சித்திரமோ, செந்தமிழோ,
சூத்திரமோ, அயல் மொழியோ-எம்
சிந்தையிலே இருத்திடவே
நாள் முழுதும் பாடுபட்டாய்!!
ஒன்னொன்னும் ரெண்டென்று
நீர் சொன்ன மனக்கணக்கு!
முள் ரெண்டு உள்ளதென்று
நீர் சொன்ன மணிக்கணக்கு!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -புரிய
வைத்தீர் இனி ஏது தாழ்வு?
கற்பவை கசடற கற்றபின் உணர்ந்தேன்
என் ஆசிரியரின் பெருமையை!!
மரத்தினின்றும் விழுந்திட்ட ஆப்பிளைக் கொண்டு
அறிவியலும் விளக்கி விட்டீர்- அதிசயமே!
மரங்களின் தேவை உணர்த்திய அசோகரை
மனத்திரையில் வரலாறாய் ஓடவிட்டீர்- அது சுகமே!!
கணக்குகளோ, கவிதைகளோ,
கட்டிடமோ, திரைப்படமோ..
காலமெல்லாம் நான் படைக்க
முதலெழுத்தை கற்பித்தீர்..மிக்க நன்றி!
கையிலிருக்கும் உங்கள் எழுத்தாணி - நாங்கள்
வாழ்வினில் உயர அது ஏணி!!
பாடத்தோடு பண்பினையும் பயிற்றுவித்த ஆசிரியரே
உங்களை என்றும் மறவாது இந்த அணி!!