Thursday, October 30, 2014

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! (குறும்பட- சிறுகதை போட்டி)





"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..!
குறும்பட- சிறுகதை போட்டி


ஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.

முதல் பரிசு:      ரூ.2000
இரண்டாம் பரிசு: ரூ.1000
மூன்றாம் பரிசு:  ரூ.500
ஆறுதல் பரிசு :   ரூ.250   (இரண்டு பரிசுகள்)

தேர்வுக்குழு:

"எங்கள் பிளாக்" ஸ்ரீராம் அவர்கள்,
"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,
"மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர்கள்,

மற்றும் உங்கள் "ஆவி"


விதிமுறைகளும், நிபந்தனைகளும்:
  • உங்கள் படைப்புகள்  ​​​400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

  • கதைகள் நகைச்சுவைகாதல், க்ரைம், சமூக உணர்வுக் கதைகள், விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோ, யார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.

  • தேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை' இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )

  • கதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வார, மாத இதழ்களுக்கோ, இணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய்  இருத்தல் கூடாது.

  • கதை உங்கள் தளங்களிலோ, வேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது.  அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.

  • எந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோ, நிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும், தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.

  •  போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.

  • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்). 

  • கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •            உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு 12 மணிக்குள் (IST)

  •          போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.

  •             தேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

  • .    ​   போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ  தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​


கதைகளை அனுப்பும் முறை:


  •    நேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும். 

  • MS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். 

  • (எ.கா)  உங்கள் கதையின் தலைப்பு "காதல் போயின் காதல்" என்றால் MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  •  கதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ,  நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)

  • MS-Word  பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  •  Subject இல் Aavee Talkies ShortFilm-ShortStory Contest 2015 என்று குறிப்பிடுதல் அவசியம்.

  • Body இல்  பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.

  •  MS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்தி பிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன்  சேர்த்து அனுப்பவும்.
  • (PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)


பெயர்* : 
புனைபெயர்:
(Optional )
வசிக்கும் நகரம்:
(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/  நாடு சேர்த்து குறிப்பிடவும்.)
அலைபேசி எண்* :
வலைத்தளம்:
(Optional )
கதையின் தலைப்பு* :
கதை எண்* : 



Dates to Remember

                  


Tuesday, October 14, 2014

சில நொடி சிநேகம் உருவான கதை



                வலையுலக 'வாத்தியார்' பாலகணேஷ் என் எழுத்துகளுக்கு துரோணாச்சாரியார் என்றால், என் நடிப்பு/திரை ஆசைக்கு Lays  இட்டவர் என் 'திரையுலக பாலச்சந்தர்' துளசிதரன் அவர்கள் தான். 'பரோட்டா கார்த்திக்' என்ற குறும்படத்தில் சிறு வேடம் என்ற போதும் திடீர் வாய்ப்பு கொடுத்து தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்களில் பலருக்கும் என்னை அறிமுகப் படுத்தினார். அந்த குறும்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய 'குடந்தை சரவணன்' அவர்கள் ஒரு குறும்படம் தயாரிக்க இருப்பதாய் சொல்ல ஆர்வம் மிகுதியில் அவரிடம் சென்று என்னையும் ஒரு உதவி இயக்குனனாய் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் 'நீங்க இல்லாமலா?, நாமெல்லாம் சேர்ந்து தான் படம் பண்றோம்." என்றார். கேட்டதும் மனதிற்குள் ஒரு சந்தோசம். ஆயினும் சிறிது நாட்களுக்குப் பிறகு நானும் அதை மறந்து விட்டேன்.



               ஒரு நாள் சரவணனிடமிருந்து போன். "ஆவி, நான் அன்னைக்கு சொன்ன மாதிரி ஒரு குறும்படம் பண்ணலாம்னு இருக்கேன். இதுதான் கதை" என்று சொன்னார். கதையை முதலில் கேட்டதும் சுமார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு உரையாடினோம். பின் அதனுடைய திரைக்கதை வடிவத்தை அனுப்பி வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றப்பட்டு அந்தக் கதை ஒரு நல்ல கமர்ஷியல் குறும்பட திரைக்கதையாக  வடிவெடுத்தது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக ஓடக்கூடிய வகையில் தயாரான அந்த திரைக்கதையை படமாக எடுக்க ஒரு நாள் குறிக்கப்பட்டது. துளசி சார் பாலக்காட்டிலிருந்தும், நான் கோவையிலிருந்தும் சென்னை வர ரயில் டிக்கட் புக் செய்தாயிற்று.

             அந்தக் கதையில் நான் ஒரு சிறு வேடம் ஏற்பதாகவும் இருந்தது. அப்போது அந்த கதையை படமாக்குவதில் இருந்த சில சிக்கல்களை மனதில் கொண்டு அந்த படத் தயாரிப்பு ஒத்திவைக்கப் பட்டது. ஆயினும் டைரக்டர் எங்களிடம் "நீங்க வாங்க, வேற ஒரு சப்ஜெக்ட் எடுப்போம்." என்றார். நானோ "பரவாயில்ல சார்.  அப்புறம் பார்த்துக்கலாம். " என்றேன். "இல்ல ஆவி. இன்னொரு சப்ஜெக்ட் என் வலைல மக்கள் மிகவும் ரசித்த ஒரு பதிவை குறும்படமா எடுக்கலாம்னு இருக்கேன். So ஒண்ணும் பிரச்சனையில்ல நீங்க வாங்க.." என்றார்.  "இதுல நீங்களும் அரசனும் லீட் ரோல் பண்றீங்க." என்றதும் எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த நாயகன் "Gangnam " ஸ்டைலில் நடனமாட தொடங்கிவிட்டான்.



          அதன்பின் இருவாரங்களில் திரைக்கதை தயார் செய்து, தினமும் காலையிலும் மாலையிலும் என்னிடமும், அரசனிடமும் கதை விவாதம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது எங்கள் 'சில நொடி சிநேகம்'. கீதா ரங்கன் மேடம் மற்றும் துளசி சாரின் உள்ளீடுகளால் இன்னமும்  பட்டை தீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டது. திட்டமிட்டபடி ஒரு பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரி சென்னை போக்குவரத்து அலுவகத்தில் அனுமதி கேட்க சென்ற எங்கள் இயக்குனரிடம் நான்கைந்து இடங்களில் அனுமதி பெற்றாலே படப்பிடிப்பு நடத்த முடியும் என்று கூறியதும் கொஞ்சம் தளர்ந்து போனார்.  கூடுமானவரை முயற்சித்துவிட்டு பின் அதிக நேரமில்லாத காரணத்தால் படப்பிடிப்பை கும்பகோணத்தில் வைத்துக் கொள்ள தீர்மானித்தார். கடைசி இரண்டு நாட்களில் கும்பகோணத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்று மற்ற ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்திருந்தார். இந்த எல்லா முயற்சிகளையுமே அவரும் அவர் தம்பி இருவருமாகவே செய்து முடித்தனர். தொலைவிலிருந்து மனதளவில் மட்டுமே எங்களால் ஊக்கம் தர முடிந்தது.



            படப்பிடிப்பு அன்று கும்பகோணம் வந்தடைந்த சென்னை, கேரளா  மற்றும் கோவை நடிகர்கள் (?!!)  முதல் காட்சி ஆட்டோ ஒன்றில் நடிக்க படமானது. மூதல் ஷாட்டே  கிட்டத்தட்ட பத்து டேக் வரை போக டைரக்டர் டென்ஷனின் உச்சியில் இருந்தார். இதற்கும் மிகவும் எளிமையான ஒரு காட்சி அது. எல்லோரும் புதுமுகமாதலால் வந்த தடுமாற்றங்கள் அவை. ஒளிப்பதிவாளர்கள் ஜோன்ஸும், கார்த்திக்கும் துளசி சாரிடம் வந்து இயக்குனரை கொஞ்சம் அமைதிப்படுத்துமாறு கூறிவிட்டு சென்றனர்.  அதற்கு பிறகு வந்த காட்சிகளெல்லாம் ஓரிரு டேக்குகளில் ஒக்கே ஆக டைரக்டர் ஹேப்பி. மதியம் இயக்குனரின் குடும்பத்தாருடன் அமர்ந்து டீம் லஞ்ச் இனிதே முடிந்தது.

              மதியம் நடுரோட்டில் ஒரு சில காட்சிகள் எடுத்தது, காலையில் பஸ் ஸ்டாண்டில் எடுத்ததை விட சிரமமாக இருந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாதலால் முடிந்தவரை பப்ளிக் உள்ளே வராதவாறு பார்த்துக்கொண்டோம். அதிலும் துளசி சார் காரில் வரும் காட்சி ஒன்றை சிலமுறை எடுக்கவேண்டி இருந்ததால் முன்னும் பின்னும் ஒட்டியபடி எடுத்த அனுபவம் சொல்லில் வடிக்க முடியாதது. மாலை மீண்டும் பஸ் ஸ்டாண்டில் சில காட்சிகளை எடுத்துவிட்டு படப்பிடிப்பை இனிதே முடித்தோம். படப்பிடிப்பு என்பது வெறும் இருபத்தியைந்து சதவிகிதம் தான், மீதி எடிட்டிங், டப்பிங், கரெக்ஷன் என பல படிகளை உள்ளடக்கியது என்பதை அதற்கு பிறகு வந்த நாட்களில் புரிந்து கொண்டேன்.



               அலுவலகம் முடித்து பின் எடிட்டிங் வந்து சேர்ந்த அரசன், இயக்குனர்  மற்றும் கார்த்திக்,   ஜோன்ஸுடன் இரு வாரங்களுக்கு மேல் இரவில் கண்விழித்து காலை மூன்று அல்லது நான்கு மணிக்கு உறங்கி மீண்டும் அடுத்த நாள் வேலை செய்து என பரபரப்பாக சென்ற நாட்கள் அவை. பின்னர் ஒரு நள்ளிரவில் டப்பிங் வேலை நடந்தது.  எல்லாம் முடிந்து நண்பர்கள் சிலருக்கு மட்டும் டைரக்டர் "ஸ்பெஷல் ஷோ" (?!!) ஏற்பாடு செய்ய Mixed  Reviews கிடைத்தது. அதைக்கொண்டு மீண்டும் ஒரு வாரம் திருத்தங்கள், மாற்றங்கள் சில செய்து ஒரு வழியாக முடித்துவிட்டு பெருமூச்சு விட்டோம். பாலகணேஷ் சார் மற்றும் ஹர்ஷவர்த்தன் (இயக்குனரின் மகன்) அழகுற வடிவமைத்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

                        நேற்று (அக் 13) இயக்குனர் தன் மானசீக குருவான இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடமிருந்து அழைப்பு வர அவசர அவசரமாக அவர் அலுவலகம் நோக்கி ஓடினோம். அலுவல் நாளானதால் மொத்த டீமும் கலந்து கொள்ள முடியாமல் போனது. எல்லோருடைய கண்ணும் படத்தை பார்த்து முடித்த 'திரைக்கதை வித்தகரின்' இதழ் அசைவை எதிர்நோக்கியபடி இருந்தது. அந்த இருபதுக்கு இருபது அறையில் மௌனம் மட்டுமே தாண்டவமாடியது.  பாக்யராஜ் தன் தொண்டையை செருமிக்கொண்டு வாய்திறந்தார். அவர் என்ன சொல்லியிருப்பார் என்பதை நீங்க யூகித்து சொல்லுங்களேன்..! ;)


சிலநொடி சிநேகம் - டீசர்
-------------------------------

                'பூக்கள் பூக்கும் தருணம் போலத்தான் நட்பு பூக்கும் தருணமும்..!'  எந்த நொடியில் மலரும் என கணிக்க முடியாத ஒரு உறவு அது. பள்ளித் தோழன், கல்லூரி நண்பன், அலுவலக நட்பு என வாழ்க்கையில் பல்வேறு நட்புகளை சந்தித்திருப்போம். இதோ நட்பின் இன்னொரு வகையிலிருந்து சில துளிகள் மட்டும் உங்கள் பார்வைக்காய்..!




அக்டோபர் 26 - மதுரையில் நடைபெறும் மூன்றாவது பதிவர் சந்திப்பில் வெளியிட இருக்கிறோம். காணத் தவறாதீர்கள்..!



**********

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...