போக முடியாது இல்ல) மேப் போட்டு பூந்தமல்லி வழியா அகத்தியர் பொதிகை மலையை கடந்த மாதிரி குண்டும் குழியும் இருக்கிற வழியில (அதுக்கு பெங்களூரு ஹைவேன்னு பேர் வச்சிருக்காங்க). கிட்டத்தட்ட பதினாலு கிலோமீட்டர் பயணம் செஞ்சு ஒரு வழியா கார்னிவல் சினிமாஸ் திரையரங்கை அடைந்தோம்.

அங்க ஆறேழு ஸ்க்ரீன் இருந்தாலும் நாங்க எல்லா படத்தையும் பார்த்துட்டதால வேற வழி இல்லாம "ஒத்த செருப்பு" படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு போய் உட்கார்ந்தோம். ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்தாலும்
தியேட்டர் நல்லா இருந்தது. குட்டீஸ் விளையாட ப்ளே ஏரியா, சுத்தமான கழிவறைகள், கேபிடேரியான்னு சகல வசதிகளோட இருந்தது ஆறுதல்.

"ஒத்த செருப்பு" ன்னு டைட்டில்  போடும்போது திரும்பிப் பார்த்தா யாரையும் காணோம். நல்ல வேளை நான் குடும்பத்தோட வந்ததால, ஒத்த செருப்பை ஒத்தையா பார்க்கிற அனுபவம் கிடைக்கல. பார்த்திபன் முதல் காட்சியில் வர்றார், இரண்டாவது காட்சியில் வர்றார். மூணாவது காட்சியிலும் வர்றார். அட கடைசி வரை அவர் மட்டும்தான் வர்றார், இதை எப்படி சலிப்பில்லாம பார்க்கிறதுன்னு நண்பர் ஒருவர் கேட்டது நினைவுக்கு வந்தது. பெரும்பாலான ரஜினி படங்களை அப்படித்தானே பார்ப்போம். இதுல செகண்ட் ஹாப்ல டூயல் ரோல்ல வேற வருவார். அதையெல்லாம் நாம் சகிச்சுகிட்டு பார்க்கலையா?



கதையைப் பத்தி பெண்ணியவாதிகள் துவைச்சு தொங்கப்போட்டுட்ட நிலையில் நான் அதைப் பத்தி பேசல, பட் ஸ்க்ரீன் ப்ளே, புதுசா ஒரு முயற்சி. கடைசி வரை ஆடியன்சை (எங்க மூணு பேரையும்தான் சொல்றேன்) வெளியே போகாம கட்டிப் போட்டிருந்தது. படம் முடிஞ்சு வந்த போது அந்த பரந்து விரிந்திருந்த பார்க்கிங் லாட்டில் இருந்து பைக்கை எடுத்துகிட்டு, ஹெல்மெட்டை மாட்டிகிட்டு, மறுபடியும் அந்த சபாரி ரைடுக்கு தயாரானபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தது!









How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...