Friday, July 30, 2010

மகா




" மகா- வெளியில என்னன்னவோ பேசிக்கறாங்க, அதெல்லாம் உண்மையா? " என்றபடி வீட்டுக்குள் நுழைந்தார் அப்பா.  "எதப்பத்தி கேக்குறீங்க அப்பா? " - மகா.
"உனக்கும் நம்ம பேமிலி டாக்டருக்கும் காதல் அது இதுன்னு பேசிக்கறாங்களே, இது நிசமா."

"ஆமாப்பா, நான் டாக்டரை மனசார காதலிக்கறேன். எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு. நாங்க திருமணம் செய்துக்க ஆசைப்படறோம். அதுக்கு உங்க சம்மதமும், ஆசிர்வாதமும் வேணும்". "மகா, அப்பாகிட்ட என்ன இப்படியெல்லாம் பேசற. உனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது. தவிர அந்த டாக்டர் நம்ம ஜாதி கூட இல்ல" - அம்மா ஆவேசத்துடன் கேட்டாள்.

"என்ன பாக்கியம் இப்படி பேசறே. இந்த காலத்துல யாரு சாதி எல்லாம் பாத்து கல்யாணம் பண்ணிக்கறாங்க. அந்த டாக்டரை அவங்க அப்பா காலத்துல இருந்தே நமக்கு தெரியும். நல்ல குடும்பம். இந்த பசங்க நம்மள மதிச்சு நம்ம சம்மதத்தோட தானே கல்யாணம் பண்ணிக்க ஆசை படறாங்க. நாம பெரியவங்களா இந்த சின்னஞ் சிருசுங்களே சேர்த்து வைக்கறது தானே முறை!!" என்றார் அப்பா. "ரொம்ப தேங்க்ஸ் பா" மகிழ்ச்சியுடன் அப்பாவின் கால்களில் விழுந்தான் மகா என்கிற மகாதேவன்.



9 comments:

  1. naane guess pannitten:)

    ReplyDelete
  2. it's small story, but you maintain the suspense till end. Gr8

    ReplyDelete
  3. Thanks சௌந்தர். I'll keep that in mind from my next post.

    ReplyDelete
  4. Thanks Jaanu. It's just about lateral thinking. Hats off! you got that already!

    ReplyDelete
  5. Thanks Muni. You comments are helpful to improve the quality of my blog.

    ReplyDelete
  6. Thanks for Everyone, who made this blog Popular.

    ReplyDelete
  7. அட சஸ்பென்ஸ் கதை....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...