Showing posts with label பிரேதம் பார்த்த ஞாபகம்.. Show all posts
Showing posts with label பிரேதம் பார்த்த ஞாபகம்.. Show all posts

Friday, January 8, 2016

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (6)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3  பகுதி 4 பகுதி 5

டோனா பாலாவில் அவள் கூறியதைக் கேட்டவுடன் துரிதமாகச் செயல்பட்டேன். அவளையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்றுவது என
தீர்மானித்தேன். அவளிடம் சென்னையில் உள்ள அவளது அப்பாவையும் தம்பியையும் இடம் மாறும்படி கூற சொல்லிவிட்டு கொல்கத்தாவில் இருந்த என் நண்பனுக்கு அழைத்தேன். சிறிது நாட்கள் இடம் மாற்றமே இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிக தீர்வாய்த் தோன்றியது. டோனா பாலாவில் இருந்து அவளுடைய காரில் கொல்கத்தா நோக்கிப் பயணித்தோம். மும்பை வழி செல்ல வேண்டாம் என்று அவள் கூறியதால் அன்றிரவு விசாகப்பட்டினம் சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை கொல்கத்தா செல்ல முடிவெடுத்து பயணத்தை துவக்கினோம். இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுனர் இருக்கையை பகிர்ந்து கொண்டே விசாகப்பட்டினம் அடைந்தோம். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் நான் காரை பார்க் செய்து வருவதற்குள் அவள் தங்கும் அறையை புக் செய்திருந்தாள்.

அறை எண் முன்னூற்றி ஒன்று, இந்த எண் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு எண்ணாக மாறிவிட்டதாய் உணர்ந்த நாள் அது. இருவர் தங்கக்கூடிய அந்த அறையில் அவள் உடைமாற்றிக் கொள்ள வசதியாய் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் கதவைத் திறக்க உள்ளே சென்று அவள் கேட்ட ரெட் ஒயினையும், எனக்கு வோட்கா வும் இருவருக்கும் உணவும் போனில் ஆர்டர் செய்துவிட்டு அவள் அருகே அமர்ந்தேன். "அம்மா கிட்ட சத்தியம் செய்திருக்கிறேன், குடிக்க மாட்டேன், என்று சொன்னதாய் ஞாபகம்." என்றாள். "ஆமாம், அம்மாவிடம் பீர் எல்லாம் அடிப்பதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். இன்றுவரை பீர் அடித்ததே இல்லை. ஹாட் மட்டும் தான்" "யூ நாட்டி" என்று என் கன்னங்களைக் கிள்ளினாள். சற்று நேரத்தில் நாங்கள் ஆர்டர் செய்த மதுவும், உணவும் வந்து சேர்ந்தது.

இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே மதுவை அருந்தினோம். மணி பன்னிரெண்டைத் தாண்டியும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறையின் பால்கனியிலிருந்து தெரிந்த முழு நிலவும் அவள் முகமும் ஒன்று போலத் தோன்றியது எனக்கு. அந்த வெள்ளைப் பனிக்கு நடுவே ஓர் சிவப்பு ரோஜாவாய் அவள் இதழ்கள். வோட்கா தந்த போதையும் அவள் இதழ்கள் தந்த கிறக்கத்திலும் அவள் இதழ்களில் இதழ் பதித்தேன். அவள் சட்டென விலகிச் சென்றாள். "ஐயாம் சாரி, நான்.." சற்று தடுமாற்றத்துடன்  "ஐ திங்க் ஐ லவ் யூ.." என்றேன். நான் செய்த செயலுக்காக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன். நிமிர்ந்த போது அவள் அருகே அமர்ந்திருந்தாள். "மீ டூ கார்த்திக்" என்றவாறு என்னைக் கட்டியணைக்க, வானில் இருந்த வெண்ணிலவு மேகத்தோடு கலந்து காதல் செய்தது. அன்றைய நள்ளிரவு நல்லிரவாய்க் கழிந்தது.


அந்த இரவின் முடிவு எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருந்தது.
எங்கள் உறவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருந்ததாய் உணர்ந்தேன். விசாகப்பட்டினத்திலிருந்து கொல்கத்தா வரையிலான  எங்கள் பயணத்தில் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது. அவளிடம் என் வாழ்க்கைத் திட்டமிடல்களை விவரித்துக் கொண்டே வந்தேன். அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டேன். முடிந்து போன அவள் பிறந்த நாளுக்கு ஒரு நீல நிற சுடிதார் பரிசளித்தேன். "சங்கு, இந்த ப்ளூ சுடிதார் நான் உனக்குக் கொடுக்கும் முதல் காதல் பரிசு. இதை நீ நம்ம காதலின் நினைவுச் சின்னமா  எப்பவும் வச்சிருக்கணும்."  க்ளீஷே வான இந்த டயலாக்கை சொல்லியவுடன் அவள் என்னைப் பார்த்து "டோன்ட் ஒர்ரி,  நான் செத்துப் போனாக் கூட இதே சுடிதாரில் தான் வருவேன், போதுமா?" என்று கண்களை உருட்டி சந்திரமுகி ஜோதிகா போல் பேசிவிட்டு சிரித்தாள். 


அந்த நெடும் பயணம் சுகமான ஒன்றாக அமைந்தது அவளின் ஆங்கிலம் கலந்த பிள்ளைத் தமிழ் வார்த்தைகளாலா, இடையிடையே அவள் சிந்திய புன்னகைத் துளிகளாலா என்று அறியாமல் தவித்திருந்தேன்.  கண்மூடி உறங்கும் நேரம் கற்றை முடிகள் குறுக்கே விழுந்து அவள் முகத்தை மறைத்த போது வண்டியை நிறுத்தி அந்த முடிகளை ஒதுக்கிவிட்டு அவள் முகம் பார்த்தபடியே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன். அவளிடம் காதல் சொன்ன கணம் முதலாய் அவளுடன் வாழத் துவங்கியிருந்தேன். அவள் தான்  என் வாழ்க்கைத் துணை, இனி ஒருநாளும் அவளைப் பிரிவதில்லை என ஓர் உறுதி எடுத்துக் கொண்டேன்.  கொல்கத்தாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். ஆயிரம் காலத்துப் பயிரை எண்ணியபடி மகிழ்வுடன் இருந்த நான் அடுத்த ஆயிரம் நிமிடங்களில் நிகழப் போகும் விபரீதத்தை அப்போது உணர்ந்திருக்கவில்லை.



அந்த நிமிடங்களை இப்போது நினைக்கும் போதும் ஒவ்வொரு செல்லிலும் வலிக்கிறது, உள்ளத்தில் வேதனை அதிகரிக்க, கண்களில் ஏதோ ஒரு இருள் சூழ ஆரம்பிக்கிறது. என் சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்த போது அங்கே நான் வந்த பஸ் என்னை விட்டுவிட்டு புறப்பட்டிருந்தது. நான் பதறியபடி என்ன செய்வதென்று சிந்தித்தபடியே கையில் இருந்த குளம்பியை ஒரே மிடற்றில் குடித்து முடித்தேன். கிளாஸை கடையில் வைக்கச் சென்ற போது தான் கவனித்தேன். அதில் அவள் முகம் தெரிந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிளாஸில் குளம்பி முழுவதுமாய் நிரம்பி இருந்தது.

-தொடரும்.






Thursday, December 24, 2015

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (5)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3  பகுதி 4


                  தன்னை கொலை செய்யத் தான் அந்த கார் வந்தது என்று அவள் உறுதியாகக் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அவளை ஆதரவாகப் பற்றி அவள் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றேன். அறையின் உள்ளே நுழைந்ததும் சற்றே அதிர்ந்து நின்றேன். அறை முழுவதும் கலைந்த நிலையில் இருந்தது. அவள் ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. மேசைகள், நாற்காலிகள் கவிழ்ந்திருந்தன. மெத்தை முழுவதுமாக கிழிக்கப்பட்டு உள்ளிருந்த பஞ்சு அறையெங்கும் பரவியிருந்தது. சிதறல்களை ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த எண்ணிய நான் அப்போது தான் அவளைக் கவனித்தேன். அங்கே நடந்த எதுவும் அவளை பாதித்ததாய்த் தெரியவில்லை. சிறிதும் கவலைப்படாமல் டைனிங் டேபிளுக்கு அருகே வந்தவள் அதன் மீது ஏறினாள். பின் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த அலங்கார விளக்கு ஒன்றினை கழற்ற முயற்சித்தாள். அதன் மேல் பாகம் தனியாக கழன்று வந்ததும் உள்ளே கைவிட்டு எதையோ எடுக்க முயற்சித்தாள். ஓரிரு நொடிகளில் ஏதோ நெக்லஸ் போன்ற சாதனம் அவள் கைகளில் இருந்தது.


                  மேசையின் மீதிருந்து இறங்கிய அவள், நான் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்து "நல்லவேளை, இந்த டயமன்ட் பென்டன்ட் என் அம்மா எனக்காக கொடுத்தது. ஸேஃப்டிக்காக இங்கே வச்சிருந்ததால தே குட் நாட் ஃபைன்ட் இட்"  என்றாள். "ஹூ ஆர் 'தே' ?" என்று நான் கேட்ட கேள்வியை காதில் வாங்கியதாயத் தெரியவில்லை. கீழே விழுந்திருந்த  ஆடைகளில் சிலவற்றை ஒரு பேக் பேக்கில் (Backpack) திணித்துக் கொண்டே "வீ ஹாவ் டூ லீவ் டூ சம் அதர் பிளேஸ்" என்றவள் ஒரு இடைவெளி விட்டு "மே பி யுவர் பிளேஸ்?" என்று என்னைப் பார்த்தாள். என் அறை அவள் சொகுசுக்கு சிறிதும் ஏற்றதாய் இருக்காதே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே என் மனதைப் படித்தவளாய் "டோன்ட் ஒர்ரி, ஐ வில் அட்ஜஸ்ட்" என்றபடி "லெட்ஸ் கோ" என்று என் கைகளை பற்றியபடி வெளியேறினாள். காரில் ஏறி அமர்ந்தவளிடம் என் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டே " ஹோட்டல் வெக்கேட் பண்ண வேண்டாமா?" என்ற என்னைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்தபடி காரின் ஆக்சிலேட்டரை தன் கால்களால் முத்தமிட்டாள்.


                   ஆனால் அவள் நேராக என் அறைக்குச் செல்லவில்லை. அங்கிருந்து புறப்பட்ட அவள் என் ஹோட்டல் இருந்த திசைக்கு எதிர்திசையில் செல்ல ஆரம்பித்தாள். மிராமர் கடற்கரையும் தாண்டி சென்று கொண்டிருந்தாள். "ம்ம்ம்.. நாம இப்ப எங்க போறோம்?" "டோனா பாலா. ஹேவ் யூ பீன் தேர் பிபோர்?"  "நோ.. இதுவரைக்கும் மூணு வருஷம் வந்திருக்கேன். பட் ஐ ஜஸ்ட் வாட்ச் மூவிஸ் ஆல் தி டே." என்றேன். "வாட், தி  ஹோல்  டே?" என்று என்னை ஒரு வினோத பிராணியைப் பார்ப்பது போல் பார்த்தாள். "யா, ஐ லைக் டு வாட்ச் மூவீஸ், சில நாள் ஏழு படங்கள் வரைக்கும் தொடர்ந்து பாத்த்திருக்கேன்." "ஆர் யூ கிரேசி ஆர் வாட்?  எனக்கும் சினிமா பார்க்கப் பிடிக்கும், ஆனா ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூணு படம் பார்க்கலாம். ஹவ் கேன் யூ டூ தட்? என்றபடி எழில்மிகு  கோவாவின் சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தாள். சாலையின் இருபுறமும் தமிழ்நாட்டின் சிறிய உணவகங்கள் போன்ற அமைப்பில் இருந்த ரெஸ்டாரென்டுகள். எல்லா ரெஸ்டாரென்ட்டின் முன்புறமும் ஒரு மதுக்கடை இருந்தது. சாலைகள் சொல்லிக் கொள்ளும்படி சிறப்பான சாலைகள் இல்லையென்றாலும் பயணம் சிரமமில்லாமல் கடந்தது. 






                          டோனா பாலா ஒரு கடற்கரை இல்லை என்ற போதும்,  வெளிநாடுகளில்  இயற்கைக் காட்சிகள் காண்பதற்கென வ்யூ பாயிண்டுகள் (View Points) அமைத்திருப்பார்கள். இதுவும் அதுபோன்ற ஒரு அமைப்பு தான், இங்கிருந்து கோவாவின் கடலையும் கடலலைகளையும் ரசிக்கலாம். மேலும் போட் ஜெட்டி (Boat Jetty) இங்கிருந்ததால் படகுகளை வாடகைக்கு அமர்த்தியோ, நாமே செலுத்தியோ வரலாம். அங்கிருந்த ஒரு குன்று போன்ற அமைப்பில் பொதுமக்கள் அமர ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் இருவரும் அதில் போடப்பட்டிருந்த ஒரு சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தோம். சில நிமிட அமைதிக்குப் பின் எனக்குள் அரித்துக் கொண்டிருந்த கேள்விகளை கேட்டேன். " யார் உன்னைக் கொல்ல வந்தது? ஹோட்டல் அறையில்  வந்து ஏதோ தேடியிருக்கிறார்களே, அவர்களும் இவர்களும் ஒன்றா? அவர்கள் ஏன் உன்னை கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்? " அவள் சிமென்ட் பெஞ்சினின்றும் எழுந்து முன்னே இருந்த ஒரு தடுப்பு சுவரில் சாய்ந்தபடி கடல் அலைகளைப் பார்த்தபடி நின்றாள். நான் எழுந்து வந்து அவள் அருகே நின்று,  "டெல் மீ சங்கு, வாட்ஸ் ஹாப்பனிங்?" 


                                சங்கு என்று நான் உரிமையுடன் அழைத்ததும் அவள் கண்களில் நீர்த்துளிகள். என்னருகே வந்து என் மார்பில் 
சாய்ந்தபடி, "என் அம்மாவுக்குப் பிறகு என்னை சங்குன்னு கூப்பிட்டது நீங்க தான். யூ ரிமைண்டட் மீ மை மதர். " என்று அழ ஆரம்பித்தாள். "ஹே கமான் ரிலாக்ஸ்" அவளை அணைத்தவாறு அவள் முதுகில் ஆதரவாய் தட்டிக் கொடுத்தேன். "கார்த்திக், ஐ ட்ரஸ்ட் யூ லாட். அதனால் தான் இதை உங்கிட்ட சொல்றேன். ப்ளீஸ் சேவ் மீ ப்ரம் திஸ் ஹெல். " "என்ன நடந்ததுன்னு விவரமா சொல்லு" அவள் தன் அணைப்பின் இறுக்கத்தை அதிகப் படுத்திக் கொண்டாள். "லாஸ்ட் வீக் நான் கோவாவுக்கு ஃப்ளை பண்ணி வந்தேன். அப்போ என் பக்கத்துல உட்கார்ந்தவர் கிட்ட நான் வழக்கமா பேசுற மாதிரி பேசிகிட்டே வந்தேன். ஹிஸ் நேம் இஸ் விஷால் ரெட்டி, எ பிசினஸ் மேக்னட் ஃப்ரம் மும்பை. எதோ கான்பிரன்ஸ்காக சென்னை வந்துட்டு இன்னொரு மீட்டிங்கிற்காக அந்த ஃபிளைட்ல வந்தார். வீ பிக்கேம் பிரண்ட்ஸ். 


                                   ஏர்போர்ட்டில் இறங்கியதும், ஹீ கால்ட் மீ ஃபார் எ காபி. நானும் போனேன். பட் அங்க  காபி குடிச்சது மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு. அதுக்கப்புறம் அந்த Marriot ஹோட்டல்ல இருந்தேன். ஹீ டுக் அட்வான்டேஜ் ஆன் மீ. நான் மறுத்து வெளியேற முயற்சித்தப்போ அவன் ஆசைக்கு இணங்காம அவன்கிட்ட இருந்து தப்பிக்க நினைச்சா என்னையும் சென்னையில இருக்கிற என் ஃபேமிலியையும் கொன்னுடுவேன்னு மிரட்டினான்.. போன வாரம் வரை எனக்கு அவன்கிட்ட இருந்து தப்பிக்க தைரியம் இல்லை. ஆனா உன்னை பார்த்ததுக்கப்புறம் தான் எனக்கு ஒரு வெளிச்சம் தெரிஞ்சது கார்த்திக். நேத்து உன்னோட என்னை சேர்த்து வைத்து பார்த்ததால் அவனுக்கு கோபம் வந்திருக்கணும். அதான் என்னைக் கொல்ல ஆள் அனுப்பியிருக்கான். ப்ளீஸ் சேவ் மீ ஃப்ரம் ஹிம்." என்று என் மார்பில் தலை வைத்து அழுதாள். அவளை சமாதானம் செய்யும் பொருட்டு என் இரு கைகளாலும் அவளைக் கட்டியணைத்தேன். 


                                         பஸ் மீண்டும் நின்றதில் என் நினைவோட்டம் தடைபட்டது. இம்முறை தேநீர் அருந்துவதற்காக நிறுத்தப்பட்டது. பெயர்ப்பலகைகள் மதுரைக்கு அருகே இருக்கிறோம் என்றது. நானும் தேநீர் குடிக்க இறங்கிய போது டிரைவர் வேண்டுமென்றே இடித்துவிட்டு என்னை முறைப்பது போல் பார்த்துச் சென்றார். என் மாமாவிடம் சென்று ஏதோ கூற அவரோ "உனக்கு வேற வேலையில்ல" என்று உரக்கக் கூறிச் சிரித்தார். ஆனாலும் அந்த டிரைவர் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். தேநீரைக் கைகளில் வாங்கினேன்.  சூடாக புகை வந்தபோதும் அதை வாயில் வைத்த போது சில்லென்ற உணர்வே வந்தது. சென்ற முறை குளம்பி அருந்திய போதும் இதே உணர்வு தான்  இருந்தது. இரண்டாவது முறை தேநீரை உறிஞ்சிய போது சங்குவுடன் விசாகப் பட்டினத்தில் காபி டேவில் கோல்ட்  காபி அருந்தியது நினைவுக்கு வந்தது..!



-தொடரும்..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...