Showing posts with label பிடித்த பாடல். Show all posts
Showing posts with label பிடித்த பாடல். Show all posts

Monday, June 9, 2014

பயணிகள்-நிழற்குடை - 2014JUN09



ஹேட்ஸ் ஆப் டு யூ விஜய் டிவி..!

                    திருநங்கைகளை பற்றிய ஆழமான கலந்துரையாடல் இந்த வார நீயா நானாவில்.. அவர்களுக்கும் ஒரு மனதுண்டு, ஆண், பெண் போல் ஆசாபாசங்கள் உண்டு என்றெல்லாம் திருநங்கைகளை இதுவரை வெறும் காட்சிப் பொருளாய் பார்த்தவர்கள் கூட எண்ணியிருக்க கூடும். அவ்வளவு டச்சிங்காக இருந்தது நிகழ்ச்சி.. அதிலும் ஒருவர் கணவரைப் பற்றி கூறியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. சில திருநங்கைகள் காசு பிடுங்குவதற்காக சில தவறான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். அந்த மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. அவர்களுக்கு வாழ ஓர் அங்கீகாரம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அது போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள் என்பது திண்ணம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஜய் டிவிக்கு ஒரு சலாம்..!



இந்த வார மிக்ஸிங்..!

அமைச்சர் ஆவியானந்தா!


ஒய் மீ ஆல்வேஸ்? 

                           அரும்பாடுபட்டு லைசன்ஸில் முகவரி மாற்றி வந்த எனக்கு வந்தது மற்றொரு சோதனை. சில பொருட்கள் வாங்க RS புரம் சென்ற நான் அனாமிகாவை (எனது i20) அங்கு ஒரு ஹோட்டலின் முன் இருந்த பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இன்ஜினை ஆப் செய்தேன். அதே நேரம் வண்டியே குலுங்கும் அளவுக்கு ஏதோ இடித்தது போல உணர்ந்தேன். சீட் பெல்டை கழற்றிவிட்டு வெளியே இறங்க, அதற்குள் ஒருவன் டூவீலரை அவசர அவசரமாக கிளப்பி எதிர் திசையில் சென்றான். ஒன்றும் புரியாமல் காரை சுற்றி வந்த எனக்கு தலை சுற்றியது. காரின் முன்புறம் இருந்த பம்பர் உடைந்தும் , Fog லைட் தொங்கிக் கொண்டும் இருந்தது. டூ வீலரை பார்க் செய்ய வந்தவன் இடித்து விட்டு அப்படியே ஓடிவிட்டான். அவனை சிறிது நேரம் திட்டிவிட்டு தண்டச் செலவு அழுதுவிட்டு வந்தேன். வானத்தை நோக்கி ஒரே கேள்வி கேட்டேன்.. ஒய் மீ ஆல்வேஸ்?


இணையத்தில் 'பிடித்தது':


ஆகச்சிறந்த ரணம் எதுவெனில்,

பிரியங்கள் நிறைந்திருந்த தருணங்களை

பிரியமற்ற தருணத்தில் நினைப்பது தான்.



ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று..

                           அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்த சமயம், சென்னை ஏர்போர்ட்டில் டாக்ஸிக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ஒருவன் திண்டிவனத்திலிருந்து வந்ததாகவும், பர்ஸை திருடிவிட்டார்கள் என்றும், ஏதாவது உதவி செய்யுமாறும் கேட்டு நின்றான். அவன் உடையும் கோலமும் பரிதாபப்பட வைத்தது. அழைத்து சென்று அருகிலுள்ள டீக்கடையில் இருவருக்கும் டீ சொல்லி, அவனுக்கு வடையும் வாங்கிக் கொடுத்து பின் அவன் கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினேன். பின்னர் மூன்று வாரங்களுக்கு பிறகு திரும்ப அமெரிக்கா செல்ல ஏர்போர்ட் வந்தபோது அதே ஆள் மீண்டும் யாரிடமோ காசு கேட்டுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் எதிர்திசையில் சென்று மறைந்துவிட்டான். சென்ற மாதம் நண்பன் ஒருவன் யு.எஸ்ஸிலிருந்து வந்திருந்தான். அவனைப் பார்க்க விருதுநகர் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் இதுபோன்றே வந்து பணம் கேட்க, நான் கொடுக்க மறுத்ததோடு நண்பனையும் கொடுக்க விடவில்லை. "பார்த்தா Genuine ஆ தெரியராண்டா" என்ற அவனிடம் எனக்கு நடந்த கதையை கூறினேன். சமீபத்தில் மஞ்சப்பை என்ற படம் பார்த்த போது அதில் இதுபோன்ற காட்சி வந்ததும் எனக்கு இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.. உஷார் மக்களே.. இதுபோல நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள்..
                   

சமீபத்தில் ரசித்த பாடல்:

சத்தியமா நஸ்ரியாவுக்காக அல்ல..! ஹிஹிஹி..





கிஸு கிஸு கார்னர்: இவங்களுக்குள்ள மெய்யாலுமே 'அதுவா'?


                     சாதாரணமா விளையாடிக்கிட்டுருந்த ஒருத்தன் மரண அடி அடிக்கிறான்னா ஒண்ணு அவன் யூசுப் பதானா இருக்கணும்.. இல்லீன்னா பையன் லவ்வுல விழுந்திருக்கணும்.. குவாலிபையர் மேட்சுல அடி பின்னுனத பார்த்தா அப்படித்தான் தோணுது..இவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. "தெர்லியேபா"..!

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...!
              
                                  ***************** X *******************





Sunday, February 16, 2014

நான் ரசித்த பாடல் - போ இன்று நீயாக,..

இந்த பாடல் வேலையில்லா பட்டதாரி படத்தில் "Poetu" தனுஷ் தானே எழுதி பாடியது.. 


போ இன்று நீயாக..
வா நாளை நாமாக,

உன்னை பாக்காமலே, ஒண்ணும் பேசாமலே, 
ஒன்னை சேராமலே எல்லாம் கூத்தாடுதே..
லலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே
லலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே

தனியாவே இருந்து வெறுப்பாகி போச்சு..
நீ வந்ததாலே என் சோகம் போச்சு.,
பெருமூச்சு விட்டேன், சூடான மூச்சு,
உன் வாசம் பட்டு ஜலதோஷம் ஆச்சு..

மெதுவா மெதுவா நீ பேசும் போது
சொகமா சொகமா நான் கேக்குறேன்..

இது சாரை காத்து, என் பக்கம் பாத்து,
எதமாக ஆனாலே ஒரு சாத்து சாத்து..

லலலலலா ஓஓஓஓ ம்ம்ம்ம், வாறே தனனனனனனே
லலலலலா லஓஓஓ நெஞ்சு ம்ம்ம்ம், பொண்ணு தனனனனனனே 


எனக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடித்திருந்தால் கீழ்க்கண்ட சுட்டியில் இந்த பாடலை தரவிறக்கம் செய்யலாம்..

http://tamilnewmp3.net/downloads/load/2014%20Hits/Velai%20Illa%20Pattathari%20Mp3/Po%20Indru%20Neeyaga%20-%20TamilNewMp3.Net.mp3

Monday, August 26, 2013

பிடிச்சிருக்கு.. இத பிடிச்சிருக்கு..



                               தங்கமீன்கள்  "ஆனந்த யாழை" பாடலுக்குப் பிறகு புதிய பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த போது ராஜா ராணி திரைப்படத்தில் வரும் "Hey Baby" பாடலைக் கேட்ட போது கேட்டவுடன் பிடித்தது. ஜீ.வி பிரகாஷ் பாடி இசையமைத்த இந்த பாடல் வெஸ்டர்னில்  ஆரம்பித்து கானா பாலாவின் குரலில் போக்கில்(Folk ) முடிகிறது. ஒரு வித்தியாசமான முயற்சியாக இருந்தது. அதே படத்தில் இமையே பாடல் ஜி.வி மற்றும் "மக்காயாலா" புகழ் சக்திஸ்ரீ கோபாலனும் பாடியுள்ளனர்.  மனதை மயக்கும் பாடலிது. துள்ளல் இசையுடன் மற்றொரு பாடல் விஜயபிரகாஷ், ஷாஷா பாடிய "ஓடே ஓடே" பாடல்.  ஆர்யா, நயன்தாரா மற்றும் ஜெய் நடித்திருக்கும் இந்தப் படத்தின் மற்றொரு ப்ளஸ் நேரம் படத்திற்கு பிறகு தமிழில் நஸ்ரியா நடிக்கும் படமிது..




                               யுவன் இசையமைக்கும் நூறாவது படம் பிரியாணி. எச்சில் ஊற வைக்கும் டைட்டில், ஆனால் டைட்டில் சாங் படத்தோடு பார்க்கும்போது தான் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. ஜீவி, இமான், தமன், விஜய் ஆண்டனி இணைந்து பாடியிருக்கும் எதிர்த்து நில் ஊக்கம் தரும் பாடல். கார்த்தி தன் சொந்த குரலில் பாடிய "மிஸ்ஸிஸிப்பி" கட்டிப்புடி கட்டிபுடிடா ரக பாடல் என்றாலும் கார்த்தி, ப்ரியா மற்றும் பிரேம்ஜியின் குரலில் கேட்க நன்றாக உள்ளது. "நாநனனனா" பாடல் மூன்று வெர்ஷனில் உள்ளது.  யுவனின் குரல் இந்த பாடலுக்கு வலு சேர்க்கிறது.


                             
                               ஆர்யா, உலக சினிமா ரசிகனின் பேவரைட் அனுஷ்கா நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வரும் படம் இரண்டாம் உலகம். SPB யின் குரலில் "என் காதல் தீ" ஒரு இனிய மெலடி.. ஆனாலும் பழைய SPB யின் குரல் மிஸ்ஸிங். கார்த்திக்கின் இனிய குரலில் "கனிமொழியே" மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். "மன்னவனே என் மன்னவனே" ஹாரிஸ் ஜெயராஜின் இசைத் தாலாட்டு. "பாடகர்" தனுஷின் குரலில் பனங்கல்லா பாடல் சுமார் ராகம். நீண்ட நாட்களுக்குப் பின் ஹரிஹரனின் குரலில் "ராக்கோழி" அருமை.  "விண்ணைத்தாண்டி" பாடல் ஆதவன் படத்தின் எதோ ஒரு பாடலை நினைவுபடுத்துகிறது.

ராஜா ராணி ட்ரைலர் காண்க:



                              

Monday, April 1, 2013

எனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)

                             சில பாடல்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும். அப்படி என் மனதில் இடம்பிடித்த ஒரு சில பாடல்களை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்..



                                 கப்பலேறிப் போயாச்சு, சுத்தமான ஊராச்சு கண்ணம்மா எனத் தொடங்கும் இந்தப் பாடல் இந்தியன் திரைப்படத்தில் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறிய இரவில் நாட்டு விடுதலைக்காக தன் மனைவியை விட்டுப் பிரிந்த கணவனும், கணவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் மனையாளின் உணர்ச்சிமயமான வெளிப்பாடுமே இந்தப் பாடல்.  நாடு விடுதலை அடைந்த போது அடைந்த மகிழ்ச்சியை என் தலைமுறையினருக்கு அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்திய இந்த பாடல் என் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பாடலாகும்..

Saturday, November 10, 2012

சமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)





               இசையின் மேல கொண்ட அதீத ஆர்வத்தால் அவ்வப்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலப் பாடல்களையும் கேட்பதுண்டு.. அப்படி சமீபத்தில் புதிதாக வீட்டிற்கு ஒரு “Home Theater” வாங்கி வந்தேன். அப்போது அதை இன்ஸ்டால் செய்ய வந்த பணியாளிடம் ஏதாவது வீடியோ உள்ளதா என கேட்ட போது சில பாடல்களை என் ஹார்டு டிரைவில் பதிவு செய்து கொடுத்தான்.

            

                      அந்த பாடல்களில் ஒன்று “YUVVH” என்ற ஆல்பத்திலிருந்த “நெஞ்சோடு சேர்த்து” எனும் இந்த மலையாளப் பாடல்.. முதல் முறை கேட்ட போதே மனதை என்னவோ செய்தது.. அந்த பாடல் முழுமையாக இல்லாததால் இணையத்தில் தேடிய போது “YOU TUBE” ல் கிடைத்தது..





                      இதுவரை சுமார் ஐம்பது முறையாவது அந்தப் பாட்டை கேட்டிருப்பேன். சற்றும் சலிக்கவில்லை. அந்த பாடல் இது போல் துவங்கும்

நெஞ்சோடு சேர்த்து பாட்டொன்னு பாடாம்,
பாட்டிண்ட ஈனம் நீயானு

என காதல் ரசம் சொட்டச் சொட்ட இயற்றப்பட்ட இந்த பாட்டிற்கு இசையமைத்திருப்பது ஸ்ரீஜித்- சச்சின் எனும் இருவர். (இவர்கள் இப்போது ஒரு தமிழ் படத்திற்கும் இசையமைப்பதாய் கேள்வி). பாடலைப் பாடியவர் “என்னமோ ஏதோ” புகழ் ஆலாப் ராஜு. இந்த பாடல் கேரளாவில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் மிகவும் பிரபலமடைந்திருக்கிறது.. அழகான நாயகி, அவள் அழகையும் மீறி ரசிக்க வைக்கும் நாயகனின் நடிப்பு, சிறப்பான ஆக்கம் இப்படி எல்லாம் நிறைந்த இந்த வீடியோ உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...