Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - கமலின் பார்வையில்

                        

                           கலைஞானியின் பேட்டி என்றால் சும்மாவா? கவிஞர் அறிவுமணி தன்னுடைய "எதையோ எழுதறேன் " ப்ளாகிற்காக கமலிடம் பேட்டி எடுக்க ஆசைப்படுவதாக கூற, கமலும் சம்மதிக்க உற்சாகத்துடன் கிளம்பிய அறிவுமணி ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டின் வரவேற்பறையில்...
                        
                           "வணக்கம், மிஸ்டர் அறிவுமணி!!" என்றபடி உள்ளே நுழைந்த கமல் அறிவுமணிக்கு எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
அறிவுமணி :  " வணக்கம் சார்.. என்னைப் போல சாதாரண மனிதனுக்கும் பேட்டி கொடுக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி."
கமல் :                " நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனுஷன் தான்..என்ன, நான் சினிமாவுல இருக்கேன். நீங்க இல்ல அவ்வளவுதான்"
அறிவுமணி :  " மன்மதன் அம்பு படத்துல இன்னும் இளமையா தெரியரீங்கலே, எப்படி?
கமல்:                " நீங்க இந்த மாதிரி சொல்லும் பொய்களை நம்பி விடுகிறேன், அதனாலதான்!
அறிவுமணி:  " இந்த படத்தை எல்லா தரப்பு மக்களும், குறிப்பா குழந்தைகள் பாக்க முடியாது போலிருக்கே.."
கமல்:               " இந்த காலத்து பசங்க எல்லாம் படு சுட்டி. இதெல்லாம் அவங்களுக்கு நாம கத்து தர வேண்டியது இல்லை. தவிர, இந்த மாதிரி இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்லிட்டு இருக்கப் போகிறோம். எத்தனையோ வன்முறைகளை எல்லாம் பசங்க சினிமாவின் மூலம் கத்துக்கறாங்க. நல்ல விஷயம் கெட்ட விஷயம் ரெண்டும் கொட்டிக் கிடக்கு. நல்லதை மட்டும் எடுக்க பெற்றோர் தான் பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அறிவுமணி :  " இது ஒரு முழு நீள நகைச்சுவைப் படம்னு சொன்னாங்களே?"
கமல்:                " அப்படியா, யாரு சொன்னது? "
அறிவுமணி:   " த்ரிஷாவுடன் முதல் படம். அது பற்றி.."
கமல் :               " வெல், கதைக்கு தேவையான அளவு வந்து போயிருக்காங்க.  அவங்க மட்டும் இல்ல, மாதவன், சங்கீதா, ரமேஷ் அர்விந்த், ஊர்வசி , உஷா உதூப் இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்காங்க..
அறிவுமணி : "ஒ, இந்த படத்தின் கதை, திரைக்க்கதை, வசனம் எல்லாமே.. நீங்க தான் எழுதியிருக்கீங்கன்னு போட்டிருக்கு, ஆனால் இந்த கதை ஏற்கனவே வந்த "There's Something about Mary" ங்கிற படத்தின் தழுவல்னு பேசிக்கறாங்களே!!
கமல் :               " சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. அதெல்லாம் பார்த்திருந்தா நமக்கு கம்ப ராமாயணம் கிடைச்சிருக்காது, லேட்டஸ்டா ஒரு எந்திரனும் கிடைச்சிருக்காது"
அறிவுமணி :  " அந்த சர்ச்சைக்குரிய பாடலைப் பற்றி.."
கமல்:                " நான் எது எழுதினாலும் சர்ச்சைக்குள்ளாயிடுது. இப்படித்தான் குணாவில் கண்மணி அன்போட ன்னு நான் எழுதின பாட்டைக் கேட்டுட்டு கண்மணின்ற பொண்ணோட வீட்டுக்காரர் கேஸ் போட்டுட்டார்"
அறிவுமணி :  " ம்ம்.. பாவம் சார் நீங்க.. அதுசரி. அவ்வளவு செலவு பண்ணி படத்தை பாரிஸ், வெனிஸ் மற்றும் கப்பலில் எல்லாம் எடுத்திருக்கிறீர்களே.. இதே கதைய ஏன் பாரிஸ் கார்னரிலோ, நேப்பியர் பிரிட்ஜ் கிட்டயோ ஏடுத்திருக்கலாமே?"
கமல் :                " ஓசில ஒரு உல்லாசப் பயணம் போக சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூவத்தில் படமெடுப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம் தான்.
அறிவுமணி : "சரி, இந்த படம் மூலம் என்ன சொல்ல வர்றீங்க?"
கமல் :               " எல்லாத்திலயும் ஒரு மெசேஜ் எதிர் பார்த்தா எப்படிங்க?"
அறிவுமணி :  " இதுல, நடிகைகள் மோசமானவர்கள் என்பது போல் சித்தரிச்சுருக்கீங்களே?"
கமல் :               " அட, நான் எங்கீங்க நடிகைகள மோசமானவங்கன்னு சொன்னேன். அவங்க நல்லவங்களா இருந்துருக்கலாமேன்னு தானே சொன்னேன்."
அறிவுமணி :  " சரி, இந்த பேட்டி மூலம் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?"
கமல் :               " எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!"

தலைவர் படத்துக்கு விமர்சனமா?  அது நிச்சயம் தேவையில்லை. இந்தப் படத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். இந்தப் படத்தில் பெரிய நகைச்சுவயையோ, சண்டைக் காட்சிகளையோ, எதிர்பார்த்து செல்ல வேண்டாம். ஒரு முழு நீள நாடகத்தை விரும்புவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்!!

Friday, December 17, 2010

மேலே ஒரு சூரியன்!!

                            
    
                                            இந்தக் காதல் என்னுள் எப்போது தோன்றியது என்று சரியாக நினைவில் இல்லை. ஆறு மாதக் குழந்தையாய் இருந்த போது அன்னை தன் மடியிலிருத்தி அடுத்த வீட்டுப் பெண்குழந்தையைக் காட்டி சோறூட்டிய போதா? வளரும் வயதில் ராமராஜன் மற்றும் ராஜ்கிரணின் படங்களைப் பார்த்த போதா? வாலிபப் பருவத்தில் அழகே வடிவான அவள் தோற்றத்தைப் பார்த்தா? தும்பைப் பூவை தோற்கடிக்கும் அந்த வெள்ளை நிறத்தைப் பார்த்தா? எப்போது இந்தக் காதல் என்னுள் தோன்றியதென்று சரியாக நினைவில் இல்லை.
                          
                                            என்னங்க, டைட்டிலுக்கும், படத்திற்கும் சம்பந்தம் இல்லாம ஏதோ எழுதிகிட்டு இருக்கேன்னு பாக்கறீங்களா? அந்த விண்ணுக்கும் மண்ணுக்குமே சம்பந்தம் உண்டுன்னு "சின்னக் கவுண்டர்" " சொல்லி இருக்கும் போது இதுகளுக்குள்ள சம்பந்தம் இல்லாம போயிடுமா?? ( சரி.. சரி.. டென்சன் ஆவாதீங்க!!! விஷயத்துக்கு வர்றேன்)
                                          முதல் பத்தியில் நான் எழுதியது என் எதிர் வீட்டு கமலாவைப் பற்றியோ, கல்லூரியில் என்னுடன் படித்த விமலாவைப் பற்றியோ அல்ல. காய்கறிகள் ஏதுமில்லாத போதும் தாய்மார்களுக்கு ஆபத்பாந்தவனாய் இருப்பது, எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் ஏழைச் சிறுவர்களுக்கு கொடுத்தது.. Polymorphism எனப்படும் ஓருடல் பல வடிவம் எடுக்கும் திறன் படைத்த (?!!!) நம்ம முட்டையப் பத்தி தாங்க எழுதினேன். (இதுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க  கேக்கறது புரியுது, சொல்றேன்!!)
                            
                                        நல்லா படிச்சும் முட்டை வாங்கனும்கிற ஒரே காரணத்துக்காக பரிட்சையில வெள்ளைத் தாளை மடிச்சு கொடுத்துட்டு வந்தவங்க.. நண்பர்கள திட்ரதுன்னா கூட "ஆப்பாயில்"ன்னு தான் திட்டுவேன்னா பாத்துக்கோங்க. அதென்னமோ தெரியல.. முட்டைய விட்டு நான் விலகிப் போகப் போக அது என்னை நோக்கி நெருங்கி வந்துகிட்டே இருந்தது.. கோவையில் எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு கோழிப் பண்ணை இருந்தது.. கல்லூரிக்காக வேற ஊர் போயிருவோம், முட்டைய பிரியப் போறோம்னு நெனச்சா போய் சேந்த ஊர் நாமக்கல். இப்படி முள்ளங்கி, முருங்கக்கா எதுவும் இல்லேன்னாலும் முட்டை இருந்தாப் போதும்னு சிம்பிளா வாழ்ந்துட்டு இருந்த என் வாழ்க்கையில வில்லனா இந்த அமெரிக்கா வரும்னு கொஞ்சம் கூட நெனச்சு பாக்கல.

                                      சமையல் செஞ்சு எரிவாயுவ வீணாக்க வேண்டாமேன்னு (?!!)ஹோட்டல்லயே சாப்பிட்டு பழகிய எனக்கு இங்க அமெரிக்காவுல எந்த ஹோட்டலிலும்  முட்டை கிடைக்காதது பெரிய ஏமாற்றமாக இருந்தது.. இந்திய உணவகத்தில் கூட பிரியாணியில் முட்டை இல்லாமதாங்க கொடுத்தாங்க..தேடி தேடி பார்த்ததுல சில உணவகத்துல "Scrambled Eggs " அப்புடீன்னு உப்பும் இல்லாம, ஓரப்பும் இல்லாம முட்டைய கொடுத்தாங்க. அதுவும் எனக்குப் பிடிச்ச ஆப்பாயில் எங்கயுமே கிடைக்கல. (குவார்டர் கட்டிங் கிடைக்காத சிவா மாதிரி தவிச்சு போயிட்டங்க)

                                       ஆறரை வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் ஹவாய் தீவுக்கு போன போது எதேச்சையா இந்த டென்னிஸ் உணவகத்துக்குள்ள போனேன். மெனு கார்ட பார்த்த எனக்கு 1000 வாட்ஸ் பல்பு. இருக்காதா பின்ன, அட்டை படத்துலயே ஆப்பாயில்.
சர்வர கூப்பிட்டு எனக்கு "Half boil " வேணும் என்று கேட்டேன். அவனுக்கு சத்தியமாய் நான் கேட்டது புரியவில்லை. நீண்ட விவாதத்துக்குப் பின் மெனு கார்டில் இருந்த ஆப்பாயிலை தொட்டுக் காட்டி எனக்கு அது வேண்டுமென்று சொன்னேன். அவனும் கொண்டு வந்து வைத்துவிட்டு அதன் பெயர் "Sunny side up" என்று சொல்லிவிட்டு சென்றான்.  மேல்நோக்கிய சூரியனை உள்நாக்கில் படாமல் உள்ளே தள்ளிய போது என் கால்கள் பூலோகத்தில் இல்லை..

.

Monday, December 13, 2010

தி டூரிஸ்ட் - திரை விமர்சனம்


                              
                                    கதாநாயகி கதாநாயகன், பணக்கார வில்லன், துரத்தும் போலிஸ், இடையிடையே பாடல், கொஞ்சம் காதல் இப்படி தமிழில் பலமுறை பார்த்து அலுத்துப் போன கதை, சிறு சிறு திருப்பங்களுடன்(?) அமெரிக்க அழகி ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் நடித்திருக்கும் இந்த படம்தான் "தி டூரிஸ்ட்".

                                   இரண்டு வரிகளில் அடங்கி விடக்கூடிய கதை. வெனிஸ் நகரில் உள்ள ஒரு பெரும் பணக்காரனிடமிருந்து  (வில்லன்)  எழுநூறு மில்லியன் டாலர் கொள்ளையடித்த அலெக்ஸாண்டர் பியர்ஸ் என்பவனைத் தேடி ஸ்காட்லாந்து போலிஸ் தெருவெங்கும் அலைகிறது. அவனை இதற்கு முன்னர் யாரும் பார்த்தது கிடையாது. (பணத்தை பறிகுடுத்த வில்லன் மற்றும் மனதை பறிகொடுத்த நாயகி உள்பட). இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு பியர்சின் காதலி எலிஸ் (ஏஞ்சலினா ஜோலி) மட்டுமே!! அவளை சந்திக்கும் எல்லோரையும் கைது செய்து விசாரிக்கும் போலிஸ்  ஒவ்வொரு முறையும் பல்பை வாங்கிக் கொள்கிறார்கள்.

                                      
                                      போலிசை குழப்புவதற்காக தன் காதலி எலிசிடம் தன் போன்ற உயரமுள்ள ஒருவனை தேர்ந்தடுத்து அவனுடன் நெருங்கி பழகுமாறு கூறுகிறான் அலெக்ஸ். அப்படி அவள் தேர்ந்தடுக்கும் நபர் அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு கல்லூரி ஆசிரியரான "ப்ரான்க்" (ஜானி டெப் ). எலிசின் அழகில் மயங்கிய பிரான்க் அவளுடன் வெனிஸ் செல்ல, வம்பில் மாட்டிக் கொள்கிறான். அங்கே அவனை போலிஸ் துரத்த, கூடவே வில்லனின் ஆட்களும் துரத்த ஓடி ஓடி வாழ்கையின் எல்லைக்கே ஓடுகிறான்.

                                      இதற்கிடையில் இவன் படும் பாட்டை பார்த்த எலிஸ் அவன்மேல் பரிதாபப் பட அது பின்னர் காதலாக மாறுகிறது. இதற்காக அவள் அவன் காதலனையும் காட்டிக் கொடுக்க துணிகிறாள். ஒரு கட்டத்தில் அவளும் ஸ்காட்லாந்து போலீசில் பணிபுரிகிறாள் என்பது தெரிய வருகிறது. வில்லன் அவளைக் கடத்தி அவள் மூலம் அலெக்சை பிடிக்க திட்டமிடுகிறான். போலிஸ் அவனை பிடித்தார்களா? எலிஸ் தப்பித்தாளா? பிராங்கின் காதல் என்னவாயிற்று என்பதை வெண் திரையில் காண்க..

                                      
                                       அழகு, அதிரடி இரண்டிலும் வழக்கம் போல் கலக்கி இருக்கும் ஏஞ்சலினா. வித்தியாசமான நடிப்பில் ஜானி டெப். இவர்களுக்கு இடையே இருக்கும் அழகான வேதியியல் (Chemistry ??) படத்திற்கு பெரிய பலம். இது போன்ற கதைகளை நாம் பலமுறை பார்த்துவிட்டதாலும், வில்லன் நம்முடைய நம்பியாரை நினைவு படுத்துவதாலும் கொஞ்சம் அலுக்கிறது. இருந்தாலும் எழில் மிகுந்த வெனிசும், அழகுக்கு அழகு சேர்க்கும் ஏஞ்சலினா ஜோலியும் சினிமா டூரிஸ்டுகளை நிச்சயம் மயங்க வைக்கும்!!!

 4௦ / 100                                    

.

Monday, November 15, 2010

மன்மதன் அம்பு - முதல் பார்வை..





              தலைவர் கமல்ஹாசனின் அடுத்த படைப்பான மன்மதன் அம்பு படத்தின் முதல் பார்வை இதோ உங்களுக்காக...




              மன்மதன் அம்பு படத்தின் பெரும்பாலான காட்சிகள் கப்பலில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் பாடல்களும், டிசம்பரில் படமும் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை படங்களில் ஒன்றாக இது நிச்சயம் இருக்கும். கமல், மாதவன், த்ரிஷா, சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை DSP . கதை, திரைக்கதை கமல்ஹாசன், இயக்கம் கே. எஸ். ரவிக்குமார்.


( கவனிக்க:: டைட்டிலில் காதல் சின்னமாக விளங்கும்  ஐபில் டவர் அம்பாக மாறி வீரத்தை பறைசாற்றும் கலோசியத்தை தாக்குவதாக கற்பனை செய்திருப்பார்கள்) 

Monday, November 8, 2010

சர்தார்ஜி ஜோக்ஸ்- 2



பேருந்தில் நடத்துனரிடம்..


சர்தார்ஜி :      கண்டக்டர், ரெண்டு டிக்கெட்.
நடத்துனர்:    நீங்க ஒருத்தர் தானே ஏறினீங்க, எதுக்கு ரெண்டு டிக்கெட்?
சர்தார்ஜி :     ஒண்ணு தொலைஞ்சு போச்சுன்னா இன்னொன்னு.
நடத்துனர்:   அப்போ, இன்னொன்னும் தொலைஞ்சிடுச்சுன்னா?
சர்தார்ஜி :     என்கிட்டதான் பாஸ் (Pass ) இருக்கே!!




தன் பைக்கில் தன்னோடு இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சர்தார்ஜியை வழிமறித்த டிராபிக் போலீசிடம்..


சர்தார்ஜி: ஸாரி சார்! ஆல்ரெடி ரெண்டு பேர் வண்டில இருக்காங்க! உங்களுக்கு இடம் இல்லே..


துப்பறியும் அதிகாரி பணி தேர்வில்..

தேர்வாளர் :  மகாத்மா காந்தியைக் கொன்றது யார்?
சர்தார்ஜி:        இந்த பணிக்கு என்னை தேர்வு செய்ததற்கு நன்றி.. காந்தியை கொன்றவர்களை பற்றி நான் விசாரிக்கிறேன்..


பார்க்கில் ஒரு அழகிய பெண்ணிடம்..


சர்தார்ஜி: சுனிதா உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்.
சுனிதா:     நான் உன்னைவிட ஒரு வயது பெரியவள்!
சர்தார்ஜி: அப்போ, நான் உன்னை அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்கிறேன்.


பள்ளியில் ஆசிரியரிடம்..


ஆசிரியர்:  தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?
சர்தார்ஜி : HIJKLMNO
ஆசிரியர்: என்ன?
சர்தார்ஜி: நேற்று நீங்கள் தான் "ஹெச்" டூ "ஒ" என்று சொல்லிக்கொடுத்தீர்கள்..


நூலகத்தில்..


சர்தார்ஜி: (நூலகரிடம்) நான் படித்ததிலேயே மிகவும் மோசமான புத்தகம் இதுதான். மிகவும் அதிகமான கதாபாத்திரங்கள்.. சம்பாஷனைகள் யாவும் எண் வடிவில்  இருந்ததால் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது..

நூலகர்: ஓஹோ! நீங்கதான் டெலிபோன் டைரக்டரியை தூக்கிட்டு போன ஆசாமியா?

Sunday, October 31, 2010

SAW VII - திரை விமர்சனம் (18+)


முந்தைய SAW படங்களை பார்க்காதவர்களுக்கு: ஜிக்ஸா (Jigsaw ) என்பவன் ஒரு தொடர் கொலையாளி. (தொலைக்காட்சி தொடர் எடுத்து கொலை செய்பவர் அல்ல..) இவன் யாரையும் நேரிடையாக கொலை செய்வதில்லை.. இவன் கொலை செய்யும் விதத்தில் ஒரு புதுமை இருக்கும். ஒவ்வொருவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் மற்றவர்களை கொலை செய்தோ, தமது உடல் உறுப்புகளை அறுத்துக்கொண்டோ இவன் விரித்த வலைகளில் இருந்து தப்பிக்க வேண்டும். 

ஒவ்வொரு வலைகளில் இருந்து தப்பிய பின்னும் இவனுடைய கர்ண கொடூரமான  குரலில் ( நம்ம பீ. எஸ். வீரப்பா குரல் போல்) பதிவு செய்யப்பட்ட ஒரு கேசட்டை கேட்க வேண்டும். அதில் அடுத்த வலைக்கான வழி சொல்லப்பட்டிருக்கும். அவன் விரித்த வலைகளில் எல்லாம் தப்பித்து குற்றுயுரும் குலைவுயுருமாய் பிழைத்தவர்கள் வெகு சிலரே. 

             இப்போது SAW VII பற்றி.. சென்ற பாகத்தின் தொடர்ச்சியுடன் ஆரம்பிக்கிறது இந்த படம்.. தன் மனைவி பெட்சியின் சதியிலிருந்து தப்பிய ஹாப்மன் அவளை தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டுகிறான். பெட்சி அவனிடமிருந்து தப்பித்து போலீசிடம் தஞ்சமடைகிறாள். 

             அதே சமயம் பாபி என்பவன் தான் ஜிக்சாவின் வலைகளில் இருந்து தப்பியவன் என்றும், தான் கஷ்டப்பட்டு தப்பித்த கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளதாகவும் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் சொல்கிறான். அத்தோடல்லாமல் ஜிக்சாவினால் பாதிக்கப்பட்ட பலரையும் பேட்டி எடுத்து தன் தொலைக்காட்சி தொடரில் போடுகிறான்.. இது ஜிக்சாவிட்கு கோபத்தை உண்டாக்குகிறது.


                                 
   
               போலீசில் சரணடைந்த பெட்சிக்கு உதவ ஒரு போலிஸ் அதிகாரி முன் வருகிறார். இவர் ஹாப்மனுடன் சில வருடங்களுக்கு முன் ஒன்றாக பணிபுரிந்தவர். ஹாப்மனின் கொடூரத்தை நன்றாக அறிந்த அவர் ஹாப்மனை கைது செய்ய முற்பட அவரும் கொல்லப்படுகிறார்.
                             
                   பாபியின் செயலால் கோபமடைந்த ஜிக்ஸா அவனை கடத்தி அவனுக்கு பல வலை விரிக்கிறான். ஒவ்வொரு வலையிலும் தன் ஒவ்வொரு நண்பர்களை இழக்கிறான். கடைசியில் தன் மனைவியை காப்பாற்ற தன் உடலில் அலகு குத்திகொல்வது போல் கம்பியை குத்திக் கொள்ள வேண்டும்.

  

                     பாபி தன் மனைவியை காப்பாற்றினானா ? பெட்சி ஹாப்மனிடமிருந்து தப்பினாளா-  3டி திரையில் காண்க..  இது முழுக்க முழுக்க ரத்தத்தால் செய்த செல்லுலாய்ட் சித்திரம்...

 40 / 100
            

Wednesday, October 20, 2010

காதலர் தினம்....

                             
                              அன்று காதலர் தினம்.. கல்லூரியின் எல்லா திசையிலும் கையில் ரோஜாப் பூங்கொத்துகளுடன் மாணவர்கள் தங்களுக்கேற்ற ஜோடியை தேடிக் கொண்டிருந்தனர். மஞ்சள் பூக்கள் சொரிந்திடும் அந்த மரத்தின் கீழ் கார்த்திக் காத்திருந்தான். அதுதான் அவன் லாவண்யாவை முதன் முதலில் சந்தித்த இடம். வெகு நாட்களாய் தன் மனதில் பூட்டி வைத்திருந்த அந்த மூன்று வார்த்தைகளை இன்று அவளிடம் சொல்லி விடுவதென முடிவு செய்திருந்தான்.
                             
                             கல்லூரியின் நுழைவாயிலில் அவள் முகம் கண்டதும் அவனுள் ஒரு மின்சாரம் பரவியது. கைகளில் சிறு நடுக்கம். அவள் அருகே வந்த போது படபடப்பு இன்னும் அதிகமாகியது. இருதயத் துடிப்பு இரு மடங்காய் அடிக்க ஆரம்பித்தது. அவள் அவனைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்துவிட்டு நகர்ந்தாள். சற்றே தயக்கத்துடன் "லாவண்யா" என்றழைத்தான். அவள் நின்று அவனை நோக்கி திரும்பினாள். "என்ன" என்பதுபோல் கண்களால் கேள்விக்கணை ஒன்றைத் தொடுத்தாள். 


                            "ம்ம்.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" .. என்று ஆரம்பித்தவனுக்கு உயிரெழுத்துகளும், மெய்யெழுத்துகளும் மறந்து போனது போன்ற ஒரு உணர்வு! அவள் இப்போது அவன் கண்களை உற்று நோக்கினாள். அவள் மௌனமே பல கேள்விகளை கேட்க அவன் சற்றே தடுமாறிப் போனான். அவள் ஏற்பாளா மறுப்பாளா என்ற பதற்றத்துடன் அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்..


                            "லாவண்யா, அது வந்து.." வழக்கம்போல் ஏதோ ஒன்று அவனை சொல்ல விடாமல் தடுத்தது. அதை புரிந்து கொண்டவளாய் " இத பாரு கார்த்திக்.. நீ என்னைக்குமே எனக்கு ஒரு நல்ல நண்பன். இப்போ நீ என்ன சொல்ல நினைக்கறேங்கறதும் எனக்கு நல்லா புரியுது. ஆனா நட்புக்குள்ள அந்த மூன்று வார்த்தைகள் எப்போதும் சொல்லக் கூடாது." கார்த்திக்  மனதிலிருந்த பெரிய பாரம் இறங்கியது போல் உணர்ந்தான். கல்லூரி முதல் நாளன்று மரத்தடியில் வெள்ளை சுடிதாரில் நின்றிருந்த லாவண்யாவின் மேல் தான் பைக்கில் சென்ற போது சேற்றை அடித்ததற்காக அவன் ஈகோவால் சொல்ல முடியாமல் தவித்த அந்த மூன்று வார்த்தைகள் "I am Sorry "


.

Friday, October 15, 2010

சரஸ்வதி (Saraswathi)

சுந்தரத் தமிழ் மொழி பயின்றவள் பார்போற்றும்
சுந்தரத்தின் மகளாய் அவதரித்தாள்!
கலை மகளின் அனுதினத்தில் பிறந்து வந்தாள் - சர்வ
கலைகளிலும் முதலெனவே பெயர் எடுத்தாள்!!
சச்சு மேமை என்று சொன்னால் யாருக்கும் பிடிக்கும்
மற்றவர் சுமை சுமப்பதென்றால் உனக்கு மிக பிடிக்கும்

எப்பவும் உனக்கு தெரிஞ்சது Old Trend - ஆனாலும்
எப்பவும் நீதான் என் Best Friend..
உனக்கு ரொம்ப பிடிச்சது காட்டன் Saree - புதுசா ஏதும்
வாங்கினா அது உக்காந்துக்கும் பீரோ மேல ஏறி..
அன்பை டன் டன்னாய் கொடுத்திடுவாய் வாரி- அதை
யாரும் புரிஞ்சுக்கலேனா ஐ யாம் வெரி Sorry!

பாவப்பட்டு கொடுத்திடுவாய் பணத்தை - ஏமாற்றி
புண்படுத்திடுவார் உன் மனத்தை!
அப்பல்லாம் இருந்ததில்லை Miss Universe
இருந்திருந்தா 70's லே  it was yours!
தங்கம்மா பெத்தெடுத்த தாமிரபரணி -  நீ
குடிச்சு வளந்ததோ சிறுவாணி தண்ணி!

உன் Best Friend பேரு காளியம்மா! - நீ கோபப்பட்டா
Control பண்ண ரொம்ப நேரமாகுதடி யம்மா!
கணபதிக்கு இருக்குது பார் தும்பிக்கை - எனக்கு
எப்பவும் நீ கொடுப்பாய் நம்பிக்கை!
எனக்கு நல்லதையே தந்திடுவார் சாமி - அதனால்தான்
கொடுத்திருக்கார் இப்படி ஒரு Super Mommy!

.

Thursday, October 7, 2010

நினைவே ஒரு பறவை!!


விழித்தெழ விரைந்த போதுதான் - உறங்க
மறந்தது நினைவுக்கு வந்தது..
உனை நினைக்க மறந்த போதுதான் - உனை
மறக்க நினைத்தது நினைவுக்கு வந்தது..

மரங்களிலே மழைத்துளிகள் படர்ந்திருப்பதை கண்டு- அதை
ஓடிச்சென்று அசைத்தது சிறுபிள்ளைதனமாய் இருந்தாலும்
இப்போது நீ என்னருகில் இல்லாத போது - அந்த
இலை ஒவ்வொன்றும் உன் முகமாய் காட்சியளிக்கிறதே!

பேரிரைச்சல் கொண்ட பனகல் பூங்கா - பிடித்ததில்லை
எனக்கு எப்போதும்..உன் நினைவுகளை கருவாய்
சுமந்து கொண்டு இருப்பதால் அகல முடியவில்லை
அங்கிருந்து ஒருபோதும்..

எப்படியும் திரும்பி வருவாய் என - மணிகாட்டியின்
முள்போல் காத்திருக்க.. நீயோ
நம் காதல் தண்டவாளத்தின் இரு கோடுகள் என
விளங்க வைத்து சென்றாயே!!

உன் மேல் நான் கொண்ட  காதல் நோய் என்
உயிரணுக்கள் ஒவ்வொன்றாய் உருக்குகிறது!
மருந்தாக வேண்டாம் நோயாகவாவது வா
உன்னால் நான் இறந்து போகிறேன்!!!


 .

Tuesday, October 5, 2010

பலே லக்ஷ்மன்!!

                  

                        இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா "த்ரில்" வெற்றி பெற்றது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. முக்கிய வீரர்கள் நான்கு பேரை இழந்ததினால் வெற்றி தொலை தூரத்தில் இருந்தது. ஒரே வெளிச்சம் சச்சின் மட்டுமே. ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நேரத்தில் அவரும் அவுட்டாகிவிட, இந்தியா பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.
                        முதல் நாள் ஆட்டத்தில் முதுகு வலியால் அவதிப்பட்ட லக்ஷ்மன் தன் வலியையும் பொருட்படுத்தாமல் களம் இறங்கி இந்தியாவிற்கு நம்பிக்கை அளித்தார். எட்டு விக்கெட் இழந்து இன்னும் 92 ரன்கள் தேவை என்ற நிலையில் இஷாந்த் ஷர்மா இவருடன் ஜோடி சேர்ந்து இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலியாவை கதி கலங்கச் செய்த லக்ஷ்மன் பலே லக்ஷ்மன் தான்!!

.

Friday, October 1, 2010

எந்திரன் (The ROBOT)- திரை விமர்சனம்

                                

                                  சன் பிக்சர்சின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு. ( ஆசியாவிலேயே மிக அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என கூறப்படுகிறது). சூப்பர் ஸ்டார் படம், முதல் நாள் முதல் காட்சி எப்படி இருக்கும் என நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை . சுஜாதாவின் இந்த கதையில் முதலில் கமல் நடிப்பதாக இருந்தது. பின் பல்வேறு காரணங்களுக்காக அது பல நடிகர்களும் தாண்டி ரஜினியிடம் இந்த வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரை தவிர வேறு யாரும் நடித்திருந்தால் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே! சரி கதைக்கு வருவோம்..
                                    ரொம்ப சிம்பிளான கதை - விஞ்ஞானத்தை நல்ல வழிக்கு பயன்படுத்தினால் அது மக்களுக்கு நன்மை தரும். அதே விஞ்ஞானம் தீயவர்களின் கைகளில் இருந்தால் அது பேரழிவைத் தரும்.


                                        வசீகரன் என்கிற புரொபசர் ( ரஜினி ) ஊன், உறக்கம், ஹேர் கட் (கொஞ்சம் டூ மச்) எல்லாவற்றையும் மறந்து பத்து வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு எந்திரத்தை உருவாக்குகிறார். எந்திரத்தால் மனித உணர்வைப் புரிந்து கொள்ள முடியாது என்பதால் தன்னுடைய படைப்பிற்கு மனித உணர்வுகளை ஊட்டி அதை எந்திரன் ஆக்குகிறார். உணர்சிகளை புரிந்து கொள்ள ஆரம்பித்த எந்திரன் முதலில் உணர்வது காதலை. அதுவும் புரொபசரின் காதலியிடம் (சனா- ஐஸ்). இதை தவறு என புரோபசரும் சனாவும் எடுத்து சொல்ல மனமுடைகிறான் சிட்டி என்ற எந்திரன்.
                                          இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் மற்றொரு புரொபசர் சிட்டியை தன்வசப் படுத்தி அதற்கு களவுகள் பலவும் கற்றுக் கொடுக்கிறார். சிட்டியால் கொல்லவும் படுகிறார். பின் அந்த எந்திரன் வசீகரனை கொன்றுவிட்டு சனாவை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள புறப்படுகிறது. வசீகரன் எப்படி எந்திரனிடமிருந்து தப்பிக்கிறார், சனாவை மீட்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

                                         ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் போல் மெதுவாக ஆரம்பிக்கிறது படம். பின் சிட்டி ரஜினியின் காமெடியில் தியேட்டர் கலகலக்கிறது. குறிப்பாக சலூனிலும், டிராபிக் போலீசிடமும் ரோபோ செய்யும் குறும்பு ரசிக்க வைக்கிறது. பின் கெட்ட எண்ணங்கள் தனக்குள் புகுத்தப்பட்டதும் கடைசி அரை மணி நேரம் வில்லனாக பிரமாதப் படுத்தியிருக்கும் ரஜினியின் நடிப்புக்கு நிச்சயம் இப்படம் ஒரு மைல்கல். ஐஸ் அழகுப் பதுமையாக வந்து போகிறார். பாடல்களில் கடினமான மூவ்மெண்டுகளை செய்து கைதட்டல் பெறுகிறார். டேனி, சந்தானம், கருணாஸ் எல்லோரும் ஊறுகாய்கள். கிளைமாக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் அட்டகாசம்.ரகுமான் ஆஸ்கார் வாங்கிய நாளிலிருந்து அவரிடம் கொஞ்சம் அதிகமாகவே எதிர் பார்க்கிறோமோ?

                                         நல்ல கதை, ஆனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்துயிருக்கலாமோ?? பத்து வருடம் உழைத்து உருவாக்கிய எந்திரனை சரியாக பரீட்சித்துப் பார்க்கும்  முன்  கேர்ள் பிரண்டுடன் அனுப்பி வைப்பது. ஒன டேரா பைட் வேகமுள்ள ரோபோவால் ஒரு கொசுவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாதது ஏனோ? ( கொசுக்கள் மாநாடு புதுமையான முயற்சி என்றாலும் இந்த படத்தில் ஒட்டாதது போல் ஒரு பீலிங்க்ஸ்) ஒரு கோடியில் எடுக்கப்பட்ட மாவீரனில் ஒரு ரஜினி. இரண்டு கோடியில் எடுக்கப்பட்ட ராஜாதி ராஜாவில் இரண்டு ரஜினி, அப்போ இருநூறு கொடியிலே வந்திருக்கும் எந்திரனில் ? எஸ். யு ஆர் ரைட்.. இருநூறுக்கும் மேற்பட்ட ரஜினிகள். ( ஆனால் இதெல்லாம் பல படங்களில் பார்த்துவிட்டதால் ஒரு சின்ன சலிப்பு..)

                                       நல்ல கடை, நல்ல சட்டை, ஆனா கொஞ்சம் கூட விலை கொடுத்து வாங்கிட்டமாதிரி ஒரு பீலிங். அவ்வளவுதான்.. (என்னது மார்க்கா??? ரஜினி படத்துக்கு மார்க் போட்டு தர்ம அடி வாங்க நான் தயாரில்லயப்பா!!!)

.

Thursday, September 16, 2010

எந்திரன் - ட்ரைலர்





                   எந்திரன் தணிக்கை (சென்சார்) குழுவிடமிருந்து "U"  சான்றிதழ் பெற்று விட்டது. இந்த புதிய ட்ரைலர் எந்திரன் எனும் பிரம்மாண்ட படத்தின் முன்னோட்டத்தை நமக்கு அளிக்கிறது. திரைப்படம் அக்டோபர் 1 ம் தேதி வெளியிடபோவதாக சொல்லப் படுவதாக நம்பப் படுகிறது.. 


நன்றி சன் டிவி, YouTube 


.

Wednesday, September 15, 2010

57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு!!



இசைஞானி இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. "பா" திரைப்படத்தில் சிறுவனாக நடித்த அமிதாப் பச்சனுக்கு "சிறந்த நடிகர்" விருதும், "பசங்க" திரைப்படத்தில் பெரியவர்களுக்கு ஈடாக நடித்த பட்டி மற்றும் கேஷு சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


மற்ற விருதுகள் பின்வருமாறு..

Best Film - 'Kutty Shrank'
Best Director - Rituparno Ghosh for Abohoman
Best Supporting Actress - Arundhati Nag for ‘Paa’
Best Supporting Actor - Farooq Sheikh for 'Lahore'
Best Popular Film, Best Director and Best Producer – ‘3 Idiots’
Best Film on Social Issues - Shyam Benegal's 'Well Done Abba'
Best Film on National Integration - Rakeysh Omprakash Mehra's 'Dilli-6'
Best Camerawork - Anjali Shukla.
Best Music Director - Amit Trivedi for Dev D
Best Playback Singer (Male) - Rupam Islam
Best Playback Singer (Female) - Niranjana Sarkar (Housefull)
Best Sound Engineer - Oscar winner Resul Pookutty
Best lyrics - Swananad Kirkirey for 3 Idiots
Best Choreography - K Shivashankar for film Magadheera


.                              

Monday, September 13, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்

                    எந்திரன் ரிலீசாக இன்னும் சில வாரங்களே இருக்க, கம்பீரமாக வெளிவந்திருக்கிறான் பாஸ் என்கிற பாஸ்கரன். தமிழில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ஒரு முழு நீள காமெடிப் படம்..


                     வேலை வெட்டி எதுவும் இல்லாத, நண்பனின் சலூனில் அரட்டை அடித்தும், ஊர் சுற்றியும், பல முறை அரியர் எழுதியும் பாசாக முடியாமல் தவிக்கும் பாஸ்கரன், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவது தான் கதை.. இந்த மெல்லிய கதைக்கு பலம் மூன்று பேர் - ஒன்று நாயகன் ஆர்யா.. இரண்டு கிட்டத்தட்ட நாயகனுக்கு சமமாக நடித்திருக்கும் சந்தானம். மூன்றாவது டைரக்டர் ராஜேஷ். 

                        படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆர்யாவும் சந்தானமும் செய்யும் காமெடி சேட்டைகள் அட்டகாசம். குறிப்பாக "நண்பேண்டா " என ரஜினி ஸ்டைலில் இவர்கள் மாறி மாறி சொல்லும் போது விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். "ஊர்ல அவனவன் பத்து பதினைந்து நண்பார்களை வச்சுட்டு சந்தோசமா இருக்கான். நான் ஒரே ஒரு பிரெண்ட வச்சுட்டு முடியலே" என்று சந்தானம் புலம்புமிடம் தியேட்டரில் விசில் பார்க்கிறது. 

                         இசை யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை அருமை. பாடல்கள் பரவாயில்லை ரகம். "யார் இந்தப் பெண்தான் என்று" பாடல் இனிமை. இடையிடையே இளையராஜாவின் இசையை பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.. நாயகி நயன்தாரா,  நல்ல கேரக்டர், அம்சமாக வந்து போயிருக்கிறார். அண்ணன் கேரக்டரில் வருபவர் நல்ல குணச்சித்திர நடிகராக வர வாய்ப்பிருக்கிறது.  

                             "அரியர் மேட்" , "தல தளபதி", "அப்பா டக்கர்", "டோகோமோ கம்பெனி ஓனர்", "பாடன்" இப்படி பல ஒன் லைனர்களின் மூலம் கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்கள்.மொத்தத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் டிஸ்டிங்ஷனில் பாஸ் பண்ணியிருக்கிறார்..

75 / 100

Saturday, September 11, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 5






அண்ணா விமான நிலையம்.. சென்னை 


                              விமானத்தில் இருந்து இறங்கி பெட்டிகளை பெற்றுக் கொண்டபின் தன் மனைவியுடன் வெளியே வர எத்தனித்த போது தூரத்தில் தன் தாயையும் தந்தையையும் பார்த்தான் ரிஷ்விக்.. வயதான இவர்களை தனியே தவிக்க விட்டுவிட்டு தான் மட்டும் அந்நிய தேசத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டிருப்பதை நினைத்து ஒரு நொடி கண்ணீர் சிந்தினான். 
                                   
                                 அவர்கள் நின்றிருந்த இடத்தை நெருங்க முயன்ற போது ஒரு பெருங்கூட்டம் ஒன்று அவனை சுற்றி வளைத்தது. அவனுக்கு எண்ணற்ற மாலைகள் அணிவித்து திக்கு முக்காடச் செய்தனர்..அவன் கணிப்பொறி உலகில் செய்த சாதனைகளுக்காக அமெரிக்காவில் உள்ள கார்நிகி-மெலன் பல்கலைக்கழகம் அவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்ததை கொண்டாடும் விதமாக இந்திய அரசாங்கம் அவனுக்கு பத்மபூஷன் விருதை அறிவித்திருந்தது. 


                                 அடுத்த வாரம் ஜனாதிபதி டெல்லியில் இந்த விருதை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.மறுநாள் மாலை தமிழக முதல்வருடன் தேநீர் விருந்து, இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த திரைப்படத்தின் கம்ப்யுட்டர் கிராபிக்ஸ் செய்வதற்கு நவீன யுத்திகளை பற்றி பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.. அவருக்கு நாளை மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு கைபேசியை அமர்த்திய போது அம்மாவின் குரல் கேட்டது.. "ரிஷ்விக், டே ரிஷ்விக்" 


                                 தன் வளர்ச்சிக்கு மூல காரணமான தன் அன்னைக்கும் தந்தைக்கும்  ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினான்.. "நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன்.. என்னன்னு கேக்குறானா பாருங்க". அம்மா ஏதோ சொல்வதற்காக கூப்பிடுகிறாள்.. வாசலில் பக்கத்து வீட்டு கவிதா நின்று கொண்டிருக்கிறாள். இவள் இப்போது எதற்காக இங்கே வந்திருக்கிறாள். ஹாலில் ரேஷ்மா அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். டீப்பாயில் ஆரஞ்சு பழச்சாறு பாதி மட்டும் இருக்கிறது. 


                                 லாவண்யாவும் வந்திருக்கிறாளா? என்ன விசேஷம் இன்னைக்கு என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே யாரோ பிரம்பால் அடிப்பது போன்ற உணர்வு.. துவண்டு எழுந்த போது எதிரில் அப்பா.. "எட்டு மணியாச்சு.. இன்னும் என்னடா தூக்கம். செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு ராத்திரி பூராவும் உளறிகிட்டு இருக்கே.. ஆறாவது வகுப்பிலயே ரெண்டு வருஷமா படிச்சு கிட்டு இருக்கே.. இந்த வருசமாவது பாஸ் பண்ற வழியப் பாரு!!!"


                                                                     முற்றும்...


"ஆவ்வ்வ்வ்வ் .. இப்படி எல்லோரும் ஒட்டு மொத்தமா அடிக்க கிளம்பப் பெடாது.. எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்.."


Friday, September 10, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 4










"வுட் யு லைக் டு ஹேவ் சம்திங்?"  என்ற குரல் கேட்டு கண்விழித்த போது விமானப் பணிப்பெண் குளிர் பான வண்டியுடன் நின்றிருந்தாள். 


"ஆரஞ்ச் ஜூஸ் ப்ளீஸ்"   என்றதும் அவன் கைகளில் ஆரஞ்சுப் பழச்சாறு ஊற்றிய ஒரு கோப்பையை திணித்துவிட்டு அடுத்த பயணியை நோக்கி நகர்ந்தாள் அவள். ரிஷ்விக் அருகில் உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை எழுப்ப மனமின்றி அவள் விழித்திராத வண்ணம் மெதுவாக அவள் தலையை தன் தோள்களில் இருந்து விலக்கி தான் கொண்டு வந்திருந்த "பயணத் தலையணையை" வைத்துவிட்டு சற்றே இளைப்பாறினான். சில்லென்ற ஆரஞ்சுப் பழச்சாற்றை தொட்ட போது அவனுக்கு கவுன்சிலிங் தினத்தன்று லாவண்யாவுடன் அங்கிருந்த கேண்டீனில் பழச்சாறு குடித்தது நினைவுக்கு வந்தது.


" ஆரஞ்ச் ஜுசுண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு ?"


" எனக்கும் பிடிக்கும்"   இப்போதும் ஒற்றை வார்த்தையில் நிறுத்தி கொண்டான். மனதுக்குள் பட்டாம்பூச்சிக் கூட்டம். அவளிடம் சொல்வதற்கான சரியான சமயத்திற்காகக் காத்திருந்தான்.


"என்னடா, என்னவோ சொல்லனும்னு கூட்டிட்டு வந்திட்டு சும்மா உக்காந்து கிட்டு இருக்கறே?"   பட்டென்று அவள் கேட்டதும் அவன் படபடப்பு அதிகமாகியது..

" அது வந்து ..."   அவன் நா வறண்டது. சொல்ல வந்த வார்த்தைகள் நாக்கின் அடியில் ஒளிந்து கொண்டு வர மறுத்தது.. சேரன் டவரில் ஜோடி ஜோடியாய் சுற்றித் திரியும் காதலர்கள் எல்லோரும் எவ்வளவு மனத்திடம் மிக்கவர்கள் என எண்ணிக்கொண்டான்.


"ஒண்ணுமில்ல.." என்று அவன் ஆரம்பிப்பதற்குள் அவள் இடைமறித்து..

"டேய் .. லவ் கிவ்வுன்னு எதாவது சொல்லி தொலைச்சுராதே. உன் அமைதியான கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் லொட லொடன்னு இப்படி பேசிக்கிட்டே இருக்கேன். நீ பொறுமையா எல்லாத்தையும் கேட்டது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சுது. கண்டிப்பா நமக்குள்ள ஒரு நல்ல வேவ் லெங்க்த் இருக்கு. அத ஒரு நல்ல நட்பா மாத்திக்கணும்னு நான் நினைக்கறேன். அதுக்கு காதல்ன்னு சாயம் பூச நீ நினைச்சா அதுக்கு நான் ஆள் இல்லே. என்ன என்கூட பிரெண்டா இருக்கியா? "

அவளுடைய பதில் அவனுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் அவளுடைய அணுகுமுறை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளைப் போன்ற ஒரு தோழியை கொடுத்ததற்கு கடவுளிடம் நன்றி கூறினான். 


கடைசி சொட்டு பழச்சாறு காலியானதும் அவன் தன் நினைவுகளிலிருந்து கலைந்து விமான சிப்பந்தி கூறிய அறிவிப்பை கேட்டான். இன்னும் பதினைந்து நிமிடங்களில் சென்னை விமான நிலையத்தை அடையும் என்ற அறிவிப்பை கேட்டு மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் தோன்றியது. ஆறு வருடங்களுக்குப் பின் அன்னை பூமியை மிதிக்கப் போகும் அவன் அங்கே நடக்கப் போகும் எதையும் அப்போது அறிந்திருக்கவில்லை..





 

Wednesday, September 8, 2010

"இதய" அஞ்சலி

                    
                          தமிழ் சினிமாவை நீண்ட காலமாக ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் ஆக்கிரமித்து இருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பால் மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் முரளி.. நேற்று இருதயத்தில் ஏற்பட்ட வலி காரணமாக இயற்கை எய்தினார்.
                        அவர் நடித்த திரைப்படங்களில் எப்போதும் காதலை வெளிப்படுத்தியது இல்லையென்றாலும் நிஜ வாழ்க்கையில் அவர் திருமணம் செய்தது அவர் காதலியை. 46 வயதான அவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் சமீபத்தில் அவர் மகன் அதர்வா  அறிமுகமான "பாணா காத்தாடி" படத்தில் நடித்திருந்தார்.


Friday, September 3, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 3




"என்னங்க, என்ன ஒரே யோசனைல இருக்கீங்க. நம்ம பிளைட் போர்டிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. " நினைவுகளிலிருந்து மீண்ட போது எதிரில் ரேஷ்மா நின்று கொண்டிருந்தாள்.


"அப்புறம் இதோ இந்த அம்மாவோட பசங்க ரெண்டு பேரும் இங்க யு.எஸ் ல தான் இருக்காங்க. அவங்க இங்கயே சிட்டிசன்ஷிப் வாங்கியிருக்காங்க.. ஆனா இந்தம்மாவுக்கு நம்ம ஊர்ல இருக்கத்தான் பிரியமாம். ஆனாலும் பசங்க இல்லாம தனியா இருக்க கஷ்டமா இருக்காம்"


"ரிஷ்விக், நீ எங்களையெல்லாம் விட்டுட்டு தனியா இருக்கப் போறேன்னு நினைக்காதே! உன்னப் பத்தி இப்போ  தாழ்வா நினைக்கிறவங்க முன்னாடி நீ ஜெயிச்சு காட்டணும். உன் அம்மா நான், உன்கூட எப்பவும் இருப்பேன். தைரியமா போயிட்டு வா."
அம்மாவின் குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.


போர்டிங் பாஸை காண்பித்து விட்டு பிளைட்டினுள் இருவரும் ஏறினர். வழக்கம் போல் விண்டோ சீட்டில் உட்கார்ந்து கொண்டாள் ரேஷ்மா.


"மீறிப் போனா ஒரு பத்து நிமிஷம். அதுக்குள்ள தூங்கிடுவே. அதுக்கெதுக்கு விண்டோ சீட்?" என்றவாறே அருகிலிருந்த சீட்டில் அமர்ந்தான்.


தனது ஐ-போனை சுவிட்ச் ஆப் செய்ய எத்தனித்த போது தனது நண்பன் வலைப்பதிவில் பிரசுரித்திருந்த ஒரு கவிதையைப் படித்தான்.  சில நொடிகளில் எண்ண வலையில் சிறைப்பட்டிருந்தான்.


_______________________________________________________________________
"நல்லா கவிதை எழுதற ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அம்மாகிட்டே சொன்னியாமே, உண்மையா?"


"கவிதா, உன் பேரே ஒரு அழகான கவிதை. உனக்கு கவிதை எழுதத் தெரியாட்டியும் பரவாயில்லே, உன்னையே கல்யாணம் செய்துக்கறேன்."
_______________________________________________________________________
"லைப்ல காதல் ஒரு சின்ன பாகம் மட்டும் தான். உனக்கு டேலன்ட் இருக்கு, நல்ல வேலைக்கு வருவேன்னு ஒரு தப்புக் கணக்கு போட்டுட்டேன். இப்படி வருசத்துக்கு மூணு கம்பனில வேலைய விட்டுட்டு வந்து நிக்கற உன்னை நம்பி நான் எப்படி கழுத்த நீட்டுவேன். நீயே சொல்லு"


"என்ன கவி, இப்படியெல்லாம் பேசுறே. நான் மனசுக்கு பிடிக்காம சும்மா கோடிங் எழுதி பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லே. இதே நம்ம கல்யாணத்துக்கு பின்னாடி நடந்திருந்தா, என்ன பண்ணியிருப்பே?"


"கண்டிப்பா டைவர்ஸ் பண்ணியிருப்பேன்" 

_______________________________________________________________________
"ரிஷ்விக், எனக்கு தெரியும், நீ எப்படியும் லைப்ல மேல வந்துடுவேன்னு. உனக்கு இன்னும் எம்மேல கோபமா?"

"கவி, இப்போ எனக்கு அமெரிக்காவுல வேலை கிடைச்சிருக்கு. மறுபடியும் என்ன தேடி வந்து பேசறே. இப்போ இந்த வேலையும் வேண்டான்னு சொல்லிட்டா இப்போவே திரும்பி போயிடுவ தானே!!"
_______________________________________________________________________
"ரேஷ்மா, என் பேரு கவிதா. ரிஷ்விக்கை பத்தி ஒரு விஷயம் சொல்லணும்"
"சொல்லுங்க"
"...................."
"இத பாருங்க, என் கணவரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவரை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எட்டு வருஷம் முன்னாடியே தெரியும். அவருக்கு நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்கலாம். ஆனா யார்கிட்டயும் தவறான முறையில் பழகினது இல்லே. உங்களைப் பத்தியும் சொல்லியிருக்கார். அவர் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு!"
_______________________________________________________________________
தன் அன்னைக்கு அடுத்தபடியாக தன் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும் தன் மனைவியை பெருமையுடன் பார்த்தான் ரிஷ்விக். மெல்ல அவள் தலையை தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு கண்ணயர்ந்தான்.

(பி.கு. என்னடா, லாவண்யாவப்  பத்தி ஒண்ணுமே சொல்லலேன்னு பாக்கறீங்களா. லாங் ஜேர்னி. ரிஷ்விக் இப்போதான் தூங்கப் போயிருக்கான்.  அவன் எழுந்த உடனே கேட்கலாமே, ப்ளீஸ்!!)






Thursday, September 2, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 2

பாகம் 1





ரிஷ்விக் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு லுப்தான்சா விமானத்தை பார்த்தான். தன்னையும் அறியாமல் லாவண்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.

"எனக்கும் லுப்தான்சாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?.. ரெண்டு பேரும் "எல்" ல ஆரம்பிச்சு "ஏ" ல முடியும்".

 "ஜேர்னி டைம் அரைமணி நேரம் தான்னாலும் எனக்கு தூங்கவோ, பாட்டு கேக்கவோ பிடிக்காது. யார் கூடவாவது பேசிகிட்டு வரணும். ஏம் ஐ டிஸ்டர்பிங் யு?"

"இல்லங்க"

"பை தி பை.. ஐயாம் லாவண்யா.. நீங்க"

"ரிஷ்விக்"    
     
என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாலும் அவளுடன் பேசிக்கொண்டு வரவே அவன் விரும்பினான். பேச வேண்டும் என்ற ஆசை, ஆனால் என்ன பேசுவது என்றும் அறியாமல் தவித்துக் கொண்டிருந்த போது அவளே ஆரம்பித்தாள்.

"பர்ஸ்ட் டைம் ப்ளை பண்ணறீங்களா?"

"ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்?"

"ப்ளைட் டேக் ஆப் ஆகி பத்து நிமிடம் ஆன பின்னும் பெல்ட் கழட்டாம இருக்கீங்களே!"

"ஒ.. மறந்துட்டேன்.. தேங்க்ஸ்"

" யு ஆர் வெல்கம். என்ன விஷயமா சென்னை போறீங்க?"

"நாளைக்கு இன்ஜினியரிங் கவுன்சலிங்"

"வாவ்... வாட் எ சர்ப்ரைஸ்... நானும் கவுன்சிலிங்குக்கு தான் போறேன். ஆமா உங்க நேடிவ் எது"

"கோயம்புத்தூர் தான்! நீங்க"

" நான் பக்கம்தான்- ஈரோடு. படிச்சதெல்லாம் Presentation ல தான். நீங்க"

" நான் மைக்கேல்ஸ். ஒரு காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் தான்!!"

"அமேசிங்.. ஐ ஜஸ்ட் கான்ட் பிலீவ் இட்.."


அவள் நுனி நாக்கு ஆங்கிலத்தை கேட்ட போது இவளைப்போல ஒரு பெண் தனக்கு மனைவியாய் அமைந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தான். அவள் அணிந்திருந்த டி-ஷர்டும், கையில் வைத்திருந்த செல்போனும் அவள் நிச்சயம் ஒரு வசதியான வீட்டுப் பெண் என்பதை காட்டியது. அதனால் தானோ என்னவோ அவளிடம் நட்பு பாராட்ட மனம் இணங்க மறுத்தது. இருந்த போதும் அவள் முகத்தை திரும்பத் திரும்ப பார்க்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

"பேசிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. பிளைட் எறங்க போவுது. பெல்ட் போட்டுக்குங்க"

ப்ளைட் தரை இறங்கியதும் மறுநாள் பார்ப்பதாக சொல்லிவிட்டு அவள் வேகமாக இறங்கிச் சென்றாள். அவளிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்ற உணர்வு . அது நட்பா, காதலா, பருவத்தின் ஈர்ப்பா? - ஒரு விடுகதையாய் தோன்றியது அவனுக்கு.அவள் உருவம் புள்ளியாய் தேயும் வரை பார்த்துவிட்டு பின் அவள் போன் நம்பர் எதுவும் வாங்கிக் கொள்ளாததை நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொண்டான். நாளை கவுன்சிலிங்குக்கு வரும்போது தன் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டும் என எண்ணினான்.

அவன் சொன்னானா? அவள் ஏற்றாளா? -- தொடரும்...






How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...