Tuesday, August 6, 2013

கன்னியும் கணினியும்...

               
                                அது ஒரு அரசு மேல் நிலைப் பள்ளி. பள்ளியின் முன்பக்கச் சுவரில் ஏனோ தானோவென்று சுண்ணாம்பு அடிக்கப் பட்டிருக்க,  உட்புற சுவர்கள் என்.சி.சி மாணவர்களால் சுட்டு வீழ்த்தப் பட்டிருக்க,  கொடி மரத்தில் தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்க,  எறும்புகளின் அணி வரிசை போல் மாணவர்களும் மாணவிகளும் குழுமியிருக்க, சூரியனின் வெளிச்சத்தை ஒட்டுமொத்த மாணவர்களின் மீது பிரதிபலிக்கும் வண்ணம் சிரத்தைக் கொண்ட தலைமையாசிரியர் உரையாற்ற ஆரம்பித்தார் . "ஸ்டுடண்ட்ஸ், இந்த வருஷத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு படிக்குற மாணவர்கள்ல இருந்து சிறந்த மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கம்ப்யூட்டர் கற்றுத் தரப்படும் ". இந்த அறிவிப்பைக் கேட்டதும் மாணவர்கள் மத்தியில் சலசலப்பு உண்டானது.

                               முதல் பாடவேளை ஆசிரியர் வரும்முன் அருகில் அமர்ந்திருந்த முருகேசன் என்னிடம் "கம்ப்யூட்டர்னா என்ன டா " என்றான். "இந்தக் கேள்விய என்னப் பாத்தது ஏண்டா கேட்ட" என்பதுபோல் முதலில் அவனைப் பார்த்தபோதும் நம்மையும் மதித்து ஒருத்தன் கேக்குறானே என்பதால் அவனுக்கு பதில் சொல்ல ஆயத்தமானேன். என் அண்ணன் இன்ஜினியர் என்பதால் கம்ப்யுட்டரைப் பற்றி முன்னரே கொஞ்சம் சொல்லி இருந்தார். "கம்ப்யுட்டர்ங்கறது நாம செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் சுலபமா அதுவே செஞ்சிடுமாம்." என்று நான் சொன்னதும், "அப்ப அது நம்ம ஹோம்வொர்க்கெல்லாம் செஞ்சு கொடுக்குமா?" என்றான்.  அவன் கேட்ட கேள்விக்கு நான்  "ஞே" என்று விழித்தபடி இருக்க ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார்.

                                   "ஸ்டுடண்ட்ஸ், ஹெச்.எம் சொன்ன மாதிரி இந்த வருஷத்துக்கு உங்க கிளாசிலிருந்து முதல் மூணு ரேங்க் வாங்கின மாணவர்கள் மூணு பேர செலக்ட் பண்ணியிருக்கோம்." என்று கூறி என்னையும் இரண்டாம் மூன்றாமிடம் பிடித்த இரு மாணவிகளையும் அழைத்தார். எங்கள் மூவரையும் கம்ப்யுட்டர் ரூம் சென்று மோகன் மாஸ்டரைப் பார்க்கும்படி பணித்தார். அந்த பள்ளியின் வழக்கப்படி நான் முன்னே செல்ல, இரண்டடி தொலைவில் அந்த இரு தாவணித் தேவதைகளும் தொடர, கம்ப்யுட்டர் ரூமை அடைந்தோம். பாதணிகளை வெளியே விடுமாறு போட்டிருந்த வாசகமே அந்நியமாய் தெரிந்தது. வெளியே விட்டுவிட்டு கண்ணாடிக் கதவைத் திறந்தபோது சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. அறையின் கூரை தெர்மாக்கோல் கொண்டு மூடியிருக்க அறையின் ஓரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒற்றை ரோஜாவாய் வீற்றிருந்தது "கம்ப்யுட்டர்".

                                     "ஐ...கம்ப்யுட்டர்" என்று தன் குலோப் ஜாமூன் விழிகள் பிதுங்க ஆச்சர்யப்பட்ட சுமதி, வசீகரமான முகத்தில் மஞ்சள் பற்களுடன் ஒடிசலாய் நின்ற பிரேமலதா, உள்ளுக்குள் ஆவல் தெறித்த போதும் அமைதியாய் நின்ற நான், மூவரையும் இருக்கையில் அமர சொல்லிவிட்டு, "கம்ப்யுட்டரை  தமிழில் எப்படி அழைப்போம். இந்த கேள்விக்கு பதில் சொல்றவங்க தான் அத மொதல்ல யூஸ் பண்ணலாம்" என்றார் மோகன் மாஸ்டர். கேள்வி கேட்ட மறுநிமிடம் முந்திக் கொண்டு பதில் சொல்ல எண்ணி "கன்னி ஸார்" என்றேன்..ஓரிரு நொடிகளுள் நான் சொன்ன தவறான பதிலை எண்ணி நாக்கை கடிக்க, இந்த கேப்பில் உள்ளே புயலாய் புகுந்த சுமதி "கணினி சார்" எனவும் "தமிழாசிரியர் பையனுக்கே தடுமாற்றமா?" என்றபடி என் தலையில் ஒரு குட்டு வைத்தார் மோகன் மாஸ்டர்.
                             
                                            அவசரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் சுமதி இருக்கையில் அமர்ந்தாள். சி.பி.யு., மானிட்டர், கீ-போர்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்திவிட்டு கணினியை ஆன் செய்தார். சிறிய சைஸ் டயனோரா டிவி போலிருந்த மானிட்டரிலிருந்து பச்சை நிறத்தில் எழுத்துகள் தோன்றின. டாஸ் பற்றி சொல்லிக் கொடுத்துவிட்டு எங்களை நோக்கி "'எதாவது டவுட் இருக்கா?" என்றார். பிரேமலதாவும், சுமதியும் இல்லையென்று தலையசைக்க, நான் மட்டும் கையை உயர்த்தினேன். "குட், என்ன டவுட் கேளுப்பா!" என்று மோகன் மாஸ்டர் கூற நான் அவரிடம் கேட்டேன் "இது எங்க ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சு குடுக்குமா சார்?"
                             
***********************

                                ராஜி அக்கா மற்றும் எழில் மேடத்தின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து இந்த தொடர்பதிவ எழுத ஆரம்பிச்சேன்.. அது பழைய நினைவுகள் பலதையும் கிண்டி விட்டுடுச்சு.. கொஞ்சம் கை சரியாகட்டும்..சீக்கிரமே இன்னொரு தொடரை எதிர்பார்க்கலாம்.. (இதுக்குத்தான் சொல்றது சும்மா போற கொசுவ பார்த்து கொக்காணி காட்டக் கூடாதுன்னு) சரி என் கடமைய முடிக்க இன்னும் அஞ்சு பேர கோர்த்து விடணுமே.. இதோ.. மொதோ மொதோ கவித எழுதின அனுபவம் பத்தி எழுத அஞ்சு பேர கூப்பிடறேன்.

                ஸ்கூல்பையன்  

                                  பிறாண்ட வாங்க பதிவுலக "குட்டிப் புலிகளா".. ஒருத்தரும் நிம்மதியா தூங்கக் கூடாது..  

34 comments:

  1. ஆவி சார் உங்க போஸ்ட் dashboardல வரல... ஸ்கூல் பையன் போஸ்ட்ல உங்க மறுமொழிய பார்த்துட்டு வந்தேன்...

    செம ஷாக்.. உங்க எழுத்து ஆர்வத்தைக் கண்டு யாம் வியக்க

    ReplyDelete
    Replies
    1. யாமும் யாமும்

      Delete
    2. கொஞ்சம் தங்கை உதவ, மீதியெல்லாம் அடியேன் டைப்பியதுதான்.. நன்றி ரூபக், சீனு.

      Delete
    3. சார் எனக்கும் போஸ்ட் வரல ...!

      Delete
  2. நாம் அனைவருமே கணினி என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவர்கள்தானே,

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. //தன் குலோப் ஜாமூன் விழிகள் பிதுங்க ஆச்சர்யப்பட்ட சுமதி, வசீகரமான முகத்தில் மஞ்சள் பற்களுடன் ஒடிசலாய் நின்ற பிரேமலதா//

    உவமைஎல்லாம் சூப்பரா இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. அந்தப் புள்ள கண்ணு நெஜமாவே அப்படித்தான் இருந்தது நண்பா..

      Delete
  4. //மொதோ மொதோ கவித எழுதின அனுபவம் பத்தி எழுத அஞ்சு பேர கூப்பிடறேன்//

    யோவ் ஆவி... எனக்கு கவிதையே திடீர்னு தான் வரும்... சரி ட்ரை பண்றேன்...

    ReplyDelete
    Replies
    1. யோவ் ஆவி காலும் அரையும்னு கவிதை எழுத நான் என்ன இஸ்கூலா :-)

      Delete
    2. ஸ்கூல் பையன்- முத முத திடீர்னு பொங்கின அனுபவத்த எழுது நண்பா..

      Delete
    3. சீனு- கால் அரை வேணாம் தம்பி, உன் காலரை தூக்கி விட்டுகிட்டு அந்த பிள்ளைய பார்த்து கவித எழுதின அனுபத்த கேக்குறேன்.

      Delete
    4. திடீர் திடீர் ன்னு வர்றதுக்கு வேறேன்னோமோ பேர் சொல்லுவாங்களே ....?

      Delete
  5. இது போலத்தான் ஆறாப்புல, இலக்கண பாட வகுப்பில் நாக்கு பிறண்டு கெண்டை விழியாளுக்கு, கொண்டை விழியாள் என்று சொன்னேன் டீச்சர் யாருக்குப்பா அவ்ளோ பெரிய கண்ணுன்னு ? கேட்டாங்க... கேமரா கோணம் நன்று. அதெப்படி உனக்கு எப்பவும் ரெண்டு பொன்னுங்க செட்டாகுது ? ஙே..

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா.. உங்க அனுபவம் செம்மயா இருக்கே கலாகுமரன் சார்.

      Delete
    2. அதென்ன கேமரா கோணம்?

      Delete
    3. //அதெப்படி உனக்கு எப்பவும் ரெண்டு பொன்னுங்க செட்டாகுது//

      உனக்கு கன்னி ராசிடா.. அதான் இப்படியெல்லாம் நடக்குதுன்னு நண்பர்கள் சொல்லுவாங்க... அது சரி ரெண்டடி கேப் விட்டு வரும்போதே கலாய்க்கரீங்களே ஸார்..

      Delete
    4. கேமரா கோணம் ? அதான் .. காம்பவுண்ட், தேசியக்கொடி, எறும்பு போல் மாணவர்கள், சூரிய வெளிச்சம் பிரதிபளிக்கும் தலைமை ஆசிரியரின் தலை, அப்படியே பயணிக்கிறதே.

      Delete
  6. அன்பின் ஆவி - கன்னியும் கணினியும் சூப்பரா எழுதி இருக்கீங்களே - பலெ பலே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

      Delete
  7. விரைவில் சீனுவை போல திரில்லர் கதைகள் எழுதும் அளவிற்கு உங்கள் எழுத்து சுவாரஸ்யத்தை தருகிறது ........கன்னியையே நினைத்து கொண்டிருந்தாள் கணினி எப்படி நினைவு வரும் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி, சீனு நட்சத்திர பதிவர். அவர் அளவுக்கு என்னால் எழுத முடியுமான்னு தெரியல. ஆனா ஒரு கிரைம் தொடர் உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.

      Delete
    2. இப்பல்லாம் நாட்டுல கிரைம் அதிகமாயிட்டூ ....!

      Delete
  8. //என்னையும் இரண்டாம் // இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்று யாம் கண்டுபிடித்து விட்டோம்... அது எப்படி ஆவி பாஸ் பிட் அடிச்சு கூட மொத ரேன்க் வாங்கறீங்க

    உள்ளுக்குள் ஆவல் தெறிக்க காரணம் சுமதியும் பிரேமலதாவும் தான் என்பதை யாம் அறிவோம்

    //"இது எங்க ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சு குடுக்குமா சார்?"// ஹா ஹா ஹா இப்ப அவரு ஞே ன்னு முழிச்சாரா

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல்ல நான் பிட் அடிச்சதில்ல (சத்தியமா).. நான் பிட் அடிச்ச சம்பவம் ஹலோ.நா.இ.தான் தொடர்ல வரும்..

      //உள்ளுக்குள் ஆவல் தெறிக்க காரணம் சுமதியும் பிரேமலதாவும் தான் என்பதை யாம் அறிவோம் //
      சரி சரி நமக்குள்ளே இருக்கட்டும்.

      //அவரு ஞே ன்னு முழிச்சாரா//
      அவரு அத டீச்சர்ஸ் ரூம்ல எங்கப்பாட்ட போட்டு குடுத்துட்டாருப்பா..

      Delete
  9. இது எங்க ஹோம் ஒர்க் எல்லாம் செஞ்சு குடுக்குமா சார்?"
    >>
    அதானே நம்ம கவலை நமக்கு. ஆமா, நீங்க வகுப்பில் முதல் இடம்ன்னு உங்க பதிவுல படிச்சதா நினைவு!! ஹோம் வொர்க் செய்யாமலே முதலிடமா?! எப்படி??!

    ReplyDelete
    Replies
    1. ஆமாக்கா.. உங்க தம்பியாச்சே.. ஸ்கூல்ல எப்பவும் முதல் இடம் தான்.

      அப்பா அதே ஸ்கூல்ல இருந்ததாலயும், முதல் ரேங்க் வாங்கியதாலும் எந்த ஆசிரியரும் என்னிடம் ஹோம் ஒர்க்கே கேக்க மாட்டாங்க..ஹிஹி..

      Delete
  10. மைண்ட்ல என்ன ஓடிகிட்டு இருந்தச்சு பாரேன்......அப்புறம் அந்த டவுட் கேட்டதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சுன்னு சொல்லவே இல்லையே !!

    ReplyDelete
    Replies
    1. அவரு அத டீச்சர்ஸ் ரூம்ல எங்கப்பாட்ட போட்டு குடுத்துட்டாருப்பா..

      Delete
  11. சுவாரஸ்யமா இருக்கு உங்க அனுபவம்! நான் ஏற்கனவே எழுதிவிட்டேன்! அதனால எஸ்கேப் ஆகிக்கிறேன்! என்னை அழைத்தமைக்கு நன்றி! என் அனுபவத்தை படிக்க http://thalirssb.blogspot.in/2013/07/my-first-computer-experience.html

    ReplyDelete
    Replies
    1. நண்பா, நான் அழைத்த தொடர்பதிவு முதல் கவிதை அனுபவம்..எஸ்கேப் எல்லாம் ஆவாதீங்க..

      Delete
    2. எ ஹேய் அப்படி போடு அருவாள.. :)

      Delete
  12. ஹ ஹா... நல்லாருக்கு.

    கன்னியும் கணினியும்...!!!!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...