Friday, March 28, 2014

ஆவி டாக்கீஸ் - நெடுஞ்சாலை


இன்ட்ரோ  
                “சில்லுனு ஒரு காதல்” போன்ற படத்தை கொடுத்த இயக்குனர் மீண்டும் அதே ஜானரில் படம் பண்ணாமல் முற்றிலும் வித்தியாசமான கதைக் களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே அவரைப் பாராட்டலாம். புதுமுக நடிகர்களை வைத்து அழுத்தமான திரைக்கதையை நம்பி களமிறங்கி வெற்றியும் பெறுகிறார்.




கதை         
                  1985-ல் நடைபெறும் கதை. நெடுஞ்சாலையில் வரும் வண்டிகளில் இருக்கும் பொருட்களை கடத்தி விற்கும் நாயகன். அதே நெடுஞ்சாலையில்  தாபா வைத்திருக்கும் நாயகி. நாயகியை காமத்துடன் பார்க்கும் வில்லன். மோதலில் ஆரம்பித்து காதலில் விழும் நாயகி, வில்லனின் குறுக்கீட்டை எதிர்த்து எப்படி ஜெயிக்கிறார்கள் என்று கபில்தேவ் காலத்து கதைதான் என்றாலும், கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதை நம்மை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது. அழுக்கு பையனின் மேல் அழகுப் பெண்ணுக்கு காரணமே இல்லாமல் காதல் வருவதை பலமுறை பார்த்திருப்போம். ஆனால் இதில் கொஞ்சம் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது.
 
                                                                                                                                        ஆக்க்ஷன் 
                    படத்தின் முதுகெலும்பு நாயகி ஸ்வேதா நாயர், மற்றுமொரு கேரளத்து இம்போர்ட். இவர் வரும் ஒவ்வொரு பிரேமும் ஜில்ஜில். அம்மணி அவ்வளவு ஹோம்லெக்ஸி (ஹோம்லி + செக்ஸி ஹிஹிஹி). கவர்ச்சி கோதாவில் இறங்காமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் அஞ்சலி விட்டுச் சென்ற இடத்தை பிடிக்கலாம். சசிகுமாரின் தம்பி மாதிரி இருக்கும் நாயகன் ஆரிக்கு பருத்திவீரன் கார்த்திக்கு கிடைத்த அதே வேடம். அலட்டலே இல்லாமல் வெளுத்து வாங்குகிறார். குறிப்பாக கோர்ட் காட்சியிலும் கிளைமாக்ஸ் காட்சியிலும்  நல்ல நடிப்பு. இருவருக்குமே காஸ்ட்யும் செலவு பெரிதாக ஒன்றுமில்லை. நாயகிக்கு நாலஞ்சு நீள ஸ்கர்ட்டும் டாப்ஸும், ஹீரோவுக்கு ஒரு முண்டா பனியனும், ரெண்டு அண்டர்வேரும் நாலு லுங்கி அவ்வளவே.



                     நாயகன் நாயகிக்கு இணையாய் நடித்திருக்கும் இருவர் இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரம் மற்றும் திருட்டு பொருளை வாங்கி விற்கும் சலீம் காரெக்டரும் தான்.. அதிலும் சலீம் காமெடி, வில்லத்தனம் என பின்னி எடுக்கிறார். தேசிய விருது பெற்ற நல்ல உடல்மொழிக் கலைஞரை நன்றாக பயன்படுத்தியுள்ளனர். இன்ஸ்பெக்டர் சரண்ராஜை நினைவுபடுத்துகிறார். அவ்வப்போது தலை காட்டும் “தம்பி” ராமையா கிச்சுகிச்சு மூட்டுகிறார்.                                                                                                                                                                                                                    
இசை-தயாரிப்பு
                         
                        “நச்”சுன்னு கதை சொல்வதில் கிருஷ்ணா மீண்டும் ஒருமுறை வெற்றி பெறுகிறார். விறுவிறுப்பான முதல் பாதி,  இண்டர்வல் பிளாக், நிறைவான செகண்ட் ஹாப் என ஒரு நல்ல திரைக்கதைக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு சிறப்பு, அதிலும்   பாடலில் மிகவும் அருமை. சத்யாவின் இசையில் பின்னணி தேவலாம்.. ஓரிரு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது, இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம்.
 
                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                       
                           இரு பாடல்கள் மற்றும் முதல் பாதியில் நாயகி வரும் காட்சிகள் எல்லாம்.. (ஆவி, கண்ட்ரோல் யுவர் ஜொள்ளுன்னு நீங்க சொல்றது கேக்குது.. மீ ஸ்டாப் ஹியர்..)

                  Aavee's Comments - Smooth Road to Travel..!


Wednesday, March 26, 2014

ஆவி டாக்கீஸ் - குக்கூ


இன்ட்ரோ  
                இயல்பாய் வரும் நகைச்சுவை, அசத்தல் பின்னணி இசை.. மெல்லிய சோகம், அழகான கதைக்களம், நிறைவான நடிப்பு இதுவே குக்கூ! குயிலை நாம் அழகிற்காக நாம் பார்ப்பதில்லை.. அதன் குரலை வைத்தே மதிப்பிடுகின்றோம். கண் இழந்தவர்களின் வாழ்க்கையும் அவ்வாறே என்று கவிதையாய் சொல்லும் படம்! கொஞ்சம் உணர்வுப் பூர்வமானது. நோ கமர்ஷியல் காம்ப்ரமைஸ்..!



கதை         
                  புதிதாய் சொல்லப்பட்ட கதையில்லை, திரைக்கதையும் புதிதில்லை, ஆனால் காட்சியமைப்புகள், நடிகர்களின் உடல்மொழி மட்டுமே மாறுபட்டிருக்கிறது.. கண் பார்வை இழந்த அதே சமயம் மாற்றுத் திறன்கள் பல கொண்ட இளைஞன் ஒருவன் மற்றொரு கண் பார்வையிழந்த பெண்ணை சந்தித்து, மோதல் காதல், பின் ஒரு  சராசரி மனிதன் தன் காதல் மெய்ப்பட என்னவெல்லாம் செய்வானோ அதெல்லாம் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவளும் நேசிக்க தடைகளை மீறி வாழ்வில் அவர்கள் இணைந்தார்களா என்பதே கதை.
                                                                                                                                           ஆக்க்ஷன் 
                   
                     "அட்டக்கத்தி" தினேஷ் இனி "குக்கூ" தினேஷாக மாற எல்லா அம்சங்களும் உள்ளன.  ராஜபார்வை, காசி படங்கள் எல்லாம் அந்த நடிகர்களின் முதிர்ந்த நடிப்பின் வெளிப்பாடாய் பார்த்திருந்தோம். மூன்றாவது படத்திலேயே இப்படி ஒரு கேரக்டரை எடுத்து நடிக்க நிச்சயம் அசாத்திய துணிச்சல் வேண்டும். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இயல்பாகவே மற்றவர்களை பகடி செய்யும் குணமுள்ள கதாப்பாத்திரத்தில் சிறப்பாய் செய்திருக்கிறார்.  நண்பராக வரும் நடிகர் படத்தின் காமெடி ஏரியாவிற்கு முழு சொந்தக்காரர். "Wonder.. Wonder" என்று சர்ச்சில் இவர் சொல்லும்போது தியேட்டரே "கொல்".

                       மற்றுமொரு சிறப்பான கதாப்பாத்திரம் "சந்திரபாபு" வேடத்தில் வருபவர். நகை உணர்வு, குணச்சித்திரம் இரண்டும் வசப்பட்டிருக்கிறது இவருக்கு.. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் நல்ல இடத்திற்கு வரலாம். எம்ஜியார், தல, தளபதி கதாப்பாத்திரங்கள் கதையை உறுத்தாத காமெடி. நாயகியின் அண்ணன் அண்ணி, கிளைமேக்ஸ் தேவதூதர், டிரெயின் தாத்தா, நாயகியின் தோழி என எல்லோருமே அளவான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்கள். 'கானக்குயிலே' என்று கூறிக்கொண்டு வரும் நம்ம ஆடுகளம் நடிகரும் சிறப்பு..

                                                                                                                                           அசத்தல் அறிமுகம்  
                   
                      நாயகன் நாயகி இருவருமே மாற்றுத் திறனாளிகளாய் நடித்த போதும் புதுமுக  நாயகி மாளவிகா கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்கோர் செய்கிறார். கோபம், சந்தோசம், தன்மான சீற்றம் என தனக்கு நடிக்க கிடைத்த எல்லா இடங்களிலும் மிளிர்கிறார். நஸ்ரியாவிற்கு பிறகு மலையாள உலகம் நமக்கு தந்திருக்கும் மற்றொரு வரப்பிரசாதம் இவர். ஒரு சில பிரேம்களில் "ஒல்லி" சௌந்தர்யாவை காண முடிந்தது. அடுத்து நடிக்கும் படங்களும் இதுபோல் நடிப்பிற்கு தீனி போடும் பாத்திரங்கள் தேர்வு செய்தால் சிறப்பாக வருவார்.

                       மற்றொரு அறிமுகம் எழுத்தாளர் கம் இயக்குனர் "ராஜு முருகன்". படத்திலும் "அவராகவே" வருகிறார். அதிகம் அலட்டலில்லாத நடிப்பு. தொடரலாம். நடிப்பை விட இயக்குனரே மேலோங்கி நிற்கிறார். காட்சியமைப்புகளில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். சுருக்கென இருக்கும் முதல் பாதியும், கொஞ்சம் இழுவை பட் கதையோட்டத்திற்கு தேவை என்பதால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.. கிளைமாக்ஸ் கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம். நல்ல ஒரு படத்தை கொடுத்ததற்காக ஹேட்ஸ் ஆப் டூ யு சார்!!
                                                                                             
இசை-தயாரிப்பு
                           
                        படத்தின் எதார்த்த நாயகனாக ஜொலிப்பது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.. ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசை காட்சியோடு இயல்பாய் ஒன்றிப் போகிறது. பாடல்களும் அனாவசிய துருத்தல்களாய் நாம் உணரும் தருணங்களே இல்லை எனலாம். குறிப்பாய் முதல் பாதியில் இளையராஜாவின் இசையை கையாண்ட விதம் அருமை. சத்தமே இல்லாமல்(?!)  இசை உலகில் சட்டென மேலே வரும் இளம் இசையமைப்பாளர் போக வேண்டிய தூரங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. தயாரிப்பு பாக்ஸ் ஸ்டார் மற்றும் நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடையது. மைதாஸ் டச் என்பார்களே. அதுபோல் இவர்கள் நல்ல விஷயங்களை மட்டுமே தொட்டு பொன்னாக்குகிறார்கள்..வாழ்த்துகள்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                         
                            "காதல் கண்மணியே", "ஆகாசத்த நான் பாக்குறேன்", "மனசுல சூரக் காத்தே", "பொட்டப்புள்ள" என எல்லாப் பாடல்களுமே படத்துடன் பார்க்கையில் பிடித்துப் போனாலும் படம் பார்க்கும் முன்னரே மனதில் ஒட்டிக் கொண்ட "கோடையில மழை போல" பாடல் தான் ஆவி'ஸ் பேவரைட். மாளவிகாவின் மனதில் காதல் அரும்பும் காட்சிகள் அருமை.

                  Aavee's Comments - Beautiful Voice!



Sunday, March 23, 2014

சுஜாதா வெறும் பொழுதுபோக்கு எழுத்தாளர் மட்டுமே..! - எஸ்.ரா




                     "கதை பேசுவோம்" என்றொரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்  தலைமையில் ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் அவர் தேர்வு செய்த நூறு சிறந்த சிறுகதைகளில் சிறந்த (?!) ஐந்து கதைகளைப் பற்றி விவரித்தார்.

                         
(படங்கள் மற்றும் இன்னும் சில தகவல்கள் விரைவில் பதிவேற்றம் செய்கிறேன்..)

                       அவருடைய உரைக்குப் பின் எழுத்தாளர்கள் மற்றும் பதிவர்கள் அவரிடம் கேள்வி கேட்கும் பகுதி இருந்தது. அப்போது நான் அவரிடம் " எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட Genre களில் மட்டுமே எழுதுகிறார்கள்.. சுஜாதா என்ற எழுத்தாளரைப் போல் வெவ்வேறான தளங்களைப் பற்றி எழுதுவதில்லையே. அவரைப் போல் உலக எழுத்தாளர்களில் யாரேனும் உள்ளனரா" என்று கேட்டேன். என் கேள்விக்கு அவர் பதிலோ திகைக்க வைத்தது. " சுஜாதா என்பவர் இலக்கியவாதியே அல்ல. அவர் ஒரு சில பொழுதுபோக்கு கதைகள் மட்டுமே எழுதியுள்ளார். மேலும் எல்லா Genre களிலும் அவர் எழுதினாலும் அவர் எந்த Genre இலும் புகழ்பெறவில்லை " என்று கூறினார். இதை  என் சுஜாதா என்ற எழுத்தாளரின் எழுத்துகளின் பால் ஈர்க்கப்பட்ட என் போன்றவர்களுக்கு அவர் பேசியது காயப்படுத்துவது போல் இருந்தது. இதுகுறித்து உங்கள் கருத்துகளை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..

Sunday, March 16, 2014

கடவுள் எனும் கோட்பாடு -2 (சிலை விளையாட்டு)




                        'விடாது கருப்பு', 'என் இனிய இயந்திரா', போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு பின் சமீப காலங்களில் வரும் "சூப்பர் ஹிட்" தொடர்கள் எதுவும் என்னை அவ்வளவாய் ஈர்த்ததில்லை. நல்ல விவாதப் பொருளுடன் வரும் சில பட்டிமன்ற நிகழ்சிகளையும், டாக் ஷோக்களையும் பார்ப்பதோடு சரி. கை உடைந்த ஒரு மாதம் தொலைக்காட்சி பார்த்தே பொழுதை நகற்ற வேண்டிய கட்டாயம் அமைந்து போனது எனக்கு. இடையிடையே வரும் அந்த விளம்பரங்கள் தான் எனக்கு ஆறுதல். அப்படி இடையே வந்த ஒரு 'இடுப்புவலி' நிவாரணிக்கான விளம்பரத்தில் ஒரு கணவனும், மனைவியும் "ஸ்டேச்யூ" என்று சொல்லி ஒரு விளையாட்டு விளையாடுவர். இதை பார்த்த போது எனக்கு எங்கள் தெருவோரம்  பால்ய காலத்தில் விளையாடிய அந்த "ஸ்டேச்யூ" என்ற விளையாட்டு நினைவுக்கு வந்தது.

                         நாலைந்து பேர் வரை விளையாடக் கூடிய அந்த விளையாட்டில் ஆங்கில அகர வரிசைப்படி முதலில் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவார். அவர் ஓடலாம், பாடலாம், ஆடலாம், அவர் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் குழுவில் மற்றுள்ள ஆட்களில் ஒருவர் திடீரென்று "ஸ்டேச்யூ" என்று சொல்வார். அவர் அப்படி சொன்னதும் செய்து கொண்டிருந்த செயலை அதே இடத்தில் நிறுத்தி விட்டு சிலை போல் அசையாமல் நிற்க வேண்டும். (உ.ம் ) ஒருவர் ஓடுவதற்காக ஒரு காலை தூக்கியபடி இருந்தார் எனில் அசைவின்றி அதே நிலையில் நிற்க வேண்டும். "ரிலீஸ்" என்று சொல்லும் வரை. அதிக நேரம் நிற்க முடிந்தவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கப் படுவார்.  பெரும்பாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அனுபவத்தோடு சென்னை வந்த புதிதில் விஜிபி கோல்டன் பீச்சில் சிலை போல் நிற்கும் மனிதரின் அருகில் அவரைப் போலவே சிலை போல நின்று வெறுப்பேற்றிய சம்பவங்களும் உண்டு.

                     இந்த நினைவு வந்து மறைந்த ஒரு சில நாட்களில் ஒரு சரித்திர புத்தகம் ஒன்று படிக்கக் கிடைத்தது. அந்தக் கதையின் ஒரு காட்சியில் காதல் வயப்பட்டிருந்த கன்னி ஒருவள் தன் காதலன் நினைவில் மூழ்கிக் கிடக்க, அந்நேரம் அவ்வழி வந்த மாமுனி ஒருவரை கண்டு கொள்ளாது கனவில் சஞ்சரிக்க, கோபம் கொண்ட அந்த முனிவர் தன் கமண்டலத்தில் இருந்த நீரை அவள் மேல் தெளித்து தன்னுடைய வரவை கூட கவனிக்காது கனவில் சஞ்சரித்த அவளை சிலையாய் போகக் கடவது என சபித்தார். அவளும் மறுகணம் சிலையாய் மாறி நின்றாள். இதுபோன்ற பல கதைகள் நிரம்பிய சிலைகள் நான் ஒருமுறை கிருஷ்ணன் அவதரித்ததாக சொல்லப்பட்ட மதுரா சென்ற போது  மதுரா அருங்காட்சியகத்தில் காணக் கிடைத்தது.

                  அங்கே 'கிருஷ்ண ஜன்ம பூமி' என்று சொல்லக்கூடிய ஒரு கிருஷ்ணர் கோவில் அமைந்திருக்கிறது. கம்சன் கிருஷ்ணனின் தாய் தந்தையரை சிறைப்பிடித்து வைத்திருந்தது இங்குதான் என்று கல்வெட்டுகள் உரைக்கின்றன. அதனால் "கர்ப்பகிரஹா" என்றும் அழைக்கப்படுகிறது.  அருகிலிருந்த பிருந்தாவன் எனும் கிராமம்  கிருஷ்ணர் தன் பால்ய காலத்தை இங்கே செலவழித்ததற்கு கட்டியம் கூறுகிறது. கிருஷ்ணர் இந்திரனை தோற்கடித்த கோபத்தில் இந்திரன் மழையால் மக்களை தண்டிக்க நினைக்க, அச்சமயம் அங்கிருந்த கோவர்த்தன மலை கொண்டு மக்களை காப்பாற்றியதாக இதிகாசம் சொல்கிறது. மலையை பெயர்த்து எடுத்ததை அப்போது என்னால் நம்ப முடியாவிட்டாலும் சமீபத்தில் மூன்றடுக்கு வீட்டை சேதாரமில்லாமல் வேறிடத்துக்கு மாற்றிய செய்தி படித்த போது நம்ப முடிந்தது.

                 ஆனாலும் இதிகாசங்கள் வெறும் கதைகளா, நிஜத்தில் மக்களோடு மக்களாக கடவுள்கள் வாழ்ந்தனரா.. இல்லை தம்மில் உயர்குணமும், வீர தீர பராக்கிரமும், நல்ல எண்ணங்களும்  கொண்ட ஒருவரை கடவுளாக பார்த்தனரா? மற்றவர்கள் சொல்லும் எல்லா விஷயங்களுக்கும் விளக்கம் கேட்கும் நம்மால் நம் மனதில் படிந்திருக்கும் பல  விஷயங்களுக்கும் பதில் சொல்ல முடிவதில்லையே, ஏன்? குறிப்பாக கடவுள் பற்றிய கேள்விகளுக்கு.. மரணம் என்ற நிகழ்வுக்குப் பின் நடப்பது என்னவென்ற கேள்விக்கு விடை தெரியாத வரை இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா?  இறப்பிற்கு பிறகு அதை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்??  அப்படியென்றால் மரணத்திற்கும் கடவுளுக்கும் தொடர்பு இருக்கிறதா? சொர்க்கம் என்ற காஸ்ட்லி ஸ்வீட்டும் (Suite) நரகம் என்ற குப்பை மேடும் இருப்பதும் நிஜம் தானா?
இருந்து  இறந்து தான் பார்க்க வேண்டும்..!!


தொடரும்..

நன்றி:  கூகிள், விக்கிபீடியா.


Saturday, March 15, 2014

ஆவி டாக்கீஸ் - ஆயிரத்தில் ஒருவன் (1965)


இன்ட்ரோ  
                1960ஸ் மூவி ஒன்றை பெரிய திரையில் பார்ப்பது இதுவே முதல் முறை. அந்தக்கால "பெருசுகள்" இந்தக்கால படங்களை வெறுப்பதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. "எவர்க்ரீன்" எம்ஜியார்,  கருத்துள்ள பாடல்கள், உண்மையிலேயே "அழகான" ஹீரோயின், ஆக்க்ஷன், ரோமென்ஸ், சிறப்பான இசை, சுஜாதாவின் "வசந்த்" டைப் காமெடி என எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் எண்டர்டெயினர். ரீஸ்டோரேஷன் என்ற பெயரில் "நினைத்தாலே கசக்கும்" அனுபவத்தை மறந்து விட்டு படம் பார்க்க சென்ற எனக்கு கிடைத்தது பரவச அனுபவம். பாடல் காட்சிகளிலும் பின்னணியிலும் தெளிவான ஒலியமைப்பு. இந்தக் காலத்து க்வாலிட்டி இல்லையென்றாலும் சிறப்பான விஷுவல் என கொடுத்த காசுக்கு ஏற்ற பணியாரம்..!



கதை         
                  கலகக்காரர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த குற்றத்திற்காக சர்வாதிகார மன்னனால் (மனோகர்) கைது செய்யப்பட்டு அடிமைகளோடு அடிமையாய் நெய்தல் நாட்டிலிருந்து கன்னித்தீவிற்கு அனுப்பப்படும் மருத்துவர்  மணிமாறனை(எம்ஜியார்) டைம் வேஸ்ட் பண்ணாமல் "லவ் அட் பர்ஸ்ட் சைட்" முறையில் லவ்வும் அந்த நாட்டு இளவரசி பூங்கொடி (ஜெயலலிதா). அந்தக் காதலை மறுத்து தன் கூட்டத்தாரின் விடுதலைக்காக போராடும் மணிமாறன் ஒரு கட்டத்தில் மன்னனின் வஞ்சக வார்த்தையை நம்பி கடல் கொள்ளையர்களுடன் (நம்பியார்) போராடி நாட்டை மீட்கிறார். பின்னர் மன்னனின் சூழ்ச்சி தெரிந்து அங்கிருந்து கொள்ளையர்கள் உதவியுடன் தப்பிக்கிறார்.

                     காப்பாற்றுவது போல் நாடகமாடி மணிமாறனையும் கூட்டத்தையும் தன் தீவிற்கு அழைத்து வந்து அவர்களையும் கொள்ளையடிக்க பணிக்கிறான். மணிமாறன் முதலில் மறுத்தாலும் தன்னுடன் வந்தவர்கள் உயிருக்கு ஊறு ஏற்படாமலிருக்க வேண்டி கொள்ளைகள் செய்கிறார், ஒரு சந்தர்ப்பத்தில் இளவரசி பூங்கொடியை சந்திக்கிறார். அவரையும் அந்த தீவுக்கு அழைத்து வருகிறார். கொள்ளையடித்த பொருள்கள் அரசுக்கு சொந்தம், எனக் கூறி இளவரசி மேல் மையல் கொள்ளும் கொள்ளையர் தலைவன் ஏலத்தில் விடுகிறான்,

                       ஏலத்தில் காப்பாற்றிய மணிமாறனை முதலில் தவறாக புரிந்து கொள்ளும் பூங்கொடி பின் உண்மை உணர்ந்து ஆசை கொள்கிறாள். பூங்கொடியை அடையத் திட்டமிடும் கொள்ளைத் தலைவன் அடுத்த கொள்ளைக்கு  மணிமாறனை அனுப்பி கொல்லத்  திட்டமிடுகிறான். இதை அறிந்த மணிமாறன் கொள்ளையர் தலைவனுடன் சண்டையிட்டு வென்று பின் அவனை நண்பனாக்குகிறான். பின் இருவரும் சேர்ந்து படையுடன் சென்று சர்வாதிகாரி மன்னனின் கப்பலை தாக்குகின்றனர். அதில் காயமடையும் சர்வாதிகாரியை தன் மருத்துவ திறமையால் காப்பாற்றுகிறார். திருந்திய மன்னன் நாட்டை ஆட்சி செய்ய அழைக்க அதை மறுத்து மக்களுக்கு நல்லது செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தன் மனைவியுடன் மருத்துவ தொழிலுக்கே செல்கிறார்.
                                                                                                                                           ஆக்க்ஷன் 
                     
                    படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து அப்பாஸ் "வாட் எ மேன்" என்று ஒரு வசனம் பேசுவார். அதற்கு பொருத்தமான நடிகர் எம்ஜியாராக தான் இருக்க முடியும். "கொஞ்சம் பொறு கண்ணே, விளையாடிவிட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு நம்பியாருடன் வாள் வீசுவதாகட்டும், "உங்கள் அதிகாரமென்ன, சிலப்பதிகாரமா? நிலைத்து நிற்க" என்று சர்வாதிகார மன்னனை எதிர்த்து நக்கலாக கேள்வி கேட்பதாகட்டும், காதல் காட்சிகளில் ஆகட்டும், நாகேஷுடன் சேர்ந்து நகைச்சுவை விருந்து படைப்பதாகட்டும் 'வாத்தியார்' கலக்குகிறார். சூப்பர்ஸ்டாரின் வெற்றி பார்முலா இவரிடமிருந்தே உருவப்பட்டிருப்பதாய்  தெரிகிறது. நாயகி ஜெயலலிதா, இரண்டாவது படம் நடிக்கும் புதுமுகம் என்பதற்கான அடையாளம் கொஞ்சமும் தெரியவில்லை.. அந்தக்கால "நஸ்ரியா" போல் அம்சமாக இருக்கிறார்.விஷம் அருந்தியதாக சொல்லி நாடகமாடும் காட்சியில் கலக்கியிருப்பார்.

                      நாகேஷ் உடல்மொழிக் கலைஞர், இதில் நிறைய பேசுகிறார். சில சமயம் போர் அடித்தாலும் மொத்தத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். அடிமையாய் வேறு தேசத்திற்கு வந்து அங்கே மன்னன் வரிசையில் நிற்கச் சொல்லும்போது இவர் செய்வது லாரல்ஹார்டி டைப் காமெடி. நம்பியார் இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துப் பார்க்க முடியாது. படம் நெடுக ஓவர் கோட்டும், ஒரு துபாய் லுங்கியுமாய்  வரும் இவர் "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா" என்று உறுமும் போது தியேட்டரில் அப்ளாஸ். மற்றொரு குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரம் இளவரசியின் தோழியாய் வரும் தேன்மொழி (மாதவி). ஜெயலலிதா திரையில் வராத நேரங்களில் இவர் அழகாக தெரிகிறார்.  ஆர்.எஸ். மனோகர், செங்கப்பனாக வரும் நடிகர், மாற்றுக் கருத்து கொண்ட குண்டர், ஏலமிடும் நபர்  என எல்லோரும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.



                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி காம்போ மிரட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலும் சூப்பர்ஹிட். பின்னணி இசை அவுட்ஸ்டாண்டிங். காலத்தால் அழியாத "அதோ அந்த பறவை போல்" மாஸ்டர்பீஸ் பாடல். தயாரிப்பு மற்றும் இயக்கம் பி.ஆர். பந்துலு, முதல் முறையாக எம்ஜியாருடன் பணிபுரிந்த படம். கர்ணன் பட இழப்புக்கு பின் பெருவாரியாக ஓடி வெற்றிவாகை சூடி வசூல் தேடித்தந்த படம் இது. "கேப்டன் ப்ளட்" மற்றும் "கிரிம்சன் பைரேட்" ஆகிய ஹாலிவுட் படங்களை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருந்தது சிறப்பு..

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 எம்ஜியார் வரும் எந்தக் காட்சியுமே கண்கொட்டாமல் பார்க்கும்படி இருந்தது. பதின்வயது நாயகி உடனிருந்த போதும் அவரையே ரசிக்க வைத்தது தான்  அவர் ஸ்பெஷாலிட்டி. எல்லாப் பாடல்களுமே பிடித்தாலும் படம் முடிந்த பின்னும் முணுமுணுத்துக் கொண்டே வந்தது  "மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் என் கூடு"

                  Aavee's Comments - Outstanding Oruvan !




Friday, March 14, 2014

போச்சே.. போச்சே..


                       
                   போச்சே.. போச்சே.. சொக்கா இப்படி ஆயிடுச்சே.. சுனாமி வந்து ஒரு வருஷத்துக்கு அப்புறமும் மனசுல சோகம் அப்பிகிட்டு இருக்கிற மாதிரி,  இனி இல்லைன்னு தெரிஞ்சும் மனசு அடிச்சுக்குதே ஏன்.. நீங்களே சொல்லுங்க மக்களே.. இந்த வீடியோவ பார்த்துட்டு சொல்லுங்க மக்களே..!



                            இனி திரையுலகத்துக்கு ஒரு நல்ல நடிகை இல்லைன்னு தெரிஞ்சு என் மனசு அடிச்சுக்குதுன்னு காரணம் புரிஞ்சதா? 

Saturday, March 8, 2014

ஆவி டாக்கீஸ் - சைக்கோ (PSYCHO - An Alfred Hitchcock Classic)



                        1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் த்ரில்லர் பட வரிசையில் தனியிடம் பிடித்த படம். "மர்மக்கதை மன்னன்" ஆல்பிரெட் ஹிச்காக்" இயக்கிய இந்த படத்தின் கதை ஒரு நாவலை அடிப்படையாக கொண்டது. பொதுவாக புத்தகம் படமாக்கப்படும் பொழுது அது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்றொரு கருத்துண்டு.. ஆனால் இது ஹிட்ச்காக்கின் படங்களுக்கு சிறிதும் பொருந்தாது என்பதே என் கருத்து. த்ரில்லர் படங்களுக்கு அவர் வைக்கும் ஷாட்டுகள், கலைஞர்களின் உடல் மொழி மற்றும் முக பாவங்கள் ஆகியவை நிச்சயம் எழுத்தை தாண்டிய ஒரு உணர்வை நமக்கு கொடுக்கும்.



                         திகம் விரசமில்லாத ஒரு படுக்கையறைக் காட்சியிலிருந்து துவங்குகிறது படம். ஒரு வெள்ளிக்கிழமை மதியம் உணவு இடைவேளையின் போது தன் காதலனுடன் சரசம் கொள்ளும் நாயகி பின் இதுபோல் சந்திப்பதை தவிர்க்க வேண்டுமென சொல்லி முத்தமிட்டு பிரிகிறாள். நேராக வேலைக்கு செல்லும் அவள் தன் பணியிடத்தில் ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்க வரும் வாடிக்கையாளர் இவளிடம் "ஜொள்" விட்டுக் கொண்டே தன் மகளுக்காக வீட்டை வாங்குவதாக கூறி அதற்கென முழுவதையும் பணமாக (பல லட்சங்கள்) கொடுக்கிறார். அதை வாங்கும் முதலாளி நாயகியிடம் கொடுத்து வங்கியில் சேர்க்குமாறு கூறுகிறார். தனக்கு தலை வலிப்பதாக கூறி சீக்கிரமே வீட்டிற்கு செல்லும் நாயகி வங்கியில் பணத்தை செலுத்தாமல் அதை தானே வைத்துக் கொள்ள திட்டமிடுகிறாள்.



                          ன் காரில் சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு கிளம்புகிறாள். செல்லும் வழியில் ஒரு காவலர் விசாரிக்க தடுமாறியபடி தப்பிக்கிறாள். மேலும் தன் காரை சொற்ப விலைக்கு விற்றுவிட்டு ஒரு புதிய காரை வாங்குகிறாள். பின் தன் பயணத்தை தொடரும் அவள் தூக்க கலக்கமாக இருக்கவே நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு மோட்டலுக்கு செல்கிறாள். ஆள் நடமாட்டமே இல்லாத அந்த மோட்டலில் மேனேஜர் மட்டும் இருக்க அவனிடம் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள். தன் பணத்தை சிரத்தையுடன் ஒரு தினசரியில் மடித்து ஒளித்துவைக்கிறாள். தன்னுடன் இரவு உணவு அருந்துமாறு அழைப்பு விடுக்கும் மேனேஜரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறாள். ஆனால் உணவை தயார் செய்ய மோட்டலுக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற மேனேஜரை அவன் தாயார் திட்டும் ஓசை கேட்கிறது. மேலும் பிற பெண்மணிகளை அழைத்து வரும் பண்பை கண்டிக்கிறார்.



                         சோகத்துடன் திரும்பி வரும் அவன் அவளுக்கு அங்கேயே உணவு பரிமாறுகிறான். தாயின் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறான். வயதான நோய்வாய்ப்பட்ட தன் தாய் சில சமயம் இதுபோல் நடந்துகொள்வது வருத்தமளிப்பதாய் கூறுகிறான். அவன் மேல் பரிதாபப்பட்ட அவள் அவன் தாயை ஒரு அநாதை விடுதியில் சேர்த்து விட அறிவுரை கூற அதை மறுக்கிறான். தன் தாயை கவனித்து கொள்ள யாரும் இல்லையென்றும் தான் தான் கவனிக்க வேண்டும் என்றும் கடுமையாக கூறுகிறான். தனக்கு உறக்கம் வருவதாக கூறி தன் அறைக்கு செல்லும் நாயகி உடை களைந்து குளிக்க செல்கிறாள். ஷவரில் சுடு நீரின் சுகந்தத்தை அனுபவித்து அலுப்பு தீர குளிக்கும் அவள் பின்னால் ஒரு உருவம் வருகிறது. குளியலறைக்கு வரும் அது அவளை சரமாரியாக குத்திக் கொல்கிறது. பின் அங்கிருந்து வெளியேறுகிறது. சற்று நேரத்தில் அவள் அலறல் கேட்டு ஓடிவரும் மேனேஜர் காற்று போன பலூனாய் கிடக்கும் அவளை தன் தாய் தான் கொன்றிருக்க வேண்டுமென முடிவு செய்து அவளையும் அவள் பொருட்களையும் (பணத்தையும் சேர்த்து) அவள் வந்த காரிலேயே போட்டு ஒரு சேற்றில் மூழ்கடிக்கிறான்.



                          ரு வாரத்திற்கு பிறகு அலுவலகத்திற்கு வராத நாயகியை பற்றி விசாரிக்க ஒரு பிரைவேட் டிடேக்டீவை ஏற்பாடு செய்கிறார் முதலாளி. அவர் நாயகியின் காதலனிடமும், தங்கையிடமும் விசாரிக்கிறார். பின்னர் அவளைத் தேடி வரும் வழியில் இந்த மோட்டலுக்கு வருகிறார், அங்கே விசாரணையில் முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லும் மேனேஜர் பின் நாயகி அங்கே வந்து தங்கியதை ஒப்புக் கொள்கிறான் ஆனால் மறுநாள் காலையில் திரும்பி சென்றதாய் கூறுகிறான். மேலும் தன் வீட்டையோ, மோட்டல் அறைகளையோ சோதனையிட அனுமதி மறுக்கிறான். இதனால் டிடேக்டீவின் சந்தேகம் வலுக்க நாயகியின் தங்கைக்கு போன் செய்து நடந்ததை கூறிவிட்டு பின் தான் அருகில் இருக்கும் அவன் வீட்டிற்கு செல்லப் போவதாய் கூறுகிறார். பின் மேனேஜருக்கு தெரியாமல் பின்புறமாக அவன் வீட்டை அடையும் அவர் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தபடி மாடிக்கு வருகிறார். அங்கே அவர் வரவும் வேறொரு அறையில் இருந்து திடீரென வெளிவரும் அந்த உருவம் கத்தியால் அவரைத் தாக்க அவர் நிலைகுலைந்து மாடிப் படிகளில் உருண்டு விழுந்து இறக்கிறார்.



                           டிடேக்டீவிடமிருந்து தகவல் வராத நிலையில் போலீஸை அணுகுகிறார்கள் நாயகியின் காதலனும், அவள் தங்கையும். போலிஸ் நம்மூரைப் போலவே பேருக்கு சோதனை இட்டுவிட்டு ஒன்றுமில்லை என்று கூறுகிறது. ஆனால் அதே சமயம் அந்த மேனேஜரின் தாய் இறந்து பல வருடங்கள் ஆனதாகவும் கூறுகிறார்.  இதற்குள் போலிஸ் மோப்பம் பிடித்ததை அறிந்த மேனேஜர் நடக்க முடியாத தன் தாயை வேறோர் இடத்திற்கு தூக்கிச் செல்கிறான். இதை அவள் எதிர்த்த போதும் வேறு வழியில்லாமல் கீழே பேஸ்மெண்டிற்கு செல்கிறாள். தன் அக்காளின் மர்மத்தை கண்டறிய வேண்டி நாயகியின் காதலனுடன் அந்த மோட்டலுக்கு வருகிறாள். மேனேஜரை காதலன் பேசியபடி சமாளிக்க தங்கை அந்த மர்ம வீட்டிற்குள் நுழைகிறாள். அங்கே மேனேஜரின் தாய் படுத்த படுக்கை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு பின் கீழே பேஸ்மெண்டிற்கு செல்ல அங்கே அமர்ந்திருந்த தாயை திருப்ப முயல அவள் பின்னாலிருந்து "அந்த" உருவம் அவளைத் தீர்த்துக் கட்ட வருகிறது.. அவள் "அதனிடமிருந்து" தப்பித்தாளா?  அந்த "உருவம்" யார் என்ற கேள்விகளுக்கு எல்லாம் கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.



                          ன்று இருக்கும் இசைக் கருவிகள், டெக்னாலஜி என்று பலதும் இல்லாமல் இப்படி ஒரு அட்டகாசமான த்ரில்லர் படம் கொடுக்க முடிந்தது என்றால் அது நிச்சயம் ஹிட்ச்காக் என்ற ஒற்றை மனிதனால் மட்டுமே சாத்தியப்பட்டது. இன்று பல உலக சினிமாக்கள் பார்த்துவிட்ட நம்மால் இந்தப் படத்தின் முடிவை எளிதில் ஊகிக்க முடிந்தது எனினும் காட்சியமைப்புகள் நம்மை சீட்டின் நுனிக்கே தள்ளிவிடும் அதிசயம் தான் இந்தப் படத்தின் வெற்றி. இன்று நாம் பார்க்கும் பல த்ரில்லர்கள் இந்தப் படத்தை முன்னோடியாகவே கொண்டு வந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை!!

                        

Thursday, March 6, 2014

அமானுஷ்யம்

                                                         

                         "அம்மா, இந்த பேய், பிசாசு எல்லாம் சுத்த ஹம்பக் ன்னு என் பிரண்ட் வினோத் சொல்றாம்மா.. பேய் பிசாசெல்லாம் நிஜமாவே இருக்கா, இல்லையா" சமையல்கட்டில் மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்த காமாட்சிக்கு பகீர் என்றிருந்தது.. ஏற்கனவே தன் கணவன் துஷ்ட சக்திகளுடன் பேசுவது, ஜீனியை வரவழைப்பது என வயிற்றில் புளியை கரைக்கும் பல சித்து வேலைகளை செய்து வருகிறான்.. இன்று தன் மகன் அது சம்பந்தமான கேள்வியை கேட்டதும் கொஞ்சம் ஆடித்தான்  போனாள். "போடா, பரீட்சை பக்கம் வந்திடுச்சு.. போய் படி" என்று அதட்டினாள். " பேய் இருக்கா இல்லையான்னு சொல்லும்மா.. நான் போய் படிக்கிறேன்" என்று அடமாக நின்றவனின் முதுகில் ஒன்று போட்டாள். அவன் அழுது கொண்டே தன் அறைக்குச் சென்றான்.

                          அன்று ஒரு பவுர்ணமி இரவு. இரண்டாவது மாடியில் நட்சத்திர கட்டங்களும் அதைச் சுற்றி பூக்களங்களும் அமைக்கப்பட்டு அன்றிரவு பூஜைக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தான் மாசாணி (பெற்றோர் இட்ட பெயர் வேறு எதுவோ, ஆனால் தனக்குத் தானே சூட்டிக் கொண்ட பெயர் இது). இவனுக்கு பெண் கொடுக்க ஊரில் எல்லோரும் தயங்கிய போது இவனுடைய மாமா தன் பெண்ணை தைரியமாக தாரை வார்த்துக் கொடுத்தார். அவனும் மனைவியை சிறப்பாய் கவனித்துக் கொண்டாலும், அவனுடைய இந்த சித்து விளையாட்டுகள் காமாட்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பலமுறை எடுத்துச் சொன்னபோதும் அவன் கேட்பதாய் தெரியவில்லை.அன்றும் எதேச்சையாய் மாடிக்கு வந்தவள் இவன் ஏற்பாடுகளைப் பார்த்து கோபமுற்றாள்..

                           "பாவி மனுஷா, உனக்கு பல முறை சொல்லிட்டேன். இது நமக்கு வேணாம்னு. எப்பதான் நான் சொல்றத கேப்பியோ? இந்த பேய் பிசாசெல்லாம் விட்டுட்டு சாமி மேல நம்பிக்கை வை. நமக்கு என்ன கொறச்சல், ஆசைக்கும் ஆஸ்திக்குமா ஒரு பையன் இருக்கான். எங்க அப்பாரு சீதனமா கொடுத்த பணத்த வச்சு வியாபாரம் பண்ணி நாம சந்தோசமா வாழலாம். நான் சொல்றத கேளுய்யா.. இன்னைக்கு நம்ம புள்ள என்கிட்டே பேய் பிசாசெல்லாம் இருக்கான்னு கேட்டான்.. எனக்கு பகிர்ன்னு ஆயிடுச்சி.. வேணாம்யா இது.."   என்ற கண்ணீரால் மொசைக் தரையை நனைத்துக் கொண்டிருந்தவளை உள்ளுக்கு இழுத்து கதவை சாத்தினான்.. "புள்ள கேட்டுறப் போறான். சத்தம் போடாம இரு.. இன்னைக்கு பவுர்ணமி பூசை முடிச்சுட்டா நம்ம பையன் ஓஹோன்னு வருவான். அவனுக்காக தாண்டி நான் இவ்வளவு கஷ்டப்பட்டு பூசையெல்லாம் செய்யுறேன்.."

                          "இன்னைக்கு எனக்கு தொணைக்கு உக்கார எப்பவும் வர்ற சீதாராமன் வரல.. நீதாம்புள்ள இருக்கோணும்." அவளுக்கு இஷ்டம் இல்லாவிட்டாலும் கணவனின் பேச்சை இதுவரை தட்டியதில்லை. அவன் சொல்லுக்கு மேல் என்றும் நடந்ததில்லை. அவன் சொன்னபடியே பூக்களத்தின் அருகே அமர்ந்தாள். அப்போதுதான் கவனித்தாள் அந்த நட்சத்திர மந்திரக் கோடுகளுக்கு நடுவே பரப்பி வைக்கப்பட்ட கும்குமமும் ஒரு மண்டை ஓடும் இருந்தது. சற்று தள்ளி வைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கு மூட்டை அசைவது தெரிந்தது. பயத்துடன் அவள் அதை பிரிக்க, உள்ளே இரண்டாவது தெருவில் சுற்றித் திரியும் ஒரு அனாதைச் சிறுவன். அவனுக்கு ஆறேழு வயதிருக்கும். அவன் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்தது.. அவள் சாக்கு மூட்டையை பிரித்ததை பார்த்த மாசாணி கோபப்பட்டு "கழுதே, சொன்ன வேலைய மட்டும் செய், இந்தப் பையன இன்னைக்கு ஆத்தாளுக்கு பலி கொடுக்கோணும்" என்று மீண்டும் கோணியை கட்டினான். அவளோ "பாவம்யா.. அனாத புள்ள, இப்படியெல்லாம் பண்ணாதே." என்று கெஞ்சினாள். அவள் சொற்களை உதாசீனப் படுத்திவிட்டு பூஜையில் அமர்ந்தான்.

                             நாக்கைத் தொங்கப் போட்டிருக்கும் ஒரு காளியின் படத்தை முன்னே வைத்து சில மத்திரங்கள் சொல்லிவிட்டு தான் ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்திருந்த ரத்தம் கொண்டு மண்டை ஒட்டிக் கழுவினான். "நான் போய் கொஞ்சம் காட்டுமல்லி பறிச்சுட்டு வர்றேன்.. அதுவரைக்கும் இந்த மண்டை ஓட்டை சுத்தம் செய்து வை புள்ள.." என்று சொல்லிவிட்டு விருட்டென்று வெளியேறினான். அவன் வெளியேறியதும் சட்டென ஒரு யோசனை தோன்ற அவள் அந்த கோணியை பிரித்து சிறுவனை வெளியே அனுப்பிவிட்டு ஒரு நாயை பிடித்து உள்ளே கட்டி வைத்தாள்.அவன் வருவதற்குள் மண்டை ஓட்டையும் கழுவி வைத்தாள்.

                          வேகமான நடையுடன் காட்டு மல்லியுடன் வந்து சேர்ந்த மாசாணி கோணியை பார்த்தான். அதன் அசைவை உறுதி செய்து கொண்டு பின் மீண்டும் பூஜையில் அமர்ந்தான். விளக்குகள் அணைக்கப்பட்டு கற்பூரத்தால் மட்டுமே அந்த  அரை முழுவதும் ஒளி பரவியிருந்தது. சற்று நேரத்தில் அவன் மந்திரத்தை சொல்லச் சொல்ல ஒரு மெல்லிய காற்று அவளை உரசிச் சென்றதை உணர்ந்தாள். தெரு நாய்கள் ஊளையிடும் சப்தமும் கேட்டது. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மண்டை ஓட்டிற்கு அடியில் வைத்திருந்த ரத்தத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட ஒரு துணி தானாக விரிந்து கொண்டது. அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒன்று சேர பார்த்துக் கொண்டிருந்த காமாட்சிக்கு அடுத்து நடந்ததைப் பார்த்ததும் மயக்கமே வந்துவிட்டது.

                             காளியின் முன் பற்ற வைக்கப்பட்டிருந்த ஒரு கற்பூர ஜோதி தானாகவே நகர்ந்து அந்தத் துணியின் மேல் நின்றது. "அந்த கோணி எடுத்தா புள்ள" என்ற கர்ண கொடூர குரலில் தன் கணவன் சொன்னதை கேட்ட காமாட்சி ஓடிச்சென்று  கோணியை இழுத்து அவன் அருகே வைத்தாள். மறுநொடி ஒரு பெரிய அருவாளைத் தூக்கி, மனதில் ஜெபித்துவிட்டு கோணியை ஒரே போடாக போட்டான். காளி தேவி உதிரத்தில் குளிக்க, தன் முகத்தில் வழிந்திருந்த ரத்தத்தை துடைத்துவிட்டு கோணியை அவிழ்த்தபடியே காளியிடம் பேசினான். "தாயி, எம் புள்ளைக்கு வந்த கண்டத்த இந்த புள்ளைய கொண்டு போக்கிடு. இதோ நீ கேட்ட புள்ள தல" என்றவாறு கோணிக்குள்ளிருந்து தலையை எடுக்க அது நாய் தலையாய்  இருக்க கண்களில் மிரட்சியோடு தன் மனைவியைப் பார்த்தான்.. நடந்த விபரீதம் உணர்ந்து "தப்பு பண்ணிட்டேயே புள்ள.. ஆத்தா கோபம் நம்மள சும்மா விடாது" என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே "அம்மா" என்ற அலறலோடு அவள் மகன் படிக்கட்டுகளில் உருண்டு கொண்டிருந்தான்.



                                                      ***********************





Monday, March 3, 2014

பயணிகள்-நிழற்குடை - 2014MAR03

                     

                           மேலே உள்ள புகைப்படம் சித்தன்ன வாசல் பயணிகள் நிழற்குடை. திரைப்பாடல்களிலும், கவிதை மற்றும் கதைகளிலும் அழகான பெண்களை "சித்தன்ன வாசல் ஓவியமே" என்று வர்ணிக்க கேட்டிருப்போம். அப்படி கேட்டுணர்ந்த வர்ணனைகள் ஏற்படுத்திய கற்பனை பிம்பங்களோடு நண்பர்களுடன் சித்தன்னவாசல்  சென்றேன். அங்கு சென்ற எனக்கோ பெருத்த ஏமாற்றம். அங்கே நான் கண்டது ஒரு 20x16 அறையின் கூரையில் அழகுற வரையப்பட்ட ஓவியங்களும், ஓவியங்களை பார்த்தபடி சில சிற்பங்களும் இருந்தன.. மிகவும் நுட்பத்துடனும், சிரமத்துடனும் வரைந்த அந்த ஓவியங்களை கண்டது சந்தோசம் எனினும் அங்கு இருந்த ஓவியங்கள் மிகமிக குறைவே என்றபோது ஏமாற்றமாக இருந்தது. (என்னை மாதிரியே சித்தன்ன வாசல் பற்றிய பெருங்கனவு உங்களில் யாருக்கேனும் உண்டா?)

                       அதனுள் சமண மகரிஷிகள் தவமிருக்கும் ஓர் சிறிய அறை இருந்தது. அதனுள் சென்று நாம் உள்ளத்தை ஒருங்கிணைத்து மனதை ஒருநிலைப்படுத்தும் போது அந்த அறையில் இருப்பவர்களுக்கு "ஓம்" எனும் சப்தம் கேட்கிறது.. இது ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருந்தது.. இது எப்படி சாத்தியம் என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்.


                                         ***********    x     ************


                         சமீபத்தில் MTS இணையக் கருவியின் ஒரு தொலைக்காட்சி விளம்பரம் பார்த்தேன். அதில் பிரசவ வலியில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருக்க, அருகே அவள் கணவன் "Push, Push" என்று ஆறுதலாக கூறிக்கொண்டிருக்க உள்ளிருந்து குழந்தை வெளிவந்து அருகிலிருந்த நர்ஸின் பாக்கேட்டிலிருந்து மொபைலை எடுத்து இன்டர்நெட்டில் தொப்புள் கோடியை அறுப்பது எப்படி என வீடியோ பார்த்து வெட்டிக் கொள்கிறது, பின்னர் அந்த கட்டிலிலிருந்து இறங்கி சென்று அருகே இருந்த லேப்டாப்பில் பேஸ்புக், லைவ் ரெக்கார்டிங் போன்றவற்றை செய்துவிட்டு வெளியே நடக்க ஆரம்பிக்கிறது. "Born for Internet" என்ற வாசகத்துடன் விளம்பரம் முடிகிறது.  இன்டர்நெட் வேகமாக இருக்கிறது என்பதை கூற எவ்வளவோ வழிகள் இருக்க இப்படி ஒரு விளம்பரம் அவசியமா? என்று சிந்திக்க தோன்றியது. 


                                             ***********    x     ************

                             திரையரங்குகளில் எப்போது நுழைந்தாலும் உடனே மொபைலை வைப்ரேட் மோடுக்கு மாற்றிவிடுவேன். முடிந்த வரை கால்கள் எடுக்க மாட்டேன். சிலருக்கு பதில் SMS அனுப்பிவிடுவேன். தவிர்க்க முடியாத ஒரு சில அழைப்புகளை எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால் வெளியே சென்று பேசிவிட்டு வருவேன். ஆனால் ஒவ்வொரு முறை நான் அரங்கம் செல்லும்போதும் எதாவது ஒரு மண்டையில் மசாலா குறைந்த யாராவது ஒருத்தனின்  ரிங்க்டோன் அரங்கத்தின் QUBE சிஸ்டத்தை காட்டிலும் அதிகமாக அலறி விட்டு பின் அதை எடுத்து ஒரு ஐந்து நிமிடம் பேசி வெறுப்பேற்றும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. ஓரிரு முறை அவர்களிடம் கூறிவிடுவேன். சில சமயம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.. இந்த மண்ணாங்கட்டிகள் எப்பவாவது திருந்துவார்களா?

                                                ***********    x     ************


                           இன்று மார்ச் மூன்று முதல் தலைவர் கமலஹாசனின் "உத்தம வில்லன்" பட ஷூட்டிங் தொடங்குகிறது. விஸ்வரூபம் பார்ட்-II படத்தின் போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.. சித்திரையில் நமக்கு விருந்தளிக்க வரலாம். இப்போது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து வழங்கும் உத்தமவில்லன் படத்தின் "First Look" மற்றும் டீசரை இங்கே காணுங்கள்.

                                        

FIRST LOOK



டீசர்

                                                 ***********    x     ************

                          ஆசியக் கோப்பை கிரிக்கட் போட்டியின் முக்கியமான போட்டியில் இந்தியா நேற்று தோல்வியடைந்தது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியர்களின் கனவை கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து தகர்த்தான் அப்ரிதி.. இருந்தபோதும் இந்திய அணி பீல்டிங், பவுலிங் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது ஒரு ஆறுதல்.. தவிர விராட் கோஹ்லி கேப்டனாக சிறப்பாக செயல்படுவது இந்திய கிரிக்கட்டுக்கு நல்ல ஒரு விஷயம். நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ரவிந்தர ஜடேஜா மற்றும் இதற்கு முந்தைய போட்டிகளில் நன்றாக விளையாடிய விராட்டுக்கும் வாழ்த்துகள்.


                                               ***********    x     ************

                             சமீபத்தில் ஹார்ட் அட்டாக் எனும் தெலுங்கு படத்தை பார்த்தேன். இயக்குனர் பூரி ஜெகன்நாத் படம் என்றதால் சென்றேன். படத்தில் குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லையென்றாலும் படத்தின் நாயகி "அடா ஷர்மா" அடடடடா.. அவ்வளவு அழகு.. பூரியின் ரசனைக்கு ஒரு ஷொட்டு..


                                    அதே போல சென்ற வாரம் பார்த்த 1983 என்ற மலையாள திரைப்படம் நிச்சயம் கிரிக்கட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இளம் நடிகரான நிவின் பாலி இப்படி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது அருமை.

                                               ***********    x     ************


                               இன்று நம்முடைய  வாரம் வாசகர் கூடத்தில் நான் படித்து ரசித்த "தூப்புக்காரி " எனும் புதினத்தின் விமர்சனம் கொடுத்துள்ளேன். படித்துவிட்டு உங்க மேலான கருத்தை அங்கே பகிரவும்.

                            சுட்டி: http://vasagarkoodam.blogspot.com/2014/03/thooppukkari.html

                                            ***********    x     ************

                              சரி இந்த மாத பயணத்துக்கு வண்டி வந்திடுச்சு.. அடுத்த மாசம் நிழற்குடையில்  ச(சி)ந்திப்போம்...! வர்ட்டா!!






Saturday, March 1, 2014

ஆவி டாக்கீஸ் - வல்லினம்


இன்ட்ரோ  
                         கிரிக்கெட்டை தவிர வேறெந்த விளையாட்டுக்கும் விளம்பரமோ, முக்கியத்துவமோ கிடைப்பதில்லை, இந்த நிலை மாற வேண்டும்  என்பதை கொஞ்சம் நட்பு, கொஞ்சம் காதல், கொஞ்சூண்டு பேஸ்கட் பாலுடன் சொல்லியிருக்கிறார்கள். விளையாட்டு சம்பந்தமான படத்தில் காதலை கலக்காமல் சொல்லவே முடியாதா? கடைசியில் சொல்ல வந்த விஷயத்தையும் அரை குறையாய் சொல்லி முடித்திருக்கிறார் அறிவழகன்.




கதை         
                            பேஸ்கட் பால் (முக உடைப்பு பந்து என்று அர்த்தம் கொள்ளக் கூடாது) விளையாட்டால் தன் உயிர் நண்பனை இழந்த காரணத்தால் அந்த விளையாட்டையே துறக்கும் நகுல் மீண்டும் விளையாட ஆரம்பிப்பது மற்றொரு நண்பனுக்காக. தன் கல்லூரியில் நடக்கும் பேஸ்கட்பால் டோர்னமெண்டில் ஜெயித்து அதை பிரபலப்படுத்த நினைக்கிறான் நாயகன். அவன் எண்ணம் நடந்ததா என்பதை படம் நல்லாயிருந்தது என்று ஆரம்பிக்கும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

                            தமிழ்நாட்டை பொறுத்தவரை கிரிக்கட்டை எதிர்த்து படம் பண்ணி அதில் வெற்றி காண்பது என்பது கடினமான செயல். சக்தே இந்தியா போல் வந்திருக்க வேண்டிய படம். காதல், மோதல் இருக்கிறதே தவிர, ஒரு விளையாட்டு சம்பந்தமான ஒரு படத்தில் இருக்க வேண்டிய எல்லாமே மிஸ்ஸிங். ஒரு கமர்ஷியல் படங்களுக்கு தேவையான அம்சங்கள் இல்லாமல் போனதால் படம் படுத்துவிடுகிறது.

                                                                                                                                           ஆக்க்ஷன் 
                              நகுல் நீளமான டயலாக்குகளை பேசும்போது தன் மேனரிசங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அப்பாஸ், ஷாம் வரிசையில் சேர நேரிடும். இருந்த போதும் இந்த படத்திற்கென பேஸ்கட்பால் நுணுக்கங்களை கற்றுக் கொண்டதும், பல நேரம் ஜிம்மில் கிடையாய் கிடந்ததும் படத்தில் தெரிகிறது. படம் தொடங்கி பதினைந்து நிமிடம் நாயகி என்ட்ரிக்காக வெயிட் பண்ணினேன்.. அப்புறம் தான் தெரிந்தது முன்னரே ஒரு சீனில் வந்த சுமார் மூஞ்சி குமாரி ஒன்று தான் நாயகி என்று. படம் நெடுகிலும் "ஜாக்கி" பனியனுக்கு மாடலாக இருக்கிறார். அந்த "நகுலா" பாடலில் முகத்தை சுளித்து, உடலை வளைத்து, ஆடை குறைத்து என என்னென்னவோ ட்ரை பண்றார்..ம்ஹூம், ஒன்றும் எடுபடலை. தமிழ் ரசிகர்களின் ரசனை அவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட வில்லையே.

                            ஒரு தலை ராகம் படத்தில் வருவது போல் நாயகியின் தோழி சூப்பராக இருக்கிறார். அவருக்கு இனிவரும் படங்களில் வாய்ப்புகள் கிட்டலாம். நண்பனாக வருபவர், கிரிக்கட் சீனியர், அதுல் குல்கர்னி, கிருஷ்ணா, ஆதி என அனைவரும் நல்ல பங்களிப்பு. (தோத்து போற மேட்சுல செஞ்சுரி அடிச்சு என்ன பிரயோசனம்) இதிலும் ஜெயப்ரகாஷை பார்க்கும் போது வெறுப்பு ப்ளஸ் சலிப்பு.. தமிழ் சினிமாவில் வேற ஆளேவா இல்ல.

இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 தமன் இசை சுமாருக்கும் கீழ். பாஸ் நீங்க ஆந்திரா பக்கமே இருங்க.. இங்க பல நல்ல இசையமைப்பாளர்கள் இருக்காங்க. அறிவழகனின் இரண்டாம் படம் என்று நம்பி வந்தவர்கள் தலையில் எல்லாம் தொப்பி. இவர் அமானுஷ்ய படங்களையே தொடர்ந்து எடுக்கலாம் என்று நினைக்க வைக்கிறார். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தில் உபயோகப்படுத்தும் லைட்டுகளுக்கே ஏகப்பட்ட செலவு பண்ணியிருப்பார் போல.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 "மாமன் மச்சான்" பாடல் ஒன்று மட்டும்.

                  Aavee's Comments - Poor Game plan



How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...