Friday, January 8, 2016

பிரேதம் பார்த்த ஞாபகம்!! (6)

 பகுதி 1    பகுதி 2   பகுதி 3  பகுதி 4 பகுதி 5

டோனா பாலாவில் அவள் கூறியதைக் கேட்டவுடன் துரிதமாகச் செயல்பட்டேன். அவளையும் அவள் குடும்பத்தையும் காப்பாற்றுவது என
தீர்மானித்தேன். அவளிடம் சென்னையில் உள்ள அவளது அப்பாவையும் தம்பியையும் இடம் மாறும்படி கூற சொல்லிவிட்டு கொல்கத்தாவில் இருந்த என் நண்பனுக்கு அழைத்தேன். சிறிது நாட்கள் இடம் மாற்றமே இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிக தீர்வாய்த் தோன்றியது. டோனா பாலாவில் இருந்து அவளுடைய காரில் கொல்கத்தா நோக்கிப் பயணித்தோம். மும்பை வழி செல்ல வேண்டாம் என்று அவள் கூறியதால் அன்றிரவு விசாகப்பட்டினம் சென்று தங்கிவிட்டு மறுநாள் காலை கொல்கத்தா செல்ல முடிவெடுத்து பயணத்தை துவக்கினோம். இருவரும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுனர் இருக்கையை பகிர்ந்து கொண்டே விசாகப்பட்டினம் அடைந்தோம். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் நான் காரை பார்க் செய்து வருவதற்குள் அவள் தங்கும் அறையை புக் செய்திருந்தாள்.

அறை எண் முன்னூற்றி ஒன்று, இந்த எண் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு எண்ணாக மாறிவிட்டதாய் உணர்ந்த நாள் அது. இருவர் தங்கக்கூடிய அந்த அறையில் அவள் உடைமாற்றிக் கொள்ள வசதியாய் அறைக்கு வெளியே நின்றிருந்தேன். சிறிது நேரம் கழித்து அவள் கதவைத் திறக்க உள்ளே சென்று அவள் கேட்ட ரெட் ஒயினையும், எனக்கு வோட்கா வும் இருவருக்கும் உணவும் போனில் ஆர்டர் செய்துவிட்டு அவள் அருகே அமர்ந்தேன். "அம்மா கிட்ட சத்தியம் செய்திருக்கிறேன், குடிக்க மாட்டேன், என்று சொன்னதாய் ஞாபகம்." என்றாள். "ஆமாம், அம்மாவிடம் பீர் எல்லாம் அடிப்பதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். இன்றுவரை பீர் அடித்ததே இல்லை. ஹாட் மட்டும் தான்" "யூ நாட்டி" என்று என் கன்னங்களைக் கிள்ளினாள். சற்று நேரத்தில் நாங்கள் ஆர்டர் செய்த மதுவும், உணவும் வந்து சேர்ந்தது.

இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டே மதுவை அருந்தினோம். மணி பன்னிரெண்டைத் தாண்டியும் பேசிக் கொண்டிருந்தோம். அந்த அறையின் பால்கனியிலிருந்து தெரிந்த முழு நிலவும் அவள் முகமும் ஒன்று போலத் தோன்றியது எனக்கு. அந்த வெள்ளைப் பனிக்கு நடுவே ஓர் சிவப்பு ரோஜாவாய் அவள் இதழ்கள். வோட்கா தந்த போதையும் அவள் இதழ்கள் தந்த கிறக்கத்திலும் அவள் இதழ்களில் இதழ் பதித்தேன். அவள் சட்டென விலகிச் சென்றாள். "ஐயாம் சாரி, நான்.." சற்று தடுமாற்றத்துடன்  "ஐ திங்க் ஐ லவ் யூ.." என்றேன். நான் செய்த செயலுக்காக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தேன். நிமிர்ந்த போது அவள் அருகே அமர்ந்திருந்தாள். "மீ டூ கார்த்திக்" என்றவாறு என்னைக் கட்டியணைக்க, வானில் இருந்த வெண்ணிலவு மேகத்தோடு கலந்து காதல் செய்தது. அன்றைய நள்ளிரவு நல்லிரவாய்க் கழிந்தது.


அந்த இரவின் முடிவு எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்திருந்தது.
எங்கள் உறவில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருந்ததாய் உணர்ந்தேன். விசாகப்பட்டினத்திலிருந்து கொல்கத்தா வரையிலான  எங்கள் பயணத்தில் இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டது. அவளிடம் என் வாழ்க்கைத் திட்டமிடல்களை விவரித்துக் கொண்டே வந்தேன். அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டேன். முடிந்து போன அவள் பிறந்த நாளுக்கு ஒரு நீல நிற சுடிதார் பரிசளித்தேன். "சங்கு, இந்த ப்ளூ சுடிதார் நான் உனக்குக் கொடுக்கும் முதல் காதல் பரிசு. இதை நீ நம்ம காதலின் நினைவுச் சின்னமா  எப்பவும் வச்சிருக்கணும்."  க்ளீஷே வான இந்த டயலாக்கை சொல்லியவுடன் அவள் என்னைப் பார்த்து "டோன்ட் ஒர்ரி,  நான் செத்துப் போனாக் கூட இதே சுடிதாரில் தான் வருவேன், போதுமா?" என்று கண்களை உருட்டி சந்திரமுகி ஜோதிகா போல் பேசிவிட்டு சிரித்தாள். 


அந்த நெடும் பயணம் சுகமான ஒன்றாக அமைந்தது அவளின் ஆங்கிலம் கலந்த பிள்ளைத் தமிழ் வார்த்தைகளாலா, இடையிடையே அவள் சிந்திய புன்னகைத் துளிகளாலா என்று அறியாமல் தவித்திருந்தேன்.  கண்மூடி உறங்கும் நேரம் கற்றை முடிகள் குறுக்கே விழுந்து அவள் முகத்தை மறைத்த போது வண்டியை நிறுத்தி அந்த முடிகளை ஒதுக்கிவிட்டு அவள் முகம் பார்த்தபடியே வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன். அவளிடம் காதல் சொன்ன கணம் முதலாய் அவளுடன் வாழத் துவங்கியிருந்தேன். அவள் தான்  என் வாழ்க்கைத் துணை, இனி ஒருநாளும் அவளைப் பிரிவதில்லை என ஓர் உறுதி எடுத்துக் கொண்டேன்.  கொல்கத்தாவை நெருங்கிக் கொண்டிருந்தோம். ஆயிரம் காலத்துப் பயிரை எண்ணியபடி மகிழ்வுடன் இருந்த நான் அடுத்த ஆயிரம் நிமிடங்களில் நிகழப் போகும் விபரீதத்தை அப்போது உணர்ந்திருக்கவில்லை.



அந்த நிமிடங்களை இப்போது நினைக்கும் போதும் ஒவ்வொரு செல்லிலும் வலிக்கிறது, உள்ளத்தில் வேதனை அதிகரிக்க, கண்களில் ஏதோ ஒரு இருள் சூழ ஆரம்பிக்கிறது. என் சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்த போது அங்கே நான் வந்த பஸ் என்னை விட்டுவிட்டு புறப்பட்டிருந்தது. நான் பதறியபடி என்ன செய்வதென்று சிந்தித்தபடியே கையில் இருந்த குளம்பியை ஒரே மிடற்றில் குடித்து முடித்தேன். கிளாஸை கடையில் வைக்கச் சென்ற போது தான் கவனித்தேன். அதில் அவள் முகம் தெரிந்தது. அது மட்டுமல்லாமல் அந்த கிளாஸில் குளம்பி முழுவதுமாய் நிரம்பி இருந்தது.

-தொடரும்.






7 comments:

  1. க்ளீஷே தகவல் திணிக்கப்பட்டதாய் ஒரு உணர்வு ஆவி.
    என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது, எப்படி என்று அறியக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. அருமையாப் போகுது....
    என்ன நடந்ததென அறியக் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  3. அங்கங்கே வரிகள் பளிச்சிடுகின்றன.

    ReplyDelete
  4. விடுபட்ட நான்கு பகுதிகளையும் ஒரு சேர படித்து முடித்தேன்...... அடுத்தது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  5. என்ன நடந்திருக்கலாம் என்று ஒரு விதம் ஊகிக்க முடிந்தாலும், கதாசிரியர் எப்படி நகத்தப் போகின்றார் அடுத்த பகுதியை என்ற ஆவல். பல இடங்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது ஆவி! கொஞ்சம் உலக வாசனை அடிக்கின்றது!!!ஹஹஹ்...படமாக எடுக்கலாம் உலக வாசனையுடன்! அதில் இந்திய வாசனை இல்லாமல்..புரிந்திருக்குமே!

    கீதா

    ReplyDelete
  6. அடுத்த அத்தியாயத்தை நோக்கி

    ReplyDelete
  7. அடுத்த அத்தியாயத்தை நோக்கி

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...