Wednesday, November 26, 2014

International Film Festival of India (IFFI 2014) - A short glance

                      உலக சினிமாக்கள் பார்க்க, அதைப் பற்றி பேசுவதற்கே நிச்சயம் ஒரு Qualification அவசியம் என்று கருதுகிறேன். அதைப் பற்றி விரிவாக விரிவாக எழுத எனக்கு அனுபவம் போதாது என்ற போதும். என்னை பாதித்த,  நான் ரசித்த ஒரு சில படங்களைப் பற்றி என் நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்காக பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். இம்முறை ஒரு குறும்படத்திற்கான ஸ்க்ரிப்டை எழுதி முடித்துவிட்டு இதில் கலந்து கொண்டதாலோ என்னவோ படங்களில் வரும் ஷாட்கள், கேமிரா ஆங்கிள்கள், திரைக்கதை உத்திகள் போன்றவற்றை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.சரி அதெல்லாம் விடுங்க. இப்ப படங்களின் சுருக்கமான விமர்சனங்களை பார்ப்போமா?



THE  PRESIDENT (IRAN)

DIRECTOR: Mohsen Makhmalbaf

ஈரான் நாட்டு இயக்குனர் மக்மல்பப் இயக்கிய இந்தப் படம் திரைப்படத் திருவிழாவின் முதல் படமாக திரையிடப்பட்டது. ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி வீழ்ச்சியடைந்து அவரை சிறைப்பிடிக்க இடைக்கால அரசு அவரைத் தேடுகிறது. சர்வாதிகாரி தன் பேரனுடன் தப்பிச் செல்வதும், பின் மக்களோடு மக்களாக செல்லும் போது மக்கள் தன் மீது வைத்திருந்த வெறுப்பையும் தன் கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் பட்ட துன்பத்தை உணர்வதுமாக செல்கிறது கதை.  ராணுவத்திடம் மாட்டிக் கொள்ளும் அவரின் கதி என்ன என்பதை சொல்கிறது கிளைமாக்ஸ். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய  நல்ல படம்.




THE LAST ADIEU (DOCUMENTARY/ INDIA/ 92 mins)

DIRECTOR: Shabnam Sukhdev

சுக்தேவ் என்ற ஒரு இயக்குனரை ( பிலிம் டிவிஷனுக்காக பல டாகுமென்ட்ரிகள் எடுத்தவர்) பற்றி அவர் மகள் ஷப்னம் இயக்கிய டாகுமென்ட்ரி இது. படத்தின் பெரும்பகுதிகள் Repeat ஆவதால் நீண்ட கொட்டாவிகளுடன் பார்க்க நேர்ந்தது.  



3 HEARTS ( FRANCE/106 mins)  -- 18+

DIRECTOR: Benoit Jackquot

தான் விரும்பும் பெண்ணை சந்திக்க செல்லும்  ஒருவன் சில காரணங்களால் தாமதமாக செல்ல அவர்கள் காதல் தோல்வியில் முடிகிறது. சிறிது காலத்துக்கு பின் அவன் அவளுடைய சகோதரியை சந்தித்து காதலித்து  கொள்கிறான்  ( தன் காதலியின் சகோதரி என்று தெரியாமலே) திருமணத்துக்கு அமெரிக்காவிலிருந்து வரும் தங்கை தன் அக்காளின் கணவரை பார்த்து திடுக்கிடுகிறாள். தன் பழைய காதலை மறக்க முடியாமல் அக்காவுக்கு தெரியாமல் இருவரும் ரகசியமாக காதல் கொள்கின்றனர், அக்காவுக்கு தன் கணவருக்கும் தங்கைக்கும் இடையே உள்ள உறவு தெரிய வரும்போது நடக்கும் உணர்வுப் போராட்டமே கிளைமாக்ஸ். இம்மி பிசகினாலும் ஆபாசமாக போய் விடக்கூடிய அபாயமுள்ள கதையை அழகாக கொண்டு செல்வது அற்புதமான திரைக்கதையே. ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.





I AM YOURS (NORWAY/ 96 mins)   -- 18+

DIRECTOR : Iram Haq

நார்வேயில் வாழும் இந்திய வம்சாவளியை சார்ந்த ஒரு பெண்ணின் கதை. இந்திய கலாச்சாரத்தை வலியுருத்தும் தாய் தந்தைக்கும் , பருவத்தின் வனப்பில் சுதந்திரமாக தன் காதல் (காம?) உணர்வுகளுக்கும் நடுவே சிக்கிக் கொண்டு தவிக்கும் ஒரு யுவதியின் கதை. கதாநாயகிக்காகவே ஒருமுறை பார்க்கலாம். ;)



-- இன்னும் வரும் 












Tuesday, November 11, 2014

ஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..! (Three Angels)




கொங்கு மண்ணை கீழே உதறிவிட்டு - இரயில் நிலையம்
வந்தவனை வரவேற்றது சில படிக்கட்டு. என்னுடனே
சிற்சில சம்பாஷணைகளோடு வந்தது ஒரு அடித்தட்டு. சேருமிடம்
வேறேன்பதால் ஆங்கே பிரிந்தோம் Bye சொல்லிவிட்டு.

இரயிலுக்காய் காத்திருந்த நேரத்தில்
 எதிரே ஒளிர்ந்ததோர் காண்டீன்
கத்தி படம் பார்த்த பின்னே
கொஞ்ச காலம் புறக்கணித்திருந்தேன் Coke-Tin.

ரயில் நீரை மட்டும் வாங்கிக் கொண்டு
காத்திருக்கையில் கடந்தது பல teen.
இரயில் வந்து நின்றதும் Chart நோக்க
என் கம்பார்ட்மெண்டில் மூன்று F18.

இரவுப் பொழுதில் உறக்கம் வராவிடில் படிக்க
வைத்திருந்தேன் ஒரு புத்தகம், அதன் பேர் கள்ளம்.
வயதுக்கே உரிய அழகுகளுடன், கொஞ்சிக் கொஞ்சி பேசிய
தேவதைகளை கண்டவுடன் குதுகளித்ததோ என் உள்ளம்.

குலுங்கலோடு புறப்பட்ட தொடர்வண்டியில் புத்தகத்தை
மாரில் சாய்த்தபடி கட்டியணைத்தேன் நித்ராதேவியை.
கனவுதேசத்தில் காப்பி குடிக்க நிறுத்திய போது வண்ண வண்ண
ஆடைகளோடு காஜலோடு இம்மூவரும் சுற்றி வந்தனர் ஆவியை.

கட்-கட் என்ற 'சரவணரின்' ஒலி கேட்டு கண்விழித்தால்
வண்டி அசையாது நின்றிருந்தது ஈரோட்டில் - முகம் மட்டும் தெரிய
கம்பளிக் கதகதப்பில் கண்ணுறக்கம் கொண்டிருந்த
கோதைகளை நிழற்படமாய் மாட்டிவிட்டேன் என் மனப்பேரேட்டில்

அதன்பின் உறங்க மறுத்து
என் இமைகள் போராட்டம் ஒன்றை நடத்த,
புத்தகமும் போரடிக்க, வழியேதும்
நான் அறியவில்லை நேரம் கடத்த.

செல்போனில் சில நேரம்,
ஐ-பாடில் சில நேரம்,
நிற்காமல் ஓடிச்சென்ற சூப்பர் பாஸ்ட்
எக்ஸ்பிரெஸாய் கடந்தது என் நேரம்.

டீ-காபி, காபி-டீ என்ற இரைச்சல்
மீண்டும் கேட்கத் துவங்கிய அந்நேரம்,
எக்ஸ்க்யுஸ்மீ என்றொரு மெல்லிய இசை ஒலித்தது
படிக்கட்டில் நின்றிருந்த என் காதோரம்.

இறக்கைகளை Backpack இல் மடித்து வைத்துவிட்டு
இறங்கத் தயாரான அந்த தேவதைகளை,
கண்டபோது வந்த திசை அறியாமல் நெஞ்சில்
பச்சக் என்று ஒட்டிக் கொண்டது மனக்கவலை.

ஆவியை துயரமென்று சிலர்
நினைப்பதுண்டு.
ஆவியே, துயரமென்று நினைத்ததிந்த
திருச்சியைத் தானோ?

களையிழந்த கம்பார்ட்மென்ட்
கப்சிப்பென்று முகாரி வாசிக்க- எதற்கும்
கட்டுப்படாத காலத்தைப் போல்
கடந்து சென்றது தொடர்வண்டி.


அதுவரை 'அராத்தாய்'  அடங்கோண்டு
போராடிய என் கண்மணிகள்
இப்போது 'சமத்தாய்' சமந்தாவை எண்ணிக்கொண்டு
உறங்க முடிவு செய்தது.


முப்பத்து ஐந்தில் இந்தியன் கிரிக்கட் டீமில்
இடம்கிடைத்து உடனே ரிட்டையர் ஆன ப்ளேயர்போல்
தூக்கத்தின் 'சுகானுபவத்தை' ரசிக்க முடியாமல்
கெடுக்க வந்து சேர்ந்தது தஞ்சாவூர் ஸ்டேஷன்.

சூரியன் இன்னும் கண்விழிக்காத காலையிலே,
இராஜராஜன் நடை பயின்ற தஞ்சையில
ஆவி தன் கால் பதித்த அந்த வேளையிலே
அங்கும் வரவேற்றது ராம்ராஜ் வேட்டிகளே!

நேரத்தே எழுப்பி நண்பனின் துயில் கலைக்க
வேண்டாமமென நான் நினைக்க
பிளாட்பார்மில் பல்துலக்கி, தேநீர் குடிக்க,
இப்படியாய் அரைமணி நேரமும் மெதுவாய் கடக்க

 நிமிடத்திற்கு பன்னிரண்டு முறை மட்டுமே ஒலித்த
அந்த விளம்பரத்தை கேட்க முடியாமல் நான் தவிக்க
வேறு வழியின்றி செல்போனை எடுக்க
தஞ்சை வரும் அந்த தென்காசி அலைஸ் சென்னை நண்பனை அழைக்க

முதல்முறை முழு அழைப்பும் ஓயும் வரை எடுக்காமல் இருக்க
பின் பத்து நிமிடம் வரை மாறி மாறி இரு நம்பர்களுக்கும் விளிக்க
திடீரென அழைப்பு மணி ஓய்ந்து அவன் போனை எடுக்க
'ஹலோ' என்ற சொல்லோடு அவன் குரல் கேட்க நான் காத்திருக்க

மறுமுனையில் அவன் சொன்னான்
'என்ன பாஸ், மிட்நைட்ல எழுப்பிட்டீங்க?'


- தொடரும் (என்று தான் நினைக்கிறேன்.)




(பி.கு: ) இது சத்தியமாய் கவிதை நடையல்ல. 'கவிதாவின்' நடை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். (கவிதா யாரென்று பின்னூட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு 'அண்ணன்' சீனு பதிலளிப்பார்). ஆகையால் யாரும் 'கவிதை நன்றாக உள்ளது' என்ற பின்னூட்டத்தை மட்டும் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது.





Saturday, November 8, 2014

ஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)


இன்ட்ரோ  
                              சயின்ஸ் பிக்க்ஷன்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போகக்கூடிய படமாய் நிச்சயம் இது இல்லை. தவிர கிறிஸ்டோபர் நோலன் எனும் மந்திரச் சொல் நிச்சயம் மாயம் செய்திருக்கிறது. விண்வெளிப் பயணம் என்ற அகன்ற வெளிக்குள் அப்பா-மகள் சென்டிமென்ட், விவசாயத்தின் வேதனைகள், சுய எள்ளல்கள் போன்றவற்றையும் கலந்து காக்டெயிலாக தந்த நோலனுக்கு ஒரு சல்யுட்..!


                          




கதை
                         
                           71 சதவிகிதம் நீராலும் 29 சதவிதிகம் நிலத்தாலும் சூழப்பட்ட இந்த பூமிதான் மனிதன் வாழ்வதற்காக படைக்கப்பட்டதா? இல்லை வேறேதும் நிலம் நீர் மற்றும் உயிர் வாழதகுந்த ஒரு  கிரகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர்களா இந்த மனிதர்கள் என்று தீர்க்கமாக யோசிக்க வேண்டிய உட்கருத்தை பிஸிக்ஸும் பீலிங்ஸும் ஒரு சேர கற்பனை கலந்து சொல்வதுதான் கதை. சில நாட்கள் முன் வந்த கிராவிட்டி, எலிசியம் போன்ற படங்களை தொடர்ந்து வந்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதையே காட்டுகிறது. ( இன்னமும் பேஸ் வாய்ஸில் 'நான்தாண்டா கொமாரு' என்று படமெடுக்கும் கோலிவுட் இயக்குனர்கள் இதை கவனிப்பார்களா?)
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           நாயகன் மேத்யு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார், நோலன் தன் ஆஸ்தான நாயகன் கிறிஸ்டியன் பேல்லை விடுத்து இவரை தேர்வு செய்ததை இவர் சிறப்பான நடிப்பின் மூலம் நியாயப்படுத்தியிருக்கிறார். மெக்கன்ஸி பாய் (மர்ப்ப்) குழந்தை நட்சத்திரம் என்பதையும் தாண்டி மனதை வருடுகிறார். அன் ஹேத்வே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தியிருக்கிறார்.  சிறிது நேரமே வந்தாலும் மேட் டேமன் கலக்கல் நடிப்பு. தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பந்தா இல்லாமல் ஒரு நெகடிவ் கேரக்டரில் நடிக்க சம்மதித்தற்காகவே இவரை பாராட்ட வேண்டும்.

                          கேஸ் மற்றும் டார்ஸ்  ரோபோட்டுக்கு குரல் கொடுத்தவர்கள் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள்.
                               

இசை-இயக்கம்
                           நோலனின் படங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஹன்ஸ் ஜிம்மரின் இசை இதில் அதகளம் செய்திருக்கிறது. விண்வெளிக்கு சென்றவர்களுடன் நாமும் பயணித்தது போன்ற உணர்வை கொடுத்தது ஹன்சின் இசை. நல்ல இசைக்கட்டமைப்பு உள்ள திரையரங்கில் பார்க்க ஆவி டாக்கீஸ் பரிந்துரைக்கிறது. (பெங்களூர் மற்றும் வெளியூர் வாசிகள் முடிந்தால் ஐ-மேக்ஸில் பாருங்கள்)
  
                           நோலனின் படங்கள் முதல் காணலில் புரியாது என்ற வாதங்கள் ஒவ்வொரு முறையும் வைக்கப்படும். ஆனால் சிக்கலான இந்த கதையையும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் திரைக்கதை அமைத்து வெற்றி காண்கிறார் நோலன். கிளைமாக்ஸ் புரிதலுக்காக வைக்கப்பட்ட Ghost காட்சிகள் சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.

                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                'ப்ளாக் ஹோல்' வழியாக விண்வெளி ஓடம் பயணிக்கும் காட்சி மயிர்கூச்செறிய வைக்கும் அருமையான காட்சி. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க அருமையான படம்.

                


Aavee's Comments -  A Journey to Space!

ஆவி டாக்கீஸ் - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா


இன்ட்ரோ  
                              கொஞ்சம் மொக்கை காமெடிகளை குறைத்துக் கொண்டு கதையின் வீரியத்தை ஆழமாக சொல்லியிருந்தால் படத்தின் வீச்சு நிச்சயம் வேறாக இருந்திருக்கும். சமூக கருத்துகளை மேலோட்டமாக சொல்லிவிடுவதாலேயே சிறந்த படமென சொல்லிவிட முடியாது. கண்ணன் இன்னும் கொஞ்சம் கைவரிசை காட்டியிருக்கலாம்..!


                          




கதை
                            ஸ்டீல் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அங்கிருக்கும் பழுதடைந்த முதலாளிகள் மற்றும் இயந்திரங்களால் ஏற்படும் உடல் பாதிப்பையும், ஆதிக்க சமூகத்தின் அலட்சிய போக்கையும் சுட்டிக் காட்ட முயலும் ஒரு பெண்ணுக்கு உதவ வரும் இரண்டு வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்கள். அவர்கள் மூவரும் சேர்ந்து கார்பொரேட் முதலைக்கு எதிராக போராடி அவர் மனதை மாற்றுவது தான் கதை.
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           விமல், நோ கமெண்ட்ஸ். சூரிக்கு இதுபோன்ற ஹீரோக்களுடன் நடிப்பதால் நிச்சயம் தன் காமெடியன் அந்தஸ்திலிருந்து காமெடி ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்திக்கொள்ள முடியும். ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை சரி பகுதி ஆக்க்ஷன் இவருக்கும். நாசர் பலமுறை இவரை இதுபோன்ற பாத்திரங்களில் பார்த்து சலித்து விட்டதால் படத்தின் இறுக்கத்திற்கு பயன்படாமலே போகிறார்.

                              ப்ரியா ஆனந்த்- ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகளில் பாஸ் மார்க்கும் வாங்கி விடுகிறார். ஆனாலும் இதுபோன்ற படங்களில் கிளிவேஜ் தெரிய காஸ்டியும்ஸ், இனியாவின் ஐட்டம் டான்ஸ், படம் எங்கும் தெளிக்கப்பட்டிருக்கும் மொக்கை காமெடிகள் போன்றவை படத்தை ஆவரேஜ்ஜுக்கும் கீழ் கொண்டு செல்கிறது.

                             விசாகா சிங் அழகான கதாப்பாத்திரத்தில் வந்து போகிறார்.  ஒரு தொழிலாளி உயிர் விட்டதை விட தொழிலாளிகளுக்கு காது கேளாமல் போவது முக்கியமாக போய்விட்டதா, கோர்ட் காட்சிகளில் வசனங்கள் ஷார்ப்பாக இருந்திருக்கலாம்.
                               

இசை-இயக்கம்
                               இமான் சுமாருக்கு சற்று மேல். பாடல்கள் ஒக்கே. ரீரெக்கார்டிங் இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். 'ஜெயம்கொண்டான்' கண்ணனை எதிர்பார்த்து போனால் அங்கே 'சேட்டை' கண்ணன் தெரிவது ஏமாற்றம்.


                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                'மழைக்காத்தா' மற்றும் 'சுந்தரிப் பெண்ணே' பாடல்கள் இனிமை. லக்ஷ்மி மேனனின் குரல் ஆளுமையில் 'குக்குறு' பாடல் கேட்பதற்கு அருமை.

                  


Aavee's Comments -  Powerless kings !

Thursday, October 30, 2014

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! (குறும்பட- சிறுகதை போட்டி)





"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..!
குறும்பட- சிறுகதை போட்டி


ஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.

முதல் பரிசு:      ரூ.2000
இரண்டாம் பரிசு: ரூ.1000
மூன்றாம் பரிசு:  ரூ.500
ஆறுதல் பரிசு :   ரூ.250   (இரண்டு பரிசுகள்)

தேர்வுக்குழு:

"எங்கள் பிளாக்" ஸ்ரீராம் அவர்கள்,
"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,
"மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர்கள்,

மற்றும் உங்கள் "ஆவி"


விதிமுறைகளும், நிபந்தனைகளும்:
  • உங்கள் படைப்புகள்  ​​​400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

  • கதைகள் நகைச்சுவைகாதல், க்ரைம், சமூக உணர்வுக் கதைகள், விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோ, யார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.

  • தேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை' இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )

  • கதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வார, மாத இதழ்களுக்கோ, இணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய்  இருத்தல் கூடாது.

  • கதை உங்கள் தளங்களிலோ, வேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது.  அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.

  • எந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும், தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.

  •  போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.

  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்). 

  • கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •            உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு 12 மணிக்குள் (IST)

  •          போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.

  •             தேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

  • .    ​   போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ  தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​


கதைகளை அனுப்பும் முறை:


  •    நேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும். 

  • MS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். 

  • (எ.கா)  உங்கள் கதையின் தலைப்பு "காதல் போயின் காதல்" என்றால் MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •  கதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ,  நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)

  • MS-Word  பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  •  Subject இல் Aavee Talkies ShortFilm-ShortStory Contest 2015 என்று குறிப்பிடுதல் அவசியம்.

  • Body இல்  பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.

  •  MS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்தி பிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன்  சேர்த்து அனுப்பவும்.
  • (PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)


பெயர்* : 
புனைபெயர்:
(Optional )
வசிக்கும் நகரம்:
(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/  நாடு சேர்த்து குறிப்பிடவும்.)
அலைபேசி எண்* :
வலைத்தளம்:
(Optional )
கதையின் தலைப்பு* :
கதை எண்* : 



Dates to Remember

                  


Tuesday, October 14, 2014

சில நொடி சிநேகம் உருவான கதை



                வலையுலக 'வாத்தியார்' பாலகணேஷ் என் எழுத்துகளுக்கு துரோணாச்சாரியார் என்றால், என் நடிப்பு/திரை ஆசைக்கு Lays  இட்டவர் என் 'திரையுலக பாலச்சந்தர்' துளசிதரன் அவர்கள் தான். 'பரோட்டா கார்த்திக்' என்ற குறும்படத்தில் சிறு வேடம் என்ற போதும் திடீர் வாய்ப்பு கொடுத்து தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்களில் பலருக்கும் என்னை அறிமுகப் படுத்தினார். அந்த குறும்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய 'குடந்தை சரவணன்' அவர்கள் ஒரு குறும்படம் தயாரிக்க இருப்பதாய் சொல்ல ஆர்வம் மிகுதியில் அவரிடம் சென்று என்னையும் ஒரு உதவி இயக்குனனாய் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் 'நீங்க இல்லாமலா?, நாமெல்லாம் சேர்ந்து தான் படம் பண்றோம்." என்றார். கேட்டதும் மனதிற்குள் ஒரு சந்தோசம். ஆயினும் சிறிது நாட்களுக்குப் பிறகு நானும் அதை மறந்து விட்டேன்.



               ஒரு நாள் சரவணனிடமிருந்து போன். "ஆவி, நான் அன்னைக்கு சொன்ன மாதிரி ஒரு குறும்படம் பண்ணலாம்னு இருக்கேன். இதுதான் கதை" என்று சொன்னார். கதையை முதலில் கேட்டதும் சுமார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு உரையாடினோம். பின் அதனுடைய திரைக்கதை வடிவத்தை அனுப்பி வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்டு அந்தக் கதை ஒரு நல்ல கமர்ஷியல் குறும்பட திரைக்கதையாக  வடிவெடுத்தது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக ஓடக்கூடிய வகையில் தயாரான அந்த திரைக்கதையை படமாக எடுக்க ஒரு நாள் குறிக்கப்பட்டது. துளசி சார் பாலக்காட்டிலிருந்தும், நான் கோவையிலிருந்தும் சென்னை வர ரயில் டிக்கட் புக் செய்தாயிற்று.

             அந்தக் கதையில் நான் ஒரு சிறு வேடம் ஏற்பதாகவும் இருந்தது. அப்போது அந்த கதையை படமாக்குவதில் இருந்த சில சிக்கல்களை மனதில் கொண்டு அந்த படத் தயாரிப்பு ஒத்திவைக்கப் பட்டது. ஆயினும் டைரக்டர் எங்களிடம் "நீங்க வாங்க, வேற ஒரு சப்ஜெக்ட் எடுப்போம்." என்றார். நானோ "பரவாயில்ல சார்.  அப்புறம் பார்த்துக்கலாம். " என்றேன். "இல்ல ஆவி. இன்னொரு சப்ஜெக்ட் என் வலைல மக்கள் மிகவும் ரசித்த ஒரு பதிவை குறும்படமா எடுக்கலாம்னு இருக்கேன். So ஒண்ணும் பிரச்சனையில்ல நீங்க வாங்க.." என்றார்.  "இதுல நீங்களும் அரசனும் லீட் ரோல் பண்றீங்க." என்றதும் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த நாயகன் "Gangnam " ஸ்டைலில் நடனமாட தொடங்கிவிட்டான்.



          அதன்பின் இருவாரங்களில் திரைக்கதை தயார் செய்து, தினமும் காலையிலும் மாலையிலும் என்னிடமும், அரசனிடமும் கதை விவாதம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது எங்கள் 'சில நொடி சிநேகம்'. கீதா ரங்கன் மேடம் மற்றும் துளசி சாரின் உள்ளீடுகளால் இன்னமும்  பட்டை தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டது. திட்டமிட்டபடி ஒரு பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி சென்னை போக்குவரத்து அலுவகத்தில் அனுமதி கேட்க சென்ற எங்கள் இயக்குனரிடம் நான்கைந்து இடங்களில் அனுமதி பெற்றாலே படப்பிடிப்பு நடத்த முடியும் என்று கூறியதும் கொஞ்சம் தளர்ந்து போனார்.  கூடுமானவரை முயற்சித்துவிட்டு பின் அதிக நேரமில்லாத காரணத்தால் படப்பிடிப்பை கும்பகோணத்தில் வைத்துக் கொள்ள தீர்மானித்தார். கடைசி இரண்டு நாட்களில் கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று மற்ற ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தார். இந்த எல்லா முயற்சிகளையுமே அவரும் அவர் தம்பி இருவருமாகவே செய்து முடித்தனர். தொலைவிலிருந்து மனதளவில் மட்டுமே எங்களால் ஊக்கம் தர முடிந்தது.



            படப்பிடிப்பு அன்று கும்பகோணம் வந்தடைந்த சென்னை, கேரளா  மற்றும் கோவை நடிகர்கள் (?!!)  முதல் காட்சி ஆட்டோ ஒன்றில் நடிக்க படமானது. மூதல் ஷாட்டே  கிட்டத்தட்ட பத்து டேக் வரை போக டைரக்டர் டென்ஷனின் உச்சியில் இருந்தார். இதற்கும் மிகவும் எளிமையான ஒரு காட்சி அது. எல்லோரும் புதுமுகமாதலால் வந்த தடுமாற்றங்கள் அவை. ஒளிப்பதிவாளர்கள் ஜோன்ஸும், கார்த்திக்கும் துளசி சாரிடம் வந்து இயக்குனரை கொஞ்சம் அமைதிப்படுத்துமாறு கூறிவிட்டு சென்றனர்.  அதற்கு பிறகு வந்த காட்சிகளெல்லாம் ஓரிரு டேக்குகளில் ஒக்கே ஆக டைரக்டர் ஹேப்பி. மதியம் இயக்குனரின் குடும்பத்தாருடன் அமர்ந்து டீம் லஞ்ச் இனிதே முடிந்தது.

              மதியம் நடுரோட்டில் ஒரு சில காட்சிகள் எடுத்தது, காலையில் பஸ் ஸ்டாண்டில் எடுத்ததை விட சிரமமாக இருந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாதலால் முடிந்தவரை பப்ளிக் உள்ளே வராதவாறு பார்த்துக்கொண்டோம். அதிலும் துளசி சார் காரில் வரும் காட்சி ஒன்றை சிலமுறை எடுக்கவேண்டி இருந்ததால் முன்னும் பின்னும் ஒட்டியபடி எடுத்த அனுபவம் சொல்லில் வடிக்க முடியாதது. மாலை மீண்டும் பஸ் ஸ்டாண்டில் சில காட்சிகளை எடுத்துவிட்டு படப்பிடிப்பை இனிதே முடித்தோம். படப்பிடிப்பு என்பது வெறும் இருபத்தியைந்து சதவிகிதம் தான், மீதி எடிட்டிங், டப்பிங், கரெக்ஷன் என பல படிகளை உள்ளடக்கியது என்பதை அதற்கு பிறகு வந்த நாட்களில் புரிந்து கொண்டேன்.



               அலுவலகம் முடித்து பின் எடிட்டிங் வந்து சேர்ந்த அரசன், இயக்குனர்  மற்றும் கார்த்திக்,   ஜோன்ஸுடன் இரு வாரங்களுக்கு மேல் இரவில் கண்விழித்து காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு உறங்கி மீண்டும் அடுத்த நாள் வேலை செய்து என பரபரப்பாக சென்ற நாட்கள் அவை. பின்னர் ஒரு நள்ளிரவில் டப்பிங் வேலை நடந்தது.  எல்லாம் முடிந்து நண்பர்கள் சிலருக்கு மட்டும் டைரக்டர் "ஸ்பெஷல் ஷோ" (?!!) ஏற்பாடு செய்ய Mixed  Reviews கிடைத்தது. அதைக்கொண்டு மீண்டும் ஒரு வாரம் திருத்தங்கள், மாற்றங்கள் சில செய்து ஒரு வழியாக முடித்துவிட்டு பெருமூச்சு விட்டோம். பாலகணேஷ் சார் மற்றும் ஹர்ஷவர்த்தன் (இயக்குனரின் மகன்) அழகுற வடிவமைத்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

                        நேற்று (அக் 13) இயக்குனர் தன் மானசீக குருவான இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடமிருந்து அழைப்பு வர அவசர அவசரமாக அவர் அலுவலகம் நோக்கி ஓடினோம். அலுவல் நாளானதால் மொத்த டீமும் கலந்து கொள்ள முடியாமல் போனது. எல்லோருடைய கண்ணும் படத்தை பார்த்து முடித்த 'திரைக்கதை வித்தகரின்' இதழ் அசைவை எதிர்நோக்கியபடி இருந்தது. அந்த இருபதுக்கு இருபது அறையில் மௌனம் மட்டுமே தாண்டவமாடியது.  பாக்யராஜ் தன் தொண்டையை செருமிக்கொண்டு வாய்திறந்தார். அவர் என்ன சொல்லியிருப்பார் என்பதை நீங்க யூகித்து சொல்லுங்களேன்..! ;)


சிலநொடி சிநேகம் - டீசர்
-------------------------------

                'பூக்கள் பூக்கும் தருணம் போலத்தான் நட்பு பூக்கும் தருணமும்..!'  எந்த நொடியில் மலரும் என கணிக்க முடியாத ஒரு உறவு அது. பள்ளித் தோழன், கல்லூரி நண்பன், அலுவலக நட்பு என வாழ்க்கையில் பல்வேறு நட்புகளை சந்தித்திருப்போம். இதோ நட்பின் இன்னொரு வகையிலிருந்து சில துளிகள் மட்டும் உங்கள் பார்வைக்காய்..!




அக்டோபர் 26 - மதுரையில் நடைபெறும் மூன்றாவது பதிவர் சந்திப்பில் வெளியிட இருக்கிறோம். காணத் தவறாதீர்கள்..!



**********

Saturday, September 27, 2014

ஆவி டாக்கீஸ் - ஜீவா


இன்ட்ரோ 
 
                              'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் அத்தனை அம்சங்களுடன் கிட்டத்தட்ட இந்தியாவின் தேசிய விளையாட்டாக மாறியுள்ள கிரிக்கெட்டில் நடக்கும் உள்-அரசியலை எந்த வித பயமுமின்றி பதிவு செய்ய முன்வந்த இயக்குனரின் நேர்மைக்கு ஒரு சல்யுட்..!


                          


கதை
                             காதலா கிரிக்கெட்டா என்ற நிலையிலும் கிரிக்கெட்டையே காதலிக்கும் நாயகன் எப்படி கிரிக்கெட்டில் வெற்றி பெற்று தன் வேற்று மத காதலியையும் வென்றான் என்பதைச் சொல்வதே இந்த ஜீவா!  இடையில் வரும் பாடல்கள் கொஞ்சம் போர் என்றாலும் நன்கு வடிவமைக்கப்பட்ட திரைக்கதை நம்மை நிமிர்ந்து உட்காரச் செய்கிறது.
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           விஷ்ணு விஷாலுக்கு பொருத்தமான வேடம்.. நிஜத்திலும் நல்ல கிரிக்கெட்டர் என்பதால் கிரிக்கெட் வீரருக்கான வேடம் இயல்பாய் பொருந்தியிருக்கிறது. காதல் காட்சிகளிலும் ஒக்கே. நண்பன் காதலிக்கும் பெண் தன்னிடம் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்கும் காட்சியில் முகபாவங்களால் அசத்துகிறார். நல்ல கதைகளை தேர்ந்து நடித்தால் முன்னணி நட்சத்திரங்கள் வரிசையில் வரலாம். நஸ்ரியா விட்டுச் சென்ற இடத்தை 'நச்சென்று' பிடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. பதின்வயது, கல்லூரிக்காலம் என அருமையாக வித்தியாசம் காட்டியிருக்கிறார். 'அண்ணா'  என்று அழைத்துக்கொண்டிருந்த விஷ்ணுவை காதல் பூத்ததும் ஒரு முழு பாட்டில் ஒயின் கொண்டு வந்து கொடுக்கும் காட்சி அழகு.

                             சார்லி குணசித்திர நடிப்பில் மனதில் நிற்கிறார். 'சீனியர்' ப்ளேயராக சூரி குரலை உயர்த்தாமல் காமெடி செய்வதால் நமக்கும் பிடித்துப் போகிறது. கடைசி ப்ளேயராக வந்து பந்துகளை இவர் சிதறடிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து டிரெஸ்ஸிங் ரூமில் ஒவ்வொரு பிளேயராக  இவரை வேடிக்கை பார்ப்பதும் நல்ல நகைச்சுவைக் காட்சிகள். லக்ஷ்மன் நல்ல நடிப்பு. கதாநாயகனுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். ஆனால் இவர் இறக்கையில் தோன்ற வேண்டிய பரிதாபம் மட்டும் ஏனோ மிஸ்ஸிங்!

                               

இசை- இயக்கம்
                              இமானின் இசையில் பாடல்கள் பிரமாதமாக இல்லாவிட்டாலும் பின்னணி இசை சுமாராக உள்ளது. சுசீந்திரனின் இயக்கம் மீண்டும் ஒருமுறை பேசப்படும். மதியின் ஒளிப்பதிவும், சந்தோஷின் வசனங்களும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.


                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                விஷ்ணு- ஸ்ரீதிவ்யா காதல் காட்சிகள் மற்றும் கிரிக்கெட் காட்சிகள். இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் விளையாட்டை மையப்படுத்தி வந்த திரைப்படங்களின் வரிசையில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கும். நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.

                      


Aavee's Comments -  Ninety Not Out !

ஆவி டாக்கீஸ் - மெட்ராஸ்


இன்ட்ரோ 
 
                              பொதுவாக இயக்குனர்கள் தங்களுக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி விடுவார்கள். இரண்டாம் படத்தில் திணறுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் ரஞ்சித் தன் இரண்டாம் முயற்சியை பொறுத்தவரை வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு குறும்படம் எடுக்கத் தகுதியான மெல்லிய கதையை வைத்துக்கொண்டு திரைக்கதை உத்திகளின் பலத்திலேயே படத்தை கடைசி வரை தொய்வில்லாமல் இழுத்ததற்காக நிச்சயம் பாராட்டலாம்.


                          

கதை
                             நண்பர்களாய் இருந்த இருவர் பிரிந்து தனித்தனியே அரசியல் கட்சிகளில் சேர்ந்து வடசென்னையை கூறு போட்டுக் கொள்ள, மூன்று தெருக்கள் இணையும் ஒரு முச்சந்தியில் இருக்கும் ஒரு சுவர் இருவருக்கும் இடையில் பிரச்சனையாக வருகிறது. அந்த சுவற்றை ஆக்ரமிக்க இரண்டு குடும்பத்தின் வாரிசுகளும் உடன் இருபுறமும் நிற்கும் பொதுமக்களும் வெட்டிக் கொண்டு சாகிறார்கள். கடைசியில் அந்த சுவர் யாருக்கு சொந்தமாகிறது என்பதே கதை..!

                             இதற்கிடையில் கார்த்தி- கலையரசன் நட்பு,  வடசென்னை மக்களின் அன்றாட வழக்கங்கள், விளையாட்டுகள், கார்த்தி-கேத்ரீன் காதல் என பயணிக்கிறது இந்த மெட்ராஸ். கேரம் போர்டு, கால்பந்து, குழாயடி சண்டைகள், வடசென்னையின் எதார்த்தங்களை அழகாக பதிவு செய்ய நினைத்து அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள். (கார்த்தியின் உச்சரிப்பை தவிர)
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           கார்த்தி, இதற்கு முன் வந்த படங்களைக் காட்டிலும் சிரத்தையுடன் நடித்திருப்பது தெரிகிறது. இருப்பினும் காதல் காட்சிகளில் சொதப்பல் தொடர்கிறார். இவர் பேசும் வடசென்னை ஸ்லாங் ஒட்டாமல் இருப்பது அந்த ஸ்லாங் தெரியாதவர்களுக்கும் எளிதில் தெரிந்து விடுவது பரிதாபம். ஆக்க்ஷன் காட்சிகள் இயல்பாக இருப்பதால் ரசிக்க முடிகிறது. கார்த்தியை பொருத்தவரை இன்னும் சில வாய்ப்புகள் கொடுக்கலாம். அன்புவாக வரும் கலையரசன் படத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். கார்த்தி கேத்ரின் ரோமேன்ஸை விட கலையரசன்-ரித்விகா (பரதேசி) ஜோடியின் காட்சிகள் தத்ரூபமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.

                             கேத்ரீன் தெரேசா ஆந்திர இறக்குமதி. வடசென்னை பெண்ணாக வரும் இவர் "உலகப் பேரழகி டயானாவுக்கு மோனலிசா கெட்டப்" போட்டது போல் இருக்கிறார். இவர் வரும் காட்சிகள் படத்திற்கு வேகத்தடை. கொஞ்சமும் ரசிக்க முடியாத காதல் காட்சிகள். கதாநாயகியின் குணாதிசயங்கள் படத்திற்கு தேவைப்படாத போது அதற்காக செலவிட்ட பத்து நிமிடங்கள் விரயமாய் போகிறது. என் உயிர்த் தோழன் ரமா கார்த்தியின் அம்மாவாக வருகிறார். மாரி, மற்ற நண்பர்கள்,  எல்லோரும் வடசென்னை ஸ்லாங்கில் பேசி நடித்த போதும் ஜானி கேரக்டரில் வருபவர் மனதில் நிற்கிறார்.


                               

இசை- இயக்கம்
                              சந்தோஷ் நாராயணன் அசத்தல் பின்னணி இசை. படம் முழுக்க வியாபித்திருப்பது சந்தோஷின் கைவண்ணமே! பாடல்கள் பெரிதாய் பேசப்படாவிட்டாலும் 'நான்-நீ' பாடல் நல்ல மெல்லிசை. 'கானா பாலா' வின் ஒப்பாரி பாடலும் அருமை. ரஞ்சித்தின் இயக்கத்தில் குறை இல்லையென்றாலும் ஒற்றை சுவர் மட்டுமே எல்லா கதாபாத்திரங்களும் பேசும் ஒரே பொருளாய் அமைந்து விடுவதால் ஒரு கட்டத்தில் சலிப்பை கொடுக்கிறது. 'புதுப்பேட்டை' போன்றதொரு படமாக வந்திருக்க வேண்டியது, இரண்டாம் பாதி கொஞ்சம் வலுவிழந்து போனதால் மெட்ராஸ் கரையேறுவது கொஞ்சம் சந்தேகமே..!



                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                டெக்னிக்கல் மிரட்டல்களோ, காமெடியோ இல்லாத இந்தப் படத்தில் நாயகியும் கவர்ந்திழுக்காததால், இசைக்காகவும் இயக்கத்திற்காகவும் வேண்டுமானால் ஒருமுறை பார்க்கலாம்..!

                        


Aavee's Comments -  It's Just a Wall!

Thursday, September 18, 2014

ஆவி டாக்கீஸ் - கத்தி (Music Review)

                        'இளம் புயல்' அனிருத் இசையில், விஜய் சமந்தா நடிப்பில் முருகதாஸ்  இயக்கத்தில் வரவிருக்கும் படம் கத்தி. இதன் பாடல்கள் எப்படியிருக்குன்னு பார்ப்போமா?



1. பக்கம் வந்து - ஹிப்ஹாப் தமிழாவின் அதிரடி ராப் இசையில் நம்மை மூச்சு வாங்க வைக்கும் விறுவிறு பாடல். நிறைய வெஸ்டர்ன், கொஞ்சம் Folk  கலந்து இசைக்கும் பாடல். இளையதளபதியின் நடன அசைவுகளுக்கு அரங்கத்தில் விசில் பறக்கப் போவது உறுதி.

2. பாலம் - ஷங்கர் மகாதேவன், ஸ்வேதா மோகன் பாடியிருக்கும் டூயட் பாடல்.  மெல்லிய இசையாக ஆரம்பித்து வேகமான பீட்டில் முடிகிறது பாடல்.

3. கத்தி தீம் - டொட்டடொட்ட  டொட்டடோய்ங் டொட்டடொட்ட  டொட்டடோய்ங்

4. விஜய் சுனிதி சௌஹான், அனிருத் பாடியிருக்கும் பாடல் "செல்பி புள்ள" ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ஸ்டைலாகவும், கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது.  கூகிள் கூகிள் போலல்லாமல் இது சி சென்டர் ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் அழகாய் வந்திருக்கிறது.  சாதாரண டீ கிளாசில் ஊற்றப்பட்ட ஹை-பை காக்டெயில்..!

5. நீ யாரோ - நீண்ட இடைவெளிக்கு பின் யேசுதாசின் மென் குரலில் ஒரு சோகப் பாடல். "விடுகதையா இந்த வாழ்க்கை' சாயலில் அமைந்திருக்கும் பாடல்.

6. "ஆத்தி" பாடல் இசை ஆதிக்கம் நிறைந்த பாடல். விஷால் தத்லானி, அனிருத் பாடியிருக்கும் பாடல். அழகாக ஆரம்பிக்கும் பாடல் கடைசியில் நேஷனல் ஏந்தம் மறந்த ஸ்கூல் பையன் வேகவேகமாக பாடி முடிப்பது போல பாடியிருப்பது "சிறப்பு".

                       மொத்தத்தில் கத்தி 'செல்பி' புள்ளையை நம்பி களமிறங்கியிருக்கும் ஆல்பம்! ஷார்ப் கம்மி!

Tuesday, September 16, 2014

கடோத்கஜா மெஸ் - பர்மா கார்னர்

மு.கு: பின் வரும் பதிவு பொது வெளியில் சுகாதாரமற்ற சூழலில் உருவாக்கப்படும் உணவு வகைகள். சுத்தம் சோறு போடும்,  சுகாதாரம் கொழம்பு ஊத்தும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இதை படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். ஆதி மனிதன் ஹைஜீனிக் தெரிந்தா வாழ்ந்தான், எங்க கிடைச்சா என்ன, சுவையான உணவு தான் நமக்கு முக்கியம்ன்னு நினைக்கிறவங்க தொடரலாம்.



இடம்:  சென்னை, பர்மா பஜார், ஸ்டேட் பாங்க் பின்புறம்.


         "சாப்பாட்டு ராமன்" புகழ் ரூபக் போன் செய்து பர்மா உணவை சுவைக்கலாம் என்று அழைத்ததும் ஒரு நிமிடம் 'இஞ்சி' இடுப்பழகி இலியானா கண் முன் தோன்றி "அத்தோ, மொய்ஞோ, பேஜோ என்று "நண்பன்" திரைப்படத்தில் சொல்லும் டயலாக் தான் நினைவுக்கு வந்தது. படை திரட்டி சென்று தாக்குதல் நடத்தலாம் என்றெண்ணி நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தால் வாத்தியாரைத் தவிர எல்லோரும் "நான் ரொம்ப பிஸி" என ஓவர் சீனு போட, ஐ மீன் சீன் போட மூவர் குழு களத்தில் இறங்கியது. ஒரு தள்ளுவண்டியில் வைத்து சமைத்து தரப்படும் இந்த உணவுகளில் சுவை கேரண்டி.. சமையல் செய்ய ஒருவர், எடுத்துக் கொடுக்க இரண்டு பேர் என மூன்று பேர் வேலை செய்கிறார்கள். சரி உணவுக்கு வருவோம்.

கடை ஓனர் ஸ்டைலாக போஸ் கொடுத்த போது ..!


அத்தோ ( A Thoke) 

                      ஆங்கிலத்தில் சாலட் (Salad ) என்று சொல்லப்படும் வகையை சேர்ந்தது இந்த அத்தோ.   பல விதமான அத்தோக்கள் உள்ள போதிலும் நம்ம ஊர் டேஸ்டுக்கு ஏற்ப இவர்கள் நமக்கு அத்தோ என்ற பெயரில் செய்து தருவது சமோசா அத்தோ. கொஞ்சம் ரைஸ் நூடில்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், புதினா, மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட பேல்பூரியில் நூடுல்ஸ் சேர்த்தது போல சுவைக்கிறது.


ரைஸ் நூடுல்ஸ் 



அத்தோ- சுவைக்க தயார்  நிலையில் 


அத்தோ பிரை 


                     முன்பே தயாரிக்கப்பட்ட அத்தோவுடன் முட்டையை உடைத்து ஊற்றி வறுப்பது அத்தோ ப்ரை என்று அழைக்கின்றனர். அத்தோவை ஒப்பிடும் பொழுது இதன் சுவை கொஞ்சம் குறைவுதான். 

அத்தோ பிரை 

மொய்ஞா (mohinga )

                     மொய்ஞா சூப் வகையை சேர்ந்தது. தாய்லாந்தின் டோபு (TOFU ) வகை உணவை ஒத்த சுவை இதற்கு. வழக்கமாக மீன் சூப்பில் ரைஸ் நூடுல்ஸை இட்டு கொதிக்க வைப்பது வழக்கம். நம்ம ஊருக்காக இதை மீன் சூப் அல்லாமல் வெஜிடபிள் சூப்பில் செய்கிறார்கள். ஒரு முழு Bowl மொய்ஞா குடித்து முடிக்கையில் நம் வயிறு நிறைந்திருக்கும்.


அடுப்பில் தயாராகும் மொய்ஞா


மொய்ஞாவை ஒரு கை பார்க்கும் கடோத்கஜனும், சாப்பாட்டு ராமனும் 

எக் ப்ரை 

                       கடைசி ஐட்டமாக நாங்கள் சுவைத்தது எக் பிரை..! வேகவைத்த முட்டைக்குள் மசாலாவை அடைத்துக் கொடுக்கின்றனர். அதை ஒரே வாயில் உள்ளே செலுத்தும் போது ஒரு பரவச நிலையை உணர முடிந்தது.



படமெடுக்க கேமிரா எடுப்பதற்குள் மூன்று காலி 




எக் ப்ரை  - முட்டை மசால் 




                    தெருவோரக் கடைகளின் பாசிடிவ் விஷயமே நியாயமான விலை தான். அத்தோ நாற்பது ரூபாயும், அத்தோ ப்ரை மற்றும் மொய்ஞா ஐம்பதும் விலை வைத்திருக்கிறார்கள். முட்டை மசால் ஒன்று பன்னிரண்டு ரூபாய்! அடிக்கடி சாப்பிட உகந்ததில்லை என்றாலும் பட்ஜெட்டில் நண்பர்களுடன் சாப்பிட ஏற்ற கடை..! மொத்தத்தில் கடோத்கஜன் ஹேப்பி..!


Friday, September 12, 2014

ஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன்


இன்ட்ரோ 
 
                              காதல், நட்புன்னு பொங்கிகிட்டு இருந்த நம்ம தமிழ் சினிமா பானையில ரொம்ப நாளைக்கு அப்புறமா பிரதர் சென்டிமென்ட்ங்கிற கிச்சடி கிண்டியிருக்காங்க. கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் உப்புமா ஆகியிருக்க வேண்டியது, பொறுப்பா கிண்டியதற்காகவே இயக்குனர் இராஜமோகனுக்கும் அவருக்கு பக்க பலமா இசைங்கிற வெஜிடபிள வெட்டிக் கொடுத்த யுவனுக்கும் ஒரு அப்ளாஸ்.


                          

கதை
                             ஒரு ஊர்ல ஒரு அண்ணன் தம்பி, அப்படியே அலப்பறை பண்ணிக்கிட்டு ஊர் சுத்திகிட்டு இருக்கிறாங்க. போற போக்குல ஒரு குத்துவிளக்கை பார்த்து அண்ணன் மனச பறிகொடுக்க தம்பியின் ஐடியாவால் காதலியின் மனசுல சீட் போடறார். ஆனா ஒரு கட்டத்துல அதே தம்பியால இவங்க காதல் பிரியவும் செய்யுது. வானவராயன் "வைத்தீஸ்வரி"ய கண்ணாலம் கட்டிகிட்டாரா இல்லையான்னு சொல்றது தான் கதைங்கோவ்..!

                              'என் தம்பிகள நான் அடிப்பேன், யாரும் கேக்கக் கூடாது. என் தம்பிகள யாராவது அடிச்சா நான் கேப்பேன்" ன்னு பசும்பொன் படத்துல பிரபு ஒரு டயலாக் பேசுவார். அதே போலத்தான் இந்த பிரதர்ஸும் அடிச்சுகிட்டே பாசத்தை பொழியறாங்க.. பட் ஒரு கட்டத்துல இவங்க சண்டையில வெறுப்படையறது ஊர் மக்களோட சேர்ந்து நம்ம ஆடியன்ஸும் தான்! ஆனா அந்த முதல் பாதி மொக்கைகள்  பின்பாதிக்கு வலுசேர்க்கும் போது அந்த வெறுப்பை மறந்து ரசிக்க ஆரம்பிச்சுடறாங்க. என்னமோ போங்க, இப்படி தமிழ் சினிமா இதுவரை பார்த்திராத ஒரு கதையை கொடுத்த ஆனந்தத்துல புரொட்யுசர் இனி நிம்மதியா தூங்குவார்..!
                             
        
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           கிருஷ்ணா கழுகு, யாமிருக்க பயமேன்  படங்களில் நன்றாக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம்பெறவில்லை. இந்தப் படம் அவருக்கு பி & சி சென்டர் ரசிகர்களை பெற்றுத் தரும். அண்ணன் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மெருகேறி விடுவார். மா பா க ஆனந்த்- சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு புரொமோஷன். முதல் படத்துக்கு ஒக்கே. ஆனா தொடர்ந்து நடிக்க நிறைய ஒர்க் அவுட் செய்ய வேண்டும். கிளைமாக்ஸ் காட்சி தவிர மீதி காட்சிகளில் எல்லாம் சுமார் ஆக்டிங் தான். ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, கோவை சரளா, மீரா கிருஷ்ணன், எஸ்.பி.பி சரண் வந்து போகிறார்கள்.

                             மோனல் கஜ்ஜர்- ஒரு அறிமுக நாயகிக்கு ஒரே நாளில் இரு படங்கள் வெளியாவது தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை என நினைக்கிறேன். அழகு, நடிப்பு, உடல்மொழி, உதட்டசைவு இப்படி எல்லாவற்றிலும் கோட்டை விட்ட போதும் எதோ ஒன்று நம்மை உத்துப் பார்க்க வைக்கிறது. அது அவருடைய பளீர் சிரிப்பு. அம்மணி கோடம்பாக்கத்தில் கரையேற பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பின் சௌகார் ஜானகி, பேரனிடம் அவன் காதலிக்கும் பெண்ணுக்கு லிப் டூ லிப் கொடுக்க சொல்லும் தமிழ் சினிமாவின் அபத்தங்களுக்கு பலியான அபலைப் பாட்டி.

                               

இசை- இயக்கம்
                              யுவன் இசை படத்திற்கு பக்க பலம். முதல் பாதியில் திகட்ட திகட்ட ஒலிக்கும் பாடல்களும் பின்னணி இசையிலும் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். இயக்குனர் இராஜமோகனின் திரைக்கதை பலம் கதையின் பலவீனத்தை மறைக்கிறது. ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் எண்பதுகளின் 'குடும்ப' மசாலா படத்தை இன்றைய டாஸ்மாக் இளைஞர்களோடு சேர்த்து படைத்திருக்கிறார்.



                                      ஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி 
                                பாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு இனிமை. சில பாடல்களின் நடன அசைவுகள் ரசிக்கும்படி இருந்தன. இன்னொரு பிரபலத்தின் காமெடி செம்ம ரகளை. மொத்தத்தில் வானவராயன் வல்லவராயனை ஒருமுறை பார்க்கலாம்..!

                         


Aavee's Comments -  Brother-O-phobia!

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...