Friday, September 25, 2015

இனி மெல்லச் சாகும் சினிமா !





            முதல் பட இயக்குனர்களின் படங்களை உதாசீனப் படுத்தும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம். ஒன்று படத்தில் ஏதாவது ஒரு பிரபல நடிகர் அல்லது நடிகை நடித்திருக்க வேண்டும். இல்லையேல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே வெளியூர் திரைப்பட விழாக்களில் வென்றிருக்க வேண்டும். அப்படியே வென்றிருந்தாலும் பெரிய பேனர் யாரவது மார்கெட்டிங் செய்ய வேண்டும். இல்லையேல் அந்த இயக்குனரின் திறமை கண்டுகொள்ளப் படாமலேயே போய்விடும்.

காக்கா முட்டை என்ற படம் வெளிச்சத்திற்கு வந்ததும் இது ஒரு காரணம். அந்தப் படம் வந்த போது நான் என் நண்பருடன் வாதித்தேன். இந்தப் படத்திற்கு நல்ல மார்கெட்டிங் அவசியமில்லை. Word of Mouth ஏ போதுமானது என்றேன். ஆனால் இன்று "குற்றம் கடிதல்" என்ற இந்திய தேசிய விருது பெற்ற படம் வெளியாகி இருக்கிறது. பல விருதுகள் வென்ற போதும்  திரையரங்குகளை வெல்ல முடியவில்லை. மிகவும் சொற்ப திரையரங்குகளிலேயே வெளியாகி இருக்கிறது. அடுத்த வாரம் கூடுதல்  அரங்கம் கிடைக்கும்  வாய்ப்பும் இல்லை.

இன்னும் எத்தனை திரையரங்குகளில் காக்காமுட்டை ஓடுகிறது? இவ்வாறு நல்ல படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் அடுத்த படத்தில் படம் ஒடுவதற்காகவாவது பெரிய ஸ்டார்கள் யாரையாவது வைத்து படம் பண்ண வேண்டியிருக்கிறது. அவர்களுக்காக நல்ல கதையை பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து வெளி வருகையில் கிடைப்பது என்ன என்பது அந்த 'கபாலி'க்கே வெளிச்சம்.


தமிழ்நாட்டின் நிலைமை தான் இப்படி என்றும் கொள்ள முடியாது. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் என்று சொல்லப்பட்ட கேரளாவில் கூட இப்போது த்ரிஷ்யம் பேரறியாதவர் என சொற்ப படங்களே நல்ல கதையம்சத்துடன் வந்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு காரணம் மக்களா? இல்லை இதுதான் நீ பார்த்தாக வேண்டும் என்று எல்லா திரையரங்குகளிலும் குப்பைகளை கொட்டி நிரப்புபவர்களா? காரணம் யாராயினும் அழிவது சினிமா என்பது மட்டுமே நிதர்சனம்!



Wednesday, September 23, 2015

லெக்கின்ஸ் கலாச்சாரம்!




                       பெண்களின் ஆடைகள் பற்றிய சர்ச்சைகள் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதிதல்ல. சேலை கட்டுவது மட்டுமே  தமிழ் கலாச்சாரமென்றிருந்த போது புதிதாய் வந்த சல்வாரும் சுடிதாரும் கூட அணிவது கலாச்சார சீர்கேடாய் அறியப்பட்டது. நைட்டியின் வரவு கூட அவ்வாறே தான். இன்று திரும்பிப் பார்த்தோமானால் நைட்டியோ சுடிதாரோ  அணியாத இல்லத்தரசிகளோ, பள்ளி கல்லூரி செல்லும் பெண்களோ  மிகமிகக் குறைவே. மேற்கத்திய கலாச்சாரமோ, வடக்கத்திய  கலாச்சாரமோ  எதுவாயினும் அது இங்கே பரவத்தான் போகிறது.. இன்னும் சில வருடங்களுக்கு பின் திரும்பிப் பார்க்கையில் லெக்கின்ஸும் நம் கலாச்சார உடையாக மாறியிருக்கவும் கூடும். வேறு ஏதாவது ஒரு உடை கூட வந்திருக்க வாய்ப்புண்டு. 

                       அதிருக்கட்டும்! பெண்கள் ஆபாச உடை அணிகிறார்கள் என அவர்களின் அந்தரங்க பகுதிகளை புகைப்படமெடுத்து அதை வியாபாரமாக்கும் பத்திரிக்கைகள் எவ்வளவு தரம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளவும். ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்ட்டுகளும் பெர்முடாக்களும் அணிந்து கொண்டு ஆண்கள் உலவலாம் என்றால் அந்த சுதந்திரம் நிச்சயம் பெண்களுக்கும் உண்டு. தன்னுடைய உடலுக்கு பொருத்தமான உடையை தேர்ந்தடுத்து அணியும் உரிமை அந்த பெண்ணுக்கு மட்டுமே உள்ளது. அந்தப் பெண்ணை இந்த உடை தான் அணிய வேண்டும், இதெல்லாம் கூடாது என்று கூற சமூகத்திற்கு நிச்சயம் அருகதை கிடையாது. 

                          அதே சமயம் தன் உடல்வாகுக்கு ஏற்ற உடையணிந்து பழகுதல் பெண்களின் கடமையாகும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான உடை தேர்விற்கு உதவுதல் வேண்டும். மேலும் எந்தெந்த இடங்களுக்கு செல்கையில் எந்த மாதிரியான ஆடைகள் அணியலாம் என்பதிலும் நிச்சயம் உதவலாம். தன் காலத்தில் இல்லாத ஆடைகளை தம் பிள்ளைகள் அணிவது கலாச்சார சீர்கேடாய் நினைக்கும் பெற்றோர்கள் நிச்சயம் மாற வேண்டும்.அந்த உடைகள் குறித்த அறிவை வளர்த்துக் கொண்டு பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்கலாம். சமூகப் பொறுப்புணர்வோடு அணியும் எந்த ஆடையும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, அது லெக்கின்ஸாக இருந்தாலும் சரி!


தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு - 2015 (புதுக்கோட்டை)

ந்த 2015ம் ஆண்டுக்கான வலைப்பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் அக்டோபர் 11ல் நிகழ இருக்கிறது. அதற்காக முத்துநிலவன் ஐயா அவர்களின் தலைமையில் புதிய பல திட்டங்களுடன்  வெகு விமரிசையாக அரங்கேற இருக்கிறது. பல பயணங்கள் மற்றும் அலுவல் பாரங்களினால் இதுகுறித்து பதிவிட தாமதமாகிவிட்டது. பதிவர் சந்திப்புக்கென்று உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தளத்தில் சந்திப்பை பற்றிய மேலதிக தகவல்களை காணலாம்.

புதுக்கோட்டை பதிவர் நண்பர்களின் உற்சாகமான ஏற்பாட்டில் ஏராளமான நல்ல மற்றும்  புதிய விஷயங்கள் இம்முறை அரங்கேறப் போகிறது என்பதைக் காண மற்ற பதிவர்கள் போல் நானும் மிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். புதிய விஷயங்களில் முதன்மையானது வலைப் பதிவர்கள் பற்றிய குறிப்புகளுடன் வெளிவர இருக்கும் கையேடு.இந்தக் கையேடு பதிவர் நட்பினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. மிகச் சிறப்பான, வரவேற்கத்தக்க இந்த முயற்சியில் உங்களைப் பற்றிய விவரங்களை இதுவரை அனுப்பவில்லையெனில் உடன் இங்கு விரைந்து அனுப்புங்கள். இந்தப் புத்தகத்திற்கென விளம்பரமும் சேகரித்துக் கொண்டுள்ளார்கள். உள் அட்டை முதல் பக்கத்திற்கு அப்பாதுரையும், கடைசிப் பக்க வெளி அட்டைக்கு விசுஆவ்ஸமும் பங்களித்துள்ளனர். உங்களால் இயன்றதை நீங்களும் செய்தால் சிறப்பு.


iபதிவர் சந்திப்பு மேலும் சிறப்பாக மிளிர தங்களால் ஆன நிதிஉதவி செய்ய விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்யலாம். NAME - MUTHU BASKARAN N,, SB A/c Number - 35154810782, CIF No. - 80731458645, BANK NAME - STATE BANK OF INDIA, PUDUKKOTTAI TOWN BRANCH, BRANCH CODE - 16320, IFSC - SBIN0016320 

இவை யாவற்றையும் விட முக்கியமானது  நமக்காக இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய போட்டிகள். வலைப்பதிவர் திருவிழா - 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்இடம்பெற்றுள்ளன.  ஐந்து தலைப்புகள்! ஒரு போட்டிக்கு பத்தாயிரம் வீதம் இதன் மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000/-  போட்டிவிவரம் :

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு.

வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24 வரி. அழகொளிரும் தலைப்போடு.

இதன் விதிமுறைகள் மற்றும் இன்னபிற மேல்/பீமேல் விவரங்களை அறிந்து கொள்ள இங்கேவிரையவும்.

கட்டுரை, கவிதை என்பதால் நாம் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்று கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று உங்கள் கீபோர்டில் டைப் செய்ய  ஆரம்பியுங்கள்.  ஆல் தி பெஸ்ட்!

Tuesday, September 1, 2015

பிரேமம்


பிரேமம்- மலையாளத் திரையுலகம் எப்போதும் கதை நிறைந்த திரைப்படங்களுக்காகவே பேசப்படும். இந்த பிரேமம் திரைப்படத்தில் திரைக்கதையே அதிகம் பேசப்பட்டது. பிரேமம் என்றால் காதல். காதல் கதையில் இனி புதிதாய் சொல்ல என்ன இருக்கிறது. கதையின் நாயகன் தன் பள்ளி நாட்களில் ஆரம்பித்து, பின் கல்லூரி, வேலை பார்க்குமிடம் என மூன்று கதாநாயகிகளை காதலிக்கிறார். அதை சுவாரஸ்யமாய் சொன்ன விதத்தில் தான் இந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது. இன்றைய நாட்களில் திரைப்படங்கள் இரண்டு வாரங்கள் ஓடுவதே அபூர்வமாகிவிட்டது. இந்தப்படம் நூறு நாட்களை கடந்து ஓடி நல்ல படங்களை நேசிக்கும் ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத்தான் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்திருக்கிறது. இந்தப் படத்தின் விமர்சனம் இங்கே - பிரேமம்(விமர்சனம்) .

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...