Friday, February 28, 2014

ஆவி டாக்கீஸ் - தெகிடி


இன்ட்ரோ  
                         இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற போது படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை பாரத்ததிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. தமிழில் துப்பறியும் கதைகள் என்பது அதிகம் வரும் வகையறா கிடையாது. அதிலும் செவிகளுக்கு இனிமையான இரு பாடல்களும் இருக்க, என் பிரியப்பட்ட கிரிக்கட்டை கூட புறக்கணித்து விட்டு படம் பார்க்கச் சென்றேன்.




கதை         
                            கல்லூரியை முடித்த கையோடு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்க தன் குருநாதரின் ஆசியோடு வேலையில் சேர்கிறான் நாயகன். சேர்ந்த இடத்தில் ஒரு சில நபர்களை நிழல் போல் தொடர்ந்து அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து கொடுக்க வேண்டும். இப்படி நான்கு பேருக்கு கொடுத்த பிறகு ஐந்தாவதாக தான் விரும்பும் பெண்ணையே பின்தொடர வேண்டிய நிலைமை. அப்போதுதான் தான் நிழலாய் தொடர்ந்து தகவல் கொடுத்த இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து போயிருப்பதை கண்டு சுதாரித்து மற்றவர்களையும் தன் காதலியையும் காப்பாற்ற, இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டறியவும் முனைகிறான். இவர்களை காப்பாற்றினானா இல்லையா என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              நாயகன் அசோக் செல்வன் வில்லா படத்திற்கு பின் நடித்திருக்கும் படம், இன்னும் முகபாவங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு கம்பெனி கொடுக்கிறார். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் பாஸ்.. துப்பறியும் கதை என்பதாலோ என்னவோ இவர் பேசும் டயலாக் எல்லாமே அதிகபட்சம் பத்து வார்த்தைகள் மட்டுமே. ஆனாலும் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கக் கூடிய தகுதிகளும் இருக்கிறது. ஜனனி ஐயர் பெரிதாக நடிக்க ஸ்கோப் இல்லாவிட்டாலும் பாடல் காட்சிகளில் அழகாக வந்து போகிறார்.



                             நாயகனின் நண்பனாக வரும் காளி நல்ல குணசித்திர நடிகர். இயல்பான காமெடியும் இவரிடம் தமிழ் திரையுலகம் எதிர்பார்க்கலாம். ஹோட்டலில் அசோக்கிடம் இவர் வந்து மெதுவாக சாப்பிட்ட பில்லுக்கு பணம் கொடுத்துட்டு போ என்பது தியேட்டரில் எல்லோரும் ஒருசேர சிரித்த காட்சி.. ஜெயபிரகாஷ் வழக்கமான நடிப்பு. துப்பறியும் நிறுவன முதலாளி மற்றும் அசோக்கின் குரு ஆகியோரும் நல்ல நடிப்பு. ஆனாலும் காதல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்போடு இருந்திருக்கும்.

இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 அறிமுக இசையமைப்பாளர் நிவாஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் குறைவில்லாமல் செய்திருக்கிறார். முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அனுபவமிக்க இசையை கொடுத்துள்ளார். நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமான ரமேஷின் முதல் முயற்சி நிச்சயம் சிறப்பான ஒன்றுதான். வழக்கம்போல் நல்ல, விறுவிறுப்பான படத்தை தயாரித்திருக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சி.வி குமாருக்கு ஒரு ஷொட்டு..

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 "யார் எழுதியதோ" மற்றும் "விண்மீன் விதையாய்" பாடல்கள். சங்கரன் குளக்கரை காட்சி மற்றும் கமலக்கண்ணன் சந்திப்பு இப்படி சில காட்சிகள் படத்திற்கு வலு சேர்க்கும் காட்சிகள்.

                  Aavee's Comments - Inspiring Detective with too much         of love..!




அந்த ஒரு கணம்!!

                       கைகளில் பிடித்திருந்த காபி டம்ளரையே உற்று நோக்கியபடி அமர்ந்திருந்த அவன் முகத்தில் கோபத்தின் தணல். தனக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லையென்பதை இதற்கு முன்பும், இதோடும் சேர்த்தும் பல முறை சொல்லியாயிற்று. திருமணம் வேண்டாம் என்பதற்கு ப்ரித்யேகமாய் காரணங்கள் எதுவும் இல்லையென்றாலும் அதன் மீது ஏதோ ஒரு வெறுப்பு அப்பிக்கொண்டிருந்தது. தன்னைக் கேட்காமல் தரகரிடம் சொன்னதும் இல்லாமல்,  தரகர் கொடுத்ததாக இன்று தன் கையில் ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தை கொடுத்த போது உண்டான கோபம் வயதான தாயிடம் கொட்ட விரும்பாத வார்த்தைகள் உஷ்ணக் காற்றாய் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்க அந்த பூங்காவின் அருகிலிருந்த பெஞ்சில் காபியும் கையுமாக அமர்ந்திருந்தான் பாஸ்கர்.


                 அன்னையின் செய்கையை தடுக்க வழிகளை யோசித்தபடி காபியை உறிஞ்சியபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் சப்தம் கேட்டது. சறுக்கு விளையாட்டில் ஏறிய ஒரு குழந்தை மெதுவாக மேலிருந்து கீழே சறுக்கி வர, அக்குழந்தை கீழே வரும்வரை அதன் முகத்தில் பூத்திருந்த புன்னகை இவனை எதோ செய்தது. கீழே கொட்டப்பட்ட மணலில் விழுந்ததும் தனக்குத்தானே மழலை மொழியில் "டமால்" என்று சொல்லிக் கொண்டு எழுந்தது.. இரண்டரை வயதிருக்கலாம் அந்த குட்டிப் பெண்ணிற்கு, சறுக்குமரம் கொடுத்த உற்சாகமோ என்னவோ மீண்டும் ஓடிச் சென்று சறுக்கு மரத்தின் படிகளில் ஏறியது. அதற்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணும் ஆணும் அந்த குழந்தையை தூக்க "ஒன் மோர் ரவுண்ட் டாடி" என்று கூறிய அந்த குழந்தையிடம் "இல்லம்மா, நீ நான் அம்மா எல்லாம் இப்போ தியேட்டர்க்கு போகலாம், சரியா?"  என்றபடி அந்த தந்தை தூக்கிக் கொண்டு நடக்க, "அங்க கோன் ஐஸ் வாங்கி தருவியாப்பா" கொஞ்சும் மொழியில் கேட்டது குழந்தை. "ரெண்டு வாங்கித் தர்றேண்டா" என்றவாறு பூங்காவை விட்டு வெளியே சென்றனர்.

              இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கருக்கு மனசுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு.. முன்பு குடியிருந்த கோபத்தின் தடம் மறைந்து சாந்தம் நிலவியது. மெதுவாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்த அவன் மனதினுள் சற்று முன் நடந்த சம்பவங்கள் தோன்றி மறைந்தன. பூங்காவிற்கு வரும் வழியில் ஒரு பெண் ஸ்கூட்டியில் கடந்து செல்லும் போது இவனை உரசிவிட, அவன் அப்போதிருந்த மன நிலையில் அவளை ஆங்கிலத்தின் ஆறாவது எழுத்தில் துவங்கும் சொற்களைக் கொண்டு வசை பாடினான். அவளுடைய மன்னிப்பு அவன் குரலுக்கு முன் மெல்லியதாய் ஒலித்தது. தன்னை சுற்றி ஒரு கூட்டம் நிற்பதும் தனக்கெதிரே அந்தப் பெண் அழுது கொண்டிருப்பதையும் கூட ஓரிரு நிமிடங்கள் கழித்து தான் உணர்ந்தான். அப்போதும் கோபம் தீராத அவன் "உனக்கெல்லாம் வண்டி வாங்கி கொடுத்து அனுப்பினானே உங்கப்பன் அவன சொல்லணும்" என்று சொல்லிவிட்டு நகர அந்தப் பெண்ணின் விசும்பல்களைக் கூட அவன் சட்டை செய்யாது நடந்து சென்று பூங்காவில் அமர்ந்தான். 

             இப்போது அந்த செயலை நினைத்து தன்னைத் தானே திட்டிக் கொண்டே பஸ்ஸில் ஏறிய பாஸ்கர்.. ஏறியதும் உட்கார்வதற்கு ஒரு இடம் கிடைத்துவிட, "ஸார் கொஞ்சம் குழந்தைய வச்சுக்கறீங்களா, மடியில" என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த போது அங்கே பூங்காவில் பார்த்த அதே பெண், தன் கையில் அந்த குழந்தையுடன் நின்றிருந்தாள். சட்டென எழுந்து "நீங்க உட்காருங்க"  என்று அவளுக்கு இடம் கொடுத்து அவன் நின்றான்.. "தேங்க்ஸ் ங்க " என்றவாறு அமர்ந்த அந்த பெண்ணின் மடியில் இருந்த குழந்தை அவன் விரல்களை பற்றிக் கொண்டது. பஞ்சு போன்ற அந்த விரல்களின் ஸ்பரிசம் அவனுள் இதுவரை காரணம் தெரியாமல் வெறுத்து ஒதுக்கிய திருமணம் எனும் பந்தத்தின் மேல் சட்டென்று மானாவரியான மதிப்பு தோன்றியது.

              மனது முழுக்க சந்தோஷத்தோடு வீட்டை அடைந்த அவன் தாயிடம் சென்று, "அம்மா வாங்க போலாம் பொண்ணு வீட்டுக்கு". சந்தோசம் மேலிட அவன் மாற்றத்தை பார்த்த அவள் உடனே தரகருக்கும் டாக்சிக்கும் போன் செய்தாள்.. அப்பா அம்மா தரகர் சகிதமாய் புறப்பட்ட அவர்கள் கார் பகுதி தூரம் சென்ற போது அம்மா அவனிடம் "காலையில கோபத்துல பொண்ணோட போட்டோவ பாக்காமயே போயிட்டே." என்றபடி போட்டோவை கொடுக்க அவன்  வெடித்து அலறியபடி கூறினான் " வண்டிய நிறுத்துங்க"

                                                        ****************


       

Tuesday, February 25, 2014

நான் ரசித்த பாடல் - விண்மீன் விதையில்..




வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள "தெகிடி" எனும் திரைப்படத்தில் நிவாஸ் கிருஷ்ணா இசையில் அபய் மற்றும் சைந்தவியின் குரல்களில் தேனாய் ஒலிக்கும் பாடல்  கேட்டு/பார்த்து  மகிழுங்கள்...




விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்..
பெண்ணின் விழியில் எனையே தொலைத்தேன்.
மழையின் இசைகேட்டு மலரே தலை ஆட்டு..
மழலை மொழி போலே மனதில் ஒரு பாட்டு..

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து..
                                                                                                 (விண்மீன்)


நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்..
உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்..
மணல் மீது தூறும் மழை போலவே..
மனதோடு நீதான் நுழைந்தாயடி..

முதல் பெண் தானே.. நீதானே.. எனக்குள் நானே ஏற்பேனே..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து..



ஒரு பெண்ணாக உன்மேல் நானே பேராசை கொண்டேன்.
உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்..
எதற்காக உன்னை எதிர்பார்க்கிறேன்..
எனக்குள்ளே  நானும் தினம் கேட்கிறேன்..

இனி வேண்டாமே..நீயானேன், இவன் பின்னாலே போவேனே..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து..
                                                                                                               (விண்மீன்)


                                           *****************

Sunday, February 23, 2014

அன்புக்குரியவர்கள் அலங்கரித்த ஆவிப்பா மேடை..


                      கல்லூரிக் கால நினைவலைகளை புத்தகமாய் மாற்ற சிற்பியாய் மாறி ஒவ்வொரு பக்கங்களையும் செதுக்கி சிலையாய் வடித்துக் கொடுத்ததோடு அழகான அழைப்பிதழையும் வடிவமைத்து தந்த வாத்தியாருக்கு நன்றிகளை கூறிக் கொண்டு என் அழைப்பை ஏற்று என்னையும் என் உணர்வுக் குழந்தையையும் வாழ்த்த வந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி கூற விழைகிறேன்..


                        சிற்சில தவிர்க்க முடியாத காரணங்களால் விழாவிற்கு வர இயலாமல் சில நட்புள்ளங்கள் பின்வாங்க, இந்த புத்தகம் உருவாக்க நினைத்த நாளில் இருந்து ஒவ்வொரு தினமும் பல மணி நேரங்கள் எனக்காய் செலவிட்டு, விழாவன்று முழு தினமும் என்னை அழைத்துக் கொண்டு அவருடைய செல்ல வாகனத்தில் பவனி வந்த பாலகணேஷ் சாருக்கு மீண்டும் என் நன்றிகள். வாழ்த்துரை எழுதியதோடு நில்லாமல் விழா தினம் விடுப்பெடுத்து துணையாய் நின்று நிகழ்ச்சியை துடிப்போடும், நகையோடும் தொகுத்து வழங்கிய நண்பன் சீனுவுக்கு என் நன்றிகள்..




இப்போ ஆவிப்பா புத்தக வெளியீட்டு நிகழ்வில் இருந்து சில துளிகள்..





           வரவேற்புரை வழங்கிய ஆர்.வி. சரவணன், வழக்கம் போல துறுதுறுப்புடன் ஒவ்வொரு விருந்தினர்களையும் வரவேற்க வேண்டி பல ரிஸர்ச்சுகள் செய்து பத்து பதினைந்து பக்கங்களுடன் இறங்கினார்.. பின்னர் நேரமின்மை காரணமாக அதன் சாறை மட்டும் பிழிந்து அழகுடன் வரவேற்றார்.


             முதலில் "டிஸ்கவரி புக் பேலஸ்" வேடியப்பன் அவர்கள்  அரங்கம் தந்ததற்கு நன்றியும், புத்தக வாழ்த்துரைக்குமாய்  அழைக்கப்பட்டார்.



             இதுவரை அவரிடமிருந்து ஓரிரு சொற்களே வெளிப்பட்டு பார்த்திருக்கிறோம். அன்று மடை திறந்த வெள்ளம் போல் நம்ம ஸ்கூல் பையன் வாழ்த்துரை வழங்கிய போது ஆச்சரியமும் சந்தோஷமும் அரங்கில் நிறைந்திருந்தது.


            பின்னர் வாழ்த்த வந்த "மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர் எழுத்துகளைப் போலவே வார்த்தைகளையும் ரசனையுடனும் ரசிக்கும்படியும் கோர்த்துத் தந்தார். விழா முடிந்த பின் தானாகவே முன் வந்து விழா சிறப்புடன் நடைபெற்றதை தன் பாணியில் "நச்" என கூறிச் சென்றார்.




             புலவர் ராமானுசம் ஐயா புத்தகத்தை வெளியிட என் தந்தை பெற்றுக் கொண்டார். பின்னர் பேசிய புலவர் ஐயா ஆவிப்பா முயற்சியை வாழ்த்திவிட்டு மரபுக் கவிதை போல் புதுக்கவிதைகளும் அழகுதான் என்று கூறினார்..




             பின்னர் பேசிய சுப்புத்தாத்தா "நாங்களும் இஞ்சினியர் தான்" தொடரை தான் ரசித்து படித்ததை கூறிவிட்டு அதுபோல் இதுவும் நன்றாக இருக்கும் என்று வாழ்த்தினார்..



              இதுவரை அப்பாவை அருகில் பார்த்திருந்த எனக்கு ஓய்வுபெற்ற தமிழாசிரியர் தான் பேச்சிலும் அசத்த முடியும் என வைத்த கண் வாங்காமல் அவர் பேச்சை கேட்க வைத்தார்.



               வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த யாரும் வாழ்த்திப் பேசலாம் என சீனு அழைத்த போது முதல் ஆளாக விருப்பம் தெரிவித்து நீண்ட உரை ஆற்றி ஆவிப்பாவுக்கு பெருமை சேர்த்தார் "இரவின் புன்னகை" வெற்றிவேல்.



             கவிஞர் செல்லப்பா அவர்கள் கூறும்போது எல்லா பக்கங்களிலும் நஸ்ரியாவே ஆக்கிரமித்து இருப்பதால் இன்று இந்த புத்தகத்தை வீட்டிற்கு வாங்கிச் செல்ல முடியாதென வருத்தம் தெரிவித்தார்.. ;-)



            "வாத்தியார்" பாலகணேஷ் சார் வாழ்த்திய போது அவர் இந்த சிஷ்யர்களுக்கு எப்படி வாத்தியார் ஆனார் என்ற ரகசியத்தை வெளியிட்டார்..


            என் எல்லா படைப்புகளையும் முதல் ஆளாக வாசித்து கருத்து சொல்லும் வாசகி என் தங்கை மேடையில் பேசியபோது மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்திருந்தேன்.





            என் வேண்டுகோளை ஏற்று வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த பதிவர் அனன்யா, பதிவர் கீதா  ஆகியோரும் வாழ்த்திச் சென்றனர்.  தான் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அண்ணனின் வெளியீட்டு விழாவுக்கு கார்த்திக்கை அனுப்பி வைத்திருந்தார் மற்றொரு தங்கை காயத்ரி. கடைசி நிமிட அழைப்பை ஏற்று விழாவுக்கு வந்து பெருமைப் படுத்தினார் கவிஞர் மதுமதி.



                          புத்தகம் வாங்க வந்த இடத்தில் ஆவிப்பா வெளியீடு நடப்பது கண்டு தானும் கலந்து கொண்டு வாழ்த்தி புத்தகத்தையும் வாங்கிச் சென்றார் நண்பர் "கூத்துப்பட்டறை" ராஜன்.



               காற்றுக்கும் தன் காதுக்கும் மட்டும் கேட்கும் வண்ணம் பேசும் ரூபக் கூட உரத்த குரலில் ஆவியுடன் தன்  நட்பு உண்டான கதையை கூறி  அதிசயம் நிகழ்த்தினார். பின்னர் அவையோருக்கு நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.




               மொத்த நிகழ்ச்சியையும் ஓர் தேர்ந்த தொகுப்பாளருக்கு உரிய பாணியில் அசத்தினார் எழுத்தாளர் சீனு. ஆங்காங்கே நகைச்சுவையோடும், துள்ளலோடும் கூறிய விதம் சிறப்பாக அமைந்தது..



              ஆவிப்பா நிகழ்ச்சிக்கு வர முடியாவிட்டாலும் தொலைவிலிருந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி..


                                        ******************************

Friday, February 21, 2014

ஆவி டாக்கீஸ் - ஆஹா கல்யாணம்


இன்ட்ரோ  
                          உணர்வுகள் என்பது வடக்கிலும் தெற்கிலும் சமமே, வட இந்திய உணவு வகையை கூட சிறப்பான முறையில் தயார் செய்து அழகாக பரிமாறினால் தமிழன் அன்போடு ஏற்றுக் கொள்வான் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.  பொதுவாக ரீமேக் செய்யப்பட்ட படங்கள் ஒரிஜினலை ஓவர்டேக் செய்ததாக எனக்கு தெரிந்து சரித்திரமே இல்லை.. இதற்கு உன்னைப்போல் ஒருவன் வரை எந்தப் படமும் விதிவிலக்கல்ல. ஆனால் முதல் முறையாக ஒரு படம் நன்றாக ஓடிய  ஒரிஜினலை விடவும் சிறப்பாக வந்திருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்..
       



கதை         
                            தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் இன்னும் அவ்வளவாய் பழக்கப்படாத "வெட்டிங் ப்ளானர்" (Wedding Planner) எனும் ஹை-பை திருமண காண்ட்ராக்டர்கள் பற்றிய கதை. நாயகியின் கனவை உடன் நின்று நிறைவேற்றும் நாயகன். புகழின் உச்சிக்கு வர இருக்கும் சமயத்தில் ஏற்படும் சிறு மன உரசலால் இருவரும் பிரிய நேர்கிறது. ஈகோவை விட்டுவிட்டு இருவரும் இணைந்தார்களா, தொழிலில் வெற்றி பெற்றார்களா என்பதே கதை. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மொத்தமாக காண்ட்ராக்ட் விடும்  திருமணங்கள் இருக்கின்றன என்ற போதும் இன்னும் பிரபலமடையாத ஒரு விஷயத்தை மக்கள் மனதில் பதியும் வண்ணம் சொல்லியதில் படத்தின் ஒட்டுமொத்த டீமுக்கும் பங்குண்டு..
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           "நான் ஈ" படத்தில் நல்ல பிரேக் கிடைத்தும் பயன்படுத்தாமல் விட்டுவிட்ட நானி இந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, கல்லூரி மாணவிகளின் பேவரைட் லிஸ்டில் சிவகார்த்திகேயன், ஆர்யா ஆகியோரை பின்னுக்கு தள்ளுகிறார். எதார்த்தமான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அவர் சொந்தக் குரல் நமக்கு உறுத்தலாக இருக்கிறது, ஆனால் படத்தின் விறுவிறுப்பில் நாம் அதை ரசிக்க ஆரம்பித்துவிடுவதே உண்மை.. ஹீரோயின் 'டெல்லி குலாபி' வாணி கபூர். இவர் நடித்த "ஷுத் தேசி ரோமென்ஸ்" படம் பார்த்த போதே இந்தப் படத்தின் மீதான என் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. என் பேவரைட் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த கதாப்பாத்திரத்தில் எப்படி நடிக்கப் போகிறார் என்ற ஆவலும், கூடவே இந்த முகம் தமிழுக்கு சரிப்படுமா என்ற கேள்வியும் கண்முன் வைத்து பார்க்கத் துவங்க சின்மயியின் குரல் உதவியுடன் இந்த வெள்ளை "பிளமிங்கோ" மனதை கொள்ளை கொண்டது.

                             "காதலையும் வேலையையும் ஒன்றாக கலக்க கூடாது" என்று நானி சொல்லி செல்லும் அந்த ஒற்றைக் காட்சியில் முகபாவங்களால் நடிப்பின் உச்சம் தொடுகிறார். ஆயினும் "தமிழ் தொட்ட பெண்" கதாபாத்திரங்களுக்கு தேறுவது கடினம். சிம்ரன் ஏதோ வந்து போகிறார். படத்தில் சிறப்பாய் செய்திருக்கும் மற்றொரு நடிகர் 'படவா' கோபி. நானிக்கும் வாணிக்கும் இடையே பஞ்சாயத்து செய்து வைக்கும் காட்சியில் சிக்ஸர் அடிக்கிறார். படத்தின் பெரிய பலம் படத்துடன் சேர்ந்தே வரும் நகைச்சுவைகள்.

                               

இசை-வசனம்-இயக்கம்
                                 இசை "போடா-போடி" புகழ் தரண் குமார். படத்தின் முதுகெலும்பு நிச்சயம் இசைதான் என்ற போதும், "கெட்டி மேளம்" குரூப்பின் தீம் சாங் மற்றும் சர்ப்ரைஸ் பாடல் ஆகியவை கொஞ்சம் சொதப்பலாக அமைந்தது (படத்திற்கு பொருந்தாமல் ) என்ற போதும், பின்னணி, பாடல்கள் என அனைத்தும் சூப்பர். தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ற வசனங்களை வழங்கிய ராஜீவ் மற்றும் ஹபிப் கைதட்டல் பெறுகிறார்கள். மனீஷின் கதையை அழகாக டைரக்ட் செய்த கோகுல் கிருஷ்ணா நல்லதொரு படத்தை கொடுத்த திருப்தியை தருகிறார். இப்படத்தின் மூலம் தமிழ்தேசம் வரும் யஷ்ராஜ் குரூப் ஹிந்தியில் செண்டிமெண்ட் படங்களுக்கு பெயர் போன தயாரிப்பாளர்கள். இவர்கள் வருகை தமிழுக்கு இன்னும் சில நல்ல படங்கள் கிடைக்குமென நம்பலாம்..


                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                வாணியை இம்ப்ரெஸ் செய்ய வேண்டி நானி DVD கொடுக்கும் காட்சி மற்றும் இரும்பு வியாபாரி கதை சொல்லி திருமண ஆர்டர் வாங்கும் காட்சி. "பாதியே என் பாதியே " பாடல் காட்சி.

                  Aavee's Comments - Feel good marriage.


ஆவி டாக்கீஸ் - பிரம்மன்


இன்ட்ரோ  
                          இயக்குனராய் தன் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்த சசிகுமாரை மனதார நேசித்தவன் நான். அவர் நடித்த குட்டிப்புலி மற்றும் இந்தப் படம் அவர் மீது வைத்திருந்த மானாவாரியான மரியாதையை குழி தோண்டி புதைக்கும்படி செய்துவிட்டது. முதல் பத்து நிமிடத்திலேயே படம் மொக்கை போடத் துவங்க படத்திற்கு எப்பவும் போல லேட்டாக வந்த ஒருவன் என் அருகில் அமர்ந்து கதை என்ன சார் என்ற போது ஒட்டுமொத்த கடுப்பையும் சேர்த்து அவரிடம் "அதுக்காக தான் சார் வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்" என்றேன்.
       


கதை         
                               சந்தானம் மட்டும் இருந்தால் போதும் என்ற முடிவோடு ஒரு மொக்கை கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி ஒக்கே செய்த ஒரு எழுத்தாளன் நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மொக்கை கதையை படமாக எடுக்க ஒரு இயக்குனரிடம் கொடுக்க அவர் "தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத" அந்த கதையை படமாய் எடுத்து வெற்றி பெறுகிறார். இது திரையில், ஆனால் நிஜத்தில் தமிழ் ரசிகர்கள் கொஞ்சம் உஷாரானவர்கள் என்பதை இயக்குனர் சாக்ரடீஸ் உணரவில்லை போலும்.
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                            நாயகன் சசிகுமார் "நண்பன்னா" என்று ஆரம்பித்து பேசும் பஞ்ச் டயலாக்குகள் ஆகட்டும் , ரோமென்ஸ் என்ற பெயரில் ரசிகர்களை கும்பிபாகம் செய்வதாகட்டும் குட்டிப்புலி படத்தில் விட்டதை தொடர்கிறார். மனிதர் நடனத்தில் "மிர்ச்சி" சிவாவுக்கும், 'தல' அஜித்துக்கும் ஹெவி காம்பிடேஷன் கொடுக்கிறார்.  கீழே விழத் தயாராய் இருக்கும் பஸ்ஸில் ஒரு கண்டக்டர் வந்து பிங்கோ யமிட்டோஸ் கொடுப்பாரே, அந்த வேடம் தான் சந்தானத்துக்கு. நாம் மொக்கை காட்சிகளால் தளர்வடையும் நேரத்தில் எல்லாம் ஒன் லைன் காமெடி எனும் தயிர்வடை கொடுத்து செல்கிறார்.

                            படத்தின் ஒரே ஆறுதல் ஹீரோயின் லாவண்யா. கன்னத்தில் குழி விழ சிரிக்கும் அழகு முகம், கோபம், ரோமென்ஸ், பீலிங்க்ஸ் என
எல்லாவற்றிலும் நன்றாக செய்கிறார். வேறு ஏதாவது படத்தில் அறிமுகமாகி இருந்தால் இவர் சோபித்திருப்பாரோ? இரண்டாம் பாதியில் கோடம்பாக்க அசிஸ்டன்ட் டைரக்டரை கண் முன் நிறுத்துகிறார் சூரி. அளவான நடிப்பு. நண்பனாய் வரும் நவீன் ஒரு ரவுண்ட் வருவதற்கான அறிகுறி தெரிகிறது. ஜெயப்ரகாஷ் நிறைவான நடிப்பு. தமிழ் மற்றும் மலையாளத்தில் சில நல்ல படங்களில் நடித்த பத்மப்பிரியா இதுபோன்ற ஒற்றை கமர்ஷியல் பாடலுக்கு ஆடுவது ரசிக்கும்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மனம் ஒப்பவில்லை.


இசை-இயக்கம்
                                 DSP இசை சுமார்.. ஒன்றிரண்டு பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. அறிமுக இயக்குனர் சாக்ரடீஸ் அடுத்த படத்தில் தொய்வின்றி கதை சொல்லும் உத்தியை கடைப்பிடித்தால் மட்டுமே கோலிவுட்டில் தேற முடியும்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 கொஞ்சம் கிளிஷே நிறைந்த காட்சி என்றாலும் அந்த கிளைமாக்ஸ் காட்சி நன்றாக இருந்தது. சந்தானத்தின் குபீர் சிரிப்பு வெடிகள் அசத்தல். படத்தின் ஆரம்பத்தில் வரும் "ஓடு ஓடு" என்னும் குறியீடு நிறைந்த பாடலை படம் முடியும் போது மீண்டும் கேட்டு புரிந்து கொண்டு ரசிகர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக  அரங்கை விட்டு தெறித்து ஓடிய காட்சி.

                  Aavee's Comments - Cud've been a "Fun"tastic muvee.

Thursday, February 20, 2014

ஆவி டாக்கீஸ் - "ஆஹா கல்யாணம்" (Music Review)

             
                     ஹிந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார்கள். ஒரிஜினல் படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் நாயகி அனுஷ்கா ஷர்மாவும், இசையும். தமிழில் "நான் ஈ"  புகழ் நானி நடித்து வெளிவர இருக்கிறது. இதன் பாடல்கள் எப்படி வந்திருக்குன்னு பார்ப்போமா?



                     1. "மழையின் சாரலில்" -  தாமரையின் "திகட்டாத" தமிழ் வரிகள்,  நரேஷ் ஐயர், ஸ்வேதா மேனன் பாடும் இந்த பாடலை கேட்கும்போதே டூயட்டை திரையில் காணும் ஆவல் எழுகிறது.

                     2. கிடார் இசையுடன் துவங்கும் "பாதியே என் பாதியே" பாடல் இடையில் வயலின் வாசிப்புடன் இனிமையோடும் அதே சமயம் பிரிவின் வலியை அழுத்ததோடும் ஒலிக்கும் பாடல். சக்திஸ்ரீ கோபாலனின் குரலில் ஒரு பாதியும்,  அபயின் குரலில் மறு பாதியும் ஒலிக்கிறது.

                     3. "The Punch Song" - போடா போடியில் வரும் குத்து சாங் மெட்டை போலவே வரும் பாடல்.. மானசி, நிவாஸ் குரலில் டி.ஆர், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் பன்ச் டயலாக்குகளை ஒன்று சேர்த்து பாடலாக்கியிருக்கிறார்கள்.   கொஞ்சம் இரைச்சல் அதிகம் என்றாலும் முன்வரிசை ரசிகர்கள் நடனமாட ஏதுவான பாடல்.

                     4. "Bon Bon" - ஹரிசரண் சுனிதி சவ்ஹான் பாடியிருக்கும் துள்ளல் பாங்க்ரா.. பாடலில் ஆங்காங்கே  வடக்கத்திய சாயல் தெரிகிறது. தரணின் இசை மேலாண்மை "ஆஹா" போட வைக்கிறது.

                     5. "ஹனியே ஹனியே" பாடல் ஆல்பத்தின் "மெல்லிசை சரவெடி".. நரேஷ் ஐயரின் குரலிலும் பின்னர் அதே பாடல் சுப்ரியாவின் குரலிலும் வருகிறது.. இனி வரும் சில நாட்களுக்கு தொலைக்காட்சியில் அடிக்கடி இடம் பிடிக்கப் போகும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.

                     6. சின்மயியின் தித்திக்கும் குரலில் "கத கத" பாடல் காதல் அரும்பிய பெண்ணின் உணர்வுகளை சொல்லும் பாடல். வயலின், மத்தளம் என இசையின் ஆதிக்கம் நிறைந்த துடிதுடிப்பான பாடல்

                     7. "கூட்டாளி கூட்டாளி" பாடல் பென்னி தயாள் மற்றும் உஷா உதூப்பின் குரல்களில் தாளம் போட வைக்கும் பாடல். ஹை-பிட்ச்சில் இருவரும் பாடுவதை கேட்கையில் மனதில் உற்சாகம் தோன்றும்..    

                         போடா-போடி  படத்திற்கு பின் இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைத்திருக்கும் படம் இது. சில பாடல்கள் இவரது முந்தைய படங்களின் சாயல்களில் இருந்தாலும் ஒரிஜினல் (ஹிந்தி) பாடல்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அதே சமயம் தமிழ் ரசிகர்களை கவரும்படி பாடல்கள் நிறைவாய் இருக்கிறது.


Sunday, February 16, 2014

நான் ரசித்த பாடல் - போ இன்று நீயாக,..

இந்த பாடல் வேலையில்லா பட்டதாரி படத்தில் "Poetu" தனுஷ் தானே எழுதி பாடியது.. 


போ இன்று நீயாக..
வா நாளை நாமாக,

உன்னை பாக்காமலே, ஒண்ணும் பேசாமலே, 
ஒன்னை சேராமலே எல்லாம் கூத்தாடுதே..
லலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே
லலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு..
நீ வந்ததாலே என் சோகம் போச்சு.,
பெருமூச்சு விட்டேன், சூடான மூச்சு,
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு..

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்..

இது சாரை காத்து, என் பக்கம் பாத்து,
எதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து..

லலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே
லலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே 


எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடித்திருந்தால் கீழ்க்கண்ட சுட்டியில் இந்த பாடலை தரவிறக்கம் செய்யலாம்..

http://tamilnewmp3.net/downloads/load/2014%20Hits/Velai%20Illa%20Pattathari%20Mp3/Po%20Indru%20Neeyaga%20-%20TamilNewMp3.Net.mp3

Thursday, February 6, 2014

பயணிகள்-நிழற்குடை - 2014FEB06

              எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர், பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் (Philip Seymour Hoffman) மரணம்! அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான Hunger Games படத்தில் இவர் நடித்திருந்தார். Doubt, Capote, Mission Impossible 3 போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் தோன்றும் இவர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. RIP Philip Seymour Hoffman!!




                                                 *****************
                சமீபத்தில் வெளியான வீரம் ஜில்லா போன்ற படங்கள் இரண்டையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அங்கே சென்ற போது கண்ட காட்சிகள் நாம் இன்னும் பக்குவப்பட்ட மனிதர்களாய் மாறவில்லை என்பதையே உரைத்தது. ஒரு நடிகரின் ரசிகன் மற்ற ரசிகர்களை கேவலமாக சாடுவதும், அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதும் பண்பட்டவர்கள் போல் தோன்றவில்லை. இதற்கும் அதில் சிலர் ஐ.டி கம்பெனிகளில் பணிபுரியும் நபர்கள். ரசிகர்களாய் இருப்பது தவறில்லை. ஆனால் அதற்கு முன் பொது நாகரிகம் தெரிந்த மனிதனாய் இருத்தல் மிக மிக அவசியம். இதை மறைமுகமாக ஊடகங்களும் ஊக்கப் படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. பில்லாவும் ஜில்லாவும் எல்லாமல்ல என்று இவர்கள் உணரும் தருணம் எப்போது வருமோ?

                                                 *****************

                   சென்ற சனவரி 26 குடியரசு தினத்தை ஒட்டி மெரீனா கடற்கரையில் வாத்தியாரும் சிஷ்யப் பிள்ளைகளும் சந்திப்பு அரங்கேறியது. வழக்கம்போல் வெட்டி அரட்டைகள் நிகழ்த்தாமல், கடற்கரை மணலில் கொஞ்சி விளையாடிய வஞ்சிகளை நோக்காமல் 2014ஆம் ஆண்டு செய்து முடிக்க வேண்டிய பல பணிகளை பற்றிய கலந்தாய்வு நடந்தது. முதலாவதாக "வாசகர் கூடம்" எனும் தளம் ஆரம்பித்து அதில் புத்தக விமர்சனங்கள்  வெளியிடலாம் எனவும் அதற்கு "புத்தகம் சரணம் கச்சாமி" என்று பஞ்ச் லைனை வைக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. எல்லா புத்தகங்களையும் எல்லாரும் படிப்பதென்பது இயலாத காரியம். ஆகவே தாம் படித்து ரசித்த நல்ல புத்தகங்களின் விமர்சனங்களை இங்கே பகிர்வதன் மூலம் பல வாசகர்களுக்கு அது சென்றடையும் என்ற நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் மோஸ்ட் வெல்கம்!!

                                                   *****************
               
                       உலக நுண்ணறிவாளர் தினம் தொடங்கி இன்றோடு பதினொரு ஆண்டுகளாகிறது. இன்று ( பிப்ரவரி 6 ) பிறந்த நாள் காணும் 'கோவை நேரம்' ஜீவா, மனோஜ் மற்றும் இன்று பிறந்த எல்லா நுண்ணறிவாளர்களுக்கும் ( Born  Intelligents ) என் வாழ்த்துகள். இந்த நன்னாளில் என் வாசகர்கள், பதிவர்கள்  மற்றும் எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. தயை கூர்ந்து இவற்றை ஏற்றுக் கொண்டு உங்கள் தொடர்ந்த ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பின்வருவன சென்ற ஆண்டு ( பிப் 6,2013- பிப் 5,2014)நான் படித்து/பார்த்து/கேட்டு  ரசித்தவைகளில் இருந்து மட்டுமே.. மத்தவங்க கோச்சுக்காதீங்க..

நுண்ணறிவாளர் விருது:

(விருதை உங்க தளத்துல இணைச்சுக்கோங்க !!)

திரையுலகு:

சிறந்த இயக்குனர் - ஜித்து ஜோசப் (த்ரிஷ்யம், மெமரிஸ்)
சிறந்த நடிகர் - பகத் பாசில் (நார்த் 24 காதம், ஆமென், ரெட் ஒயின்)
சிறந்த நடிகை - தீபிகா படுகோன்  ( ஏ ஜவானி ஹே தீவானி)
சிறந்த படம்  -  நார்த் 24 காதம் (மலையாளம்), லஞ்ச் பாக்ஸ் (ஹிந்தி)

பதிவுலகு:

நெகிழ வைத்த பதிவு - தாத்தா (ஸ்கூல்பையன் )

சிறந்த பதிவு ( சமூகப் பார்வை) - திருநங்கை சங்கீதா (ஜீவா) , சுற்றுச்சூழல் (கோகுல்)

சிறந்த பதிவு ( நகைச்சுவை) -  'கொசு'வநாத புராணம் (பாலகணேஷ்)

சிறந்த பதிவு (ஜோக்ஸ்) - ஜோக்காளி (பகவான்ஜி)

சிறந்த பதிவு ( பொது அறிவு) -தஞ்சாவூர் வீணை (சுரேஷ்)

சிறந்த பதிவு ( பயணம்) - பத்மநாபபுரம் அரண்மனை (கா.போ.க ராஜி) , யானையை விழுங்கும் பாம்பு ( கரந்தை ஜெயக்குமார்)

சிறந்த பதிவு (ஆய்வு) - இந்திய கற்பாறை சித்திரங்கள் (கலாகுமரன்)

சிறந்த பதிவு (சரித்திரம்) - வானவல்லி ( வெற்றிவேல் )

சிறந்த பதிவு (கிராமிய மணம் ) - ஊர்ப்பேச்சு (அரசன்)

சிறந்த பதிவு (காதல் கடிதம்) -  வார்த்தைகள் தேவையா? (சுபத்ரா)

சிறந்த பதிவு ( கட்டுரை) - சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும் (டி.என். முரளிதரன்)

சிறந்த பதிவு (அனுபவம்) - ஸ்கூல் பையன் (சீனு)

சிறந்த பதிவு (கல்வி) - இந்த கல்வியை கொடுப்பதெப்படி (எழில்)

சிறந்த பதிவு (தமிழ் ) - உங்களின் தமிழ் அறிவு எப்படி ('தளிர் சுரேஷ்)

சிறந்த பதிவு (விளையாட்டு) - நியுசிலாந்து தொடர் (எல்.கே)

சிறந்த பதிவு ( கிளுகிளுப்பு) - மார்னிங் சிக்னஸ் (நம்பள்கி)


சிறந்த தொகுப்புகள் - முத்துக்குவியல், தேன்மிட்டாய்

சிறந்த கதை ( தொடர்) -

சிறந்த திரை விமர்சனம் - ஆல்இன்ஆல் அழகுராஜா (உலக சினிமா ரசிகன் )

சிறந்த கவிதாயினி - 'கவிஞர்' கோவை சரளா 
                                        'கவிஞர்' தென்றல் சசிகலா
                                         "சகோ"அம்பாள் அடியாள் 
                                         "என் தங்கை"  காயத்ரி

சிறந்த கவிஞர் -  புலவர் இராமாநுசம்
                                 கவிஞர் ரமணி
                               

சிறந்த பதிவர் (ஆன்மிகம்) - இராஜராஜேஸ்வரி ( மணிராஜ்)

சிறந்த பதிவர் (சினிமா)  -    ஆரூர் மூனாஉலக சினிமா ரசிகன்,  செங்கோவி, ஹாரி

சிறந்த பதிவர் (பல்சுவை) - சுப்புத்தாத்தா,  எங்கள் பிளாக்

சிறந்த பதிவர் (தொழில்நுட்பம்) - அப்துல் பாசித், பிரபு கிருஷ்ணா

சிறந்த பதிவர் (பின்னூட்டப் புயல்) - திண்டுக்கல் தனபாலன்

சிறந்த பதிவர் (ஜாலி) - நாஞ்சில் மனோ, அனன்யா மகாதேவன் , ஸாதிகா, "விக்கியுலகம்" வெங்கட், ஆர்.வி.சரவணன், 'மேலையூர்' ராஜா 

சிறந்த புகைப்படப் பதிவர் - வெங்கட் நாகராஜ் (பதிவர் சந்திப்பு படங்கள்)

சிறந்த பதிவர் (நையாண்டி) - சிவகுமார் (மெட்ராஸ்பவன்),  "பிலாசபி" பிரபாகரன், ஜீவன்சுப்பு

சிறந்த பதிவர் ("இலக்கியம்") - கவியாழி கண்ணதாசன்



சிறப்பு "ஆவி" விருது - 


 1. திடம்கொண்டு போராடு "சீனு" (கவிதைப் போட்டி ஒன்றை நடத்தி தொய்வடைந்திருந்த பதிவுலகத்தை தட்டி எழுப்பியதற்காக)

2. வலைச்சரம் "சீனா", தமிழ்வாசி "பிரகாஷ் ( ஆசிரியர் பொறுப்பு தந்து பதிவர்களை ஒருவரை ஒருவர் அறியச் செய்யும் அரும் பணியை செய்து வருவதற்காக)



                                                         ************
                                           
                                               


How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...