Monday, September 30, 2013

ஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி!! (சைவம்)


                         ஹலோ, கிச்சனுக்குள்ள நீங்க வரப்படாது.. ஹால்ல வெயிட் பண்ணுங்க.  நான் செஞ்சு கொண்டு வர்றத சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. புரிஞ்சுதா? ( மைன்ட் வாய்ஸ்: அகில உலக சூப்பர் செப் ஆவியின் கிச்சனுக்குள்ள நீங்க வந்தா தீய்ஞ்சு போன ஐட்டத்தை எல்லாம் நான் கரெக்ட் பண்ற விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சுடும்.. சரியா வரலேன்னு பேக் சைடில ஹோட்டல்ல ஆர்டர் பண்ண விஷயம் மட்டும் தெரிஞ்சா பயபுள்ளைக சும்மாவா இருப்பாங்க)


                      கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி






தேவையான பொருட்கள்:

கேஸ் அடுப்பு அல்லது இண்டக்க்ஷன் ஸ்டவ்.

கேஸ் அடுப்பு எனில் கேஸ் சிலிண்டர் ( ஆதார் நம்பர் வாங்கி கேஸ் கம்பெனிக்காரன் கிட்ட கொடுத்தாச்சா நீங்க?)

லைட்டர் (அ) கரண்ட் (அடுப்பை பற்ற வைக்க, இண்டக்க்ஷன் பயனாளர்கள் ஈ.பி பில் கட்டியாச்சான்னு சரிபார்த்துக்கோங்க )

சிறிய பாத்திரம்- 2- (இரண்டு கிளாஸ் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு.. சின்னதா இருந்தா பால் பொங்கும்போது வழியும். பெருசா இருந்தா பாத்திரம் சூடாக பிடிக்கிற நேரம் அதிகமாகும். மைன்ட் வாய்ஸ் - எரிபொருள் சிக்கனம்..ம்ம்! )

குழம்பித் தூள்* - 1 டீ-ஸ்பூன்  ( காப்பி வைக்கவும் டீ ஸ்பூன் தான் பயன்படுத்த வேண்டுமென்பதை நினைவில் "கொல்க" )

சர்க்கரை -     1 1/2 டீ-ஸ்பூன்  ( வாழ்க்கை இனிப்பா இருக்கணும்னா ரெண்டு ஸ்பூன் போட்டுக்கோங்க.)

பால்           -        அரை டம்ளர்  ( காப்பி லைட்டா வேணும்னா முக்கால் கிளாசும், திக்கா வேணும்னா கால் கிளாசும் எடுத்துக்கோங்க)

நல்ல தண்ணி - அரை டம்ளர் ( கின்லே, அக்வா பினா போன்ற மினரல் வாட்டர்களை தவிர்ப்பது நலம்.. மைன்ட் வாய்ஸ் - சமூக சிந்தனையாம்!! )


கிடுக்கி -  பாத்திரத்தை பிடித்து/கொள்ள/ இறக்க உதவும் சாதனம். இதை உங்க ஊர்ல எப்படி சொல்வாங்களோ அப்படி அண்டரஸ்டேண்டு பண்ணிக்கோங்க

வடிகட்டி - 1

வெள்ளி டவரா - 1

* குழம்பித் தூள் - இன்ஸ்டன்ட் குழம்பித் தூள் என்று கேட்டு வாங்கவும். ப்ரு அல்லது நெஸ்கபே போன்ற பெயர்களை உபயோகித்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் விளம்பரம் ஆகிவிடும் அபாயம் உள்ளதால் அவ்வாறு செய்யவில்லை. ( மைன்ட் வாய்ஸ் - அதான் இப்ப சொல்லிட்டியே!)


செய்முறை விளக்கம்: 

1. அடுப்பை பற்ற வைக்கவும்.
2. பாத்திரத்தை நன்கு கழுவி அதன் அடியை துடைத்துவிட்டு  அடுப்பின்மேல் வைக்கவும்
3. நல்ல தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
4. அதே சமயம் பாலை வேறொரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். பால் கொதித்ததும் அரை டம்ளர் பாலைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5. தண்ணீர் கொதித்தவும் குழம்பித்தூளை போடவும்.
6. ஓரிரு நொடிகள் கழித்து கிடுக்கியின் உதவியுடன் பாத்திரத்தை இறக்கவும்.
7.  பால் இருக்கும் டம்ளரின் மேல் வடிகட்டியை வைத்து அடுப்பிலிருந்து எடுத்த குழம்பி நீரை ஊற்றவும்.
8. வடிகட்டியை எடுத்து விட்டு சர்க்கரையை சேர்க்கவும். (கலக்க வேண்டாம்.. சூடு ஆறி விடும்)
9. வெள்ளி டவராவில் வைத்து இரண்டு ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப அன்பையும் சேர்த்து பரிமாறவும்.


          சூடான "ஆவி" பறக்கும் குழம்பி தயார். ( காப்பி வைக்க ஒரு விளக்கம் தேவையான்னு நீங்க கேக்குறது புரியிது. ஆனா வெறும் சுடுதண்ணி மட்டும் வைக்க தெரிஞ்ச பேச்சிலர் ஆசாமிகளுக்கு இது பயன்படுமே.. ஹிஹிஹி )

பி.கு: இது கும்பகோணம் டிகிரி பில்டர் காப்பிக்கு போட்டி அல்ல..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆவி 's கிச்சனில் அடுத்து வருவது - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~      
                   


Saturday, September 28, 2013

ஆவி டாக்கீஸ் - ராஜா ராணி


இன்ட்ரோ  
                          நஸ்ரியாவின் நடிப்பில் வந்திருக்கும் இரண்டாவது தமிழ்ப்படம். இந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் மூவி இதுதான் என்று சொன்னால் மிகையல்ல. நஸ்ரியாவின் தீவிர ரசிகன் என்ற முறையில் இதை நான் சொல்லவில்லை. நஸ்ரியாவின் "அழகான" நடிப்பைத் தாண்டி ஒரு நல்ல திரைக்கதை, இசை, நகைச்சுவை, ஜெய் மற்றும் நயன்தாராவின் நடிப்பு என பல விஷயங்கள் அசத்தலாக அமைந்திருக்கிறது.. முதல் படத்திலேயே சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் ஷங்கரின் சிஷ்யர் அட்லீக்கு ஒரு ஷொட்டு.. சரி கதைக்கு வருவோம்.




கதை         
                            இஷ்டமில்லாத இருவர் மனம் ஒவ்வாது வாழ்க்கை துவங்க, இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எத்தனிக்கையில் சந்தர்ப்ப வசத்தால் பிரிய நேரிடுகிறது. இவர்களை சேர்த்து வைப்பது யார் என்பது படத்தின் கிளைமாக்ஸ். மௌனராகம் என்றொரு திரைப்படம் பார்த்தது நினைவில் உள்ளதா? அந்தப் படத்தில் கொஞ்சம் நகைச்சுவை, இன்னொரு காதல், ஜீவி யின் இசை, மோகன்-ரேவதிக்கு பதில் ஆர்யா-நயன். சில்லென வந்து செல்லும் கார்த்திக் போல இதில் நஸ்ரியா. இதனுடன் நான் சற்றும் எதிர்பார்க்காத விருந்து ஜெய்யின் நடிப்பு. முன்பாதியில் சத்யனும், படம் நெடுக சந்தானமும் கலக்கல்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              படத்தின் எதார்த்த ஹீரோ ஜெய். மனிதர் வெள்ளந்தியான கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஜெய்க்குள் இவ்வளவு திறமை உள்ளதா என்று ஆச்சர்யப்பட்டேன். கால் சென்டரில் நயனிடம் திட்டு வாங்குவதாகட்டும், அவரிடம் காதல் சொல்லி பின் லவ்வுவதாகட்டும் செம்ம ஆக்டிங். "நான் அழுவல, கண்ணுல வேர்க்குது" என்று அவர் சொல்லும்போது அரங்கமே அதிர்கிறது. படம் முடிந்த பின்னும் மனதில் நிற்கிறார். இவருடன் சேர்ந்து சத்யன் செய்யும் சேட்டைகள் பிரமாதம்.ஆர்யா இன்னும் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கவே கஷ்டப் படுகிறார். காமெடி சீன்களில் ஒக்கே, கொஞ்சம் சீரியசான சீன்களில் ஸ்பூப் படங்களில் நடிப்பது போலவே வந்து போகிறார்.

                                நயன்தாரா "மஸ்காரா" போட்ட மங்காத்தாவாக படம் முழுவதும் வருகிறார். இவர் ஒவ்வொருமுறை அழும் போதும் மஸ்காரா கரைந்து முகத்தில் வழிந்து பப்பி ஷேமாக இருக்கிறது. ஆனால் இரண்டு வருடத்திற்கு பின் திரும்ப வரும் அவர் அசத்தல் பெர்பாமன்ஸ் என்றே கூறலாம். சந்தானம் படத்திற்கு தேவையான அளவில் மட்டும் காமெடி செய்வது சிறப்பு. அதுவும் இவரும் மானேஜர் "மொட்டை" ராஜேந்திரனும் சேர்ந்து செய்யும் காமெடிகள் கிச்சுகிச்சு. "தங்கமீன்கள்" ராம் கேரக்டரை விட ஒரு படி மேல் போய் நடித்திருக்கிறார் சத்யராஜ். இவர் கேரக்டரை புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது.



                                                                                             அசத்தல் அறிமுகம்        
                                    தமிழ் சினிமாவிற்கு நீண்ட காலத்திற்கு பின் ஒரு துறுதுறு ஹீரோயன். வேற யாரு நம்ம நஸ்ரியா தான். "ரிங்க ரிங்கா" பாடல் கேட்கும் போதே நமக்கு கால்கள் தாளம் போடும். நஸ்ரியாவை பார்க்கும் போது உள்ளம் துள்ளும். இந்த ரெண்டும் சேர்ந்தால்.. அருமையான அறிமுகமாகிறார்.  "பிரதர்" என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் சொல்கிறார். மேக்கப் அதிகமில்லாமல் தன் அழகாலும் இயல்பான நடிப்பாலும் கவர்கிறார், தன் குடும்பத்தை பற்றி சொல்லும்போது நம் கண்களும் குளமாகிறது. அந்தக் காட்சியிலும் வெறும் கிளிசரின் வழிய தேமே என்று அமர்ந்திருப்பது ஆர்யாவின் சிறப்பு.

இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஜி.வீ. பிரகாஷின் இசை பெரும்பங்கு வகிக்கிறது. பாடல்கள் பின்னணி இசை, தீம் மியூசிக் என எல்லாம் ஏ-ஒன். சக்திஸ்ரீ கோபாலன் பாடிய "அஞ்ஞாடே" பாடல் படத்தில் மிஸ்ஸானது மட்டும் கொஞ்சம் வருத்தம். பலமுறை பார்த்து பழகிய கதைதான் என்றாலும் தொய்வில்லாத திரைக்கதை நமக்கு ப்ரிஜ்ஜில் வைத்த ஐஸ்க்ரீம் போல் சுவையாக இருக்கிறது.  இளைஞர்கள் மட்டுமல்லாது குடும்ப ஆடியன்ஸையும் கவரும் வண்ணம் பல காட்சிகளை வைத்து வெற்றிப்பட இயக்குனர் வரிசையில் கடைசியில் சென்று நிற்கிறார் அட்லி. அடுத்தடுத்த படங்களில் முன்னணிக்கு வர வாழ்த்துகள்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 "ஹே பேபி" பாடலில் ஆர்யா-நயன் இருவரும் அசையாமல் நிற்க  கண்ணாடியில் அவர்கள் மனசாட்சி சண்டை போடும் காட்சி மற்றும் பிரதர் என்றபடி நஸ்ரியா ஐஸ்க்ரீம் வாங்கி வரும் காட்சி. இமையே பாடல் நெஞ்சை உருக்குவதாய் இருந்தது. ஓடே ஓடே மற்றும் சில்லென மழைத்துளி இளமை துள்ளும் பாடல்கள். காலாண்டு விடுமுறையாதலால் எல்லோரும் குடும்பத்தோடு சென்று கண்டுகளிக்க வேண்டிய படம். காதலர்கள்/ கணவன்-மனைவிகள் பார்க்க வேண்டிய படம். நண்பர்கள் கூட்டமாக சென்று ரசிக்க வேண்டிய படம்.

                  Aavee's Comments - Blockbuster of 2013.





ஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


இன்ட்ரோ  
                           மேஸ்ட்ரோ இளையராஜாவின் மெஸ்மரிசம் செய்யும் இசையில் பாடல்களே இல்லாத தமிழ்ப் படம் எடுத்ததற்கே இயக்குனர் மிஷ்கினுக்கு பெரிய பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் சில காட்சிகள் உலக சினிமாவின் தழுவல்கள் போல் தோன்றினாலும் தமிழ் சினிமாவுக்கு இது புதுசுதான்.




கதை         
                            ஓநாய் (உல்ப்) என்ற பெயரில் அறியப்படுகிற மிஷ்கினை ஆரம்பம் முதலே போலிஸ் தேடுகிறது. இவரைக் கொல்ல இன்னொரு கொலைகார கும்பலும் நார்த் மற்றும் சவுத் மெட்ராஸ் முழுக்க தேடுகிறது. இவரை முதலில் காப்பாற்றும் ஒரு மருத்துவ  கல்லூரி மாணவர் பின்னர் அவரும் சேர்ந்து ஓநாயை தாக்குகிறார். போலிஸ் மற்றும் கொலைகார கும்பல் இவரை ஏன் துரத்துகிறது, இவரகளிடமிருந்து ஓநாய் தப்பித்ததா என்பதே கிளைமாக்ஸ்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               மிஷ்கினின் முந்தைய படமான யுத்தம் செய் போலவே ஆரம்பிக்கும் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு சஸ்பென்ஸ் வைத்து கொண்டு சென்றிருப்பது சிறப்பு. ஓநாய் கதாப்பாத்திரத்தில் சில காட்சிகளில் பார்த்திபன் நினைவுக்கு வந்து போனாலும் தான் எடுத்துக் கொண்ட பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார் மிஷ்கின். மருத்துவ கல்லூரி மாணவராக ஸ்ரீ. (வழக்கு எண் படத்தில் வருவாரே அவரேதான். இதில் அரும்பு மீசை மழித்து குளித்துவிட்டு அழகாய் வந்திருக்கிறார். ) பதறும் காட்சியிலும் சரி, துப்பாக்கி தன் கைக்கு வந்தவுடன் மிஷ்கினை மிரட்டும் போதும் சரி கண்களை உருட்டி உருட்டி படம் காட்டுகிறார். CID ஆக வரும் ஷாஜியின் நடிப்பும் அருமை.



இசை-இயக்கம்
                                 மிஷ்கினின் சொந்தப் படமான இதில் பின்னணி இசை படத்தை நகர்த்தும் தருணங்கள் ஏராளம். இதுபோன்ற த்ரில்லர் படத்திற்கு தேவையான இசையை அற்புதமாக கொடுத்துள்ளார் இசை ஞானி. முதல் பாதியின் விறுவிறுப்பு பின் பாதியிலும் சற்றும் குறையாமல் ரசிகர்களை ஏமாற்றாமல் வேகமான  அதே சமயம் சிக்கல் நிறைந்த திரைக்கதையை நிறைவாய் தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 ட்ரெயினிலிருந்து சாதுர்யமாக தப்பிக்கும் காட்சி. கடைசி போராட்டத்தில் காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் எதிரியை எதிர் கொள்ளும் யுத்தி. பிளாஷ்பேக்கிற்காக நேரத்தை செலவு செய்து கொல்லாமல் சுருக்கமாக அதே சமயம் வித்தியாசமாக சொன்ன விதம் சூப்பர். அசத்தலான கேமிரா கோணங்கள். சில "மிஷ்-கிளிஷேக்களை" மட்டும் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. பாடல்கள் நகைச்சுவை எதுவும் இல்லாததால் எல்லோருக்கும் பிடிப்பது கஷ்டம். இருந்தாலும் நல்ல சினிமா பார்க்க விரும்புவோர் தவறாமல் ஒரு முறை பார்க்கலாம்.

                  Aavee's Comments - Lone Wolf can be visited once..




Thursday, September 26, 2013

ஆப்பிள் ஏன் சிறந்தது?



                                   ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்ற கம்பெனிகளின் பொருட்களை விட ஏன் சிறந்தது? ஆப்பிள் வெளியிட்ட அனைத்து பொருட்களின் (லேப்டாப் நீங்கலாக) பெயர்களையும் கவனியுங்கள். எல்லா பெயரிலும் முன் நிற்கும் எழுத்து "i". இந்த i எனும் எழுத்து இந்தப் பொருட்களை உபயோகப்படுத்தும் ஒவ்வொருவரையும் குறிக்கும். "இது  என்னுடையது என்ற பொருள் படும்படி பெயரிடப்பட்டது அது. அது மட்டுமா? அந்தப் பெயர்களில் முதலாவதாக வரும் 'i' சிறியதாகவும், அதன் பின் வரும் எழுத்து பெரியதாகவும் இருக்கும். (உதாரணம்  iPhone, iPad, iPod ) எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் "தான்" (i) எனும் செருக்கு அற்றவனாக இருந்தால் தான் நல்லது என்பதை குறிக்கிறது.  தான் சிறியதாக இருந்த போதும் அருகில் உள்ளவன் பெரிதாவதால் சந்தோசம் தவிர பொறாமை படுதல் ஆகாது எனவும் பொருள் கொள்ளலாம்.



                                      மேற்கூறிய இரு விஷயங்களும் ஆப்பிளின் அனுமதியின்றி பிரசுரிக்கப் பட்டது என்றும் மேற்கூறிய தகவல்கள் பற்றிய அறிவு ஆப்பிளுடையது அல்ல எனவும் தெளிவு படுத்திக் கொள்கிறேன். சரி மேட்டருக்கு வர்றேன். நான் முதன் முதலாக வாங்கிய ஒரு ஆப்பிள் சாதனத்தை பற்றிய சம்பவத்தைத் தான் இவ்விடம் கூற விழைகிறேன். இந்த சம்பவத்தைப் படித்து முடிக்கும் போது இந்தத் தலைப்பு எவ்வளவு உண்மையானது என்பது உங்களுக்கும் புரியும்.


                                        2006  இதே செப்டம்பர் மாதம் தான்  எனக்கும் ஆப்பிளுக்கும் முதல் பந்தம் உண்டானது. ஆம், என் முதல் ஐ-பாட் வாங்கியது அப்போதுதான். ஐ-பாட் கிளாசிக் வகையை சார்ந்த அந்த சாதனம் எனக்கு மகிழ்ச்சி கொண்டு வந்தது என்று சொல்வதை விட அந்த ஐ-பாடினை கவர் போட்டு ஸ்க்ரீன் கார்டு போட்டு, என்கிரேவ் செய்து என்று  ஒரு குழந்தையைப் போல் சீராட்டி பாராட்டி வளர்த்தேன் என்பதே சரி. நண்பர்கள் வெறும்  mp3 பிளேயர்கள் வைத்திருந்த காலம் அது. என் ஐ-பாட் எனக்கு பெருமை சேர்த்தது என்பதில் ஐயப்பாடு ஏதும் இல்லை. காரில் செல்லும்போதும் வீட்டில் இருக்கும் போதும், அலுவலகத்திலும் இப்படி உறங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் என் வாழ்வில் அங்கம் ஆகிவிட்ட ஒரு நண்பன் அது.


                                        எல்லா சந்தோஷங்களுக்கும் ஒரு "டாட்" வருமில்லையா.. அந்த ஐ-பாட்டின் வாழ்விலும் அது வந்தது. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆறு ஒரு உலக நுண்ணறிவாளர் தினத்தன்று அது வேலை செய்ய மறுத்தது. முதல் ஸ்க்ரீன் மட்டும் வருகிறது. வேறு அப்ளிகேஷங்களுக்குள் போக மறுக்கிறது. உள்ளே செல்ல முயலும் போது ரீ-ஸ்டார்ட் ஆகி மீண்டும் அதே ஸ்க்ரீனிற்கு  வருகிறது. நுண்ணறிவாளர் தினத்தின் சந்தோஷத்தை கொண்டாட மனம் ஒப்பவில்லை. ஐ-பாட்டை தூக்கிக் கொண்டு ஆப்பிள் ஸ்டோரை நோக்கி ஓடினேன். அங்கே ஐ-பாட்டை பரிசோதித்த பணியாளன் "உங்க ஐ-பாட் வாரண்டி பீரியடான இரண்டு வருடத்தை தாண்டிவிட்டது." என்றான் "பரவாயில்லை, எனக்கு என் ஐ-பாட்டை சரி செய்து கொடுத்தால் போதும். எவ்வளவு செலவானாலும்(?!!) பரவாயில்லை என்று கூறினேன். என்னை ஒரு மணி நேரம் கழித்து வர சொல்லிவிட்டு அந்த பணியாளன் என் ஐ-பாட்டை உள்ளே எடுத்துச் சென்றான். அருகிலிருந்த என் நண்பன் "டேய், அதுக்கு நீ ஒரு புது ஐ-பாடே வாங்கியிருக்கலாம். இப்போ பில் தீட்டப் போறாங்க பாரு" என்றான். அதை கேட்ட பிறகு எனக்கும் அப்படி செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது.



                                          இருந்தாலும் ஆவிக்கு ஒரு நாக்கு ஒரு வாக்கு என்பதால் கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கட்டும் என்று சொல்லி அருகிலிருந்த சப்-வே யில் உணவருந்திவிட்டு வேகமாய் ஆப்பிள் ஸ்டோருக்கு விரைந்தோம். அந்த பணியாளன் என்னைக் கண்டதும் அவன் நின்றிருந்த இடத்திலிருந்து வெளியே வந்து "சார்.. இந்த ஐ-பாட்டை சரி செய்யக் கொடுத்தது நீங்கதானே?" என்றான். நானோ "என் ஐ-பாட் இப்போ எப்படி இருக்கு, சரி ஆயிடுச்சா" என்று ஐசியு வில் கிடக்கும் பேஷண்டைப் பற்றி டாக்டரிடம் விசாரிப்பது போல் விசாரித்தேன். அதற்கு அவனோ "சார்.. உங்கள எங்க ஸ்டோர் மேனேஜர் மீட் பண்ண விரும்பறார்" என்றதும் என் மனதில் ஒருவித பயம் உண்டானது.  இருந்தாலும் என் நண்பன் உடனிருக்கும் தைரியத்தில் உள்ளே சென்றேன்.


                                             உள்ளே சென்ற என்னை தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்த்தினார். என் நண்பனையும் அமரப் பணித்தார். பின் அவர் இருக்கையில் அமர்ந்து தன் மேசை மீது வைக்கப்பட்டிருந்த என் ஐ-பாட்டை கையில் எடுத்து ஒரு முறை பார்த்தபடியே என்னை நோக்கி " எங்க ஐ-பாட் வகையிலேயே இதுவரை இதுபோன்ற பிரச்சனை வந்ததே இல்லை. எங்க பணியாளர்கள் எவ்வளவோ முயற்சித்தும் இதை சரி செய்ய முடியவில்லை. இது போன்ற தவறுகள் உங்களை எவ்வளவு வேதனைப் படுத்தும் என்று நாங்கள் அறிவோம்" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே நிலைமை புரிந்து நான் "பரவாயில்ல சார்.." என்று சொல்வதற்குள் தன் மேசைக்குள்ளிருந்து ஒரு புதிய ஐ-பாட் (அதே வகை) ஒன்றை எடுத்து "சிரமத்துக்கு மன்னிக்கவும்" என்று சொல்லி என் கைகளில் கொடுக்க நான் திக்குமுக்காடிப் போனேன்.. நண்பனின் கண்களிலும் காதுகளிலும் மெலிதான புகைமண்டலம்..

                                                    *********************



Wednesday, September 25, 2013

பயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 9;  தொலைவு: 13.

மனதை மயக்கும் மயாமி  (அமெரிக்கா)
( ப்ளாரிடா )



                              ஒரு நாள் முழுக்க சவுத் பீச்சிலும் Downtown எனப்படும் மயாமி நகர வீதிகளிலும் சுற்றித் திரிந்துவிட்டு மறுநாள் நார்த் பீச் சென்றோம். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானின் நீலத்தை உட்கொண்ட கடலும், கடல் அலைகளும், திரைப்படங்களில் மட்டுமே இது போல் நீலவண்ண கடல் நீரை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் காட்சியின் தரத்துக்கு (Richness) வேண்டி காமிராவில் வர்ணம் சேர்த்ததாகவே நினைத்து வந்தேன். நார்த் பீச் காதலர்களின் கனவு கடற்கரை என சொல்லலாம். 

நார்த் மயாமி  பீச்

ஓடி விளையாடு பாப்பா!


                               பெண்களின் ஆடைகள் குறைந்ததே வல்லுறவுக்கு காரணம் என்று சொல்லும் மூடர்கள் ஒருமுறை இங்கு வந்தால் தம் கருத்தை மாற்றிக் கொள்ளுவர் என்றே நினைக்கிறேன். 

யார் இவர்கள்..இளம் காதல் மான்கள்..
     

சலங்கை ஒலி?


ஆவி ஜம்ப் !!

                                கடற்கரைகளில் குப்பை போடுவதெற்கென்று ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்து கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கின்றனர். மக்களும் சிரமம் பார்க்காமல் குப்பைத்தொட்டியில் போடுவதால் அந்த அழகான இடம் அழகு குறையாமல் இருக்கிறது. 

ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகள்.


                               அங்கிருந்து புறப்பட மனமில்லாமல் புறப்பட்டு அட்லாண்டா நோக்கி பயணித்தோம். நாங்கள் நேரமின்மையால் பார்க்க முடியாமல் போன இடம் கீ வெஸ்ட்  எனப்படும் ஒரு மயாமிக்கு  அருகிலிருக்கும் ஒரு தீவு. மயாமி செல்ல விரும்புவோர் இதற்கும் நேரம் ஒதுக்கி செல்லுதல் நலம். அமெரிக்காவில் காணவேண்டிய இடங்களில் மயாமி  மிக முக்கியமான ஒன்றாகும். எனக்கு மிகவும் பிடித்த இடங்களுள் இதுவும் ஒன்று. இதைப் போலவே மற்றொரு இடத்தை பற்றிய பதிவை  அடுத்த பயணச் சுவடுகளில் எழுதுகிறேன்..



பயணங்கள் முடிவதில்லை..


Monday, September 23, 2013

வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி!!


                        சென்ற மாதம் உலக சினிமா ரசிகன் அவர்களின் கோவை ‘பன் மால்’...அக்கிரமம்...அநியாயம்...அராஜகம். பதிவில் பன் மாலில் (Fun Mall) புட் கோர்ட்டில் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் வைக்கவில்லை என்ற புகார் பதிவு செய்யப் பட்டிருந்தது.


                       இதன் பின்னர் இரண்டு வாரம் முன்பு ஒரு நாள்  நானும் அவரும் சென்றிருந்த போது மீண்டும் அதே போல் தண்ணீர் வைக்கப்படாமல் குடிப்பதற்கு பணம் கொடுத்து பாட்டில் தண்ணீரை பெறுமாறு அறிவுறுத்தப் பட்டோம். அங்கே இருந்த புகார்ப் புத்தகத்தில் உலக சினிமா ரசிகன் ஏற்கனவே கொடுத்த புகாரோடு சேர்த்து மீண்டும் ஒரு புகார் பதிவு செய்தோம். நேற்று செப். 22 அன்று அவ்விடம் சென்ற போது அங்கே பொதுமக்களுக்காக வாட்டர் ப்யுரிபையர் (Purifier) ஒன்று வைக்கப்பட்டிருந்தது. உடன் அந்த புகார்ப் புத்தகத்தில் இதை அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காய் நன்றி கூறியிருந்தனர்.


அப்பாடா, தண்ணி கிடைச்சிடுச்சி!!


                      நம் புகாருக்கு செவி சாய்த்து (கொஞ்சம் தாமதித்தாலும்) தண்ணீர் கொடுத்த பன் மாலுக்கு தமிழ்ப் பதிவர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது நம் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். இந்த அறப் போராட்டத்தை துவக்கி, செம்மையாக வழிநடத்தி வெற்றிக்கனியை பறித்த உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் சார் அவர்களையும் வாழ்த்துகிறேன்.,.


Sunday, September 22, 2013

உலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..!!

                             


                               சனிக்கிழமை காலை பத்து மணிக்கு உலக சினிமா ரசிகனிடமிருந்து போன். "ஆனந்த், யாயா போலாமா?" "கண்டிப்பா சார்." என்று சொல்லும் போது நான் அறிந்திருக்கவில்லை, வெள்ளியன்று "6" படத்திற்கு நான் கூட்டிச் சென்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கை என்று. நாங்கள் (மீ+ உ.சி.ரா + கோவை நேரம்) உள்ளே சென்று அமரும் போது பத்து நிமிட படம் ஓடியிருந்தது (நல்லவேளை!!)

                                  படம் பார்க்க ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே சனி என் தலையின் உச்சத்தில் நின்றிருப்பதை உணர முடிந்தது. சிவாவும் சந்தானமும் போட்டி போட்டு மொக்கை போடுகிறார்கள். இவர்களின் ஹீரோயின்களாக தன்ஷிகாவும், சந்தியாவும். பட போஸ்டரில் பவர் ஸ்டாரைப் பார்த்து எதற்கு ஒவ்வொரு படத்திலும் இவரைப் போடுகிறார்கள் என்று யோசித்தேன். ஆனால் இதில் பவர் வரும் அந்த பத்து நிமிடங்கள் தான் காமெடி ரிலீப்.

                                     இடைவேளைக்கு சற்று முன் மங்காத்தா அஜித்- அர்ஜுன் போல் புயல் காற்றுக்கு நடுவில் சண்டை போடுவது போல் சிவாவும் சந்தானமும் மோதிக் கொள்ளும் காட்சி. இந்தக் காட்சி முடிந்த பின்னும் புயல் காற்றின் சப்தம், திரும்பிப் பார்த்தால் அங்கே ஒரு அன்பர் நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார். நான் எங்க சார் படம் பார்க்க வந்தேன். வூட்ல பொண்டாட்டி தொல்ல தாங்கலே ன்னு தான் இங்க வந்தேன் என்பது போல் நிம்மதியாக உறங்கினார். ( விழித்து மட்டும் பார்த்திருந்தால் பொண்டாட்டி தொல்லையே எவ்வளவோ மேல் என்று உணர்ந்திருப்பார்.)

                                     சந்தானம் இந்தப் படத்தின் மூலம் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரி படங்களில் நடித்து வரும் சிவா இனி மேலாவது ஜாக்ரதையாக கதை கேட்பது அவருக்கு  நலம் பயக்கும். தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் பீ கேர்புல் என்று என்னை நானே வார்ன் செய்துகொண்டு கிளம்பினேன். இனிமேல் தமிழ் சினிமாவிற்கே போவதில்லை என்ற முடிவையும் எடுத்தேன். அதாவது அடுத்த வெள்ளிக்கிழமை நஸ்ரியாவின் "ராஜாராணி" வெளியாகும் வரை.





Saturday, September 21, 2013

ஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்

   


                            உலக சினிமா ரசிகனுடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்கள் ஒன்றாக பார்த்திருக்கிறேன்.. அவருடன் "ரெபெல்" என்ற தெலுங்கு படம் பார்த்த போது அதில் ஹீரோ ஸ்கார்ப்பியோ காரின் பானட்டில் தட்டியவுடன் அதன் நான்கு சக்கரங்களும் தெறித்து விழும். இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பார்த்தேன். அதன் பின்னர் படம் நெடுக அவர் வயலேன்ட்டானது இந்தப் படம் பார்த்து தான்.
       
                                அம்மா, அப்பா, அவர்களுக்கு ஒரே மகன். அந்த மகனை பாசம் வழிந்தோடும் அந்த முதல் பாடலுக்குப் பிறகு இவர்கள் பாசப் பிணைப்பை பார்க்க சகிக்காத யாரோ கடத்தி விடுகிறார்கள். அந்த சிறுவனை தேடி ஷாம் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து தவறு செய்யும்  ஆறு தீவட்டி தடியன்களை கொன்று மெழுகுவர்த்தி ஏற்றுகிறார். கடைசி நம்பிக்கையான கல்கத்தாவிலும் கிடைக்காததால் திரும்பி நடக்கும் ஷாமை அந்த சிறுவனே கண்டுபிடிப்பதுதான் கிளைமாக்ஸ்.

                                 முகவரி, தொட்டிஜெயா படத்திற்கு பின் என் பிரியப்பட்ட டைரக்டர் ஆகிவிட்ட துரை இயக்கிய படம் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படத்திற்கு சென்றேன். சென்ற பின்தான் தெரிந்தது, இது சாதாரண படம் அல்ல.. உலக சினிமா என்று. அதிலும் ஹீரோயின் பூனம் கவுர், சிரிக்கும் போதும் அழும் போதும் பல ஆஸ்கார்களை அள்ளிச் செல்கிறார். அவர் மட்டுமா, டிரைவர் ரங்காவாக வரும் கதாப்பாத்திரம், "நீ மகாடு ரா" என சீறும் தெலுங்கு வில்லன் யாதகிரி, மலையாள சேட்டன், கல்கத்தா கடத்தல்காரன், சமரசிம்மா ரொட்டி, சாரி ரெட்டி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

                                  இந்த லிஸ்டில் நீங்க ஷாம் பேர தேடுறது புரியுது. அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.. ஆம், அந்த கதாப்பாத்திரமாகவே தேய்ந்திருக்கிறார்..இரண்டு கண்ணிலும்  கட்டெறும்பு கடித்த அன்று ஷூட்டிங் வைக்க வேண்டாம் என்று ஷாம் அவ்வளவு சொல்லியும் இயக்குனர் கேட்காததன் விளைவு படத்தில் தெரிகிறது. பின்னணி இசை அது இந்த படத்திற்கு தேவையான இம்சை. (ஆகாயம் பூமிக்கெல்லாம் பாடல் தவிர)

                                  தமிழ் மக்களின் மீது இயக்குனர் கொண்டுள்ள தார்மீக கோபம் புரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், இந்தப் படத்தில் மக்களை குழப்பும் பிளாக் காமெடிகள் கிடையாது, கூகிள் கூகிள் என்று தமிழ் கலாச்சாரத்தை கொல்லும் பாடல்கள் கிடையாது. இது கதையம்சமோ, சதையம்சமோ உள்ள படமும் கிடையாது. இது எதுவுமே இல்லையேன்னு மக்கள்  ஏமாந்துவிடக்கூடாதென்று இயக்குனர் இரண்டு ட்விஸ்டுகளை வைத்திருக்கிறார்.. இந்த தீபாவளிக்கு இந்தியத் தொலைக்கட்சிகளில் முதல் முறையாக வரும்போது அதை தவறாமல் பார்த்து விடுங்கள் மக்களே..
(மேலே உள்ள படத்தில் இருப்பது ஷாம் இல்லை.. படம் பார்த்து வரும் ஒவ்வொரு தமிழ் ரசிகனும்தான்)


டிஸ்கி: இந்த விமர்சனம் எழுத ஆரம்பித்தவுடன் இந்தப் படத்திற்கு பொருத்தமான படம் தேட கூகிளில் "6" என்று அடித்தேன். என்னுடையது தமிழ் பாண்ட்டில் இருந்ததால் அது "௬" என்று டைப்பியது.. இது இந்த விமர்சனத்திற்கு கிடைத்த பாராட்டின் குறியீடாய் எடுத்துக் கொண்டு முற்றுப் புள்ளி வைக்கிறேன்..



Thursday, September 19, 2013

நய்யாண்டி-டீசர்



                               தனுஷ், நஸ்ரியா இணைந்து நடிக்கும் "வாகை சூடவா" இயக்குனர் சற்குணம் இயக்கும் நய்யாண்டி.. அக்டோபர் வெளியீடாய் வரவிருக்கும் இந்தப் படத்தின் டீசர் இங்கே..


Tuesday, September 17, 2013

பயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 9;  தொலைவு: 12.

மனதை மயக்கும் மயாமி  (அமெரிக்கா)
( ப்ளாரிடா )

பகுதி 1 படிக்க..

                           பாதை மாறி சென்று கொண்டிருந்த காரின் ஸ்டீயரிங்கை நான் எட்டிப் பிடித்து திருப்ப, அதற்குள் ரஜினியும் விழித்துவிட கார் மீண்டும் ரோட்டில் சென்றது. அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில்  நிறுத்த சொல்லிவிட்டு பின்னால் திரும்பி பார்த்த போது இவ்வளவு கலவரத்திலும் கண்ணுறக்கம் கலையாமல் இருந்தனர் இருவரும். பெட்ரோல் பங்க்கில் வண்டியை நிறுத்திய போது பாதி தொலைவு தான் கடந்து வந்துள்ளோம் என தெரிந்தது. அடுத்து வண்டியை நான் ஒட்டுவதென தீர்மானித்து நான்கு ரெட்-புல்களும் தண்ணீர் பாட்டில்களும் வாங்கி நிரப்பிக் கொண்டு பயணம் தொடர்ந்தது.




                           இரவு நேரம் ட்ராபிக் அதிகம் இல்லையென்றாலும் அதிகபட்ச வேகத்திற்கு மேல் சென்றால் அந்நேரத்திலும் காவல் நண்பர்கள் வரும் அபாயம் இருந்ததால் காரின் க்ரூசரில் ( அதிக திருப்பங்கள் இல்லாத ஹைவேயில் செல்லும் போது நாம் ஒரு குறிப்பிட்ட வேகத்தை செட் செய்து விட்டால் ஆக்சலரேட்டரிலிருந்து காலை எடுத்து விடலாம். வேகம் கூட்டவும் குறைக்கவும் ஸ்டியரிங்கிலேயே வசதி இருக்கும். பிரேக் அழுத்தும் வரை வண்டி  அதே வேகத்தில் போய்க்கொண்டிருக்கும்) அதிகபட்ச வேகத்தை செட் செய்துவிட்டு ரகுமானின் ராகமழையில் நனைந்தபடி ஓட்டினேன். காலை நாலரை மணிக்கு மயாமி  வந்து சேர ஏற்கனவே பதிவு செய்திருந்த ஹோட்டலில் உறங்க சென்றோம்.



                              காலையில் பத்து மணி சுமாருக்கு எல்லோரும் தயாராகிவிட மயாமி நோக்கி பயணமானோம். நகர எல்லைக்குள் நுழையும் போதே அய்யனார் சாமி போல் வீற்றிருப்பது டோல் கேட் (Toll Gate ). ஒவ்வொரு சுற்றுலா தளத்துக்கு செல்லும்போதும் இதை கடக்க வேண்டும் என்பதாலும், கட்டபோம்மனே கிராஸ் செய்தாலும் வரி கட்ட வேண்டுமென்பதாலும், இங்கே வசூலிக்கப்படும் சுங்க வரி கொஞ்சம் அதிகம் என்பதாலும் (சுமார் 12 டாலர்கள்.) மக்களின் சலிப்பை காணலாம். அதையும் தாண்டி வழிநெடுக வளர்ந்திருந்த பனை மரங்களின் ஊடே உலகப் புகழ்பெற்ற மயாமி கடற்கரையை அடைந்தோம்.





                             உள்ளே நுழையும் போதே தூரத்தில் தெரிந்த நீலக் கடல் (White Sand  Sea என்பதால் எங்கு நோக்கினும் நீலமயமாக) மற்றும் வண்ணமயமான, "கண்களுக்கு குளிர்ச்சியான" சுற்றுப்புறமும் மனதுக்குள் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. 


 எழில் கொஞ்சும் மயாமி

சைக்கிள் மட்டுமா கவுந்து கிடக்கு?





மண்ணை தின்னும் அமெரிக்க கண்ணன்..

 ஹிப்னாடிசத்தால் தண்ணீர் பாட்டில் காற்றில் நிற்கும் மாயம்!


கடலுக்குள் மோட்டார் ரைட்

க்ரூஸ்,  அக்வா ப்ளோட்

பாரா செய்லிங், 

 கடற்கரையில் வீடு கட்டி!!

மணலுக்குள் புதைந்து விளையாடும் சிறுவர்கள்..


                               மயாமி  கடற்கரை நார்த் பீச்,சவுத் பீச் என இரு கடற்கரைகளாய்  பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பார்த்தது சவுத் பீச்..அடுத்த பதிவில் நார்த் பீச் சென்று பார்ப்போமா?

தொடரும்..



Sunday, September 15, 2013

பதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-4 ( வடபழனியை கலக்கிய வெற்றிவிழா )


                                பதிவர் சந்திப்புக்கு வந்த எல்லோரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டிருக்க, சிலர் செல்போனில் டாக்கிக் கொண்டிருக்க, இன்னும் சிலர் எதிரே இருந்த பழக்கடையிலும், சிலர் புழக்கடையிலும் இருந்தனர். எல்லோரையும் உள்ளே இழுக்க "பதிவுலக SPB" சுரேகா தன் சிம்மக் குரலில் "வானவில்லே.. வானவில்லே வந்ததென்ன இப்போது?" என ஆரம்பித்ததும் விக்ரமன் பட "லாலாலா" வை கேட்டது போல் சந்தோஷத்தில் ஓடி வந்தனர். கவிஞர் மதுமதி நிகழ்ச்சியை துவங்கி வைக்க புலவர் ராமானுசம் ஐயாவும், ரமணி ஐயாவும் தலைமை தாங்க, சுரேகா அவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி முழுவதும் பாங்குடன் (தலைவாவில் வரும் பாங்கு அல்ல)  தொகுத்து வழங்கினர் திருமதி எழில் மற்றும் திருமதி அகிலா அவர்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் குவைத்திலிருந்து மஞ்சுபாஷிணி அக்கா போன் செய்து நிகழ்ச்சி பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். தான் இங்கே வர இயலாவிட்டாலும் அங்கிருந்து நேரடி ஒளிப்பரப்பை காணத் தயாரானார்.


                                   பதிவர்கள் சுய அறிமுகம் செய்துகொள்ள அழைக்கப் பட்டனர்.  (விழாக் குழுவில் இருந்தவர்கள் தவிர்த்து அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர்) பிரபல பதிவர்களையும், பிற பல பதிவர்களையும் இங்கே பார்க்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது. பொதுவாக எல்லோரும் தங்கள் பெயர் மற்றும் தங்கள் வலைதளத்தின் பெயர் கூறிவிட்டு இறங்கினர். ஒரு சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு மூன்று நிமிடங்கள் பேசினர். ஒவ்வொருவருக்கும் பலத்த வரவேற்பு அளித்த சக பதிவர்கள் ராஜி அக்கா மேடை ஏறியதில் இருந்து இறங்கும் வரை கைதட்டல்களை பொழிந்து அவரை திக்குமுக்காட செய்தனர். (இருந்தாலும் ஜாலியா பேசுவாங்கன்னு எதிர்பார்த்தால் கொஞ்சம் செண்டிமெண்ட்டா பேசிட்டாங்க..( ஒரே பீலிங்ஸ் ஆப் சென்னையா போச்சு.)




                                    "பின்னூட்ட சூறாவளி" திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மேடைக்கு வந்த போது அரங்கமே கைதட்டலில் ஆரோ-3D எபெக்டில் அதிர்ந்தது. "காமெடி கும்மி சங்க தீவிரவாதி"  சதீஷ் செல்லத்துரை மேடை ஏறியதும் சொல்லிவைத்தது போல் சங்கத்து உறுப்பினர்கள் அவரை ஜலதொஷத்துடன், சீ.. கரகோஷத்துடன் வரவேற்றனர்.  அவர் தமிழை லைக் பண்ணிய விதத்தை நான் லைக் பண்ணினேன். சங்கத்தை அறிமுகம் செய்து வைக்காததை கண்டிக்கவும் செய்தனர். அந்தக் குறையை பிளாக்கர் நண்பன் அப்துல் பாஷித் மேடை ஏறிய போது தீர்த்து வைத்தார். பலமுறை என் வலைப்பூவிற்கு வந்திருந்த அன்பு நண்பர் குடந்தை சரவணன் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி.


                                     சிவகாசிக்காரன் ராம்குமார், தென்றல் சசிகலா அவர்கள், யாமிதாஷா , ஜோதிஜி, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நக்கீரன் அவர்கள், ரூபக், தமிழ்வாசி பிரகாஷ், சங்கரலிங்கம் அவர்கள், இரா.எட்வின் ஐயா ஆகியோர் அறிமுகப்படுத்தி கொண்டனர்.சுப்புத்தாத்தா மேடையில்  தனக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டையை தான் அமெரிக்காவில் தன் அடையாள அட்டையாக காண்பித்ததை கூறியபோது பெருமிதமாக இருந்தது. அவர் பேசுகையில் அவ்வளவு நேரம் அதிசயமாக இருந்த தமிழக மின்சாரம் அப்போது கட்டானது வேதனைக்குரியது. மேலும் அவரை சந்தித்தும் அளவளாவ முடியாமல் போனது வருத்தமே.. பிறகு எழுத்தாளர் பாமரன் அவர்கள் நகைச்சுவையுடனும், கருத்துச் செறிவுடனும் அருமையான சொற்பொழிவு தந்தார்.


                                   அதன் பிறகு வெளியே வெஜ், நான்-வெஜ் என்று இரு பிரிவுகளாய் மக்கள் உண்ண ஆரம்பித்திருந்தார்கள். நான் "ப்யூர் நான்-வெஜ்" என்பதால் கொஞ்சம் பைனாப்பிள் கேசரி மட்டும் எடுத்துக் கொண்டு பின் டைரக்டாக சிக்கன் பிரியாணி சென்று விட்டேன்.  கடவுள் என்னைக்கும் என் பக்கம்தான் இருக்கார்ங்கிறத அப்போ மறுபடி உணர்ந்தேன். பின்னே முன் இரு தட்டுகளுக்கும் கிடைக்காத லெக் பீஸ் எனக்கு மட்டும் கிடைத்ததே!! உணவு இடைவேளையின் போது ரஞ்சனி அம்மா, "தளிர்" சுரேஷ், பழனி கந்தசாமி அய்யா, கேபிள் சங்கர் அண்ணன், கவிஞர் முத்து நிலவன், ரஹீம் கஸாலி, வால்பையன், பிலாசபி பிரபாகரன்,  ஆகியோரை சந்தித்தேன். ரஞ்சனி அம்மா என் பாடல் நன்றாக இருந்ததென கூறினார்.



                                     பிறகு ஜாக்கி சேகர் அண்ணாவை வாத்தியார் பாலகணேஷ் சார் அறிமுகம் செய்து வைத்தார். ஆரூர் மூனா அண்ணாவைப் போல் இவரிடமும் பேசத் தயங்கி இருந்த என்னிடம் அவர் மிகவும் சகஜமாக பேசினார். அதற்குள் உள்ளே மயிலன் அவர்கள் கவிதை வாசிக்க, குடந்தையார் பாரதிராஜாவை மிமிக்ரி செய்ய, தனித்திறன்கள் அரங்கேறியது. பின் கவிஞர் மதுமதியின் குறும்படம் 90 டிகிரி திரையில் ஒளிர ஆரம்பிக்க, அரங்கமே அமைதியுடன் பார்த்தது. நேர்த்தியான முறையில் எடுக்கப்பட்ட அந்தப் படம் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. பின்னர் கண்மணி குணசேகரன் அவர்களின் பேச்சு தாலாட்டு போல் இருக்க நிறைய பேர் தூங்கியே விட்டார்கள்.. (சீனு, நான் உன்ன சொல்லலே). பிறகு சேட்டைக்காரன் அவர்களின் "மொட்டைத்தலையும் முழங்காலும்", வீடுதிரும்பல் மோகன்குமார் அவர்களின் "வெற்றிக்கோடு", சதீஷ் சங்கவியின் "இதழில் எழுதிய கவிதைகள்", யாமிதாஷா நிஷா அவர்களின் "அவன் ஆண் தேவதை, மற்றும் சுரேகா அவர்களின்  புத்தகமும் ( அடிபட்டதில் மெடுல்லா ஆப்லங்கேட்டாவில் சில செல்கள் டேமேஜ் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். இவர் புத்தகத்தின் பெயர் மற்றும் இன்னும் சில பதிவர்களின் பெயர்களும்
மறந்து போச்சு.. )






                                       விழாக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.  இதற்கிடையில் "தமிழா.. தமிழா" பாடல் பாட ஒரு குழு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். உற்சாகத்துடன் ஒத்துக் கொண்ட சீனு, கடைசி வரை தயக்கத்தோடே  வந்த ரூபக், அடிக்கடி மாயமாய் மறைந்தாலும் மேடைக்கு வந்த ஸ்கூல்பையன், தானே முன்வந்து குறுகிய சமயத்தில் பயிற்சி எடுத்த குடந்தை சரவணன் அவர்கள் ஆகியோருடன் மேடை ஏறியது "Gangs of ஆவிப்பூர்". மனநிறைவுடன் பாடி முடித்தபோது அரங்கில் சொற்ப பேரே இருந்தனர். இதன் பின்னரும்  அரங்கில் வீற்றிருந்த நாலைந்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி சீனு "ஆவேச" உரை நிகழ்த்தி விழாவை சிறப்பாக முடித்து வைத்தார்.  இந்த அழகிய பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த விழாக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்குமிடம் ஏற்பாடு செய்த அகிலா மேடத்திற்கு மீண்டும் ஒரு நன்றி. கோவைப்பதிவர்களை ஒருங்கிணைத்து, போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து அழைத்து வந்த கோவை நேரம் ஜீவாவுக்கும் நன்றிகள் பல.





 தினந்தோறும் அலுவல்கள் ஏராளம்.. நாங்கள் 
அதினிடையே பதிவெழுத மறப்பதில்லை.
குற்றம்குறை எழுத்துப் பிழை தாராளம்- அதை 
ஏற்றுக்கொள்ள திருத்திக்கொள்ள மறுப்பதில்லை 
இணையில்லா இணையத்தின் சாலையிலே- நம் 
கற்பனைக்கு என்றுமந்த வானமே எல்லை..

பாராட்டு ஒன்றே தான் நாங்கள் கேட்கும் வரமே..! 

தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று 
இசையில் கொஞ்சம் நனைவோமே.
ஆங்கிலம் கலவா தமிழாலே - பல
கவிகள், கதைகள் படைப்போமே.

எட்டுத் திக்கும் நம்ம தமிழ் பரவிடவே,
               பாட்டேடுப்போம், பாட்டேடுப்போம், பாடிடுவோம்.. 

                                   
                                     






Friday, September 13, 2013

மூடர் கூடம்- திரை விமர்சனம்

                             

                           ஆங்கிலத்தில் அவுட் ஆப் பாக்ஸ் என்று சொல்லப்படும் ஒரு வித்தியாசமான யுத்தியை ஏந்தி வெளிவந்த சூது கவ்வும் மக்கள் மனதையும் கவ்வியது. மூடர் கூடம் சற்றேறக்குறைய அதே ரகம்தான். இதுபோன்ற படங்களை ஹாலிவுட்டில் நாம் பார்த்திருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவுமே புதுசு. இந்த வித்தை A மற்றும் B  சென்டர் மக்களால் ரசிக்கப்படும். காமெடி, குத்துப்பாட்டு, மாஸ் ஹீரோக்கள் யாருமில்லாத இப்படத்தை   C  சென்டர் மக்கள் ரசிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



                               ஒரு சின்ன விசிட்டிங் கார்டின் பின்புறம் எழுதிவிடக் கூடிய கதை. வாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக துரத்தியடிக்கப்படும் நான்கு பேர் வழக்கம் போல் ஒரு மதுபானக் கடையில் ஒன்று சேர்கிறார்கள். முதலில் செய்யாத தவறுக்காக சிறை சென்ற அனைவரும் தங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற பெரும் தைரியத்தை முதலீடாக கொண்டு ஒரு பைனான்சியரின் வீட்டில் அவர்கள் வெளியூர் சென்ற ஒரு தினம் திருட செல்ல, அவர்களோ தாமதமாக பயணிக்க எண்ண வேறுவழியின்றி அவர்களை வீட்டுக்காவலில் வைத்து பணம் பறிக்க முயல்கிறார்கள். இவர்களிடமிருந்து அந்தக் குடும்பம் தப்பிச் செல்ல முயல்கிறார்கள். அவர்கள் முயற்சி வென்றதா.. கடைசியில் வெற்றி பெறுவது யார் என்பதே மூடர் கூடம்.



                              இரண்டாம் பாதியின் சிறிய தொய்வைத் தவிர சிறப்பான திரைக்கதையுடன் களம் இறங்கியிருக்கிறார் நவீன். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்  மற்றும் ஹீரோவும் இவரே. இவருடன் சென்ட்ராயன், ரஜாஜ்  மற்றும் குபேரன் பக்கபலமாக நடித்திருக்கிறார்கள். வழக்கம்போல் பாண்டிராஜின் எல்லா படங்களிலும் வரும் ஜெயப்ரகாஷ் இதிலும் கலக்குகிறார். ஓவியா ஒப்புக்கு சப்பா..  இவரது  மம்மியாக வரும் அனுபமா ஷாருக், மோகன்லால் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடித்தவர். தன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.



                                ஒவ்வொருவருக்கும் ஒரு முன்கதை ( வீட்டிலிருக்கும் நாய் முதற்கொண்டு) ஆனால் ஒவ்வொரு முன்கதையிலும் ஒரு வித்தியாசத்தை புகுத்தி அத்துணை பிளாஷ்பேக்குகளையும் நாம் ரசிக்கும் வண்ணம் தந்திருப்பது சிறப்பு. இசை புதுமுகம் நடராஜன் சங்கரன், இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை பக்கபலமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் மூடர் கூடம் நிச்சயம் மூடர்களுக்கான படம் அல்ல..


76 / 100




How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...