Showing posts with label திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி. Show all posts
Showing posts with label திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி. Show all posts

Saturday, June 29, 2013

உறக்கம் பறித்த ஸ்னேகிதியே !! (திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி)

                       பதிவுலகின் புதிய "காதல் மன்னன்" சீனு பதிவர்கள் அவரவர் காதலிக்கு எழுதிய/ எழுத நினைத்த/ எழுத மறந்த காதல் கடிதம் ன்னு ஒரு பரிசுப்போட்டி  அறிவிச்சிருந்தாரு. எல்லா பதிவர் நண்பர்கள், அவர்களுடைய கவிஞர் நண்பர்கள் கிட்ட இருந்தும் கடிதம் அனுப்ப சொல்லி கேட்டிருந்தாரு.. (பரிசு கிடைக்குமா இல்லையாங்கறத விட இந்த லெட்டர் எல்லாம் வச்சு பயபுள்ள என்ன பண்ணப் போகுதுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்).

                        கொஞ்சம் வருஷம் முன்னாடி எழுதினது. கற்பனையா, காவியமா, இந்தக் கடிதம் எந்தக் காதலிக்கு எழுதியதுன்னேல்லாம் கேக்கப்படாது. ஏன்னா, முதல் காதல் மட்டும் தான் புனிதம்.. இரண்டாவது மூன்றாவது காதல் எல்லாம் டெஸ்டோஸ்ட்ரான் (Testosterone) செய்யும் மாயம்ன்னெல்லாம்  சொல்ல மாட்டேன். எல்லா காதலும் புனிதம் தான் நாம சின்சியரா இருக்கிற வரை. 

                        எனக்குள் கொஞ்ச நாளா தூங்கிக் கிடந்த கவிஞன கிள்ளி விட்டு எழுப்பி இந்த கடிதத்தை எழுத வச்ச (டிங்கரிங் பார்த்தத சொன்னேன்) சீனுவுக்கு நன்றி. இப்போ அவன் நைட்டெல்லாம் தூங்காம ஆவிப்'பா' எழுதிகிட்டு இருக்கான். (நல்லா வகையா மாட்டுனீங்களா??) நடுவர்களை புகழ்ந்து பேசக்கூடாதுன்னு சொல்லிட்டதனால குருநாதர்க்கு மானசீகமா நன்றி தெரிவிச்சுட்டு தொடங்கறேன்.

                                                  



பெண்ணே!
  
இரவுகளில் சரியாய் உறங்குவதில்லை - இது நீ என் மீது வைத்த குற்றச்சாட்டு!
சிந்தித்து பார்க்கிறேன் - இது எப்போது தொடங்கியதென்று?

முதன் முதலாய் பார்த்த போது
மை கொண்ட இரு விழியாலும், கவர்கின்ற புன்னகையாலும் களங்கமற்ற என் இதயத்தை அபகரித்தாயே, அப்போதா?

கலைகளிலே முதல்வனாய் வலம் வந்த என்னை 
கடைக் கண்ணில் காதல் காட்டி
கடை நிலை மாணவனாய் மாற்றினாயே, அப்போதா? 

உன் பால் நான் கொண்ட காதலை 
உள் மனதில் மூடி போட்டு வைத்திருந்த அந்நாளில் என் பாரம் புரியாமல் 
தள்ளி நின்று எள்ளி நகையாடினாயே, அப்போதா?

பூடகமாய் என் காதல் உன் காதில் நான் சொன்ன போது
புரியாத புதிர் ஒன்றை கேட்டதைப் போல்
புன்னகைப்  பூ ஒன்றை சிந்தி விட்டு சென்றாயே, அப்போதா?

ஏற்பாயா, மறுப்பாயா விடை ஏதும் அறியாமல் 
வலியோடும் பயத்தோடும்
பல மாதம் காத்திருக்க வைத்தாயே, அப்போதா?

அயல் நாடு செல்லுமுன் வழியனுப்ப வருவாயா 
என்றதற்கு விழி நீரில் ஒன்றுதிர்த்து 
விடையனுப்பி வைத்தாயே, அப்போதா?

தொலை தூரத்தில் உன் விளி,
தொலைபேசி கம்பி வழி 
குரல் மட்டும் தூதாய் அனுப்பினாயே, அப்போதா?

வெட்கத்தின் தலை களைந்து 
உள் மனதின் ஆசைகளை ஒவ்வொன்றாய் சொன்ன போது
மௌனத்தின் மொழி பேசினாயே அப்போதா?

பெற்றவளும் என் மனம் அறிந்து
பல மடங்கு உளம் மகிழ்ந்து  
பெண் பார்க்க சென்றாளே அப்போதா?

பரிசம் போட்ட பின்னும் 
பதினோரு மாதங்கள் காத்திருந்து
பின் மனம் திறந்து உன் காதல் சொன்னாயே, அப்போதா?

மணப்பெண்ணாய் மேடையிலே 
உன் கரம் பற்றிய போது
அன்பின் ஸ்பரிசத்தை தந்தாயே, அப்போதா?

பெயர் சொல்லி அழைத்திடவே 
நாணத்தில் கன்னம் சிவந்து
நெஞ்சத்தில் முகம் புதைத்தாயே, அப்போதா?

கார்கூந்தல் நீ முடித்து
மல்லிகையும் அதில் சேர்த்து 
காற்றில் உந்தன் வாசம் தன்னை பரவவிட்டாயே, அப்போதா?

தேன் சுவையும் தீஞ்சுவையும் 
திருக்குறளின் முப்பாலும் 
கலந்தெனக்கு நீ கொடுத்தாயே, அப்போதா?

அயல் நாட்டில் தனி வீட்டில் 
கேளீரற்ற  கானகத்தே 
அத்துணை சொந்தமுமாய் இருந்தாயே, அப்போதா?

நான் பாடும் திரைப் பாடலை 
தாலாட்டாய் எண்ணி நீயும் 
நள்ளிரவில் கண்ணுறக்கம் கொண்டாயே, அப்போதா?

ஓர் ஆராய்ச்சி எலி போலே,
உன் சமையல் நான் உண்ண 
உப்பித்தான் போனேனே, அப்போதா?

மகிழுந்தில் சில தருணம் 
மகிழ்ச்சியுடன் பல தருணம் 
சந்தோசம் வழிந்தோடியதே, அப்போதா?

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் 
பெருகிப் பொங்கும் 
உனதன்பை என்மேல் பொழிந்தாயே, அப்போதா?

மரித்தாலும் ஒருபோதும் 
மறக்காது உன்மேல் நான் கொண்ட 
பாசம் என்று சொன்னாயே, அப்போதா?

யாழ் இனிது, குழல் இனிது,
எனினும் அதனினிது  உன் மனது,
என்றிருந்த எனை விட்டு மறைந்தாயே, அப்போதா?

பார் பேசும் பல வார்த்தை- நீ, 
நான் வாழ்ந்த வாழ்க்கை 
அதை நினைக்க சில கணங்கள் மறந்தாயே, அப்போதா?

கனவினிலும் உனைக் காண 
தவங்கிடந்த எனைவிட்டு 
கனவெனவே மறைந்தாயே, அப்போதா?

எரியும் பனிக் காட்டினிலே 
எனை மட்டும் தவிக்க விட்டு 
தொலைதூரம் சென்றாயே, இப்போதா?  

பல நாட்கள் விழித்திருந்தேன் - உறங்காமல் உன் நினைவுகளில்!
ஆம் ! இப்போதும் விழிக்கின்றேன் - உறங்காமல் உன் நினைவுகளில்!!!

நீயில்லா பூமியிலே 
நீர் கூட கசக்குதம்மா.. 
நீர் இல்லாப் பாலையிலே 
செடி என்ன முளைத்திடுமோ?

கண்ணிமைக்கும் நேரத்தில் 
நிகழ்ந்திட்ட விபத்திதுவோ?
பின் சென்று அதைத் திருத்த 
காலக் கண்ணாடி தான் இல்லையோ ?

நடந்தது எல்லாம் ஒரு கனவாய் 
எண்ணி நானும் கண் மூட,
நாளைக் காலை விழிக்கையிலே  
நேரில் நீயும் வருவாயோ?




How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...