Monday, August 30, 2010

இசைப் புயலின் மற்றுமொரு படைப்பு!!


                                              டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளுக்கான கருத்துப் ("Theme") பாடலை அரசின் சார்பில் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்து வெளியிட்டிருக்கிறார்.  இந்த பாடலுக்கு அவர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறார்.. அந்த உழைப்பின் பயனாய் வந்திருக்கும் இந்த பாடலை கேட்டு மகிழுங்கள்.  http://www.youtube.com/watch?v=8EMioRMkAks&feature=related  





.

Friday, August 27, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 1




சிகாகோ- ஒ ஹேர் விமான நிலையம்...


நண்பர்களிடம் விடைபெற்றுவிட்டு, முன்பே பெட்டிகளை செக்-இன் செய்துவிட்டதால் நேராக செக்யுரிட்டி செக்கிங்கிட்கு தன் மனைவியுடன் சென்றான் ரிஷ்விக்.


 "கண்ணு, பாஸ்போர்ட் எந்த பேக்ல வச்சிருக்க".
 "உங்க பேக்-பேக் (Backpack) ல தான் இருக்கு" 
"மூணாவது லேப்டாப்புக்கு ஏதாவது சொல்வாங்களான்னு தெரியலை"


சேக்யுரிட்டியிடம் தன் பாஸ்போர்டை காட்டி விட்டு ஷு, பெல்ட் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களை தனியே எடுத்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்தார்கள். மூன்று லேப்டாப்பையும் தனித்தனியே ஒவ்வொரு பெட்டிகளில் அடுக்கி சோதனை இயந்திரத்தின் உள்ளே தள்ளி விட்டான். பின்னர் சோதனை கூட்டின் வழியே நுழைந்து வெளியே வந்தான். அவன் பின்னே ரேஷ்மாவும் வெளியே வந்தாள். சோதனை இயந்திரம் ஒவ்வொரு பெட்டியாய் வெளியே தள்ள, திடீரென்று அது அலற ஆரம்பித்தது. 


ரிஷ்விக்கின் பேக்கை சோதனையிட்டபடியே அவனிடம் வந்த பணியாளர் தண்ணீர் பாட்டிலை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றார். பெருமூச்சு விட்ட ரிஷ்விக் அவரிடம் ஸாரி சொல்லிவிட்டு தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு நடந்தான். ரேஷ்மா அவன் காதருகே வந்து 


"நான்தான் சொன்னேனே, இவங்க ஒண்ணும் சொல்லலே பாத்தீங்களா?"
"ஆமாண்டா செல்லம்.. நீ சொன்னா எப்பவும் கரெக்டா இருக்கும்"


போர்டிங் பாஸை பார்த்து பிளைட் நிற்குமிடத்தை கண்டறிந்து அந்த இடத்தை அடைந்தார்கள். ஜன்னலோரமாய் வெளியே தெரியும் பிளைட்டை பார்க்க வசதியாக ஓரத்தில் இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தார்கள். 


"இன்னும் நம்ம பிளைட்டுக்கு அரைமணி நேரம் இருக்கு"
" ஊருக்கு போனப்புறம் தினமும் ஒரு முழம் மல்லிப்பூ வாங்கித்தர்றேன்னு சொல்லீருக்கீங்க, ஞாபகம் இருக்கா?"
"இங்கயே ஆரம்பிச்சுட்டியா. அதான் சரின்னு சொன்னேனே டா!"
"பேரூர் பட்டீஸ்வரன் கோவிலுக்கு போகணும்"
"சரி, சரி .. எல்லா எடத்துக்கும் போலாம்"


இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இவர்களின் இருக்கைக்கு அருகில் அமர்ந்தாள். அவள் கண்களில் ஒரு மெல்லிய சோகம் இழையோடியது. ரேஷ்மா அந்த பெண்மணியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே சமயம் ரிஷ்விக் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு லுப்தான்சா விமானத்தை பார்த்தான். தன்னையும் அறியாமல் லாவண்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.


யார் அந்த லாவண்யா?   -- தொடரும் ...


.

Sunday, August 22, 2010

அப்பாவுக்கு வயது அறுபது!!!



அப்பா!!

அன்று தொடங்கி இன்று வரை எதையும் 
கேட்டதில்லை நேரிடையாக!!
அம்மாவின் மூலமாகவோ, தங்கையின் வாயிலாகவோ 
என் தேவைகள் நிறைவேறியது!!

பயமா, மரியாதையா எதுவென்னை தடுத்ததென்று
இதுவரை விளங்கவில்லை!!
இப்போதும் இணையத்தில் வலைப்பதிவின் மூலமாக 
வாழ்த்த விழைகிறேன்!!

நீங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதை நிச்சயம் 
பூப்பாதையல்ல என்பதை அறிவேன்!
உம் குருதியை வியர்வையாக்கி
நாங்கள் உயர்ந்திட பாடுபட்டாய் !!

காலை முதல் மாலை வரை 
நா வரள பாடம் சொல்லி, தாகம் 
எடுத்த போதும் தேநீரை அருந்தாமல் 
சிக்கனமாய் சேமித்து செல்வத்தை எமக்களித்தாய்!!

உம் கடும் சொற்களுக்காய் பலமுறை 
கண்ணீர் சிந்தியிருக்கிறேன்.. ஆனால் 
அவை ஒவ்வொன்றிலிருந்தும் நான் 
கற்ற பாடம் இன்று உணர்கின்றேன்!!

இன்று உமக்கு வயது அறுபது - அந்நிய 
தேசத்தில் சூழ்நிலைக் கைதியாய் சிக்கிக் கொண்டாலும்
என் பணிவான பாசத்தை உங்கள் பாதத்தில் 
கண்ணீருடன் (ஆனந்தக் கண்ணீர்) சமர்ப்பிக்கிறேன்!!




Friday, August 20, 2010

நான் மகான் அல்ல!! - விமர்சனம்


                   கார்த்தி ஆக்க்ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ள படம். அவர் வரும் முதல் காட்சியில் பன்னீர் தெளிக்கிறார். பின்னர் படம் நெடுக இரத்தத்தை தெளித்திருக்கிறார்கள்.



                     தோழியின் திருமண விழாவில் காஜல் அகர்வாலை பார்த்ததும் காதல் கொள்கிறார். இருவருக்கும் காதல் வருகிறது. கார்த்தி காஜல் அகர்வாலின் தந்தையை பார்த்து திருமணம் பேசுகிறார். அவரும் ஆறு மாதத்திற்குள் ஒரு வேலையோடு வந்து பெண் கேட்கும்படி சொல்கிறார். ஆமா, இதிலெங்கே ஆக்க்ஷன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இது படத்தின் முதல் பாதி மட்டுமே!! 

                     இரண்டாம் பாதியில் ஐந்து இளைஞர்கள் (காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ்) கொண்ட கும்பல் ஒன்று ஒரு பெண்ணை கொன்று துண்டு துண்டாய் வெட்டி திசைக்கொன்றாய் எறிகிறார்கள். கொலைக்கு சாட்சியாய் இருக்கும் கார்த்தியின் தந்தையை கொல்ல முயற்சித்து இரண்டாம் முறை வெற்றியும் காண்கின்றனர். 

                      தந்தை இறந்ததும் காதல், காமெடி இரண்டையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு அந்த கும்பலை பழி(லி) வாங்க கிளம்பி விடுகிறார். பெரிய தாதாக்களையே அசாதாரணமாக கொல்லும் அவர்களை புழுவை நசுக்குவது போல் நசுக்கி உயுருடன் புதைக்கிறார். டைரக்டர் பெருமையுடன் தன் பெயரை போடுகிறார். (என்ன கொடுமை சார் இது!!)

                     கார்த்தியின் நான்காவது படம். பல இடங்களில் சூர்யாவை நினைவு படுத்தினாலும் காமெடியில் கலக்குகிறார். குறிப்பாக வங்கிக் கடனை வசூல் பண்ணச் சென்ற இடத்தில் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கட் மேட்ச் பார்ப்பது. பின் மேட்சில் இந்தியா தோற்றதும் வசூல் செய்யாமல் திரும்புவதும் அருமை. அவருடைய நண்பனாக வரும் ( "வெண்ணிலா கபடிக்குழு" புகழ்)  "பரோட்டா" சூரி முத்திரை பதிக்கிறார். காஜல் அகர்வாலுக்கு சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் எதுவும் இல்லை. 

                       இசை யுவன்.. ரீ-ரெக்கார்டிங்கில் கலக்கி இருக்கிறார். டைரக்டர் நல்ல ஒரு விஷயத்தை சொல்ல நினைத்து கொஞ்சம் அளவுக்கு அதிகமான வன்முறையை திணித்திருக்கிறார். சாப்டா ஒரு வெண்ணிலா கபடி குழு கொடுத்த சுசீந்திரன் படமா இது.. 

                       அது சரி, படத்துக்கு இடையில் அடுத்த வருடம் வெளியாகவிருக்கும் மங்காத்தா பட டீசர் ட்ரைலர் காண வந்த என் போன்ற "தல" ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான்!!!



Thursday, August 19, 2010

இதயம்


றுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள் 
வியந்து போனார்கள் - ஏன் தெரியுமா?
என்னுள் இதயமே இல்லை!!

வர்களுக்குத் தெரியுமா- அது 
உன்னிடம் உள்ளதென்று ?



Friday, August 13, 2010

சர்தார்ஜி ஜோக்ஸ்- 1



சர்தார்ஜி பற்றிய நகைச்சுவை வட இந்தியாவில் மிகப் பிரபலம். எனக்குப் பிடித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.


சென்னை ஏர்போர்ட்டில் பயணச்சீட்டு வழங்குமிடத்தில்...

சர்தார்ஜி:       சென்னையிலிருந்து மும்பை செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?
பணிப்பெண்:  ஒரு நிமிடம் ( என்று கூறிவிட்டு தன் கணிப்பொறியில் நேரத்தைத்  தேடினாள்)
சர்தார்ஜி:       மிக்க நன்றி !! (என்று அந்த இடத்தை விட்டு அகன்றார்)


துணிக்கடையில்..

சர்தார்ஜி:        எனது கணிப்பொறிக்கு வைக்க ஒரு திரைச்சீலை(Curtain) கிடைக்குமா? நான் ஏற்கனவே ஜன்னல்களை (Windows) வாங்கிவிட்டேன்.


வீட்டில் தன் மகனுக்கு கணக்கு சொல்லிக் கொடுக்கும் போது...
(அருகில் ஒரு நண்பரும் இருக்கிறார்)

சர்தார்ஜி:      பத்திலிருந்து அஞ்சு போனா எவ்வளவு?
மகன்:             நாலு!
சர்தார்ஜி:      சபாஷ்!! (என்று கூறி ஒரு இனிப்பை பரிசளிக்கிறார்!)
நண்பர் : (சற்றே அதிர்ந்து) நாலு தப்பான விடை ஆச்சே.. அதுக்கு ஏன் பரிசளிக்கறீங்க?
சர்தார்ஜி:      இன்னைக்கு பரவால்லே!! நேற்று அவன் மூணுன்னு இல்லே சொன்னான்!!


சர்தார்ஜிகள் புத்திசாலிகள் என்று நிரூபிப்பதற்காக ஒரு பிரதிநிதியை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியிருந்தார்கள். மற்ற சர்தார்ஜிகள் சுற்றி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.

தேர்வாளர்:  உங்க பேர் என்ன?


சர்தார்ஜி:    (மிகவும் யோசித்து) ஜஸ்வந்த் சிங்!

தேர்வாளர்:  உங்க தந்தை பேர் என்ன?


சர்தார்ஜி:   ( வியர்த்து விறுவிறுத்து) ம.. ம.. மணிந்தர் சிங்!

(சுற்றியிருந்த சர்தார்ஜிக்கள் ஒரே குரலில் தேரவாளரிடம்)
சர்தார்ஜிக்கள்: கடினமான கேள்விகள் வேண்டாம்!! எளிதாக இருக்கட்டும்!!

தேர்வாளர்: (தலையில் அடித்துக் கொண்டே) ரெண்டும் ரெண்டும் எவ்வளவு!!

சர்தார்ஜி:   (காகிதத்தில் எதையோ பெருக்கி பார்த்து விட்டு) ஒன்று!!

(தேர்வாளர் இல்லை என்று தலையாட்டவே..)
சர்தார்ஜிக்கள்:(ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!

சர்தார்ஜி:   (இந்த முறை நீண்ட யோசனைக்கு பின்) மூன்று!!

சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!

சர்தார்ஜி:    நாலு!

சர்தார்ஜிக்கள்: (ஒரே குரலில்) அவனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தர வேண்டும்!!


Saturday, August 7, 2010

பெண்(Pen)ணீர் துளிகள்!!


யிரற்ற பொருட்கள் உணர்வுகளை
வெளிப்படுத்தாது என்ற விஞ்ஞானம் பொய்த்துப் போனது...
பெண்ணே, நம் பிரிவின் பொருட்டு என் பேனா
கண்ணீர் சிந்திய போது!!

.

Friday, August 6, 2010

காதல் எனும் கானல் நீர்!!


அச்சில் வார்த்த அழகுப் பதுமையே! - என் நெஞ்சில்
முள் தைத்து சென்றதென்னவோ?

கனவில் வரும் உனக்காக - நினைவில்
நான் வடித்தேன் கவிதைகளை
நீயோ கனவில் விளைந்த கவிதைகளாய்
கலைந்து போனாயே!

காற்றில் வரும் சுகந்தங்களையெல்லாம் - உன்
நினைவுகளாய் எண்ணியிருந்தேன் நான்!
நீயோ காற்றில் கலைந்த நினைவுகளாய்
மறைந்து போனாயே!

எனக்குப் பிடிக்கும் என்பதற்காக வள்ளுவனின்
வரிகளையும், பாரதியின் கவிகளையும் நீ ரசித்தாய்!!
இப்போதும் அந்த கவிகளையும் வரிகளையும் நான் படிக்கின்றேன்
எனக்குப் பிடிக்கும் என்பதற்காக அல்ல! - நீ ரசித்தாய் என்பதற்காக!!

உனை "என்னவளாய்" நான் கடைசியாய்
சந்தித்த அந்த நாளில்
என் விழியோரம் பூத்திருந்த கண்ணீரை - உன்
பூவிரலால் துடைத்து விட்டாயே!

அது போதும் பெண்ணே எனது
ஆயுள் முழுமைக்கும்!
அந்த ஸ்பரிசம் ஒன்றே போதும் பெண்ணே
எனதாயுள் முழுமைக்கும்!!

அந்த "கடைசி" நாளில் நீ சொன்ன வார்த்தைகள்
உனக்கு நினைவுள்ளதா?

நான் சந்தோசமாக இருப்பதுதான் உன்
சந்தோசம் என்றாயே.. - இப்போது
நான் சந்தோசமாக இருக்கிறேன் பெண்ணே!
நீ சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதற்காக!!


.

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...