Sunday, April 27, 2014

IPL அப்டேட்ஸ்... 20140427


ஏப்ரல் 26 வரையிலான போட்டிகளின் முடிவில் அணிகளின் நிலவரம்...  




*  விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய ஒரே அணியாகவும் முதலிடத்திலும் மொஹாலி  தற்சமயம் உள்ளது. 

* பெங்களூரு டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இதுவரை அதிக விக்கெட் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.  (பெங்களூரு ராஜஸ்தானுக்கு எதிராக எடுத்த 70 ரன்களே இந்த வருடத்தில் ஒரு அணி எடுத்த மிகக் குறைந்த ஸ்கோராகும்)

* சென்னை டெல்லியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிக ரன்கள் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.

* சென்னை எடுத்த ரன்களை 205 ஓவர்டேக் செய்து மொஹாலி எடுத்த 206 ரன்களே அதிகபட்சமாக ஒரு அணி குவித்த ரன்கள்.

* பேட்டிங்கில் மொஹாலியின் மேக்ஸ்வெல் 294 ரன்களுடன் முதலிடத்திலும், ஸ்மித் 174 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

* மேக்ஸ்வெல் சென்னைக்கு எதிராக அடித்த 95 ரன்களே ஒரு வீரர் அதிகபட்சமாக அடித்த ரன்கள்.

* அதிக சிக்ஸர்கள் (17)  மற்றும் அதிக பவுண்டரிகள் (30)  அடித்து மேக்ஸ்வெல் முன்னிலையில் உள்ளார்.

* அதிக முறை டக் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கம்பீர் (3) உள்ளார். (நான்கு போட்டிகளில் இவர் எடுத்த மொத்த ரன்(கள்) ஒன்றே ஒன்று..)

* அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கொல்கட்டாவின் சுனில் நரேன்  ஒன்பது விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

* ஒரே ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் பாலாஜி முதலிடம் பிடித்துள்ளார். (பதிமூன்று ரன்கள் கொடுத்து நாலு விக்கெட்டுகள்) 

* அதிக விக்கெட் வீழ்த்திய கீப்பர்கள் வரிசையில் பெங்களூரின் பார்த்திவ் பட்டேல் தலா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் (நான்கு விக்கெட்டுகள்)

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த ரெய்னா அதிக கேட்சுகள் பிடித்தவர் வரிசையில் முதலிடம் பெறுகிறார். இவர் ஐந்து கேட்சுகள் பிடித்துள்ளார். ( கொல்கட்டாவின் க்றிஸ் லின் பெங்களூருக்கு எதிராக பிடித்த ஒரு கேட்ச்சே இந்த ஐ.பி.எல்லின் சிறந்த கேட்ச்சாக உள்ளது) 

* அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை கொல்கட்டாவின்  காலிஸ், மனிஷ் பாண்டே ஜோடி மும்பைக்கு எதிராக  இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் எடுத்த 131 ரன்கள் மூலம் தக்க வைத்துள்ளனர். 

                  மூன்று போட்டிகளிலும் மோசமாக தோற்ற மும்பை, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ள ஹைதிராபாத் மற்றும் டெல்லி அணிகள் மேலும் புள்ளிகள் எடுக்க போராட வேண்டும். 

                   சிறப்பாக துவங்கி பின் இரு போட்டிகளில் சரிவைக் கண்ட பெங்களூரு பேட்டிங்கில் கெயிலை களமிறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொல்கட்டாவும், ராஜஸ்தானும் தலா இரு போட்டிகளில் வென்று இரண்டில் தோல்வி கண்டுள்ளது. இவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் கவனமாக விளையாட வேண்டும்.
                     சென்னை சிறப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும் மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. மொஹாலி ப்ரீத்தி ஜிந்தா கொடுக்கும் உற்சாகத்திலும் (?!!) மேக்ஸ்வெல்லின் அதிரடியிலும் முதலிடத்தில் உள்ளது.

                 இது முதல் பத்து நாட்களின் நிலவரம் மட்டுமே. அடுத்த  வாரம் இன்னும் சில போட்டிகளின் முடிவுகளுடன் அட்டவணையை பார்ப்போம்.. வர்ட்டா..


நன்றி: ESPNCricinfo

கடுப்பேத்துறார் மை லார்ட்..!


                         ஐ.பி.எல் போட்டிகளின் இடையே ஒளிபரப்பப்படும் சில விளம்பரங்கள் பார்த்தபோது கடுப்பேற்றிய சில விளம்பரங்கள் இவை.


                          விளம்பரம்1 : அமேசான்... கணவன் மனைவி இருவரும் அமர்ந்து கிரிக்கெட்டை ரசித்துக் கொண்டே தங்களுக்குள் பெட் (Bet) வைத்துக் கொள்கிறார்கள். சிக்ஸ் அடித்தாலோ, அல்லது பவுண்டரி அடித்தாலோ மனைவி தான் விரும்பிய பொருள் ஒன்றை வாங்கிக் கொள்ளலாம். அவுட் ஆகிவிட்டால் கணவன் தனக்கு இஷ்டமானதை வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் மனைவி வென்று பேக், ஷூ, போன்றவற்றை ஆர்டர் செய்கிறார். தான் ஜெயித்தால் கேமிங் கன்சோல் ஒன்று வாங்க விரும்பிய கணவன் ஒவ்வொரு முறையும் தோற்க, ஒரு முறை விக்கெட் விழுகிறது. சந்தோஷத்தில் வெற்றிக் குறியிட்டு கணவன் அதைக் கொண்டாட அம்பயரோ அதை நோ-பால் என அறிவிக்கிறார். கணவனின் சில நொடி சந்தோஷங்களை பார்த்துக் கொண்டிருந்த அந்த மனைவி இப்போது அந்தத் தோல்வியை கொண்டாடும் விதமாக "யெஸ்" என்று பொறாமையுடன் கூறி ஆனந்தப்படுகிறார்.


                     

                         விளம்பரம் 2: ஹேவல்ஸ் மிக்ஸி... கணவன் சாப்பிடுவதற்காக டேபிளில் அமர்கிறான். மனைவி அவன் தட்டில் இட்டிலிகளை வைக்கிறாள். அதைப் பார்த்ததுமே அவன் "சாப்டா இருக்கு இட்லி" என்று பாராட்டுகிறான். பின் இட்டிலிக்கு தொட்டுக் கொள்ள அந்த மனைவி கொஞ்சம் சாம்பார் ஊற்ற முகம் வாடும் கணவன் தன்னுடைய அம்மா தனக்கு பல வித சட்னி செய்து கொடுத்ததை நினைவு கூர்ந்து கொண்டே இட்லியை உண்கிறான். அந்த பாராட்டை ரசிக்காத மனைவி உள்ளே சென்று மிக்ஸியை எடுத்து வந்து அவன் முன்னே வைத்துவிட்டு "பல வகை சட்னி அரைக்க தேவையான பொருட்கள் இங்கே இருக்கு. அரைச்சுக்கோங்க" என்று கூறிவிட்டு எதிரில் அமர்ந்தவாறே "சட்னியா, பத்னியா(மனைவியா)" என்று கேட்பது போல் முடியும். கடைசியில் "Respect Woman" என்ற வாசகம் வேறு.

                                     

                            மேற்சொன்ன இரண்டு விளம்பரமுமே ஆண்-ஆதிக்கம் (ஆதிக்கம் செய்யப்படும் ஆண்கள் எனக் கொள்க ) நிறைந்த விளம்பரங்கள்.. வியாபார உக்தி என்று கொண்டாலும் மீடியாவில் வரும் இதுபோன்ற விளம்பரங்களால் இன்றைய இளைய தலைமுறை பெண்களின் மனப்பாங்கு மாறுவது மிகச் சாதாரணமாய் நிகழ்வது தவிர்க்க முடியாததாகிறது..


Saturday, April 26, 2014

ஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)

                                     
                      விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிக்க கலைப்புலி தாணு வழங்கும் அரிமா நம்பி. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நமக்கு மிகவும் பரிச்சயமான "டிரம்ஸ்" சிவமணி தாங்க. முதல் முறை ஒரு திரைப்படத்திற்கு சிவமணி இசையமைக்கும் பாடல்கள்  எப்படி இருக்குன்னு பார்ப்போம்.


                       1.  "இதயம் என் இதயம்" காதல் வானில் பறக்கும் நாயகன் நாயகியை நினைத்து உருகி உருகி பாடும் பாடல். தமிழ் வார்த்தைகளுக்கு கூடுதல் அழுத்தத்தோடு ஜாவேத் அலி பாடியிருக்கும் மெல்லிசை.
             
                         2. ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் " நீயே..நீயே.." பாடல் தெவிட்டாத தெள்ளமுது. 'அதிரடி' மன்னன் சிவமணியிடமிருந்து இப்படி ஒரு மெல்லிய இசை நிச்சயம் சர்ப்ரைஸ் கிப்ட் தான். ஆனால் இந்தப் பாடல் அம்மணி முன்பு பாடியே 'சகாயனே' பாடலின் சாயலில் இருக்கிறது.

                         3. "நானும் உன்னில் பாதி" - அல்மா மற்றும் ரீட்டா பாடியிருக்கும் ஐட்டம் நம்பர். கிறக்கத்துடன் ஒலிக்கும் இந்தப் பாடலின் இடையில் 'ஊலலல்லா' பாடலுக்கு இடையே வரும் டிரம்ஸ் போலவே இதிலும் வருகிறது. ஹோம் தியேட்டரில் கேட்டு மகிழ நல்ல இசைக் கலவை அது.

                        4. ஷப்பிர் குமார், ரிஸ்வி இணைந்து பாடியிருக்கும் "யாரோ யார் அவள்" - தன் மனம் கவர்ந்த பெண்ணை பற்றி நாயகன் பாடும் பாடல். மற்ற படங்களுக்கு சிறப்பாய் டிரம்ஸ் வாசித்த சிவமணி தான் இசையமைக்கும் படத்துக்கு என்ன செய்வார்? இந்தப் பாடலும், பாடல் நெடுக ஒலிக்கும் டிரம்ஸ் இசையும், யூத் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் இருக்கிறது.

                         A.R. ரஹ்மானின் பல படங்களுக்கு உயிரூட்டியது சிவமணியின் இசை. இந்தப் படத்தில் இவர் செய்திருக்கும் தனி ஆவர்த்தனம் நிச்சயம் ரசிகர்களால் பாராட்டப் படக்கூடும்.  இன்னும் பல நல்ல ட்யூன்களோடு வந்து முன்னணி இசையமைப்பாளர்களுக்கு போட்டியாய் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. மொத்தத்தில் அரிமா நம்பி- அதிரடி.



                        

Thursday, April 24, 2014

என் வோட்டு 49-Oக்கு..!

               

                         "கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு எத்தனை ப்ரெண்ட்ஸ் இருந்தாங்களோ தெரியாது, பட் கல்யாணத்துக்கு அப்புறம் நான் மட்டும் தான் உன் ப்ரெண்டா இருக்கணும்."

                       "ரோட்டுல போற ஏழைகள பார்த்து பரிதாபப்படலாம். ஆனா நம்ம வேலையெல்லாம் விட்டுட்டு அவங்களுக்கு உதவி செய்ய நினைக்கிறது முட்டாள்தனம்."

                           "மல்லிகா, நீ எங்கே வேணா வேலைக்கு போகலாம்.. அந்த ப்ரீடம் உனக்கு எப்பவும் கொடுப்பேன்.."
                   

                            "சரி ஒவ்வொருத்தர் கிட்டவும் கேள்வி கேக்கணும்னு சொல்லி கேட்டே.. இப்போ அவங்களுக்கு உன் பதில் என்ன? அவங்கள்ல யாரை தேர்ந்தெடுக்க போறே?"

                   ஒரு புன்முறுவலுடன் "என் வோட்டு 49-Oக்கு" என்றாள் மல்லிகா.


                                             *********** § **********

Tuesday, April 22, 2014

சுராஜ் வெஞ்சாரமூடு..!

                 ஹலோ, ஹலோ..இப்ப எதுக்கு என்ன திட்ட வர்றீங்க.. அட நான் உங்கள திட்டலீங்க..சுராஜ் வெஞ்சாரமூடுங்கிறது ஒரு மலையாள நடிகரின் பெயர். இவர் காமெடி, குணச்சித்திரம், இப்ப ஹீரோன்னு கிட்டத்தட்ட எல்லா ரோலும் செய்யக் கூடிய திறமையான நடிகர். 2001 ல் காமெடியனா அறிமுகமான இவர் "சேதுராம அய்யர் CBI" படத்தில் மம்மூட்டியுடன் நடித்ததில் இருந்து பிரபலம் ஆனார். தொடர்ந்து ரசதந்திரம், கிளாஸ்மேட்ஸ், அரபிக்கதா, கேரளா கபே, வெறுதே ஒரு பார்யா போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.



                    இவர் காமெடியனாக நடித்த 'ராக் அண்ட் ரோல்' திரைப்படத்தில் வரும் P.P. ஷிஜு கதாப்பாத்திரத்தை ரசிக்காத மலையாளப் பட ரசிகர்களே இருக்க முடியாது எனலாம். காமெடி மட்டுமல்லாது குணச்சித்திர நடிப்பும் 'வாய்' வந்த கலை இவருக்கு. பெரும்பாலும் மம்மூட்டி, மோகன்லால் படங்களில் வரும்பொழுது இவர் கதாப்பாத்திரம் மிளர்வதை காணலாம். நூற்று எண்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர் சமீபத்தில் வெளியான  "பேரறியாத்தவர்"  படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கொடுக்கப் பட்டுள்ளது.

                       (இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு நேற்று துளசிதரன் அவர்களின் தளத்தில் வெளியான இந்த பதிவை படியுங்கள்.)

Monday, April 21, 2014

ஆவி டாக்கீஸ் - வடகறி (Music)

                                       


                    தயாநிதி அழகிரியின் மீகா எண்டர்டெயின்மென்ட் வழங்கும் வடகறி.  ஜெய், சுவாதி நடிக்கும் இந்தப் படத்திற்கு இசை விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன். ( முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் வேறு படங்களில் பிஸியாக இருந்த காரணத்தால் ஒரு பாடலோடு இதிலிருந்து யுவன்ஷங்கர்ராஜா  விலகி விட்டது குறிப்பிடத்தக்கது)

1. ப்ரியா ஹிமேஷ், சத்யன் இணைந்து பாடியிருக்கும் டூயட்  " உயிரின் மேலொரு உயிர்வந்து கலந்தால்" பாடல். தனது வழக்கமான Genre அல்லாமல் மெலடியிலும் ரசிக்க வைக்கிறார் ப்ரியா. யுவனின் இன்னிசை நம்மை மெய்மறக்க வைக்கிறது.

2. "லோ-ஆனா லைப்" -  அனிருத் தன் இசையில் அல்லாது தன் நண்பர்களுக்காக பாடியிருக்கும் பாடல் இது.. பார்ட்டி சாங்காக வரும் இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவின் கவர்ந்திழுக்கும் குரல் பக்க பலமாக இருக்கிறது. திரையில் இந்த பாடலுக்கு தமிழில் முதல் முறையாக அறிமுகம் ஆகும் சன்னி லியோனின் நடனம் ரசிகர்களுக்கு கூடுதல் போனஸ்.

3. விஜயபிரகாஷ், மற்றும் சூப்பர் சிங்கர்ஸ்  அஜீஸ் மற்றும் திவாகர்  பாடியிருக்கும் "நெஞ்சுக்குள்ளே நீ"  உற்சாக மின்னல் வெட்டிச் செல்லும் பாடல். காதலியை கவர்ந்திழுக்க வேண்டி நாயகன் பாடும் பாடல் இது.

4. "உள்ளங்கையில் என்னை வைத்து" பாடல்  செல்பேசியை பயனுள்ள முறையில் பயன்படுத்த சொல்லி நம்மை பயமுறுத்தும் பாடல். சித்தார்த் மகாதேவன் தந்தை ஷங்கர் மகாதேவனை போலவே முயற்சித்திருக்கிறார். "அறிவியலை அழிவிற்கென மாற்றினாய்" போன்ற வரிகள் பாடல் வரிகளாய் இருந்தாலும் நிச்சயம் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும்  வரிகள்.

5. ஹீரோ ஹீரோயின் இல்லாம கூட படம் வரலாம். கானா பாலா பாடல் இல்லாத தமிழ்ப் படமா என்ற விதிக்கு இந்தப்படமும் விலக்கல்ல. "கேளுங்கண்ணே கேளுங்க" என வழக்கம்போல் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி கலந்து தத்துவங்களை பாட்டாய்ப்  படிக்கிறார்.

                              மொத்தத்தில் வடகறி காதுகளுக்கு விருந்தாய் அமைகிறது..

Sunday, April 20, 2014

IPL அப்டேட்ஸ்... 20140420



 முதல்  ஆறு போட்டிகளின் முடிவில் அணிகளின் நிலவரம்...  (ஏப்ரல் 19 வரை)  
        
அணிகள்
மொத்த போட்டிகள்
வெற்றி
தோல்வி
டை
புள்ளிகள்
ரன் விகிதம்
Bangalore T20
2
2
0
0
4
1.168
Kolkata T20
2
1
1
0
2
0.909
Mohali T20
1
1
0
0
2
0.688
Jaipur T20
1
1
0
0
2
0.273
Delhi T20
2
1
1
0
2
-0.61
Hyderabad T20
1
0
1
0
0
-0.273
Chennai T20
1
0
1
0
0
-0.688
Mumbai T20
2
0
2
0
0
-1.515









*  விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய ஒரே அணியாகவும் முதலிடத்திலும் பெங்களூரு தற்சமயம் உள்ளது. 

* பெங்களூரு டெல்லியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதே இதுவரை அதிக விக்கெட் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.  

* கொல்கட்டா மும்பையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதிக ரன்கள் வித்தியாசத்தில் முடிந்த ஆட்டம்.

* சென்னை எடுத்த ரன்களை 205 ஓவர்டேக் செய்து மொஹாலி எடுத்த 206 ரன்களே அதிகபட்சமாக ஒரு அணி குவித்த ரன்கள்.

* பேட்டிங்கில் டெல்லியின் டுமினி 119 ரன்களுடன் முதலிடத்திலும், மனிஷ் பாண்டே 112 ரன்களுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

* மேக்ஸ்வெல் சென்னைக்கு எதிராக அடித்த 95 ரன்களே ஒரு வீரர் அதிகபட்சமாக அடித்த ரன்கள்.

* அதிக சிக்ஸர்களை டுமினியும் ( 6 ) அதிக பவுண்டரிகளை (15)  மேக்ஸ்வெல்லும் அடித்துள்ளனர்.

* அதிக முறை டக் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கம்பீர் (2) உள்ளார்.  IPL வரலாற்றில் மொத்தமாக சேர்த்து இவர் இரண்டாமிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடத்தில் காலிஸ் உள்ளார். (இருவரும் கொல்கட்டாவை சேர்ந்தவர்கள் என்பதை கவனிக்க..)

* அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் கொல்கட்டாவின் சுனில் நரேனும், மும்பையின் மலிங்காவும் தலா ஐந்து விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

* ஒரே ஆட்டத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையிலும் இதே ஜோடி உள்ளது. (நான்கு விக்கெட்டுகள்)

* அதிக விக்கெட் வீழ்த்திய கீப்பர்கள் வரிசையில் பெங்களூரின் பார்த்திவ் பட்டேலும், கொல்கட்டாவின் உத்தப்பாவும் தலா இரண்டு விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளனர். 

* ஜெய்ப்பூர் அணியை சேர்ந்த ரிச்சர்ட்சன் அதிக கேட்சுகள் பிடித்தவர் வரிசையில் முதலிடம் பெறுகிறார். இவர் மூன்று கேட்சுகள் பிடித்துள்ளார்.

* அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற பெருமையை கொல்கட்டாவின்  காலிஸ், மனிஷ் பாண்டே ஜோடி மும்பைக்கு எதிராக  இரண்டாவது விக்கெட்டுக்கு இவர்கள் எடுத்த 131 ரன்கள் மூலம் தக்க வைத்துள்ளனர். 

                   இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோற்ற மும்பை, அதிக ரன்கள் எடுத்தும் மோசமான பவுலிங் மற்றும் பீல்டிங் காரணமாக தோற்ற சென்னை அணி, சுமாராக விளையாடிய சன்ரைசர்ஸ் அணி ஆகியவை முதல் புள்ளியை எடுக்க போராட வேண்டும். 

                  ஆடிய ஒரு போட்டியில் வெற்றியை ருசித்துள்ள ஜெய்பூர் மற்றும் டெல்லி இன்னும் ஆர்வத்துடன் விளையாடி முதலிடத்துக்கு வர முயற்சி செய்ய வேண்டும்.  விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் மற்றொன்றில் தோல்வியும் பெற்ற டெல்லி மற்றும் கொல்கட்டா அணிகள் கவனத்துடன் விளையாட வேண்டும். 
 
                   பெங்களூரு அணி (இதுவரை கெயில் எனும் பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தாமலே) இரண்டு வெற்றிகளை பெற்று முதலிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது. அணியின் ஒரு வீரரை மட்டும் நம்பி இருக்காமல் தேவைக்கேற்ப எல்லோரும் ஒரே அணியாக விளையாடுவதை தொடர வேண்டும். 

                 இது முதல் ஆறு போட்டிகளின் நிலவரம் மட்டுமே. அடுத்த  வாரம் இன்னும் சில போட்டிகளின் முடிவுகளுடன் அட்டவனையை பார்ப்போம்.. வர்ட்டா..


நன்றி: ESPNCricinfo

Saturday, April 19, 2014

ஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்


இன்ட்ரோ  
                         நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலுவின் கம் பேக் மூவி. டிரெயிலர்கள் புலிகேசியை நினைவுபடுத்தும் காட்சிகளை காட்டிய காரணத்தால் கொஞ்சம் பயத்துடனே நுழையும் மக்களுக்கு தெனாலி ராமன் நிச்சயம் ரசிக்க வைத்தான் என்றே சொல்ல வேண்டும். சிறுவயதில் சிறுவர் மலரில் படித்து ரசித்த கதையை படமாக இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு கொடுக்க நினைத்த முயற்சிக்கு நிச்சயம் பாராட்ட வேண்டும்.



கதை         
                  முதல் காட்சியிலேயே சீன வணிகம் பண்ண ஒரு சப்பை மூக்கனும், மொக்கை பிகரும் (வில்லியாமாம்) தப்பு தப்பாய் தமிழ் பேசிக் கொண்டு வர நமக்கு எங்கே போரடிக்க வைத்துவிடுவார்களோ என கிலி பிடிக்க, அருமையான என்ட்ரியோடு கதைக்குள் நுழையும் தெனாலிராமன் படத்தை கடைசி வரைக்கும் கலகலப்போடு கொண்டு செல்கிறான். கதை மற்றும் காட்சிகள் எல்லாமே எண்பதுகளில் அல்லது அதற்கு முன்னால் பிறந்த எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

                   அப்பாவி மன்னனை ஏமாற்றும் அமைச்சர்கள், அவர்களிடமிருந்து மன்னனையும் நாட்டையும் தன் மதியால் எப்படி தெனாலி ராமன் காப்பாற்றுகிறான் என்பதே கதை. இதற்கு இடைச் செருகலாக அந்நிய நாட்டு வணிகம்,  மன்னனின் மகளுடன் காதல், காமெடி என பல அம்சங்களுடன் ஜொலிக்க வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கு தேவையான பல விஷயங்களை சொல்வதுடன் குழந்தைகளையும் களிப்படையச் செய்வான் இந்த தெனாலி ராமன்.
               

ஆக்க்ஷன் 
                      மன்னன் மற்றும் தெனாலிராமன் என இருவேடங்கள் வடிவேலுவுக்கு. இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் தனித்தனியே குணாதிசியங்களை சொல்லி அவற்றை கடைசி வரை உடல்மொழியிலும் காட்டியிருப்பது தேர்ந்த கலைஞனின் நடிப்பு. தன்னை கொலை செய்ய வந்தவனே அதை ஒப்புக் கொண்ட பின் அவரை மீண்டும் அரண்மனைக்கு அழைத்து வரும் காட்சியில் இரண்டு கதாபாத்திரங்களும் போட்டி போட்டு நடித்திருக்கும். முதல் பாதியில் தெனாலியும் இரண்டாவது பாதியில் மன்னரும் முக்கியத்துவம் பெறுவதால் தான் டபுள் ஆக்ட் போட்டதற்கான காரணத்தை உணர்த்துகிறார்.

                       மீனாட்சி தீட்சித் நாயகி, அறிமுகக் காட்சியிலிருந்தே நமக்கும் அவரை பிடித்துப் போகிறது. படத்தில் சில இடங்களில் வசனங்கள் உதட்டசைவோடு ஒட்டாது போனாலும் தன் எக்ஸ்பிரஷன்கள் மூலம் நம்மை கவர்கிறார். மந்திரிகளாக வரும் எட்டு பேரில் (ஒருத்தர் முதல் காட்சியிலேயே இறந்து விடுகிறார்) ஒருவருக்கு கூட மூன்று நான்கு டயலாக்குகளுக்கு மேல் இல்லை.. சீனாக்காரி கொலை செய்யும் போது கூட நமக்கு காமெடியை தெரிகிறது ஏன்? மன்சூர், ராஜேஷ், ராதாரவி வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள். தேவதர்ஷினி நல்ல நடிப்பு.    
      
                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                           "ரம்பபபா" பாடலும் ஸ்ரேயா கோஷலின் "ஆணழகு" பாடலும் கேட்கும்படி இருக்கிறது.  ஆண்ட்ரியா பாடிய பாடலை கேட்க வந்த ரசிகர்கள் அது இல்லாதது கண்டு ஏமாந்து சென்றதாக சேதி. இசை இமான் அசத்தல். பீரியட் படத்துக்கான பீல் கொடுக்கறார். இயக்குனர் யுவராஜ் முந்தைய படம் போல் அல்லாமல் நன்றாக செய்திருக்கிறார்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                "ஆணழகு" பாடல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சி.. சம்மருக்கு குழந்தைகள் பார்த்து மகிழ நல்ல படம்.

                  Aavee's Comments - Intellectual !

Thursday, April 17, 2014

ஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..




சூப்பர்ஸ்டார் 
(ந.மோ போயஸ் கார்டன் உள்ளே நுழைந்த பின்னர், நாம் ஸ்கூல் பையன் பிறந்த நாள் என்று சொன்னதும் நமக்கு கொடுத்த பேட்டி)

கண்ணா, நாம எவ்ளோ போஸ்ட் தேத்துறோம்ங்கறது முக்கியமில்ல. எவ்ளோ போஸ்ட்லே ஸ்கூல் பையன் மாதிரி பிரபலம் ஆகறோம்ங்கறது தான் முக்கியம். அவர் இந்தளவுக்கு வந்திருக்கார்னா அவரோட பேஷன், டெடிகேஷன், டிகாஷன் இதான் காரணம். நான் அரசியலுக்கு வர்றேனா இல்லையாங்கறது முக்கியமில்ல. ஆனா இவர் அரசியலுக்கு வந்தாச்சுன்னு சொன்னா நாடு நல்லா இருக்கும். அதனால இவருக்கே உங்க ஓட்ட, சாரி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்த சொல்லிக்கிறேன்..

கமலஹாசன் 
(உத்தம வில்லன் ஷூட்டிங்கிற்காக கிளம்பிக் கொண்டிருந்த சமயம் நமக்கு கொடுத்த பேட்டி)

வெல், நாம சின்ன வயசுல தெருவோரத்துல போகும் போது பார்த்திருப்போம். ஒரு சின்ன பையன் பின்னாடி ஸ்கூல் பேக்க மாட்டிகிட்டு சைடு சுவத்துல ஒட்டியிருக்கிற போஸ்டர பார்த்துக்கிட்டே போயிட்டு இருப்பான். அந்த பருவம் மீண்டும் நமக்கு வராதான்னு ஒவ்வொருத்தரும் ஆசைப்படுவோம். என்னால சினிமால இனி ஸ்கூல் பையனா நடிக்க வேணா முடியும். ஆனா நிஜ வாழ்க்கையில எப்பவுமே ஸ்கூல் பையனா இருக்கிறது இவரால மட்டும்தான் முடியும் .. இவருக்கு என் வாழ்த்துகளை சொல்லிக்கிறேன்..


கேப்டன்:
(ரகசியமாய் படமாக்கப்படும் கேப்டன் பிரபாகரன் பார்ட்-2 படப்பிடிப்பு தளத்திலிருந்து)


மக்கழே, பாகிஸ்தான் பார்டர்ல எவ்வளவோ தீவிரவாதிகள பார்த்திருக்கேன்.. சண்டையும் போட்டிருக்கேன். ஆனா மக்களுக்கு குரல் கொடுக்க ஒரு பேஸ்புக் ஐடி போதும்ன்னு புது டெக்னிக்க கண்டுபிடிச்ச நம்ம ஸ்கூல்பையன் தான். 


பவர்ஸ்டார் 

(வெட்டியாக இருந்த ஒரு பொழுதில்)

பார்க்க பார்க்க புடிக்கும் இந்த பவர, பேசாமலே புடிக்கும் இந்த ஸ்கூல. பியூச்சர்ல 'கூல்ஸ்டார் ஸ்கூல் பையன்னு' எனக்கு போட்டியா கூட வரலாம்..  
அவருக்கு எனக்கு சென்னையில் மட்டும் இருக்கும் கோடானு கொடி ரசிகர்கள் சார்பா வாழ்த்திக்கிறேன்..


T.R.
(வாலு பட ஆடியோ ரிலீஸுக்கு இவரை மேடையில் அழைத்துக் கொண்டிருக்க இவர் மேலே செல்லாமல் நமக்கு கொடுத்த பேட்டி)

பேருதான் ஸ்கூலு -இவரு பண்ற
சேட்டையெல்லாம் தூளு..
வெளியே போனா வைடு பாலு - நட்பில் சிக்சர்
அடிக்கும் போது கெய்லு 
ஆறடியில் ஓர் ஆளு - ஆனா மனசு தான்
கலக்காத பாலு..
மாரியம்மன் கோவில்ல ஊத்திடுவான் கூழு- தோனி போல
நம்மாளும் எப்பவுமே கூலு..
பல பேக் ஐடி வச்சிருக்கும் வாலு.. புள்ளகுட்டியோட
எப்பவும் நீ சந்தோசமா தான் வாழு..!

ஏ டண்டணக்கா டனக்குனக்கா..


ஒபாமா 
(ஆமா, அமெரிக்க அதிபரே தான்)

நான் போன தடவ இந்தியா வந்தப்ப தமிழ் கத்துகிட்டேன். ஸ்கூல் பையன் பதிவுகள நான் தவறாம படிப்பேன். பேஸ்புக்ல தினமும் அவர் போடுற கமெண்ட்ஸ்ல இருக்கிற வார்த்தைகள் ஒவ்வொண்ணும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கே தெரியாத வார்த்தைகள். அதை ஒரு உலக மொழியாக "ஸ்கூல் லேங்வேஜ்" ன்னு அன்னவுன்ஸ் பண்ணனும்னு ஐ.நா சபைய கேட்டுக்கறேன். ஹேப்பி பர்த்டே மிஸ்டர் ஸ்கூல்பையன்..



ஸ்கூல் : தேங்க்யு ஒபாமா, தேங்க்யு..

திருமதி ஸ்கூல்: இன்னைக்குமா கனவோடவே எழுந்துக்கறீங்க.. ஹேப்பி பர்த்டே.. உங்களுக்கு வாழ்த்து சொல்ல பாலகணேஷ் சார், சீனு, ஆவி, அரசன், ரூபக் இன்னும் நிறைய பேர் வந்திருக்காங்க.. எழுந்திருங்க..




                                   ***************** x ****************


Wednesday, April 16, 2014

அபுதாபியில் IPL..!

                       

                            இந்த வருடம் IPL எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் இன்று துவங்குகிறது. தேர்தலை முன்னிட்டு IPL ன் முதல் இருபது விளையாட்டுகள் அபுதாபியிலும், மே இரண்டாம் தேதியிலிருந்து இந்தியாவிலும் நடைபெறும். ஜூன் 1ஆம் தேதி வரை தொடரும் இந்த போட்டிகள் சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், கடைசியாக வந்த கொல்கட்டா அணிக்கும் நடக்கும் முதல் போட்டியுடன் இன்று துவங்குகிறது. வழக்கம் போல் அறிமுக நாளன்று விழாவை 'சிறப்பிக்க' தீபிகா படுகோனே மற்றும் மாதுரி தீட்சித் போன்ற இளம் மங்கைகளின்(?!) நடனத்துடன் ஆரம்பமாக உள்ளது.. இந்த வருடம் அணிகளின் அணிவகுப்பை பார்ப்போமா?




மும்பை T20 அணி:


                  ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்க உள்ள அணியில் சச்சின் இல்லாதது அணிக்கு பின்னடைவு என்றாலும் "பொறுப்பு ஆட்டக்காரர்" மைக் ஹஸ்சி, கோரி ஆண்டர்சன் ஆகியோர் வந்திருப்பது புத்துணர்ச்சி தரும். ஹர்பஜன் மற்றும் ஓஜா சுழலை கவனிக்க, ஜாகீர், மலிங்கா வேகத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் : கோரி ஆண்டர்சன்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :  மலிங்கா, ரோஹித், பொல்லார்ட்


மொஹாலி T20 அணி:


                   பஞ்சாப் தன் பெயரை மாற்றிக் கொண்டதோடு புதுப்பொலிவுடனும் வருகிறது. விரேந்தர் சேவாக்கின் வருகை பலம் கொடுக்கலாம். ஜான்சன், பாலாஜி, அவானா, மேக்ஸ்வெல் பந்துவீச்சிலும், பெய்லி, மார்ஷ், புஜாரா பேட்டிங்கிலும் கைகொடுக்கலாம். சாவ்லாவை தவற விட்டது இவர்களுக்கு இழப்பாக இருக்கலாம்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :  ஹென்ட்ரிக்ஸ், பெய்லி, மில்லர்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :            ஷான் மார்ஷ், பெரேரா.


கொல்கட்டா T20 அணி:



                      கம்பீரின் தலைமையில் ஷாருக்கானின் கொல்கட்டா அணி சென்ற முறை படுதோல்வியை சந்தித்தது.. புதுவரவான பியுஷும் மார்னேவும் பலம் கொடுக்கலாம்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :  சுனில் நாராயண், க்றிஸ் லின்.
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :  ஷாகிப் அல் ஹசன், மார்னே மார்கல்


ஜெய்பூர் T20 அணி:


                   ராஜஸ்தான் அணியும் புதிய பெயருடன் களம் இறங்குகிறது. வழக்கம் போல் அதிகம் பிரபலம் இல்லாத அணி வாட்சன் தலைமையில் களமிறங்குகிறது. ஸ்டீவன் ஸ்மித் வழக்கம் போல் ஆல்'தோட்ட' பூபதியாக அதாங்க ஆல்ரவுண்டராக கலக்கலாம்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் : ஜேம்ஸ் பாக்னர்.
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :            வாட்சன், ரஹானே, சஞ்சு சாம்சன்


ஹைதிராபாத் T20 அணி:


                  ஷிகார் தவான் தலைமையில் களமிறங்கும் ஹைதிராபாத் அணி  ஆரன் பின்ச், தவான், வார்னரின் அதிரடியையும், டேல் ஸ்டைன், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோரின் பந்துவீச்சையும் நம்பி இருக்கிறது.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் : பர்வேஸ் ரசூல், ஜேசன் ஹோல்டர்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :           டேல் ஸ்டைன், வார்னர், சமி.


டெல்லி T20 அணி:



                    இம்முறை சரிவிகித பேட்ஸ்மேன் பவுலருடன் களமிறங்குகிறது டெல்லி அணி. ராஸ் டெய்லர், முரளி விஜய், சவ்ரவ் திவாரி, டுமினி, தினேஷ் கார்த்திக், ஷமி, பார்னல், ராகுல் ஷர்மா என நல்ல அணியாய் இருந்த போதிலும் வார்னர் மற்றும் சேவாக்கின் அதிரடியை இழந்தது மைனஸ் தான்.   கெவின் பீட்டர்சன் தலைமை தாங்குகிறார்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :  க்விண்டன் டீ காக்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :            பீட்டர்சன், டுமினி, டெய்லர், முரளி



சென்னை T20 அணி: 


                     தோனி தலைமையில் பலமுறை பைனல் சென்ற பலம் வாய்ந்த அணியாக இன்றும் தொடரும் சென்னை அணி அஷ்வின், பத்ரி, ஜடேஜா சுழலையும், ஹில்பானாஸ், பிராவோ, நெஹ்ரா, மோஹித் வேகத்திற்கும், பேட்டிங்கில் கலக்க டூப்லசி, மெக்கலம், ரெய்னா என நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.. ஆனாலும் 'அணி' சர்ச்சைகளில் சிக்கியதால் மனதளவில் வீரர்கள் சோர்ந்திருக்கலாம்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :  ஈஸ்வர் பாண்டே
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :            தோனி, டூப்லசி, அஷ்வின், ரெய்னா        


பெங்களூர் T20 அணி: 
   

                      'வருங்கால இந்திய கேப்டன்' விராட் கொஹ்லியின் தலைமையில் இந்த வருடமாவது கோப்பையை தட்டிச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. ரவி ராம்பால், மிச்சல் ஸ்டார்க், முரளிதரன், வருண் ஆரோன், அல்பி மார்கல்  என பவுலிங்கிலும், "அதிரடி மன்னன்" க்றிஸ் கெயில், டி வில்லியர்ஸ்,  விராட், பார்த்திவ் படேல் ஆகியோர் பேட்டிங்கிலும் கலக்க அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட யுவராஜ் சிங்கும் "சுழல் அரசன்" சுதீப் தியாகியும் அணிக்கு மேலும் பலம் சேர்க்கின்றனர்.

கவனிக்க வேண்டிய ஆட்டக்காரர் :   விஜய் ஜோல்
நம்பிக்கை நட்சத்திர(ம்)ங்கள் :             கெயில், விராட், ஏபிடி, முரளிதரன்



                             இந்த வருடமும் ஆவியின் பேவரைட் பெங்களூரு அணிதான்.. விராட்டுக்காக சப்போர்ட் செய்யத் தொடங்கி இன்று வலுவான அணியாக இருக்கிறது. உங்க சப்போர்ட் யாருக்குன்னு சொல்லுங்க..!



Tuesday, April 15, 2014

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (திருட்டுக் கோழியின் சுவை) -16

முந்தைய பதிவுகளுக்கு...

                        "ஏண்டா அவதான் நம்ம கிளாஸ் செந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு?" என்ற பாஸ்கரின் கேள்வி மனதை என்னவோ செய்தது. அதற்கு மேல் அவனிடம் அதைப் பற்றி எதையும் கேட்கத் தோன்றவில்லை. திரைப்படம் காணக் கிளம்பிய போது மனதெங்கும் வியாபித்திருந்த உற்சாகம் இப்போது காணாமல் போயிருந்தது. நாமக்கல் குலோத்துங்கன் காம்ப்ளெக்ஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளே சென்றோம். என் மௌனத்தை பார்த்த பாஸ்கர் "ஏண்டா இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வர்றே" என்றான்.. "ஒண்ணுமில்லடா" என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் மௌனத்தை அணிந்து கொண்டேன். மனம் படத்தில் லயிக்கவே இல்லை. "ரமாவா இப்படி? மாலையில் சென்றவுடன் கேட்டுவிடலாமா? சேச்சே, அப்படி எதுவும் இருக்காது." என்று என் மனம் கேள்விகளையும் சமாதானங்களையும் மாறி மாறி கூறிக் கொண்டிருந்தது.

                         மாலையில் வண்டிகேட் வந்திறங்கியவுடன் பாஸ்கர் நித்ராவை பார்க்கச் சென்றான்.. ரமாவைப் பார்த்து உண்மையை அறிந்து கொள்ள மனம் விரும்பினாலும் அவளைப் பார்க்கும் துணிவு எனக்கு அப்போதைக்கு இல்லை. அசோகன் கடைக்கு சென்று இரவு உணவை முடித்து விட்டு திரும்பி வர வாயிலின் அருகே அன்பு நின்றிருந்தான். நான் சோர்வாக இருப்பதை பார்த்து "என்னடா டல்லா இருக்கே" என்றான். அவனிடம் எதுவும் கூறாமல் மாடிக்கு செல்ல என்னைப் பின்தொடர்ந்து வந்த அவன் "சார், சொல்ல மாட்டீங்களோ?" என்றான். யாரிடமாவது சொல்லித் தீர்க்க வேண்டும் என்றெண்ணிய மனது அவனிடம் முழுவதையும் கொட்டியது. அனைத்தையும் கேட்டுவிட்டு பொறுமையாக என்னைப் பார்த்து சிரித்தான். "லூசாடா நீ.. பாஸ்கர் சொன்னான்னு சொல்லி அந்தப் புள்ள மேல நீ சந்தேகப்படலாமா.. அப்படி எதுவும் இருக்கும்னு எனக்கு தோணலை. கண்டதையும் யோசிக்காமே போய் தூங்கு" என்று சமாதானப் படுத்தினான். கொஞ்சம் ஆறுதல் அடைந்தது மனது.

                           மறுதினம் விடுமுறையாதலால் காலையில் எழுந்து பல் துலக்கியபடியே காம்ப்ளெக்சின் பின்புறம் வந்த போது கவுண்டர் மோட்டரை ஆன் செய்திருந்தார். வழக்கமாக சனிக்கிழமைகளில் மதியம் தான் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவார்.. தண்ணீர் முதலில் ஒரு அகண்ட தொட்டியில் விழுந்து பின்னர் அங்கிருந்து தென்னை மற்றும் பிற வரப்புகளுக்கும் செல்லும். அந்த நேரத்தில் அந்த தொட்டியில் இறங்கிக் குளிக்க பெரும் போட்டியே நிகழும். கவுண்டரின் அந்த செயல் வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் அவரிடம் "ஓனர், என்ன இன்னைக்கு காலையிலையே தண்ணி விட்டுட்டீங்க." என்றேன்.. "அது ஒண்ணுமில்லப்பா, இன்னைக்கு வேலூர்ல ஒரு உறவுக்காரங்க கல்யாணம். அதான் இப்பதே தண்ணி காட்டிட்டு  போறேன்." என்று கூறிவிட்டுச் சென்றார். தொட்டியில் விழுந்த தண்ணீரை தொட்டுப் பார்த்தேன். குற்றால அருவியின் குளுமையை உணர்ந்தேன். உடனே சட்டையை கழட்டிவிட்டு பெர்முடாவுடன் தொட்டிக்குள் இறங்கினேன்.


                          அப்போது அந்த வழியாக வந்த அன்பு "என்னடா ஓனர் இந்நேரத்துலையே தண்ணி விடறாரு" என்றான். விஷயத்தை சொன்னதும் வேகமாக என்னருகே வந்த அவன் "அப்ப ஓனர் இன்னைக்கு வீட்டுல இருக்க மாட்டாரா? இந்த நாளுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்" என்றான். நான் ஒன்றும் புரியாமல் விழிக்கவே "ஓனர் கிளம்பினதும் அவரோட கோழிய ஆட்டைய போடறோம்" என்றான். "டேய், தெரிஞ்சுடுச்சுன்னா?" "நீ சொல்லாம இருந்தா சரி" என்று கூறிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.  அவன் சொன்னபடியே ஓனர் குடும்பத்துடன் புல்லட்டில் கிளம்பியதும் ஒரு பெரிய கூடையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழியை பிடித்து வந்தான். அதன் இரு கால்களையும் ஒரு சேரப் பிடித்து துவைக்கும் கல்லில் அதன் தலையை பலமாக மோதினான். பின்னர் விறுவிறுவென அதன் தலையை அறுத்து பின் தோலை உரித்தான்.. தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, கத்தி, பாத்திரம் போன்றவற்றை எடுத்துக் கொடுக்கும் எடுபுடி வேலை எனக்கு.

                            அன்புவுக்கு நன்றாக சமையல் வரும் என்று தெரியும். ஆனால் ஒரு முழு கோழியை பக்குவமாக சமைக்கும் கலையை கண்டு வியந்தேன். ஒரு பாதியை கரம் மசாலா தடவி பொரிப்பதற்கு வைத்துவிட்டு, மீதியை நான் அரிந்து கொடுத்த வெங்காயம் தக்காளியை எண்ணையில் வதக்கி பின் வெட்டி வைத்திருந்த கோழியையும் சேர்த்து வதக்கி, உப்பு மசாலா சேர்த்து கொஞ்சம் வதக்கிவிட்டு முக்கால் கிளாஸ் தண்ணீர் மட்டுமே விட்டான். பின் எனைப் பார்த்து "கோழி வேக வைக்கும் போது அதிலிருந்து தண்ணீர் சுரக்கும். அதனால நாம தண்ணி அதிகம் விடக்கூடாது" என்று சமையல் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தான். ஒரு மணி நேரத்தில் குழம்பு, சிக்கன் 65, சாதம் என எல்லாவற்றையும் தயார் செய்து விட்டான். சிக்கனை பார்த்ததும் எங்கிருந்துதான் அவ்வளவு பசி வந்ததென்று தெரியாது.. தட்டில் சுடுசோறும், மணக்கும் கோழிக்குழம்பும் அமிர்தம் என்பது என்னவென்று உணரச் செய்தது. காலையும் மதியமும் சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கும்போது கவுண்டர் புல்லட்டில் வரும் சப்தம் கேட்டது.
வயிற்றுக்குள் சென்ற சிக்கன் "பக் பக் பக் பக்" என்று கத்துவது போல் இருந்தது. அவர் வண்டியை நிறுத்தப் போகும்போது தான் கவனித்தேன். நாங்கள் உரித்த கோழியின் இறகு ஒன்று கவுண்டரின் வீட்டு வாசலில் கிடந்தது..


தொடரும்..


Monday, April 14, 2014

விஷு...!

             
                          தமிழ்நாட்டில் "தமிழ்ப் புத்தாண்டு" கொண்டாடப்படுவது போலவே கேரளாவில் "விஷு" அல்லது "சித்ரக்கனி" கொண்டாடப் படும். மலையாளிகளின் முக்கியமான பண்டிகைகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது. உலகெங்கும் வாழும் மலையாளிகள் யாவரும் விஷுவுக்கு முந்தைய தினம் எல்லா வகையான பழங்கள், புத்தாடைகள் எடுத்து கொண்டாட தயாராகுவர். விஷுவுக்கு முந்தைய நாள் இரவு வீட்டிற்கு பெரியவர் பழங்கள், தேங்காய், அரிசி, பருப்பு, புத்தாடைகள், பணம், காசு, தங்க நகைகள் இவற்றை ஒரு தட்டில் வைத்து குருவாயூரப்பன் படம் அல்லது சிலை முன்னே வைத்து விடுவார். (இதற்கு கனி ஒருக்குதல் என்று பெயர்).




                           மறுநாள் அதிகாலை ஒவ்வொருவராக கண் திறக்காமல் வந்து ஒருக்கப்பட்ட கனிகளின் முன் அமர்ந்து முதலில் கடவுளை காண வேண்டும். பின்னர் கண்ணாடியில் முகம் பார்த்து ஒவ்வொரு கனிகளையும் காண வேண்டும். இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் உண்ணக் கனிகளும், உடுக்க உடையும், செலவுக்கு பணமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.இதற்கு "கனி காணுதல்" என்று பெயர். எல்லோரும் கனி கண்ட பிறகு வயதில் மூத்தவர்கள் இளையவர்களுக்கு தங்களால் இயன்ற பணத்தை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். இதற்கு "கைநீட்டம்" என்று கூறுவர். குழந்தைகள் ஆர்வமாக தங்களுக்கு கிடைக்கப் போகும் கைநீட்டத்தை எதிர்பார்த்திருப்பர். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதத்துடன் கைநீட்டமும் பெறுவர்.



                                பின்னர் குளித்துவிட்டு வந்து கடவுளைத் தொழுது பாடல் பாடியும், கதை சொல்லியும் களிப்பர். பழங்களில் பலாப்பழம், வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை பிரித்து உண்பர். பின் புத்தாடை உடுத்தி கோவில்களுக்கு சென்று அங்கே கிருஷ்ணனுக்கு வழிபாடுகள் நடத்தி அங்கே கொடுக்கப்படும் கைநீட்டத்தை பெற்று வருவார்கள். அன்றைய தினம் "விஷு சத்யா" எனப்படும் கேரள முறை உணவு பரிமாறப்படும். விஷுக்கஞ்சி அல்லது மாம்பழ புளிசேரி எனப்படும் உணவு வகைகள் அன்றைய சிறப்பு உணவாக இருக்கும். சில வீடுகளில் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவர்.


                                  பழங்களும், கனிக்கொன்னப் பூக்களும் அலங்கரிக்கும் திருநாளாம் விஷு தினத்தை உலகெங்கும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள்..! உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்..!

               

Saturday, April 12, 2014

ஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்


இன்ட்ரோ  
                 "நார்கோலெப்சி" ங்கிற புது பாட்டிலில் பழைய சரக்கை ஊற்றி தங்கச்சிக்கு பதில் காதிலியை ரீப்ளேஸ் செய்து அதே "நான் சிகப்பு மனிதன்" என்ற பழைய பெயரிலேயே உரிமம் பெறாமல் "இன்ஸ்பயர்" செய்து (அந்த சொதப்பல் பிளாஷ்பேக்கை தவிர்த்து) வெளிவந்திருக்கிறது. "சமர்" திரைப்படம் தோல்வியடைந்ததற்கு காரணம் மக்கள் ஏற்றுக் கொள்ளாத அந்த கடைசி ட்விஸ்ட்.. இயக்குனர் திரு இந்தப் படத்திலும் அதே தவறை செய்திருக்கிறார். பாலிவுட்டில் வந்திருக்க வேண்டிய படம், நிச்சயம் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது கடினம்.



கதை         
                  அதிக அளவில் எந்த உணர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தூங்கிவிடும் "நார்கோலெப்சி" நம் நாயகனுக்கு. சிறு வயதில் விளையாட்டாய் எடுத்துக் கொண்டாலும் பின் மற்ற மனிதர்கள் சாதரணமாக செய்யக் கூடிய எந்த வேலையையும் தன்னால் தனித்து செய்வது கடினம் என்று உணரும் வயதில் வேதனைப்படுகிறார்.. வேலை கிடைக்காமல் அலையும் இவர் தன் குறைபாட்டையே பாசிட்டிவாக மாற்றி வேலை வாங்குகிறார். இவர் மேல் முதலில் பரிதாபப்படும் நாயகி பின் காதல் வயப்படுகிறார். நாயகனின் தூங்கும் வியாதியால் தன் குடும்பத்துக்கு ஒரு வாரிசு உண்டாகாது என்பதால் நாயகியின் தந்தை இவரை ஒதுக்குகிறார். நாயகி விடாமல் நாயகனின் பின்னால் சுற்றி (செக்ஸ் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று கூறியபடியே) நாயகன் உறங்காதிருக்கும் தருணம் கண்டறிந்து (?!!) கருவை பெற்றுக் கொள்கிறார். இருவரும் காரில் வெளியே சென்ற ஒரு நாளில் திட்டமிட்டு வழிமறிக்கும் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டு கோமா நிலைக்கு செல்கிறார். உடனிருந்தும் தடுக்க இயலாமல் நாயகன் உறக்கத்தில். இங்க இன்டர்வெல்.. (பாப்கார்ன் சாப்பிட போன பாதி பேர் திரும்ப வரலேங்கிறது தனி கதை)

                      உறக்கத்திலிருந்து எழுந்த நாயகன் காதில் சோனி ஹெட்போனை மாட்டிக் கொண்டு தன் குறைபாடு வெளியே வராமல் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு வில்லனையும் தேடித் தேடி கொல்கிறார். இங்கதான் டைரக்டர் வச்சாரு ஒரு ட்விஸ்டு.. இந்த வில்லன்களை இப்படி செய்யச்சொல்லி அனுப்பியது யார் என்பது.. அது நாயகனுக்கு முன்பே தெரிந்துவிட்ட போதும் கிளைமாக்ஸ் வரும் வரை பொறுத்திருந்து அவரையும் கடைசியாக கொன்றுவிட்டு கோமாவில் கிடக்கும் காதலியோடு படுத்துக் கொள்கிறார். ஒரு உலக சினிமா பார்த்த திருப்தியோடு வெளியேறும் ஒவ்வொரு ரசிகனுக்கும் தியேட்டர் தன் செலவிலேயே காதில் வழியும் "சிகப்பை" துடைத்துக் கொள்ள பஞ்சையும் ஒவ்வொருவரும் அணிந்து கொள்ள "நான் சிகப்பு மனிதன்" பேட்ஜும் கொடுத்து அனுப்புகிறார்கள்.
                 

ஆக்க்ஷன் 
                       விஷால் சொந்தக் காசில் இந்த "ரெட்" மேஜிக்கை செய்து கொண்ட போதிலும் படத்தில் அவருடைய நடிப்பை நிச்சயம் பாராட்ட வேண்டும். குறிப்பாக மருத்துவக் கல்லூரியில் அவர் தன் குறைபாட்டை பற்றி பேசும் போது மனதை வருடுகிறார். லக்ஷ்மி மேனன் பரபரப்பை கிளப்பிய அந்த முத்தக் காட்சியை தவிர (அதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்ல) வேறொன்றும் செய்யவில்லை. சரண்யா இதிலும் ஹீரோவுக்கு அம்மா.. ஆனா முதல் முறை லக்ஷ்மி மேனனை விஷால் வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியில் அடடா,, அடடடா..!

                         ஜெகன் ஒக்கே.. சோலோ காமெடியனாக இது பத்தாது.. சுந்தர் சர்ப்ரைஸ் பேக்கேஜ் என்று நினைத்து சேர்க்கப்பட்ட கார்பேஜ். படத்தின் குருக்கேலும்பு இனியா.. கதையின் முக்கிய திருப்பம் கொடுப்பவர்.. அம்மணி, நீங்க இப்படியே நடிச்சிட்டு இருந்தா அப்புறம் விஷாலின் லிஸ்டில் நாலாவதா இருக்கிற முதல் நாள் முதல் ஷோ படத்தில் தான் அபிநயிக்க வேண்டி வரும். ரிஷி லோக்கலில் வாழும் பாரின் மாப்பிள்ளை ரோல். ஜெயபிரகாஷும் இந்தப் படத்தில் இருக்கிறார். முதல் காட்சியில் பெரிய பில்டப் எல்லாம் கொடுத்துவிட்டு கடைசியில் வில்லனை டம்மி பீஸ் ஆக்கியது ஏனென்று தெரியவில்லை.                    

                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                              ஜி.வி. பிரகாஷ் இசையில் "ஒ..பெண்ணே" பாடல் ரசிக்கலாம். பின்னணி இசை ஒக்கே. விஷால் பிலிம் பேக்டரி இன்னும் நல்ல கதைகளை கேட்டு தயாரிக்க வேண்டும். இயக்குனர் திரு பாலிவுட்டில் இந்த கதையை ரீமேக்கினால் சக்சஸ் ஆக வாய்ப்புண்டு. இனியா காரெக்டருக்கு சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யலாம்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                "பெண்ணே ஒ பெண்ணே" மற்றும் "இதயம் உன்னைத் தேடுதே" பாடல்கள்.. விஷால் சிறுவயதிலிருந்து பெரியவனாகும் அந்த மாண்டேஜ் காட்சி..

                  Aavee's Comments - Same Blood !


How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...