Wednesday, December 30, 2015

Recommendations for Chennai Film Festival

The Fencer:  The Story happens during the World War in Russia. It's the story of a Fencing master who escapes from the army and serves in a school as a teacher.




The Dark Horse :  This film slightly reminded me of "Scouting for zebras" from last year. But this deals with a chess champion who has a bipolar disorder.





Love :  The Ardent fans who enjoyed the Goddard's 3D movie and the "Blue is the Warmest Color" will enjoy this movie to the core. ;)  (18+)




Taxi :  Must Watch movie,  just for the director and for his passion for the movies. Jaffar Panahi, who was banned for making films is in Jail right now came out in a bail and shot the film and sent it to the film festival through his wife and won many awards. He also features in this movie..



Rams :  An wonderful movie about a sheep, not just for animal lovers.



Flocking:  It's a story of a young girl who accuses her fellow student for a sexual assault on her. A suspense drama will keep you thinking throughout the movie. This movie reminded me of 'The Hunt" from last year.




Embrace of the Serpent:  The Winner of Goa Film Festival and many more awards.  A Must Watch movie little slow to watch..




The above movies are my recommendations for Chennai Film Festivals. However there are few movies that are not screened in Chennai, but
screened in IFFI, Goa.



Danish Girl :  The story of a Man who has a feminine qualities in him becomes a woman.  Excellent perfomance by Eddie Redmayne. I would rate this as the Best Film of 2015. A Must Watch.




Accused : A true story of a lady who has been accused for killing babies and old people in a famous hospital. 



Cinemawala  (Marathi) An emotional drama about movie buff whose son chooses Pirate DVD selling as his profession. The climax is the highlight of the movie.





Filosofi Kopi Indonesia is famous for coffee plantations.  A coffee 'maker'who faces a challenge to make a best coffee in Indonesia to save his pride as well as his friend's coffee shop.





Frenzy: A slow thriller about three brothers, a man who sent in a parole to find a terrorist, A pig Hunter and a Terrrorist..! Excellent Screenplay gives you goose bumps at the end.





The Moving Forest:  A movie based on Shakespeare's "Hamlet". Excellent performance and a brilliant screenplay keeps the thriller interesting till the end. MUST Watch





The Man who Knew Infinity:  Sreenivasa Ramanujam, the great mathematician's life portrayal has been documented recently in Tamil. However like Richard Attenborough's Gandhi, I prefer this movie has more life.

Dev Patel simply rocks and grew up as a wonderful actor. MUST Watch




Enjoy Cinema!!


Thursday, December 24, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (5)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3  பகுதி 4


                  தன்னை கொலை செய்யத் தான் அந்த கார் வந்தது என்று அவள் உறுதியாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அவளை ஆதரவாகப் பற்றி அவள் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றேன். அறையின் உள்ளே நுழைந்ததும் சற்றே அதிர்ந்து நின்றேன். அறை முழுவதும் கலைந்த நிலையில் இருந்தது. அவள் ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. மேசைகள், நாற்காலிகள் கவிழ்ந்திருந்தன. மெத்தை முழுவதுமாக கிழிக்கப்பட்டு உள்ளிருந்த பஞ்சு அறையெங்கும் பரவியிருந்தது. சிதறல்களை ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த எண்ணிய நான் அப்போது தான் அவளைக் கவனித்தேன். அங்கே நடந்த எதுவும் அவளை பாதித்ததாய்த் தெரியவில்லை. சிறிதும் கவலைப்படாமல் டைனிங் டேபிளுக்கு அருகே வந்தவள் அதன் மீது ஏறினாள். பின் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அலங்கார விளக்கு ஒன்றினை கழற்ற முயற்சித்தாள். அதன் மேல் பாகம் தனியாக கழன்று வந்ததும் உள்ளே கைவிட்டு எதையோ எடுக்க முயற்சித்தாள். ஓரிரு நொடிகளில் ஏதோ நெக்லஸ் போன்ற சாதனம் அவள் கைகளில் இருந்தது.


                  மேசையின் மீதிருந்து இறங்கிய அவள், நான் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்து "நல்லவேளை, இந்த டயமன்ட் பென்டன்ட் என் அம்மா எனக்காக கொடுத்தது. ஸேஃப்டிக்காக இங்கே வச்சிருந்ததால தே குட் நாட் ஃபைன்ட் இட்"  என்றாள். "ஹூ ஆர் 'தே' ?" என்று நான் கேட்ட கேள்வியை காதில் வாங்கியதாயத் தெரியவில்லை. கீழே விழுந்திருந்த  ஆடைகளில் சிலவற்றை ஒரு பேக் பேக்கில் (Backpack) திணித்துக் கொண்டே "வீ ஹாவ் டூ லீவ் டூ சம் அதர் பிளேஸ்" என்றவள் ஒரு இடைவெளி விட்டு "மே பி யுவர் பிளேஸ்?" என்று என்னைப் பார்த்தாள். என் அறை அவள் சொகுசுக்கு சிறிதும் ஏற்றதாய் இருக்காதே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே என் மனதைப் படித்தவளாய் "டோன்ட் ஒர்ரி, ஐ வில் அட்ஜஸ்ட்" என்றபடி "லெட்ஸ் கோ" என்று என் கைகளை பற்றியபடி வெளியேறினாள். காரில் ஏறி அமர்ந்தவளிடம் என் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டே " ஹோட்டல் வெக்கேட் பண்ண வேண்டாமா?" என்ற என்னைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தபடி காரின் ஆக்சிலேட்டரை தன் கால்களால் முத்தமிட்டாள்.


                   ஆனால் அவள் நேராக என் அறைக்குச் செல்லவில்லை. அங்கிருந்து புறப்பட்ட அவள் என் ஹோட்டல் இருந்த திசைக்கு எதிர்திசையில் செல்ல ஆரம்பித்தாள். மிராமர் கடற்கரையும் தாண்டி சென்று கொண்டிருந்தாள். "ம்ம்ம்.. நாம இப்ப எங்க போறோம்?" "டோனா பாலா. ஹேவ் யூ பீன் தேர் பிபோர்?"  "நோ.. இதுவரைக்கும் மூணு வருஷம் வந்திருக்கேன். பட் ஐ ஜஸ்ட் வாட்ச் மூவிஸ் ஆல் தி டே." என்றேன். "வாட், தி  ஹோல்  டே?" என்று என்னை ஒரு வினோத பிராணியைப் பார்ப்பது போல் பார்த்தாள். "யா, ஐ லைக் டு வாட்ச் மூவீஸ், சில நாள் ஏழு படங்கள் வரைக்கும் தொடர்ந்து பாத்த்திருக்கேன்." "ஆர் யூ கிரேசி ஆர் வாட்?  எனக்கும் சினிமா பார்க்கப் பிடிக்கும், ஆனா ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூணு படம் பார்க்கலாம். ஹவ் கேன் யூ டூ தட்? என்றபடி எழில்மிகு  கோவாவின் சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தாள். சாலையின் இருபுறமும் தமிழ்நாட்டின் சிறிய உணவகங்கள் போன்ற அமைப்பில் இருந்த ரெஸ்டாரென்டுகள். எல்லா ரெஸ்டாரென்ட்டின் முன்புறமும் ஒரு மதுக்கடை இருந்தது. சாலைகள் சொல்லிக் கொள்ளும்படி சிறப்பான சாலைகள் இல்லையென்றாலும் பயணம் சிரமமில்லாமல் கடந்தது. 






                          டோனா பாலா ஒரு கடற்கரை இல்லை என்ற போதும்,  வெளிநாடுகளில்  இயற்கைக் காட்சிகள் காண்பதற்கென வ்யூ பாயிண்டுகள் (View Points) அமைத்திருப்பார்கள். இதுவும் அதுபோன்ற ஒரு அமைப்பு தான், இங்கிருந்து கோவாவின் கடலையும் கடலலைகளையும் ரசிக்கலாம். மேலும் போட் ஜெட்டி (Boat Jetty) இங்கிருந்ததால் படகுகளை வாடகைக்கு அமர்த்தியோ, நாமே செலுத்தியோ வரலாம். அங்கிருந்த ஒரு குன்று போன்ற அமைப்பில் பொதுமக்கள் அமர ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் இருவரும் அதில் போடப்பட்டிருந்த ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தோம். சில நிமிட அமைதிக்குப் பின் எனக்குள் அரித்துக் கொண்டிருந்த கேள்விகளை கேட்டேன். " யார் உன்னைக் கொல்ல வந்தது? ஹோட்டல் அறையில்  வந்து ஏதோ தேடியிருக்கிறார்களே, அவர்களும் இவர்களும் ஒன்றா? அவர்கள் ஏன் உன்னை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்? " அவள் சிமென்ட் பெஞ்சினின்றும் எழுந்து முன்னே இருந்த ஒரு தடுப்பு சுவரில் சாய்ந்தபடி கடல் அலைகளைப் பார்த்தபடி நின்றாள். நான் எழுந்து வந்து அவள் அருகே நின்று,  "டெல் மீ சங்கு, வாட்ஸ் ஹாப்பனிங்?" 


                                சங்கு என்று நான் உரிமையுடன் அழைத்ததும் அவள் கண்களில் நீர்த்துளிகள். என்னருகே வந்து என் மார்பில் 
சாய்ந்தபடி, "என் அம்மாவுக்குப் பிறகு என்னை சங்குன்னு கூப்பிட்டது நீங்க தான். யூ ரிமைண்டட் மீ மை மதர். " என்று அழ ஆரம்பித்தாள். "ஹே கமான் ரிலாக்ஸ்" அவளை அணைத்தவாறு அவள் முதுகில் ஆதரவாய் தட்டிக் கொடுத்தேன். "கார்த்திக், ஐ ட்ரஸ்ட் யூ லாட். அதனால் தான் இதை உங்கிட்ட சொல்றேன். ப்ளீஸ் சேவ் மீ ப்ரம் திஸ் ஹெல். " "என்ன நடந்ததுன்னு விவரமா சொல்லு" அவள் தன் அணைப்பின் இறுக்கத்தை அதிகப் படுத்திக் கொண்டாள். "லாஸ்ட் வீக் நான் கோவாவுக்கு ஃப்ளை பண்ணி வந்தேன். அப்போ என் பக்கத்துல உட்கார்ந்தவர் கிட்ட நான் வழக்கமா பேசுற மாதிரி பேசிகிட்டே வந்தேன். ஹிஸ் நேம் இஸ் விஷால் ரெட்டி, எ பிசினஸ் மேக்னட் ஃப்ரம் மும்பை. எதோ கான்பிரன்ஸ்காக சென்னை வந்துட்டு இன்னொரு மீட்டிங்கிற்காக அந்த ஃபிளைட்ல வந்தார். வீ பிக்கேம் பிரண்ட்ஸ். 


                                   ஏர்போர்ட்டில் இறங்கியதும், ஹீ கால்ட் மீ ஃபார் எ காபி. நானும் போனேன். பட் அங்க  காபி குடிச்சது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு. அதுக்கப்புறம் அந்த Marriot ஹோட்டல்ல இருந்தேன். ஹீ டுக் அட்வான்டேஜ் ஆன் மீ. நான் மறுத்து வெளியேற முயற்சித்தப்போ அவன் ஆசைக்கு இணங்காம அவன்கிட்ட இருந்து தப்பிக்க நினைச்சா என்னையும் சென்னையில இருக்கிற என் ஃபேமிலியையும் கொன்னுடுவேன்னு மிரட்டினான்.. போன வாரம் வரை எனக்கு அவன்கிட்ட இருந்து தப்பிக்க தைரியம் இல்லை. ஆனா உன்னை பார்த்ததுக்கப்புறம் தான் எனக்கு ஒரு வெளிச்சம் தெரிஞ்சது கார்த்திக். நேத்து உன்னோட என்னை சேர்த்து வைத்து பார்த்ததால் அவனுக்கு கோபம் வந்திருக்கணும். அதான் என்னைக் கொல்ல ஆள் அனுப்பியிருக்கான். ப்ளீஸ் சேவ் மீ ஃப்ரம் ஹிம்." என்று என் மார்பில் தலை வைத்து அழுதாள். அவளை சமாதானம் செய்யும் பொருட்டு என் இரு கைகளாலும் அவளைக் கட்டியணைத்தேன். 


                                         பஸ் மீண்டும் நின்றதில் என் நினைவோட்டம் தடைபட்டது. இம்முறை தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்பட்டது. பெயர்ப்பலகைகள் மதுரைக்கு அருகே இருக்கிறோம் என்றது. நானும் தேநீர் குடிக்க இறங்கிய போது டிரைவர் வேண்டுமென்றே இடித்துவிட்டு என்னை முறைப்பது போல் பார்த்துச் சென்றார். என் மாமாவிடம் சென்று ஏதோ கூற அவரோ "உனக்கு வேற வேலையில்ல" என்று உரக்கக் கூறிச் சிரித்தார். ஆனாலும் அந்த டிரைவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். தேநீரைக் கைகளில் வாங்கினேன்.  சூடாக புகை வந்தபோதும் அதை வாயில் வைத்த போது சில்லென்ற உணர்வே வந்தது. சென்ற முறை குளம்பி அருந்திய போதும் இதே உணர்வு தான்  இருந்தது. இரண்டாவது முறை தேநீரை உறிஞ்சிய போது சங்குவுடன் விசாகப் பட்டினத்தில் காபி டேவில் கோல்ட்  காபி அருந்தியது நினைவுக்கு வந்தது..!



-தொடரும்..

Friday, December 18, 2015

மர(ற)ப்பேனா!

மர(ற)ப்பேனா!




அவள் கடைசியாய் கையொப்பமிட்ட
பேனாவை எடுத்து வந்துவிட்டேன்
ஆடம்பரம் இல்லாமல் செய்யப்பட்ட மரப்பேனா! - ஆயினும்
அதை பாதுகாக்க என்றும் நான் மறப்பேனா?


மரத்தால் ஆன பொருட்களுக்கெல்லாம்
உணர்வில்லையென யார் கூறியது?
நான் கண்ணீர்விட நினைக்கையில் எல்லாம் -இந்த
மரப்பேனா மை சிந்துகிறதே!


என்னிடம் பேனா வாங்கி அன்று எனக்கே ஒரு
பிரேம லக்கினம் எழுதிக் கொடுத்தாள்.
இன்று அதே பேனாவின் துணை கொண்டு
விடுதலை சாசனத்தில் ஒப்பமிடுகிறாள்.


உனை எப்படியெல்லாம் நேசிக்கேறேன்
என பல கடிதம் எழுதிப் பின்
அவற்றை அஞ்சலில் சேர்த்துவிடத் திண்மையின்றி
குப்பைத் தொட்டியில் சேர்த்தேனே.


உனை நினைத்தெழுதிய கடிதத்திற்கு
கல்லூரி முதல் பரிசு கொடுத்த போது
என் காதல் அதனை உன்னிடம் சொல்லிவிட்ட
மகிழ்வில் துள்ளிக் குதித்தேனே.


மூன்றெழுத்து சொல் தான் என்ற போதும்
மூன்றாண்டுகள் ஆனதே உன்னிடம் சொல்ல
அதுவும் ஜடமாய் இருந்த என் மரப்பேனா -ஏளனமாய்
சிரித்ததனால் தானே அது நடந்தது.


இதயத்திலிருந்து புறப்பட்ட குருதி
தமனியை சென்று சேரும் முன்
நண்பனின் உந்துதலால் நறுக்கென்று
உரைத்தும் விட்டேன் உன்னிடம்.


என்றுமே பொலிவாய்த் தோன்றும்
உன் பூ முகத்தில் -ஒரு ஆயிரம் வாட்
அகல்விளக்கு பிரகாசித்ததாய் நண்பன் கூறியதை
நானும் கவனிக்கத் தவறவில்லை.



அப்படியாக அந்த மரப்பேனா
சாட்சியாக, நண்பர்களும் உடனிருக்க
சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட திருமணத்திற்கு
பூலோகத்தில் இருவரும் கையொப்பமிட்டோம்.


காதல், காமம், காப்பி, ஹனிமூன்
எல்லாமே இனிமையாகக் கடந்தது.
காமத்துப் பாலின் சுவை இரண்டு ந்யூ மூன் வரை
பொருட்பால் தேடச் செல்வது தானே அறம்?


காதல் கவிதைகள் பல எழுதிக் குவித்த
மரப்பேனா இன்று அலுவலக மேசையில்
கோப்புகளில் கையொப்பமிடவும் -தொழில்
ஒப்பந்தங்களை உறுதி செய்யவும் உதவியது.


அன்றிருந்த நேசம் எல்லாம் அடியோடு
தொலைந்து போய் விட்டதாய்
கண்ணீர் துளியுடன் கூட்டணி அமைத்த மையோடு
கடிதம் ஒன்றை எழுதித் தந்தாய்.


மன்னிக்க வேண்டுவதாய் உன்னிடம்
மன்றாடிக் கேட்டிருக்கலாம் - என் செய்ய
கறுப்பங்கிக்காரரைக் கொண்டு உனை மீட்க
வாதிடுவது தான் விதியென்று ஆன பிறகு.


என் முகம் பார்த்துத் துயிலெழுவது
சிறப்பென்று கூறிய இதழ்கொண்டு- இனி
எப்போதும் என் முகம் காண
வெறுப்பென்று கூறியதாய் கேள்விப்பட்டேன்.



இதோ..

அவள் கடைசியாய் கையொப்பமிட்ட
பேனாவை எடுத்து வந்துவிட்டேன்
ஆடம்பரம் இல்லாமல் செய்யப்பட்ட மரப்பேனா! - ஆயினும்
அதை பாதுகாக்க என்றும் நான் மறப்பேனா?





How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...