Wednesday, November 28, 2012

திருமண வாழ்த்துகள்..!



விழிகளில் துவங்கி மனங்களில் நிறையும் காதல்..
ஊடலில் துவங்கி உவகையில் நிறையும் நேசம்..
மேளத்தில் துவங்கி மாலையில் நிறையும் திருமணம்..
ஆசையில் துவங்கி அன்பினில் நிறையும் உறவு..
சிரிப்பினில் துவங்கி சேட்டையில்  நிறையும் மழலை..




                   இவை அனைத்தும் பெற்று மணமக்கள் சிறப்புடன் வாழ என் வாழ்த்துகள்..! இந்த பதிவைப்  படிக்கும் என் வாசகர்களின் வாழ்த்துகளும் அவர்களுக்கு உரித்தாகட்டும்..!





                        என்னுடைய எழுத்துகளை முதன் முதலாக அச்சில் ஏற்றி என் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் கொடுத்த தோழி அனுராதா அவர்களுக்கு என் உளமார்ந்த  நன்றிகள் பல..!
                            

Monday, November 26, 2012

தேடல்கள்..!

                             தேடல்கள் என்பது மனிதப்பிறவி ஆற்றவேண்டிய முக்கிய கடமைகளுள் ஒன்று. என் தேடல்கள் என் ஐந்தாம் பிராயத்தில் தொடங்கியதாக ஞாபகம். என் தேடல்களை வரிசைப்படுத்தியபோது மிக முக்கியமானதாக மூன்று தேடல்கள் தோன்றியது..
                             

                               முதலாவது எதை தேட வேண்டும் என்ற தேடல். இரண்டாவது என் முதல் தேடலுக்கான தூண்டுகோல் எது என்ற தேடல். மூன்றாவதாக இந்த தேடலின் பயன் என்ன? நன்மை தீமையென்ன என்ற தேடல். என்னுடைய இந்த மூன்று தேடலுக்குமே இன்னமும் சரியானதொரு விடை கிடைத்தபாடில்லை. அந்த விடைக்கான தேடலே என் அடுத்த தேடலாய் அமைந்துவிட்டது.


                             இந்த தேடலின் அளவு பெரியதா, சிறியதா என்றொரு தேடல். தேடல்கள் வெற்றி பெறுமா  தோற்றுப்போகுமோ என்றொரு தேடல். தேடல் நட்பை வளர்க்குமா, எதிர்ப்பைத் தூண்டுமா என்டுமொரு தேடல்.




                                   நட்பு என்பது என்ன என்றொரு தேடல். அது அவசியமா இல்லையா என்றொரு தேடல். அவசியமென்றால் அதன் அளவுகோல் என்ன? அதன் எல்லை எதுவரை? பெற்றோரின் பாசத்தை விட பெரியதாக இருக்க வேண்டுமா, சிறியதாக இருக்க வேண்டுமா? என்றொரு தேடல்  நட்பை அருகிலிருந்து வலிமைமிக்க வார்த்தைகளால் வளர்க்க வேண்டுமா, இல்லை தொலைவிலிருந்தும் மெல்லிய உணர்வுகள் கொண்டு வளர்க்க முடியுமா என்றொரு தேடல். நட்பு என்பது மிகப்பெரிய விஷயமென்று சிலர் கூறியபோது  என் தேடல் இன்னும் தீவிரப்பட்டுப் போனது. என்னைப் பொருத்தவரை என் தேடலின் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது மற்றவர்கள் சொல்வது போல் நட்பு ஒன்றும் பெரிய விஷயமல்ல.. மிகவும் சிறியதுதான்.. ஒரு அணுவைப்போல், ஒரு திருக்குறள் போல்..!



                                    ஹார்மோன்கள் மிகுதியால் உண்டாகும் காதல் எனும் கானல்நீர் தேவை தானா என்றொரு தேடல். வெறும் கிளர்ச்சியை தூண்டி, மாயபிம்பம் காட்டி மனிதனை போதையில் சிக்க வைக்கும் திரைப்படங்கள் தேவைதானா என்றொரு தேடல். தனிமனித சுயநலத்துக்காக ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றும் இந்த அரசியல் தேவைதானா என்றொரு தேடல்.



                                  தேடல்கள் தேவைகளை தூண்டிவிடுகிறதா என்றொரு தேடல். இல்லை தேவைகளுக்காக தேடல் செய்கிறார்களா என்றொரு தேடல். தேவைகளுக்காக தேடல் செய்பவர்கள் தேவை தீர்ந்ததும் தேடலை நிறுத்தி விடுகிறார்களா? அதில் திருப்தி கொள்கின்றனரா என்றொரு தேடல். தேடல்கள் தேவைகளை தூண்டிவிடுகிறதேனில் அது முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கிறதா, இல்லை முரண்பட்ட ஒரு சமூகத்தை உருவாக்குகிறதா என்றொரு தேடல்.



                                  தீவிரவாதம் என்பது தேவைதானா என்றொரு தேடல். பொதுவாய்ப் பார்த்தால் தவறாய்த் தோன்றும் இத்தீவிர'வாதம்' ஒரு தீவிரவாதியின் பார்வையில் பார்த்தால் சரியாய் தோன்றுகிறதே..! இந்த தொலைநோக்குப் பார்வை சரியா, தவறா  என்றொரு தேடல். மதங்கள் என்பது அவசியம் தானா என்றொரு தேடல். கடவுள் யாரென்ற தேடல் ஒருபுறமிருக்க இந்த மதங்களின் பெயரால் உயிர்கள் மடிவது நியாயம்தானா என்றொரு தேடல்.
                             
                                      தேடல்களின் பிறப்பிடமே எதுவென்று தெரியாத போது அந்த தேடல்களைத் தேடித் தேடி தொலைந்து போவது நம் தலைவிதியாகிவிட்ட பின்பு ஒரேயொரு விஷயம் மட்டும் எல்லோருடைய மனதிலும் ஒருமித்து இருக்கிறது. 'அது' , அமெரிக்காவில் 9/11 இலும் இந்தியாவில் 26/11 லும் நடந்த கோரச் சம்பவங்களுக்கு பிறகு இரவு பகலாக  கண்விழித்துப் பணியாற்றிய மீட்ப்பு பணியாளர்களிடம் இருந்த, உற்றாரில்லை உறவினரில்லை, நண்பருமில்லை யாரோ முகம் தெரியாத மனிதர்கள் தீயில் கருகிச் செத்த பொது அந்த அப்பாவி மக்களுக்காக கண்ணீர்விட்ட உலக மக்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த மனிதாபிமானம்தான் அது .


                                      மனிதம் காப்போம்..! உயிர்வதை தடுப்போம்..! என்பதையே என் தேடலின் தீர்வாய்ச் சமர்ப்பிக்கிறேன்..!







Wednesday, November 21, 2012

ரஜினி படம் பாக்க ரெடியா??

                     'கோச்சடையான்'  இப்போதைக்கு இல்லேன்னு சொல்லிட்டாலும், இந்த வருஷம் ரஜினி படமே இல்லேன்னு வருத்தப்படும் ரசிகர்களுக்கு இதனால் சொல்லிக் கொள்வது என்னன்னா, வருகிற 12.12.12 அன்னைக்கு (ஆமாங்க சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் அன்னைக்கு, டேட்  எவ்ளோ சூப்பர் ஆ இருக்கு பாருங்க) நம்ம கொஞ்ச நாள் (?!!) முன்னாடி பார்த்த சிவாஜி இப்போ 3டி  தொழில் நுட்பத்துடன் வருதுங்க..




                       சில பல காட்சிகளை நீளம் கருதி வெட்டிட்டாங்க (குறிப்பா பழகலாம் வாங்க, அங்கவை சங்கவை காமெடிகள்,  இரண்டு சண்டைக் காட்சிகள் போன்றவற்றை கட் பண்ணிடாங்க..)  பாடல்கள்ள 3டி சங்கதிகள் அதிகம் புகுத்த வாய்ப்பு இருக்கறதால எல்லா பாடல்களையும் நாம் காணலாம்.


                        சூப்பர் ஸ்டார் காச  சுண்டி விடுற சீனெல்லாம் தியேட்டர்ல விசில் பறக்கப் போவது உறுதி. ஒயின் பழசாக பழசாகத் தான் சுவை அதிகம்னு சொல்லுவாங்க. நம்ம ரஜினி படமும் அந்த மாதிரி தாங்க. எது எப்படியோ,  "சிங்கம் மறுபடி சிங்கள்" ஆ வருது.. பாக்க நீங்க ரெடியா?

நன்றி: MovieCrow 

Thursday, November 15, 2012

பயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)


பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 2;  தொலைவு: 3.

மை டியர் மலேசியா 
(பத்து மலை)





                          விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் பத்து மலை (அ) பத்து குகைக் கோவிலை அடைந்தேன். பழத்திற்காக தாய் தந்தையரிடம் கோபித்துக் கொண்டு பாலமுருகன் பழனிக்குச் சென்றதாய் கேள்விப் பட்டிருக்கிறோம்.. ஆனால் அவர் எப்போது மலேசியாவிற்கு வந்தார் என்று யாருக்காவது தெரியுமா?








               400 வருடங்களுக்கு முன்பு இந்த பத்து மலை பழங்குடியினர் வசிக்கும் இருப்பிடங்களாய் இருந்திருக்கிறது. 1890 இல் தம்புசாமிப்பிள்ளை என்பவர் இந்த குகையின் நுழைவாயில் வேல் வடிவில் இருப்பதைப் பார்த்து இங்கு முருகனுக்கு இந்த கோவிலை நிர்மாணித்தார். (இவர்தான் கோலாலம்பூரில் உள்ள மகாமாரியம்மன் கோவிலையும் நிர்மாணம் செய்திருக்கிறார்)



                சுமார் 140 அடி(42.7 மீ) உயரம் கொண்ட இந்த முருகர் சிலைதான் இன்றுவரை உலகிலேயே மிக உயரமான ஹிந்து கடவுள் சிலையாக இருக்கிறது. 2006 – ஜனவரி மாதம் பொதுமக்கள் தரிசிப்பதற்காக திறக்கப்பட்ட இந்த சிலையை வடிவமைக்க 24 மில்லியன் ரூபாய் செலவானதாம். தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 300 லிட்டர் தங்க பெயின்ட் கொண்டு இந்த ஜொலிக்கும் முருகனுக்கு வண்ணம் கொடுக்கப்பட்டதாம்.மேலும் சிலையை வடிவமைக்க சுமார் மூன்று ஆண்டுகள் ஆனதாம்..



               குகைக் கோவில்- இந்த மலையில் மூன்று முக்கிய குகைகளும் ஒரு சிறிய குகையும் உள்ளன. அவற்றில் இந்த கோவில் குகை ( Temple Cave ) மிகப் பெரியது.தரையிலிருந்து நூறு மீட்டர்  உயரத்தில் அமைந்துள்ள இந்த குகைக்கு செல்ல 272 படிக்கட்டுகள் ஏற வேண்டும். ஒவ்வோர் வருடமும் தைப்பூசத் திருவிழாவிற்கு கூடும் அன்பர்களின் எண்ணிக்கை ஏராளம். 




                அடிவாரத்தில் அமைந்துள்ள Art Gallery Cave மற்றும் Museum Cave ஹிந்து கடவுள்களின் சிலைகளும், ஓவியங்களும் நிறைந்தது. மலையின் இடது புறத்தில் ராமாயணக் குகை ஒன்று உள்ளது. ராமரின் புகழ் சொல்லும் இந்த குகைக்கு போகும் வழியில் ஐம்பது அடி உயரமுள்ள ஒரு ஆஞ்சிநேயர் சிலையும் உள்ளது..



                  குகைகளுக்குச் செல்லும் வழியில் ஏராளமான புறாக்கூட்டங்களையும், குரங்குகளையும் காணலாம். பல்வேறு உணவகங்களும், இளநீர் கடைகளும் சுற்றிலும் உள்ளதைக் காணலாம். இந்த ஸ்தலத்திற்கு மலேசியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாட்டவரும் வந்து செல்வதால் ஆண்டு முழுவதும் திருவிழாக் கோலம பூண்டிருக்கும். பக்தி, கோவில்கள், குகைக்களுக்காக மட்டுமல்லாமல் ஆஜானபாகுவாக நின்றிருக்கும் அழகன் முருகனைக் காண்பதற்காகவாவது ஒருமுறை இங்கு வந்து செல்ல வேண்டும்..!


             பத்து மலையிலிருந்து புறப்பட்டு நேராகச் சென்றது கெந்திங் ஹைலண்ட்ஸ்.. நிறைய இயற்கை/ செயற்கைக் காட்சிகள் நிறைந்த ஒரு முக்கியமான இடம் அது. எல்லாரும் புகைப்படக் கருவிகளுடன் தயாரா இருங்க.. 

பயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)
பயணத்தின் சுவடுகள்-1(மை டியர் மலேசியா)  

Tuesday, November 13, 2012

துப்பாக்கி- திரை விமர்சனம்..


                
          இதோ இப்போ வெடிக்குது, அப்போ வெடிக்குதுன்னு ஒரு வாரமா டென்சன் கிளப்பிகிட்டிருந்த துப்பாக்கி ஒரு வழியா தீபாவளிக்கு வெடிச்சிருச்சு.. நம்ம இளைய தளபதி விஜய், காஜல் அழகுவால் சாரி, அகர்வால் நடிச்சு முருகதாஸ் அண்ணன் இயக்கி வெளிவந்திருக்கும் படம். 



          ஹீரோ விஜய் - ஹேர்ஸ்டைல்  மாற்றம் (மிலிட்டரி கட்), கதைக்கு தேவையான நடிப்பை மட்டும் கொடுத்திருப்பது, கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் உடல் மொழி மற்றும் உச்சரிப்பையும் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்தது.. ( குறிப்பாக பன்ச்  டயலாக் எதுவும் இல்லாதது ஆறுதல்) விஜயின் சிறந்த பத்து படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். 
           
           விஜய்க்கு சரிசமமாக நடித்திருப்பது வில்லன் வித்யுத் ஜமால் (பில்லா ல டிமித்ரியா வந்தாரே, அவரே தான்.) பொருத்தமான கதாப்பாத்திரம். மிரட்டலான நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெயிக்கிறார்.. ஆனால் நம் மனதில்  நிற்பதென்னவோ வித்யுத் தான்..! 


             காஜல் அகர்வால், அழகுப் பதுமை வேடம். அம்மணி அட்டகாசமாய் வந்து போகிறார். எல்லோருக்கும் இது போல் ஒரு காதலி இருந்தால் நன்றாக இருக்குமென்ற ஆவலைத் தூண்டிப் போகிறார். (மீட் மை கேர்ள் ப்ரண்டு பாடலில் நம்மை கிறங்கடிக்கிறார்..) ஜெயராம் சர்ப்ரைஸ் பேக்கேஜ்..  சத்யன் இடையிடையே கிச்சு கிச்சு மூட்டுகிறார்..  கடைசியில் கண்கலங்க வைக்கிறார்.

             ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். ஆமாங்க மணிரத்னம் படங்களுக்கு பண்ணிட்டு இருந்தாரே அவரே தான். ஒவ்வோர் பிரேமிலும் ஒளி ஓவியத்தை காமிரா எனும் தூரிகை கொண்டு தீட்டி இருக்கிறார். (சார், உங்களுக்கு டைரக்ஷன் எல்லாம் வேண்டாம்.. உங்க ஒளிச் சேவை தமிழ் நாட்டுக்குத் தேவை.)


              மும்பை தொடர் குண்டுவெடிப்பை  பற்றிய கதை என்றாலும், காதல், நட்பு, தேசம், தியாகம், வில்லனின் வியுகத்தை உடைப்பது, ஹீரோவின் அடுத்த செயலை வில்லன் கணிப்பது.. வில்லனுக்கு தன்  தங்கையையே பணயக் கைதியாக அனுப்பி வைப்பது என காட்சிக்கு காட்சி திருப்பங்கள். சரி, கதைக்கு வருவோம்.. விடுமுறைக்கு வரும் ராணுவ வீரர் விஜய்,  மும்பையில் பரவியிருக்கும் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கி அவர்களின் திட்டத்தை  தவிடுபொடியாக்கி அதன் வேர் வரை வெட்டி எறிவதே கதை.. 



          ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.. ஒரு பாடலை ஆண்ட்ரியாவுடன் விஜயே பாடியிருப்பது சிறப்பு ( நல்லவேளை இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் என்ற வாசகத்தை காணோம்). ரீ-ரெக்கார்டிங் கலக்கல் (லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டிருக்கீங்க பாஸு..!)


          ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியிருக்கும் தேசப்பற்றிற்காக  இயக்குனருக்கு ஒரு சல்யூட். தெளிவான கதை, அளவான வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சியமைப்புகள், சண்டைக்காட்சிகள். துப்பாக்கி பர்பெக்ட் என்டர்டைனர் என்பதில் துளியும் ஐயமில்லை..       

80 / 100

டிஸ்கி – முருகதாஸ் சார், எல்லாம் சரி.. எதுக்கு சார் இந்த டைட்டிலே வேணும்னு கட்டிபுடுச்சு உருண்டு, சண்டை போட்டு வாங்கனிங்க? ஒரு பட்டாசுன்னு வச்சுருக்கலாம், சரவெடின்னு வச்சுருக்கலாம்.. கொஞ்சம் டவுட்ட கிளியர் பண்றீங்களா? 


Sunday, November 11, 2012

தீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்



                          இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய   ஒரு சிறிய அலசல்.. நவம்பர் 9 ஆம் தேதியே வெளியாகும் என்று கூறப்பட்ட சில படங்களும் பல்வேறு காரணங்களால் தாமதமாக தீபாவளியன்று தான் வெளியாகிறது..


                              துப்பாக்கி - தீபாவளித் திரைப்படங்களில் அதிக பொருட் செலவில் உருவானதும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் வெளிவர இருக்கும் படம் இது. விஜய் நண்பன்  திரைப்படத்திற்குப் பின் நடித்து வெளிவர இருக்கும் படம். ட்ரைலர் நமக்கு இது ஆக்க்ஷன் விருந்தாக இருக்கும் என்பதை சொல்கிறது..





                             போடா போடி - சிம்பு, வரு சரத்குமார் நடித்து வெளிவர இருக்கும் இந்த படத்தில் நட்பு, காதல் செண்டிமெண்ட் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். பாடல்கள் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதால்  இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது..


                            அம்மாவின் கைபேசி- அழகி, ஒன்பது ருபாய் நோட்டு எனும் அழகிய காவியங்களை கொடுத்த தங்கர் பச்சானின் இயக்கத்தில் சாந்தனுவின்  மாறுபட்ட தோற்றத்தில் வெளிவர இருக்கும் குறைந்த பட்ஜெட் படம்.


                           ஜப் தக் ஹை  ஜான் -  பாலிவுட் பாஷா ஷாருக் கான் நடித்து வெளிவர இருக்கும் ஹிந்திப் படம் இது. ஏ. ஆர். ரகுமான் இசை என்பதால் படத்திற்கு வட இந்தியாவில் மட்டுமல்லாது தமிழ் நாட்டிலும் கூட்டம் இருக்கும்.



                            சன்  ஆப் சர்தார் - காஜோலின்  கணவர் அஜய் தேவ்கன், சோனாக்ஷி  சின்ஹா  நடித்து வெளிவர இருக்கும் இந்தப் படம் ஒரு நகைச்சுவை விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..


                            நீர்ப்பறவை - தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் இது. விஷ்ணு, சுனைனா நடித்திருக்கும் இந்தப் படத்தில் வைரமுத்துவின் வைர வரிகள் பலம் சேர்க்கின்றது. பெரிய திரைப்படங்கள் வெளியாவதால் இந்த படம் ஒரு வாரம் கழித்து வெளியாகலாம் ..



                              அப்ப, நீங்க எந்த படம் பாக்க போறீங்க??

Saturday, November 10, 2012

சமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)





               இசையின் மேல கொண்ட அதீத ஆர்வத்தால் அவ்வப்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலப் பாடல்களையும் கேட்பதுண்டு.. அப்படி சமீபத்தில் புதிதாக வீட்டிற்கு ஒரு “Home Theater” வாங்கி வந்தேன். அப்போது அதை இன்ஸ்டால் செய்ய வந்த பணியாளிடம் ஏதாவது வீடியோ உள்ளதா என கேட்ட போது சில பாடல்களை என் ஹார்டு டிரைவில் பதிவு செய்து கொடுத்தான்.

            

                      அந்த பாடல்களில் ஒன்று “YUVVH” என்ற ஆல்பத்திலிருந்த “நெஞ்சோடு சேர்த்து” எனும் இந்த மலையாளப் பாடல்.. முதல் முறை கேட்ட போதே மனதை என்னவோ செய்தது.. அந்த பாடல் முழுமையாக இல்லாததால் இணையத்தில் தேடிய போது “YOU TUBE” ல் கிடைத்தது..





                      இதுவரை சுமார் ஐம்பது முறையாவது அந்தப் பாட்டை கேட்டிருப்பேன். சற்றும் சலிக்கவில்லை. அந்த பாடல் இது போல் துவங்கும்

நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்,
பாட்டிண்ட ஈனம் நீயானு

என காதல் ரசம் சொட்டச் சொட்ட இயற்றப்பட்ட இந்த பாட்டிற்கு இசையமைத்திருப்பது ஸ்ரீஜித்- சச்சின் எனும் இருவர். (இவர்கள் இப்போது ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைப்பதாய் கேள்வி). பாடலைப் பாடியவர் “என்னமோ ஏதோ” புகழ் ஆலாப் ராஜு. இந்த பாடல் கேரளாவில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.. அழகான நாயகி, அவள் அழகையும் மீறி ரசிக்க வைக்கும் நாயகனின் நடிப்பு, சிறப்பான ஆக்கம் இப்படி எல்லாம் நிறைந்த இந்த வீடியோ உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

Thursday, November 8, 2012

பயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)


பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 1;  தொலைவு: 2.


மை டியர் மலேசியா 


                          விமானத்தில் அருகில் அமர்ந்திருந்த ஒரு நபர், இடையிடையே அளவளாவிக் கொண்டே (?!!) வந்தார். அவர் பேசியதில் இருந்து அவர் மலேசியாவில் கடந்த ஆறு வருடங்களாய் இருப்பதையும், அடிக்கடி இந்தியா சென்று வருவதையும் தெரிந்து கொண்டேன். மேலும் அவர் எலக்ட்ரானிக் துறையில் பணிபுரிவதாயும் தெரிவித்தார்.. விமானம் தரையிறங்க எத்தனித்தவுடன் பைலட் பெல்டை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். சற்று நேரத்தில் விமானம் தன் இறக்கைகளால் காற்றைக் கிழித்துக் கொண்டு தரையிறங்கத் தயாரானது.



            விமானம் முழுமையான நிறுத்தத்திற்கு வந்தபின் பெல்டை கழற்றவும் என பைலட் அறிவுறுத்திக் கொண்டிருக்க என் அருகில் இருந்த நபர் திடீரென்று பெல்டை விடுவித்துக் கொண்டு மேலிருந்து தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கத் தயாரானார். இவரைப் பார்த்த இன்னும் சிலர் வேக வேகமாக தத்தமது உடைமைகளை எடுக்க விரைந்தனர்.. விமானச் சிப்பந்திகள் அவரை உட்காருமாறு பணித்தபோதும் அவர் அமர மறுத்ததுடன் தன் செல்பேசியை ஆன் செய்து பேசத் தொடங்கி விட்டார். இதனை கண்ட எனக்கோ மிகுந்த அதிர்ச்சி, படித்த, பண்புள்ள அந்த நபரே ( இதற்கும் விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவராம்!!) இவ்வாறு செய்வதை கண்டு திகைத்துப் போனேன்..



              விமானம் முழு நிறுத்தத்திற்கு வந்ததும் என் பொருட்களை சரிபார்த்து எடுத்துக் கொண்டு, மலேசிய மொழியில் அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் வணக்கம் சொல்ல எண்ணி (தில்லாலங்கடி திரைப்படத்தை பார்த்து கற்றுக் கொண்டது) “சலாமத் தடாங்” என்றேன். அந்தப் பெண்ணோ சிறியதாய் ஒரு புன்முறுவல் செய்து என்னிடம் “உங்கள் பயணம் சிறப்பாய் அமைய ஏர் எசியாவின் வாழ்த்துகள்” என தூய தமிழில் சொல்ல, அப்போது தான் அவள் பெயர் “கீதாலட்சுமி” என்பதை பார்த்து “நன்றி” என்று வழிசலுடன் கூறி இறங்கினேன்.


             ஏர் ஏசியாவின் தனிப்பட்ட விமானங்கள் தரையிறங்கும் இடமாம் அது. அங்கிருந்து ஏர்போர்ட்டின் இமிக்ரேசன் செக்கிட்கு வருவதற்கு அரை மணிக்கூறு பிடித்தது. வரும் வழியில் கண்ணில் கண்ட மற்றொரு மலேய வார்த்தை “திலாரங் மசூக்” ( உள்ளே நுழையாதே). மலாய் மொழிக்கென எழுத்துரு இருந்த போதும் அவர்கள் தங்கள் சொற்களை ஆங்கிலத்தின் துணை கொண்டு தான் எழுதுகிறார்கள். இதைப் பார்த்த போது இதே போல் நம் ஊரிலும் செய்தால் வெளிநாட்டுப் பயணிகள் கூட தமிழை ஆர்வமாக படிக்க ஏதுவாக இருக்கும் என்று தோன்றியது.


                முன்பே வாங்கி வைத்திருந்த விசாவை அங்கிருந்த அலுவலரிடம் கொடுத்து மலேசியாவில் நுழைந்ததற்கான முத்திரையை பெற்றுக் கொண்டு, வெறும் பேக்-பேக் ( BACK-PACK) மட்டுமே இருந்ததால் நேராக ஏர்போர்ட்டின் நுழைவாயிலுக்கு வந்தேன். நுழைவாயிலின் அருகில் ஒரு சிறிய கடையில் மலேசியாவின் சிம் கார்ட் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சிம் கார்டு இலவசம், ஆனால் அதில் பேச வேண்டுமானால் முப்பது ரிங்கட்டுகள் செலுத்த வேண்டும். (கிட்டத்தட்ட இந்தியாவிற்கு முக்கால் மணி நேரம் பேசிக் கொள்ளலாம்). எதற்கும் இருக்கட்டுமென ஒரு பேன்சி நம்பர் (?!) தேடி எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.


               ஏர்போர்ட்டிலிருந்து ஒரு வாடகை வண்டியில் நேராக நான் பயணித்தது- பத்து மலைக்கு..  முருகனைக் கொஞ்சம் பொறுத்திருந்து தரிசிப்போமா??

                          

Monday, November 5, 2012

நியூ ஏஜ் - பாப்பா பாட்டு

THIS SONG DEDICATED TO ALL THE LOVELY KIDS..
-KOVAI AAVEE



பாப்பா பாப்பா இத கேளு,
பாரதி பாடும் கத கேளு..

மம்மி டாடி சொல்வதை நீ
நாளும் கேட்டு நடந்திடனும்!

Daily Homework முடித்துவிட்டு
சோட்டா பீமை பார்த்திடனும்!

சாக்லேட் CoolDrinks NO  NO  NO
Fruits & Vegetables சாப்பிடனும்!

Early Morning எழுந்திடனும்
Mummy க்கு Help ம் பண்ணிடனும்!

Time க்கு School போயிடனும்
Good Good வெரி குட் வாங்கிடனும்!

பாப்பா பாப்பா இத கேளு,
பாரதி பாடும் கத கேளு..

/


Saturday, November 3, 2012

பயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)


                    பயணம் என்ற பெயரில் என் வாழ்க்கைப் பயணத்தை இதுவரை பதிவு செய்து வந்தேன்.. நான் வாழ்க்கையில் மேற்கொண்ட பயணங்களைப்  பற்றி ஒரு சிறிய தொடராக எழுதும் ஆவல் நீண்ட நாட்களாகவே என் மனதின் ஓரத்தில் இருந்தது.. என் எழுத்துக்கு இதுவரை ஆதரவு கொடுத்த என் வாசகர்கள் இந்த தொடருக்கும் வரவேற்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த தொடரை தொடங்குகிறேன்.. (நான் சமீபத்தில் பயணித்த மலேசியா-சிங்கப்பூர் அனுபவத்திலிருந்து துவங்குகிறேன்..)





பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 1; ஸ்தலம்: 1;  தொலைவு: 1.


மை டியர் மலேசியா 


                   எவ்வளவு முறை சுவைத்தாலும் ஐஸ்க்ரீமைப் பார்த்தவுடன் சுவைக்கத் துடிக்கும் குழந்தைபோல், புதிய இடங்களைக் காண்பதில் தான் என்னே ஆனந்தம்!!  நாள்காட்டியை அக்டோபர் பதினெட்டு  எப்போது வருமென்று தினம் பதினெட்டு  முறை பார்த்தபடியே  ஆவலாய்க் காத்திருந்தேன்.  பத்து நாட்களுக்கு முன்னரே விசாவிற்காக பாஸ்போர்டை சென்னைக்கு அனுப்பியிருந்தேன்.  மலேசியன் ரிங்கட் (மலேசியாவின் கரன்சி ) மற்றும் சிங்கப்பூர் டாலர்   வாங்குவதற்காக பல ட்ராவல்ஸ் மற்றும் வங்கிகளில் விசாரித்து பின் (1 ரிங்கட் - 17.50 ரூபாய் , 1 சிங்கப்பூர் டாலர் - 44.20 ரூபாய் ) X E  கரன்சி எக்ஸ்சேஞ்சிடம் வாங்கிக் கொண்டேன். கோவையிலிருந்து சென்னையை அடைந்த போது க்ளாஸில் நிறையும் ஒயின் போல் என் மனம் சந்தோஷத்தில் நிறைந்து கொண்டிருந்தது..


                       சென்னை ஏர்போர்ட் நவீனமாகவும், மிகுந்த அழகுடனும் காட்சி அளித்தது.. (இரண்டு மாதங்களில் இது இரண்டாவது முறை, இருப்பினும் அதன் அழகை ரசிக்கத் தவறவில்லை).  AIR ASIA  எனும் அந்த "பறக்கும் மாட்டு வண்டியில்" மீண்டும் ஏறி உற்கார்ந்த போது என் தலை விதியை நானே நொந்து கொண்டேன். (அது பற்றி இன்னொரு பதிவில் விளக்கமாக சொல்கிறேன் ).



                              மூச்சு முட்டினாலும் திறக்க முடியாத சன்னல்களின் ஊடே  அந்த அதிகாலை ஆகாயத்தைப்  பார்த்த போது மனதிற்குள் ஒரு இனம் புரியா பரவசம்.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதலி போல் அத்தனை அழகு.. உருண்டு திரண்டு மெல்ல மெல்ல ஓடிவந்து, பிய்த்துப் போட்ட இலவம்பஞ்சுக் கூட்டங்களாய் மிதந்து வரும் அழகில் மயங்காதவர் எவரும் இருக்க முடியாது.. ( FLIGHT  ஏறியதும் அடித்து பிடித்து விண்டோ சீட் வாங்கி உறங்கும் மக்களே, கொஞ்சம் தலையை திருப்பி இயற்கையின் பேரழகைப் பருகுங்கள்)


                           இதோ இன்னும் பத்து நிமிடங்களில் கோலாலம்பூரில் தரையிறங்கப் போகிறோம்..

தொடரும்...


     

Thursday, November 1, 2012

SKY FALL - திரை விமர்சனம்.

                                ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் 007 படம். டேனியல் க்ரெய்க் நடிக்கும் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என்று கூறப் படுகிறது. 2008 இல் Quantum of Solace வெளியிட்டுக்குப் பின் சிறிது காலம் பொருளாதாரத் தட்டுப்பாட்டினால் தடைபட்டிருந்த படம் 2010 ல் உயிர்பெற்று இன்று நம் கண்களுக்கு விருந்தாய்!



                                 நமது நாயகன் ஜேம்ஸ் பாண்ட் இந்த முறை துப்பு துலக்குவது MI6 உளவு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட(படும்) தாக்குதல்களைப் பற்றி.. மேலும் அவர்கள் ஏஜென்ட் M ஐ ஏன் கொல்ல  முயற்சிக்கிறார்கள், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இருப்பவர்கள் தனது நிறவனத்தின் நிழல்களா, அவர்களிடமிருந்து எப்படி MI6 ஐ 007 காப்பாற்றுகிறார் என்பது தான் கதையின் முடிச்சு.. 
                              


                                    டேனியல் க்ரேய்க் - நாம் முன்னர் பார்த்த படங்களில் இருந்த அதே முக பாவனைகள்.. தலைதெறிக்க ஓடும் காட்சிகள், எதிரியிடம் மாட்டிக்கொள்ளும் போது சேரில் கட்டி வைத்திருப்பது போன்ற காட்சிகள் ஏனோ முந்தைய படங்களையே நினைவு படுத்துகிறது.. மேலும் ரொமேன்ஸ்  காட்சிகளில் (?!!) மனிதர் பிரிட்டிஷ் நாட்டின் சர்தார் வல்லபாய் படேல் பட்டம் வெல்கிறார்.. (கிளம்புங்க சார் காத்து வரட்டும்..!)

                                   படத்தின் கதை ஏஜென்ட் M ஐ சுற்றியே இருப்பதால் ஜுடி டென்ச்சின்  கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. ( ஆனா கடைசில கொன்னுப் புட்டாங்களே..!) ரொம்ப நாளைக்கு அப்புறம் "மணி பென்னி " கேரக்டர் வருகிறது. ஒரு "Gun "ம்  ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர் மட்டும் கொடுத்துச் செல்லும் போது "Q " ஏமாற்றுவது பாண்டை மட்டுமல்ல.. நம்மையும் தான்.. வில்லனை இன்னும் கொஞ்சம் வலிமையாக காட்டியிருக்கலாமோ?? (நம்ம ஊர் மதன் பாப் மாதிரி அடிக்கடி சிரிக்கிறார்)



                          இசை அதிரடி.. குறிப்பாக வில்லன் தப்பிச் செல்லும்போது Subway க்கு குண்டு வைத்து தகர்க்கும் காட்சியில் அரங்கமே அதிர்கிறது. ஒளிப்பதிவு அருமை.. லண்டன் மற்றும் பாண்டின் பிறந்த ஊரைக் காட்டும் போது கொள்ளை அழகு. அவருடைய வீடு நாம் முன்பே ஹாரி பாட்டர் படத்தில் பார்த்ததாய் ஞாபகம்..

                          தமிழ் சினிமாக்களையே இப்போது  நாம் உலகத் தரத்துடன் பார்த்துப் பழகி விட்டதலாயோ என்னவோ இது போன்ற படங்களின் மேல் நாம் அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புடன் செல்கிறோம்.. எது எப்படியோ, படத்தின் முதல் பதினைந்து  நிமிடங்களை தவற விடாதீர்கள். ( சிறப்பான ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த மயிர் கூச்செறியும் நிமிடங்கள் அவை).. SKYFALL  - அடி பலமில்லை.


80 / 100

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...