Friday, April 19, 2013

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (கிராயூர் எனும் ஏதேன்)-3




                            தினமும் ஒரு மணி நேரம் பயணம் செய்வது கடினமாக இருந்ததால் வண்டிகேட்டில் இருந்த கவுண்டர் காம்ப்ளக்ஸில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கினேன். (காம்ப்ளக்ஸ் என்றவுடன் என்னவோ ஏதோன்னு நினைச்சுக்க வேண்டாம். ஹாலோபிளாக் சுவரும், ஓலைக் கூரையும் போட்ட ஒரு பத்து அறைகள் கொண்ட இடம் தான் அந்த காம்ப்ளக்ஸ். )  அங்கேதான் அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவனான அன்பழகனை சந்தித்தேன். என் சமையல் கைப்பக்குவதிற்கு குரு அவன்தான் என்றால் மிகையல்ல.

                              கவுண்டர் வெளியூர் போயிருக்கும் போது அவர் வளர்த்தும் கோழிகள் எங்களை பரிதாபமாக பார்க்கும். அவற்றின் பிறந்த பலனை நிறைவேற்றும் பொருட்டு (?!!)  நாங்கள் அவைகளுக்கு அவ்வப்போது மோட்சம் அளிப்பதுண்டு. சனி, ஞாயிறுகளில் அன்புவின் சமையலில் அந்த ஏரியாவே மணக்கும். ஆறடி வளர்ந்த அந்த அன்புவுக்கும் அதே சீனியர்களால் ரேகிங்  தொல்லை. என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது தான் எங்கள் ஆபத்பாந்தவனாய் வந்தார் இளங்கோ மாஸ்டர். ஆங்கிலம் இரண்டாம் தாள் எடுக்க வந்த அவர் சற்றே உயரம் குறைந்து அல்ட்ரா மாடர்ன் அகத்தியர் போல் காட்சியளித்தார்.

                                அவர் ஆங்கில ஆசிரியராய்  மட்டுமல்லாது லைப்ரரியனாகவும் பணிபுரிந்தார். ஒரு நாள் மாலை நானும் பாஸ்கரும் லைப்ரரி சென்ற போது அவர் எங்களை அழைத்து "டேய், வர்ற திங்கள் கிழமையிலிருந்து கராத்தே கிளாஸ் ஆரம்பிக்க போறேன். உங்க கிளாசுல யார் யாருக்கு இண்டரெஸ்ட் இருக்கோ அவங்களையெல்லாம் சேர சொல்லு." என்றார்.. இதை கேட்டதும் எனக்கும் பாஸ்கருக்கும் கண்களில் ஹேவெல்ஸ்.. அப்போதே எங்கள் மனத்திரையில் கராத்தே கற்றுக் கொண்டு சீனியர்களை பந்தாடுவது போல் Bluray  திரைப்படமே ஓடியது. கிளாசுக்கு வந்து எல்லோருக்கும் இந்த நற்செய்தியை கூற, நான் எதிர்பார்த்ததுக்கு மாறாக கராத்தே கற்றுக் கொள்வதற்கு யாருமே ஆர்வமாக இல்லை.

                             அன்று மாலை கல்லூரியை விட்டு செல்லும்போது கல்லூரிக்கு அருகிலிருக்கும் மற்றொரு கிராமமான கிராயூரில் தங்கியிருந்த மாணிக்கம் "டே, நம்ம கிளாசுக்கு வர்ற மத்த மூணு பொண்ணுங்க கிராயூர்ல தான் வீடு வாடகைக்கு எடுத்திருக்காங்களாம்" என்ற பயனுள்ள தகவலை கூற, வழக்கம்போல் பாஸ்கர் "இந்த பொண்ணுகள பத்தி இல்லாமே வேற எந்த விஷயமும் பேசமாட்டீங்களாடா?" என்று கடிந்து கொண்டான். மாணிக்கத்துடன் அந்த புது மாணவிகளை பார்க்க கிளாசில் பாதிப் பேர் கிராயூர் நோக்கி படையெடுக்க, பாஸ்கர் என்னிடம் அன்று மாலை சினிமாவுக்கு செல்லலாம் என்றும் தயாராக இருக்கும்படியும் கூறினான். எனக்கும் கிராயூர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சினிமா என்றதும் மனம் மாறிவிட்டது. பாஸ்கருடன் அருகிலிருந்த மோகனூர் எனும் ஊரிலுள்ள "அய்யனார்" தியேட்டரில் தாயகம் எனும் காவியம் காணச் சென்றோம்.

                               எவ்வளவோ மொக்கை படங்களை கூட அசராமல் உட்கார்ந்து பார்த்துவிடும் எனக்கே கேப்டனின் அட்ராசிட்டிகள் அலுப்பைக் கொடுக்க, பாதிப் படத்தில் போய் விடலாமென பாஸ்கரை கட்டாயப் படுத்தினேன். வேறு வழியில்லாமல் அவனும் சம்மதித்தான். இடைவேளை விட்டதும் இருவரும் வெளியே வர, தொலைவில் சங்கீதா கையில் ஐஸ்க்ரீமுடன் வருவதைப் பார்த்தேன். அவளுடன் அவளது முகச்சாயலிலேயே இன்னொரு பெண்ணும் (அக்காவாக இருக்கலாம்), உடன் இன்னும் மூன்று பெண்களும் நடந்து வந்தனர். அவர்கள் தான் புதிய மாணவிகளாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே யோசித்துக் கொண்டு பாஸ்கரிடம் "சரி, வந்தது வந்தாச்சு.. படம் முழுசா பாத்துட்டே போலாம்" என்றேன். அவனோ  நின்று எனைப் பார்த்து முறைத்தான்.. விடாமல் அவனிடம் "சரி, சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வா.. நான் உள்ளே உக்கார்ந்திருக்கேன்" என்றேன். சங்கீதாவைப் பற்றி கூறினால் கோபப்படுவான் என்பதால் அவனை அங்கே அனுப்பிவிட்டு தேவதைகளை நோக்கி நடந்தேன்.



                             சங்கீதா என்னைப் பார்த்ததும் புன்னகைத்து "ஆனந்த், எங்கே படத்துக்கு வந்தீங்களா?" நானோ "இல்லீங்க, பக்கத்துல ஒரு பஞ்சாயத்துக்காக வந்தேன்.." என்றேன். அவள் என் ஜோக்கை (?!!) புரிந்து சிரித்துவிட்டு மற்ற மூவரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அதில் ரமாதேவி எனும் பெண் பார்ப்பதற்கு கருப்பு நிற கனகா போல் சாயலில் இருந்தாள் . மெலிந்த தேகம், புன்னகை பூத்த முகம் பார்த்தவுடன்  மனம் பறிகொடுத்தேன். "என்ன சங்கீதா இவங்களையெல்லாம் இன்றோட்யூஸ் பண்ணினீங்க உங்க அக்காகிட்டே பண்ணலையே" என்றேன்.. "அய்யோ  அவங்க என் அக்கா இல்லை, எங்க அம்மா.." என்றதும் சற்றே வெட்கப்பட்டு என்னைப் பார்த்து சிரித்தார்கள். பதிலுக்கு நானும் அசடு வழியும் முகத்துடன் அவர்களிடமிருந்து விடைபெற்று பின் இரண்டாம் பாகத்தை பார்க்க தயாரானேன்..

                            படம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் அன்புவிடம் நடந்ததை கூறினேன். அவனும் கேட்டுவிட்டு "எப்படியோ மொத சந்திப்புலயே அத்தைய கரெக்ட் பண்ணீட்டே" என்றான்.. "ஐயோ, சங்கீதா என் ப்ரெண்டுடா.. அந்த ரமாவைப் பார்த்ததும் தான்  முதல் பார்வையிலேயே விழுந்துட்டன்டா.. " என்றவுடன்  "சூப்பர்ரா, கலக்கு.. யார் அந்த பொண்ணுன்னு நாளைக்கு எனக்கு காட்டு  " என்றான். "கண்டிப்பாடா.. எல்லோருமே கிராயூர்ல தான் தங்கியிருக்காங்களாம்."

                    " ஏ, கிராயூரே,
                       ஏஞ்சல்கள் தங்கியிருக்கும் இடமானதால்-
                       ஏதேன் என்ற பெயரும் பெற்றாயோ? "  

என்றவுடன் "டே.. காதல் வந்தவுடன் இலவச இணைப்பா கவிதையும் வந்துருச்சா? என்று கூறி என் காதல் கேண்டிலுக்கு லைட்டை ஏற்றினான்.. அன்றிரவு மணி பன்னிரெண்டான போதும் ஏனோ தேவையில்லாமல் "இது காதல் கவிதைகள் படித்திடும் நேரம்" பாடல்  மனசுக்குள் ரிப்பீட் மோடில் ஒலித்தது..

(தொடரும்..)

                           







12 comments:

  1. அட...அசத்துற மச்சி...கருப்பு நிற கனகா ஒகே...அந்த சங்கீதா....தங்க நிற தமன்னா வா...?

    ReplyDelete
    Replies
    1. அந்த காலத்துல ஏது மச்சி தமன்னா எல்லாம், இருந்தாலும் நீயே சொன்னதுக்கப்புறம் அப்படியே வச்சுக்கலாம்...

      Delete
  2. இலவச இணைப்பு இப்போது வருமா...?

    ReplyDelete
    Replies
    1. வரும்., ஆனா வராது... ;-)

      Delete
  3. சுவையாத்தான் இருக்கு ! காதல் வைபோகத்தை படிக்க ஆவலாக உள்ளேன்! நன்றி!

    ReplyDelete
  4. அடடா...! ஆவிக்கு நல்லா சமைக்கவும் வருமோ? ஒரு முறை கைவண்ணத்தை(!) ரசிச்சுறணும். காதல் வந்தால் கவிதையும் வரும். காதல் போனால் (அ) கல்யாணம் ஆனால்... கவிதை காணாமப் போயிடுது. ஆனந்து இதுல எந்த ரகமப்பா? அனுபவப் பயணம் சுவாரஸ்யமாகவே போகிறது!

    ReplyDelete
    Replies
    1. சார். சமைக்க வரும்னு தானே சொன்னேன். நல்லா வரும்னு சொல்லலியே.. கவிதை பற்றிய உங்க கருத்து சரிதான். கருத்துக்கு நன்றி

      Delete
  5. //அல்ட்ரா மாடர்ன் அகத்தியர் போல் காட்சியளித்தார்.// வெகுவாய் ரசித்தேன்
    //"அய்யோ அவங்க என் அக்கா இல்லை, எங்க அம்மா.." // அய்யோ அய்யோ மிடில


    கல்லூரியுடன் காதலும் சேர்கிறதா... நடத்துங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.

      Delete
  6. அடுத்த பதிப்பு சீக்கிரம் போடு ஆனந்த்.நாவெல் போல் சுவாரஸ்யத்தை கொண்டு போய்க்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வடிவு. விரைவில் அடுத்த பாகம் போடுகிறேன்.

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...