Sunday, June 29, 2014

ஆவி டாக்கீஸ் - சைவம்

                     
இன்ட்ரோ  
                       நான் கற்றுக் கொண்ட பாடங்களின்படி, நான் புரிந்து கொண்டது இதுதான். உலகில் உள்ள எல்லா உயிரினமும் ஏதாவது ஓர் உயிரினத்தை கொன்று புசித்து உயிர்வாழ்தலே "உணவுச் சுழற்சி".

                             "அசையும் உயிரனங்களை கொன்று புசிப்பவர்கள் அசைவம். அசையா உயிரினங்களை கொன்று புசிப்பவர்கள் சைவம்."



கதை         
                           காரைக்குடியில் ஒரு செட்டிநாடு வீட்டில் ஒரு நாள் மதிய உணவிற்கு ஆடு, கோழி, மீன், முட்டை என எல்லாம் தயாராவதுடன் துவங்குகிறது. அய்யாவின் வீட்டில் கோவில் பண்டிகையை ஒட்டி குடும்பத்தினர் அனைவரும் மூன்றாண்டுகளுக்கு பின் ஒன்று கூடுகின்றனர். குடும்பத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்கும் காரணம் கடவுளுக்கு நேர்ந்துவிட்ட சேவலை பலி கொடுக்காதது தான் என புரிந்து (?!!) கொண்டு அந்த சேவலை பலி கொடுக்க முடிவெடுக்கிறார்கள். மறுநாள் அந்த சேவல் காணாமல் போகிறது.. அது கிடைத்ததா. குடும்பத்தின் பிரச்சனைகள் தீர்ந்ததா என்பது கிளைமாக்ஸ். இடையே ஒரு விடலைப் பருவ காதலும் சுவைபட சொல்லப்படுகிறது.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              சுட்டிப் பெண் சாரா கொள்ளை அழகு. தேர்ந்த நடிப்பு. வீட்டில் இருக்கும் எல்லாரிடமும் தோப்புக்கரணம் போட்டு உண்மையை சொல்லாதிருக்க வேண்டும் போது அசத்தல் பெர்பார்மன்ஸ். சாராவுக்கு இணையான நடிப்பு வாண்டு ரே பாலுடையது. ஒவ்வொரு முறையும் "ஷ்ராவன்" என்று தன் பெயரை திருத்தி சொல்லும்போதும் கைதட்டலை அள்ளுகிறான். நாசர் வழக்கம் போல் அமைதியான நடிப்பில் அசத்துகிறார். கெட்டப் சூப்பர். நாசரின் மகன் பாஷா விடலை சிறுவனாய் நல்ல நடிப்பு. த்வாரா தேசாய் ஜோர்.. பார்க்க சேட்டுப் பெண் போல் இருந்தாலும் துறுதுறு கண்களில் நளினமாய் நடித்துவிட்டு செல்கிறார்.

                               வேலைக்காரராக வருபவர். வேலைக்காரியாக வருபவர், அத்தை கதாபாத்திரம், மகன்கள் என பெரிய பட்டாளம் நடித்திருக்கிறது.. ஒவ்வொருவரின் நடிப்பும் அளவோடு பதிவு செய்யப்பட்டிருப்பது அழகு. சுரேஷ் கிளைமாக்சில் வந்து படத்தில் ஒட்டிக் கொள்கிறார்.  


இசை-இயக்கம்-மேக்கப்
                                 நாசரின் சொட்டைத் தலை, வயதான தோற்றமாகட்டும், சாராவின் 'பளிச்' முகமாகட்டும், மற்றவர்களின் சிகையலங்காரங்கள் ஆகட்டும் எல்லாம் பக்காவாக பொருந்தும் வண்ணம் வடிவமைத்த பட்டணம் ரஷீதுக்கு ஒரு "ஒ". ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படம் முடிந்த பின்னும் நம் காதுகளில் இனிமையாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.. டைரக்சன் விஜய். இவருடைய எல்லா படங்களுமே நீட்டான படங்கள் தான் என்ற போதும், இவர் திருமணத்துக்கு பின் வெளியாகும் முதல் படம் குடும்பத்துடன் செகண்ட் ஷோவிற்கு மக்கள் கும்பலாக வந்து பார்க்கும் அளவுக்கு தரமான படைப்பை கொடுத்த விஜய் நல்ல இயக்குனர்கள் வரிசையில் சிம்மாசனமிட்டு அமர்கிறார்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                குட்டிப் பெண் உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியிருக்கும் "அழகே" பாடல் தித்திக்கும் தேனமுது. ஷ்ராவன் ஒவ்வொருவரிடமும் சேவல் இருக்குமிடம் சொல்லி அடிவாங்கி செல்லுமிடம்.

           Aavee's Comments - Saivam tastes better with KFC Grilled Chicken !


Friday, June 27, 2014

ஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்

                       
இன்ட்ரோ  
                       இந்த படத்திற்கு புக் பண்ண நேற்று  தியேட்டர் வெப்சைட் திறந்த போது இந்த படத்திற்கு எனக்கு முன்னால் ஒரே ஒரு ஜீவன் புக் செய்திருந்தது.
அதே சமயம் ட்ரான்ஸ்பார்மர் படத்திற்கு ஹவுஸ் புல் போர்டு தொங்கியது.
 
                       ஹாலிவுட்டை நாம் இன்னும் நிமிர்ந்து பார்க்க காரணம் மொக்கை கதையையும், மோஷன் கேப்சரில் அழகாக வார்த்துக் கொடுப்பது தான். நாம் இன்னும் அவன் வாயை பார்த்தபடி நிற்பதற்கு காரணம் அருமையான கதையையும் கேவலமாக எடுப்பதுதான்.



கதை         
                          விவாகரத்து கிடைக்கும் நாளை எதிர் பார்த்திருக்கும் ஒரு கணவன் மனைவி. இவர்களுக்கு ஒரே பிரசவத்தில்  பிறந்த நான்கு பெண்கள்  அவர்கள் நால்வரும் வாய் பேச முடியாத, காது கேட்கும் திறன் இழந்த மாற்றுத் திறனாளிகள். கொஞ்சம் கொஞ்சமாக தூக்க மாத்திரைகள் சேர்த்து காதல் தோல்விக்காய் தற்கொலை செய்ய தயாராக இருக்கும் ஒரு வாலிபன்,  தன் மனதிற்கு பிடித்த காதலன் கரம் பிடிக்க பெற்றோர் வீட்டை விட்டு வரும் இளம் ஆசிரியை. விவாகரத்து, தற்கொலை, திருமணம் எல்லாம் மாலை மூன்று மணிக்கு என்று குறிக்கப் பட்டிருக்க ஆசிரியை பள்ளிக் குழந்தைகளுடன் ஒரு மிருகக் காட்சி சாலைக்கு செல்ல, அங்கே தன் இருப்பிடத்திலிருந்து வெளிவரும் ஒரு பாம்பை (அனகோண்டா??)  கண்டு எல்லோரும் அலறியடித்து ஓட, இந்த நான்கு குழந்தைகள் மட்டும் மாட்டிக் கொள்ள அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.;

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               நான்கு குழந்தைகளும் சிறப்பான நடிப்பு, எல்லோரும் ஒரே போல இருப்பதால் யார் சிறப்பு அதிகம் என்று சொல்ல முடியாத நிலை. ஆனால் அவர்கள் நடிக்க கொஞ்சமே வாய்ப்பு அளித்திருப்பதால் கொடுத்த வாய்ப்பை சிறப்பாய் செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். காதல் மன்னனில் கண்களைச் சிமிட்டி சிமிட்டி 'தல' யை காதலித்த மானு இதில் மானு ஆண்ட்டி. நான்கு குழந்தைகளும் உள்ளே மாட்டிக் கொண்டுவிட வெளியே அழுது புலம்பும் டியூட்டி. படம் நெடுக வருவது நிதின் சத்யா மற்றும் மாளவிகா ஜோடி. நிதின் சத்யா நல்ல முன்னேற்றம். சரளமான காமெடி வருகிறது. மல்லு தேசத்திலிருந்து புதிய இறக்குமதி மாளவிகா. கண்களால் கவிதை பேசுகிறார். ஒரு நல்ல டைரக்டர் படத்தில் நடித்தால் இப்போதிருக்கும் சில நடிகைகளின் பாடு திண்டாட்டமாகி விடும். வையாபுரி, இமான் அண்ணாச்சி வீணடிக்கப் பட்டிருக்கிறார்கள்.


                                                                                                அமைதியான அறிமுகம் 
                                    'ஜெயம்' ராஜா முதல் படத்திலேயே அசத்துகிறார். தொடர்ந்து நடிக்கலாம். ஒரு இயக்குனர் நடிகராகும் போது இருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அமைதியாக அடுத்த வீட்டு அங்கிள் மாதிரி வந்து போகிறார்.


இசை-இயக்கம்-எடிட்டிங் 
                                 .எடிட்டிங் VT விஜயன். அழகு.. ஒவ்வொறு காட்சியும் எவ்வளவு நீளம் இருக்கணுமோ அவ்வளவே இருக்கிறது. சரி படமே, நூறு நிமிடம் தான் அதுல இவரு இதுக்கு மேல என்ன வெட்டறது. இசை நாகா சுமார். "கதிரு, கதிரு" பின்னணி இசை சூப்பரு. இயக்குனர் குரு ரமேஷ் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. திரைக்கதை சிறப்பாய் இருந்திருந்தால் படம் ரசிக்கும்படி இருந்திருக்கும்.. குறிப்பாய் விவாகரத்து கோரி நிற்கும் தம்பதிகளுக்குள் இருந்த அன்னியோன்யத்தை முதல் பாதியில்  ஓரிரு காட்சிகள் வைக்க வாய்ப்பிருந்தும் தவற விட்டது. விறுவிறுப்பாய் குழந்தைகளுக்கு நேரும் ஆபத்தை சொல்லிக் கொண்டிருக்கையில் அண்ணாச்சியின் மயில் குஞ்சு காமெடி போன்ற காட்சிகள் படத்தை பலவீனப் படுத்திவிட்டது.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 நிதின் சத்யாவின் சில காமெடிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

           Aavee's Comments - அமேசான் காட்டிலிருந்து அனகோண்டாவை எதிர்பார்த்து சென்ற மக்களுக்கு எர்வாமாட்டின் கொடுத்தனுப்புகிறார்கள் !



Wednesday, June 25, 2014

பத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ?)


             வாத்தியார் தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கார். மத்தவங்க எழுதற பதில்கள படிக்கறதுல இருக்கிற சுகம் நாமளே பதில் சொல்லி அதை வாசிக்கறதுல இல்ல.. இருந்தாலும்  வாத்தியார் கேட்டப்புறம் தட்ட முடியுமா?








1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

பதில் : காலையில எழுந்ததும் அம்மாகிட்ட வாழ்த்து வாங்கிட்டு, புறப்பட்டு நண்பர்கள பார்த்து அவங்க வாங்கி வச்சிருக்கிற (பக்கிகளா, வழக்கம் போல கேக் வாங்கலையா) நான் வாங்கிட்டு போன கேக்கை வெட்டி எல்லாரும் சாப்பிட்டுட்டு, அப்புறம் புதுசா ரிலீஸ் ஆன ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு, மதியம் நல்ல ஹோட்டலா பார்த்து பிரியாணி( சிக்கன், மட்டன் எதுவானாலும் பரவாயில்லே). அப்புறம் அட்ரஸ் தேடிப்  பிடிச்சு காந்தி வீட்டுக்கு (ஆமா மகாத்மா காந்தி தான் ) போயி 1950 க்கு அப்புறம் நாடு அலங்கோலமான அப்டேட் கொடுக்கணும். இரவு வந்து  எங்க பாட்டி (அம்மாவோட அம்மா, இப்ப உயிரோட இல்ல) மடில படுத்துகிட்டு, தாத்தாக்கு நான் எழுதின கதைகள், கவிதைகள் எல்லாம் படிச்சு காண்பிக்கணும். (அவரும் இப்ப உயிரோட இல்ல).. உயிரோட இல்லாதவங்க கூட எப்படி உரையாட முடியும்னு கேட்கறீங்களா? அப்போ நூறு வயசுல நான் மட்டும் உயிரோட இருப்பனா என்ன?








2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

பதில் :  நான்  காட்டும் அன்பை அலட்சியப்படுத்தும் மனிதர்களை வெறுக்க கற்றுக் கொள்ள வேண்டும்.








3.கடைசியாக சிரித்தது எப்போதுஎதற்காக?

பதில் :  உதட்டளவு சிரிப்பு என்பது எப்போதும் இருக்கு.. அரங்கம் அதிர சிரித்தது சமீபத்தில் சீனு மற்றும் வாத்தியாரோட (அன்னைக்கு ஸ்கூல் பையன் மட்டம் போட்டுட்டார்) முண்டாசுப்பட்டி படம் பார்த்த போது. 








4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பதில் : மொதல்ல UPS ஆன் பண்ணுவேன்.. ஹஹஹா.. புத்தகங்கள் இருக்கு.. கையில கொஞ்சம் காசு எடுத்துகிட்டு பைக்கில் அல்லது காரில் ஊர் சுற்ற கிளம்பிடுவேன். 









5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

பதில் :  வாழ்த்துகள்.. "கல்யாணம் ஆயிடுச்சு இனி நீ கணவன், நான் மனைவி ன்னு யோசிக்காம எப்போதும் நல்ல நண்பர்களா இருங்க போதும்.. எந்த பிரச்சனை வந்தாலும்  உங்களுக்குள்ளயே தீர்த்துக்க பாருங்க.. "









6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

பதில் : எந்த பிரச்சனையையும் 'பேசித்' தீர்த்துவிடலாம் என்று தீர்க்கமாக நம்பி தோல்வியடைந்தவன் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன்.. இதற்கு மேல் எந்த பிரச்சனையையும் தீர்க்க கிளம்புவதாக இல்லை.









7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

பதில் : சிறுவயதிலிருந்தே அப்பாவின் அட்வைஸ் (ஆர்டர்?). கொஞ்சம் வளர்ந்ததும் தாயிடமும், பருவ வயதில் நண்பர்களிடமும், திருமணத்திற்கு பிறகு மனைவியிடமும் ன்னு மத்தவங்க அட்வைஸ் கேட்டே வளர்ந்துட்டேன்.. இனி சரியோ, தப்போ, நான் எனக்குள்ள இருக்கிற ஒரு புத்திசாலி 'ஆவி' கிட்ட மட்டும் தான் அட்வைஸ் கேக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.









8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

பதில் : அவங்களுக்கு போன் பண்ணி, இல்லேன்னா நேரில் பார்த்து ஏன் அப்படி செஞ்சாங்க ன்னு தெரிஞ்சுக்குவேன். அவங்க செய்ததில் ஏதாவது நியாயமான காரணம் இருந்தா அதை திருத்திக்க முயற்சி செய்வேன். வேண்டுமென்றே அப்படி செய்தாங்கன்னு தெரிஞ்சா நம்மையும் மதிச்சு நம்மள பத்தி ஒரு நியுஸ் பரப்பியிருக்கானே ன்னு ஒரு சின்ன 'தேங்க்ஸ்' சொல்லிட்டு அவங்க ரிலேஷன்ஷிப்ப கட் பண்ணிடுவேன்.









9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

பதில் : அது நண்பரின் வயதையும், மனைவி எப்படி இறந்தார் ங்கறதையும் பொறுத்தது..

 நண்பர் இளம் வயதினரா இருந்தா வேற கல்யாணம் பண்ணிக்க சொல்வேன். நடுத்தர வயது ஆள்கிட்ட என் சோகக் கதைகளை கூறி எம்பதைஸ்(Empathaize) செய்வேன். பெரியவங்களா இருந்தா மௌனமா நின்னுட்டு வந்திடுவேன். 
அதே போல மனைவி ஆக்சிடென்ட்ல ஏதும் இறந்திருந்தா ஐயோ பாவம் இப்படி ஆயிடுச்சே ன்னு சொல்வேன். நோய் வந்து இறந்திருந்தா  கருணையே இல்லையே இந்த கடவுளுக்குன்னு அவரை கோச்சுக்குவேன். கள்ளக் காதல் வெளியே தெரிஞ்சு தூக்கு மாட்டிருந்தா வாடா மாப்ளே சரக்கடிக்கலாம் ன்னு கூப்பிடுவேன்..









10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

பதில் : கேக்குற கேள்விய தெளிவா கேக்கணும் இல்ல.. இப்படி பொதுவா கேட்டா என் பதில் கொஞ்சம் பெருசா இருக்குமே பரவாயில்லையா? 

தனிமை - நான் விரும்பியோ விரும்பாமையோ எனக்கு நிறைய தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.  சிறு வயதில் விவரம் தெரிஞ்சதுல இருந்து அம்மா ஆபிஸ்ல இருந்து வர்ற வரைக்கும் தனிமை தான். சனிக்கிழமைகளில் கூட அலுவலகம் சென்று விடுவார் என்பதால் தனிமையில் ஒரே ஆளாக கேரம், செஸ், ஏன் சில சமயம் "ஒன் மேன் கிரிக்கட்" கூட விளையாடி இருக்கேன். அப்போ எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. அம்மா வர்றதுக்குள்ள அவங்களுக்கும் சேர்த்து காபி, மேகி எல்லாம் செய்து கொள்ள பழகிகிட்டேன்.
 
பள்ளி முடிந்ததும் பாலிடெக்னிக், தொலைதூர ஊர்.தனி அறை.. இப்போ கொஞ்சம் நண்பர்கள் இருந்தாங்க.. இருந்தாலும் தனியா இருக்கும்போது நான் சமையல் செய்ய கத்துகிட்டேன். எப்பவாவது ஓவியம் வரைய பிடிக்கும். முதல் காதலிக்கு கொடுக்க கடிதங்கள் பல எழுதுவேன்.. (அதுல ஒண்ணு கூட இன்னைக்கு வரைக்கும் கொடுக்கல.) நிறைய்ய்ய சினிமா பார்த்து தனிமையை அண்ட விடாமல் செய்வேன்.

கல்லூரி நாட்களில் நிறைய இசை கேட்க ஆரம்பித்தேன். சிட்னி ஷெல்டன், ராஜேஷ் குமார், தமிழ்வாணன் இவங்க எல்லாம் துணைக்கு இருப்பாங்க.. சென்னையில் முதல் வேலை மேன்ஷன் வாழ்க்கை, மெடிக்கல் ரெப் நண்பர்கள் வரும் வரை பக்கத்துல இருக்கிற மெரீனா பீச்சுக்கு வாக்கிங் போவேன். அமெரிக்க வாசம், அபார்ட்மெண்டில் நண்பர்கள் இருந்த போதும் தனிமையான தருணங்கள் நிறைய இருந்தன. அப்ப லேப்டாப் தான் தனிமை நிவாரணி.

திருமணத்திற்கு பிறகு தனிமையான தருணங்கள் தொலைந்து போய்விட்டதாகவே எண்ணியிருந்தேன். அதெல்லாம் இல்ல உனக்கு அறிமுகம் ஆனா முதல் நண்பனே நாந்தான்னு தனிமை இப்போ மீண்டும் வந்து ஒட்டிக்கிச்சு. ஆனா இப்போ அவனை கவனிக்க நேரம் இல்ல.. வேலை, முகநூல், சினிமா, பதிவுகள், இசை, நட்புகள் ன்னு ரொம்ப பிஸியா இருக்கேன்.. தனிமைய எங்காவது பார்த்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க.. சொல்வீர்களா?  சொல்வீர்களா?

                                                        







சரி இப்ப யாரை கோர்த்து விடறது? ம்ம்ம் எல்லாரும் எழுதிட்ட மாதிரி தெரியுது.. நான் சொல்றவங்க இதுவரைக்கும் எழுதலேன்னா எழுதுங்க ப்ளீஸ்.. 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் சார், KGG சார் (நீங்க எழுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்), சுப்புத் தாத்தா, உலக சினிமா ரசிகன், 'இரவின் புன்னகை வெற்றிவேல்', குடந்தையூர் சரவணன், துளசிதரன் சார்..


Thursday, June 19, 2014

ஆவி டாக்கீஸ் - வடகறி


இன்ட்ரோ  
                          ஜெய்-ராஜா ராணியின் வெற்றியை பயன்படுத்தி இன்னும் உயரங்களுக்கு போயிருக்கலாம்.. 'நவீன சரஸ்வதி சபதம்' எனும் மொக்கை படத்தில் கமிட் ஆனது, 'திருமணம் எனும் நிக்காஹ்' நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது, என பல காரணங்களால்  திரையுலகின் அடுத்த "இளையதளபதி" ஆக முடியாமல் தவிக்கிறார்.. இந்தப் படம் இவருக்கு கைகொடுக்குமா, பார்ப்போம்..!



கதை         
                            காலாவதியான மருந்துகளை அதன் எக்ஸ்பெய்ரி தேதியை மாற்றி புதிய ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் விற்பனை செய்யும் ஒரு கும்பலிடம் பல லட்சம் மதிப்புள்ள மருந்துகளை கொடுத்து ஏமாந்த ஒருவனிடம் ஒரு செல்போனுக்கு ஆசைப்பட்டு தவறுதலாக மாட்டிக் கொள்ளும் மெடிக்கல் ரெப் நாயகன். இந்த சிக்கலுக்கு இடையில் தான் ஆசையாய் துரத்தி துரத்தி காதலித்த நாயகி நெருங்கி வருகையில் அவளிடம் பேச முடியாத அவஸ்தையோடு பிரச்னையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதே கதை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               தனக்கென்று அமைத்துக் கொண்ட அதே பார்முலாவில் ராஜ நடை போடுகிறார் ஜெய். நாயகியிடம் காதல் சொல்ல வெட்கப்பட்டு அவள் தோழியிடம் கூறுவதும், அண்ணனிடம் சம்பளப் பணத்தை கொடுத்துவிட்டு பேந்த பேந்த விழிப்பதுமாய் நல்ல நடிப்பு. சுவாதி முதல் பாதியில் மட்டும் வருகிறார்.. அப்புறம் கொஞ்சம் இடைவெளி விட்டு கிளைமேக்ஸில் ஜெய்யுடன் இணைகிறார். கலர் கலர் சுடிதாரில் அம்மணி அம்சமாக வலம் வருகிறார். வெங்கட் பிரபு மானேஜர் ரோல். அப்பப்போ காமெடி, அப்பப்போ கரெக்டர் ன்னு அசத்துறார்.

                                 RJ பாலாஜி ஜெய்யின் நண்பனாக படம் நெடுக வருகிறார். டைமிங் காமெடியில் ரைமிங்காக பேசி கைதட்டல் வாங்குகிறார். குறிப்பாக தான் மாட்டிக் கொண்ட கடத்தல் கும்பலிடம் பேசிப் பேசி நட்பாய் மாறும் காட்சி கலகல. இனி இவரை பல படங்களில் பார்க்கலாம்..! அண்ணனாக அருள்தாஸ் கொஞ்ச நேரம் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்.. கஸ்தூரி, மிஷா கோஷல் நிறைவான நடிப்பு. பிரேம்ஜி நட்புக்காக..


                                                                                             ஆரவாரமான அறிமுகம்        
                                    ப்ரொடக்க்ஷன் பேனர், நாயகன், நாயகி, இயக்குனர் பெயர் வரும்போதெல்லாம் அமைதியாக இருந்த நம்ம ரசிகர்கள் ஒரு அறிமுக நடிகையை (தமிழில்) இவ்வளவு கரகோஷத்தோடு வரவேற்றது நிச்சயம் தமிழனுக்கு பெருமை (?!!!) சேர்க்கும் விஷயம் தான். சன்னி லியோனுக்கு ஒரே ஒரு ஐட்டம் ஸாங் என்ற போதும் வடகறியின் மேல் வைக்கப்பட்ட செர்ரி பழம் போல் இனிக்கிறார்.  அந்தப் பாடல் முடியும் வரை விசில் சப்தம் அரங்கைக் கிழித்தது. தவிர Porn ஸ்டாருக்கும் புடவை கட்டி ஆட விடும் ரசனை தமிழனுக்கே அன்றி வேற யாருக்கு இருக்கும்..



இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 யுவன் ஷங்கர் ராஜா முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் பின்வாங்கியதால் விவேக்-மெர்வின் இசைப் பொறுப்பை எடுத்துக் கொண்டு சிறப்பாய் செய்திருக்கின்றனர்..  வெங்கட் பிரபுவின் அசிஸ்டென்ட் சரவண ராஜன் முதல் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்.. பிரவீன்-ஸ்ரீகாந்த்தின் எடிட்டிங் படத்திற்கு பலம். ஆயினும் யுவனின் "உயிரின் மேலொரு" பாடல் படத்தில் மிஸ்ஸானது நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும். தயாநிதி அழகிரி தயாரிப்பு போட்ட முதலை வசூலித்துக் கொடுக்கும்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                  "நெஞ்சுக்குள்ள நீ" பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.காதல் சொல்ல வந்து வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை சொல்லி சுவாதியை பின்தொடர்ந்ததற்கு சாரி சொல்லும் இடம் மற்றும் RJ பாலாஜியின் காமெடி சீன்ஸ்.

           Aavee's Comments - உட்டாலக்கடி கிரிகிரி இது தரமான வடகறி!




Wednesday, June 18, 2014

ஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)


                         "நான்" படத்தின் ஆரவாரமில்லாத வெற்றிக்கு பின் விஜய் ஆண்டனி ஹீரோவாக தயாரித்து நடிக்கும் படம் "சலீம்". அவரே இசையமைத்திருக்கும்  பாடல்கள்  இயக்குனர்கள் கேயார், பாரதிராஜா பாலா மற்றும் பலர் முன்னிலையில் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது.


1. "Prayer" - புனித குர்-ஆனை இசைச் சேர்ப்புகளோடு  யூசுப் பாடியிருக்கிறார். குர்-ஆன், பகவத் கீதை போன்றவற்றை கமர்ஷியல் சினிமாக்களில் பயன்படுத்துவது மத வேறுபாடுகளற்ற சமூகத்தை உருவாக்கும் என்றாலும் இவற்றை எந்த ஒரு மதத்தவரும் மனம் கோணாதவாறு படமாக்க வேண்டும் என்று பொறுப்புணர்வும் இயக்குனருக்கு அவசியம். பாரதிராஜாவின் சிஷ்யர் நிர்மல் அதில் ஜெயித்தாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2. "உன்னைக் கண்ட நாள் முதல்" - சுப்ரியா, ஹேமச்சந்திரா மற்றும் ஸ்ரீநிவாசன் பாடியிருக்கும் பாடல். கவிஞர் அண்ணாமலையின் காதல் வரிகளுக்கு டிரம்ஸ் இசை ஒரு பார்ட்டி ஸாங் போன்ற தோற்றத்தை கொடுத்தாலும் "மக்காயலா"வில் இருந்த துள்ளல் மிஸ்ஸிங்..

3. "அவள நம்பித்தான்" - நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் 'சிவசம்போ' பாடலின் ரீ-மிக்ஸ். ஒரு சேஞ்சுக்கு இதில் கானா பாலா பாடல் மட்டும் எழுதிக் கொடுக்க அதை மகாலிங்கம் கிளாசிக் இசையின் வனப்பு சிறிதும் கெட்டு விடாமல் பாடியிருக்கிறார்.

4. 'என் உச்சி மண்டையில' டைப் குத்துப் பாட்டு இந்த "மஸ்காரா போட்டு".  கிளைமாக்ஸுக்கு முன்  வரப் போகும் பாடலாக இருக்கலாம். சுப்ரியா, விஜய் ஆண்டனி மற்றும் ஷர்மிளா ஹை-பிட்ச்சில் கலக்கியிருக்கும் பாடல்.

5. 'நான்' படத்தின் அதே தீம் மியுசிக்குடன் துவண்டு போன நாயகனை நிமிர்ந்து நிற்கச் செய்யும் பாடல் "உலகம் உன்னை". பிரபு பண்டாலா உணர்ச்சிப் பெருக்குடன் பாடுகையில் அரங்கில் உறங்கிப் போனவர்களும் எழுந்து அமர்வது உறுதி..

                         
                      ஓரிரு பாடல்களை தவிர மற்றவை சுமார் ரகம். திரையில் பார்க்கும்போது பிடிக்கலாம். மொத்தத்தில் மும்மொழிகளில் வெளியாகும் இந்த சலீம் இசை தமிழ் ரசிகர்களுக்கு ஹலீம் விருந்தாக அமையலாம்.
                     



Monday, June 16, 2014

விபத்து..! (சிறுகதை)

                 


                     கண்விழித்துப் பார்த்த போது ரோட்டின் ஓரத்தில் விழுந்து கிடந்தேன். கைகளில் சிராய்ப்பு காயங்கள். எழுந்து நின்று கால்களை மடக்கிப் பார்த்தேன். பெரிதாய் ஒன்றும் அடிபடவில்லை. என்ன நடந்தது என நினைத்துப் பார்க்க முயன்று தோற்றேன். அருகே ரோட்டை விட்டு சற்று கீழிறங்கி மணலில் விழுந்து கிடந்தது என்னுடைய பல்ஸர்.. வண்டியை தூக்கிப் பார்த்தபோது தான் அதன் வலப்பக்க கண்ணாடி உடைந்து வெறும் கூடு மற்றும் நின்று கொண்டிருந்ததைக் கவனித்தேன். டாங்க் பக்கத்தில் பெரிதாய் தேய்ந்திருந்தது. ரோட்டில் நீண்ட தூரம் இழுத்துக் கொண்டு சென்றிருக்க வேண்டும். 

                         தலை லேசாக சுற்றுவது போலிருந்தது. தலையில் எங்காவது அடிபட்டிருக்குமோ? தொட்டுப் பார்த்துக் கொண்டேன். காயங்கள் எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தாலும் தெரியும் நிலையில் இல்லை. கண்கள் மின்னி மின்னி மறைந்தது. ச்சே.. ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டிருக்கனும்.  விபத்து எப்படி நடந்தது, என் வண்டியின் மீது எது மோதியது என்பதையெல்லாம் யோசிக்க யோசிக்க தலைவலி தான் கூடியதே தவிர விடையில்லை. லேசாக எதோ சப்தம் கேட்டது. ஒரு பெண்ணின் விசும்பல் சத்தம் அது.  ரோட்டின் மறுபுறம் மரத்தின் ஓரத்தில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருந்தாள். விட்டுவிட்டுக் கேட்டது அவள் குரல். காதில் இப்போது லேசாய் வலிப்பது போன்ற உணர்வு.

                           காதைத் தடவி விட்டுக்கொண்டே அவளைப் பார்த்த போதுதான் அவள் மடியில் ஒரு குழந்தை இருப்பது தெரிந்தது. இரண்டு வயதிருக்கலாம். வேகமாக ரோட்டைக் கடந்தேன். அவளருகில் சென்று பார்த்த போது குழந்தையின் தலையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கைகள் வேகமாய்ப் பாக்கெட்டுக்குள் இருந்த செல்லை எடுத்து எண்களை ஒற்றியது. "ஹலோ, ஜி.ஜி ஹாஸ்பிடலா? இங்கே ரேஸ் கோர்ஸ் சாலையில் காபி டே பக்கத்துல ஒரு ஆக்சிடென்ட் ஆகி குழந்தைக்கு அடி பட்டிருக்கு. வேகமா வாங்க" என்றேன். அணைத்து விட்டு அந்த குழந்தைக்கு ஏதாவது முதலுதவி செய்ய முடியுமா என்று சுற்று முற்றும் பார்த்தேன். ரோட்டின் மறுபுறம் கிடந்த  என் வண்டியை தவிர வேறெந்த வாகனமும் இல்லை. கடைகள் எதுவும் திறந்திருக்குமா என்று பார்க்க ரோட்டில் அங்குமிங்கும் ஓடினேன்.

                         சற்று தொலைவில் இருந்த வளைவு திரும்பியதும் மாருதி 800 ஒன்று நின்று கொண்டிருந்தது . உள்ளே யாரும் இருக்கவில்லை. முன் பக்கமாக சென்றேன், அதன் முகப்பு போர்டு தொங்கிக் கொண்டிருந்தது. இவன் தான் இடித்திருக்க வேண்டும். இடித்து விட்டு ஓடிவிட்டான் படுபாவி. என்று மனதுக்குள் அவனை சபித்துக் கொண்டிருக்கையில் ஆம்புலன்ஸ் வரும் சப்தம் கேட்டு விழுந்த இடத்திற்கே ஓடிவந்தேன். ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. கூடவே ஒரு போலிஸ் ஜீப்பும். அந்தப் பெண் குழந்தையை ஏற்றிவிட்டு போலீசிடம் எதோ கூறிக் கொண்டிருந்தாள்.. என் காதுகளில் அவை எதுவும் விழவில்லை. 
               
                         இவ்வளவு சீக்கிரமாக ஆம்புலன்ஸ் வந்த ஆச்சர்யத்தோடு நான் அவர்களை சமீபித்த போது அவள் பேச்சை நிறுத்திக் கொண்டாள். நான் அந்த இன்ஸ்பெக்டரிடம் "சார், அதோ அந்த வளைவுல ஒரு மாருதி கார் நிக்குது. அவன்தான் எங்களை இடிச்சிருக்கணும்." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அதை சட்டை செய்யாமல் உள்ளிருந்து எதோ ஒரு சாதனத்தை எடுத்து என் வாயருகே வைத்து "அந்த கார் ரெண்டு நாளைக்கு முன்னாடியிருந்து அங்க தான் நிக்குது. நீ இதுல ஊதுடா" என்றார்.
    

                                             *********XXX**********


வாசகர் கூடத்தில் இன்று :   கோபல்ல கிராமம் 


Thursday, June 12, 2014

ஆவி டாக்கீஸ் - Edge of Tomorrow




கண்விழிக்கிறான்... தன் பதவிக்குரிய மரியாதை தரப்படாமல் ஒரு சாதாரண வீரனாக போர்க்களத்துக்கு அனுப்பப் படுகிறான். ராட்சத மிருகங்களை வேட்டையாடுகிறான். நாயகியை காப்பாற்ற முயல்கையில் உயிர் துறக்கிறான். மீண்டும்..

கண்விழிக்கிறான்... மரியாதை தரப்படாமல் ஒரு சாதாரண வீரனாக போர்க்களத்துக்கு அனுப்பப் படுகிறான். மிருகங்களை வேட்டையாடுகிறான். நாயகியை காப்பாற்றுகிறான். தப்பி வரும்போது நாயகி இறக்கிறாள். அவளை பார்த்தபடி இருக்கும் இவன் மேல் ஒரு டாங்கர் மோத இறக்கிறான். மீண்டும்..

கண்விழிக்கிறான்...  போர்க்களத்துக்கு அனுப்ப தயார் செய்யப்  படுகிறான். நாயகியை காப்பாற்றுகிறான். தனக்கு இருக்கும் சக்தியினை அறிகிறான். கடமையை உணர்கிறான்.இறந்தால் மீண்டும் தான் வாழ்ந்த அந்த ஒரு நாளுக்கு பின்னோக்கி செல்ல முடியும் என அறிந்து இறக்கிறான்.. மீண்டும்..

கண்விழிக்கிறான்... போர்க்களத்துக்கு அனுப்ப தயார் செய்யப்  படுகிறான். நாயகியுடன் சேர்ந்து மிருகத்தை கொல்ல  பயிற்சி எடுக்கிறான். தோல்வியடைகிறான். நாயகி அவனை சுட்டுக் கொல்கிறாள். மீண்டும்..

கண்விழிக்கிறான்...  நாயகியுடன் சேர்ந்து மிருகத்தை கொல்ல பயிற்சி எடுக்கிறான். ஜெயிக்கிறான் ..வினோத ஜந்துவின் ஆணிவேரான ஒமேகாவை கொல்லச் செல்கிறார்கள். தோல்வி அடைகின்றனர். தன்னைத் தானே சுட்டுக் கொள்கிறான்.. மீண்டும்..

கண்விழிக்கிறான்... 

இப்படி செத்து செத்து விளையாடி கடைசியில வினோத ஜந்துவை கொன்று பிரான்ஸை டாம்க்ரூஸ் காப்பாற்றினாரா, இல்லையா என்பது தான் கதை.. ஷப்பா.. இதுக்கு மேல இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுத ஒண்ணும் இல்ல.. நல்ல படம். சுவாரஸ்யம் அதிகம். ஆங்காங்கே இயல்பான நகைச்சுவையும்..  ஆக்க்ஷனுக்கும் குறைவே இல்லை. 3டியில் பார்க்கும் போது இன்னும் ஜோர்!! குட்டிப் பசங்களோட போகும்போது அவங்க கேக்குற டவுட்டுகளுக்கு தயாரா போங்க!!


பி.கு:  ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துல மூணு தடவ திரும்பத் திரும்ப ஒரே காட்சி வந்ததுக்கு சலிச்சுகிட்டவங்க தயவு செய்து இந்தப் படத்தை தவிர்த்து விடவும். மற்றபடி நல்ல படம்தான்!!

இந்தப் படம் டிவிடியில் பார்க்க உகந்ததல்ல. முடிந்தால் திரையில் காணவும். இல்லாவிட்டால் பார்க்காமல் விட்டுடுங்க.. படத்தின் பிரம்மாண்டத்தை திரையரங்கில் மட்டுமே ரசிக்க முடியும்..!


கடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து

                   


                             "இந்தப் பொறப்புதான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது.."- உன் சமையலறையில் படத்துல வர்ற இந்தப் பாட்டு முதல் முறை கேட்டதுமே மனசுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டா மாறிடுச்சு.. காரணம் நம்ம பாலிசியும் அதுதானே.. தேடித் தேடி ருசிச்சு சாப்பிடறதுல இருக்கிற சுகம் வேறேதாவது இருக்கா? எனக்கு முன்னாடியே பல ஜாம்பவான்கள் நல்ல நல்ல ஹோட்டல்கள் பத்தியும் அங்கே கிடைக்கிற ஸ்பெஷல் ஐட்டங்களைப் பத்தியும் சுவைபட எழுதிட்டு வர்றாங்க.. இருந்தாலும், நாம சுவைச்சு ரசிச்சத நாமே சொன்னாதானே இன்னும் ருசி அதிகம்.. அதான் கிளம்பிட்டேன்.. இதுவரை எல்லாத்துக்கும் ஆதரவு கொடுத்து வந்த வாசகப் பெருமக்கள் இந்த கடோத்கஜா மெஸ்ஸுக்கும் ஆதரவு தருவீங்கன்னு நம்பறேன்.


                                          கண்ணன்ணன் விருந்து 


                                மதுரை அளவுக்கு இல்லாட்டாலும் கோவையும் உணவுக்கு பெயர்போன ஊர்தான். ஒரு நாள் நல்ல பசி. மணி வேற மூணு ஆயிட்டுது. வழக்கமா போற ஹோட்டல் எல்லாம் தொலைவில் இருக்கு சட்டுன்னு நினைவுக்கு வந்தது இந்த கண்ணன்ணன் விருந்து. "தலைவாழை இலை விருந்து" ன்னு நம்ம ஜீவானந்தன் சார் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.  கோவை வாசிகளுக்கு ஆர்.எஸ்.புரம் ன்னா நல்லா தெரியும். RS புரம் TV சாமி  ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி வரும்போது வலப்புறம் இருக்கும் இந்த உணவகம். (எதிர்ல ஒரு KVB பேங்க் இருக்கும், அதான் லேண்ட்மார்க்) 

நரேன் கார்த்திகேயன் நண்பர்களுடன் 


                                 பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாம தான் நண்பர்களோடு உள்ளே போனேன். அங்க நுழைஞ்சதும் ஒரு வீட்டுக்கு விருந்தாளியா போன பீல் இருந்தது.. ( வீட்டையே ஹோட்டலா மாத்திஇருந்தனால கூட அப்படி தோணியிருக்கலாம் ). உள்ளே பிஸியாக இருந்ததால் பத்து நிமிடம் ஹாலில் அமர வேண்டியிருந்தது. பின்னர் உள்ளே அழைக்கப்பட்டு எல்லோருக்கும் தலை வாழை இலை பரிமாறப்பட்டது. வரிசையாக ஐட்டங்கள் நிறைய நாவில் அப்போதே எச்சில் ஊற ஆரம்பித்தது.


தலைவாழை இலை விருந்து 


                                   நடுவில் கொஞ்சம் சாதம், சிக்கன் வறுவல், மூளை வறுவல், தலக் கறி, புதினா சிக்கன், மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல், குடல் என நிரம்பி வழிந்தது இலை. காந்திக்கு இது சுத்தமாக பிடிக்காது என்பதால் பர்ஸில் இருந்த காந்தியை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு "Goat" சே வை வரவேற்றோம். முதல் ரவுண்ட் சிக்கன் குழம்புடன் துவங்கியது. 

கறிவேப்பிலை சிக்கன் 

நாட்டுக்கோழி வறுவல் 


                                    பின்னர் மட்டன் குழம்பு மற்றும் மட்டன் சாப்ஸ் பிறட்டியும் இரண்டாவது மூன்றாவது ரவுண்டுகள் இனிதே சென்றன. அதற்குள் இலையின் பக்க வாத்தியங்கள் எல்லாம் காலியாகி விட மீண்டும் ரீபிள் செய்யப்பட்டது. (எல்லாம் அன்லிமிடெட் என்பதால், நமக்கு வயிறு நிறையும் வரை சாப்பிடலாம்)

மட்டன் சாப்ஸ் 


பெப்பர் Tomato சிக்கன் 

                                     நான்காவது ரவுண்டு எல்லோரும் சிக்கன் ரசத்தை ருசி பார்க்க நான் ரசத்தை  சாதத்துடன்  உண்ண மாட்டேன் என்பதால் அதை லைட்டாக ருசி பார்த்துவிட்டு தயிருக்கு என்டர் ஆனேன். தயிருடன் மூளை வறுவல் தேவாமிர்தமாக இருந்தது.  மட்டன் சாப்ஸின் காரம் காதை அடைக்க இலையில் சீண்டப் படாமல் கிடந்த கேசரிக்கு வாழ்வளித்தேன். ஓரமாய் வெட்டிப் போடப்பட்டு பெப்பர் தூவப்பட்டிருந்த வேகவைத்த முட்டை ஒரே வீச்சில் உள்ளே போக வயிறு நிறைந்ததற்கான சிக்னல் வந்தது. அன்று லேட்டாக சென்றதால் கடல் உணவு வகையறா எல்லாம் முடிந்து விட்டது. 

குடல் கூட்டு 


                                       கடைசியாக ஜீரணத்துக்கு உதவ புதினா கொண்டு செய்த லெமன் ஜூஸ் பரிமாறப் பட்டது (இதற்கு மட்டும் நாம் எக்ஸ்ட்ரா பணம் கொடுக்க வேண்டும்) கடைசியாக உணவின் சுவை பற்றி கேட்டுவிட்டு பில்லை கொடுத்தனர். ஒரு ஆளுக்கு முன்னூற்றி ஐம்பது ( Tax உள்பட ) + ஜூஸ் முப்பது ருபாய். நல்ல உணவை சாப்பிட்ட திருப்தியுடன் பில் பணத்துடன் சேர்த்து ஐம்பதை டிப்ஸாக கொடுக்க அதை வாங்க மறுத்த ஊழியர், நானும் இந்த கடையோட பார்ட்னர் தான், டிப்ஸ் வேணாங்க என்று அன்புடன் மறுத்தார். 

ஹைலைட் : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..


                                         கோவை வாசிகள் ஒரு நாள் மதிய உணவை குடும்பத்தோடு வந்து உண்டு கழிக்க சிறந்த உணவகம். ( முன்பே தொலைபேசியில் அழைத்து ரிசர்வ் செய்து கொள்ளுமாறு ஹோட்டலில் அறிவுறுத்தினார்கள்). வெளியூர் அன்பர்களும் கோவை வருகையில் இங்கே உண்டு மகிழலாம். மேலும் விபரங்களுக்கு இவர்களின் பேஸ்புக் பக்கத்திற்கு செல்லுங்கள்..



Monday, June 9, 2014

பயணிகள்-நிழற்குடை - 2014JUN09



ஹேட்ஸ் ஆப் டு யூ விஜய் டிவி..!

                    திருநங்கைகளை பற்றிய ஆழமான கலந்துரையாடல் இந்த வார நீயா நானாவில்.. அவர்களுக்கும் ஒரு மனதுண்டு, ஆண், பெண் போல் ஆசாபாசங்கள் உண்டு என்றெல்லாம் திருநங்கைகளை இதுவரை வெறும் காட்சிப் பொருளாய் பார்த்தவர்கள் கூட எண்ணியிருக்க கூடும். அவ்வளவு டச்சிங்காக இருந்தது நிகழ்ச்சி.. அதிலும் ஒருவர் கணவரைப் பற்றி கூறியபோது நெகிழ்ச்சியாக இருந்தது. சில திருநங்கைகள் காசு பிடுங்குவதற்காக சில தவறான வழிமுறைகளை கையாண்டிருக்கிறார்கள். அந்த மோசமான அனுபவம் எனக்கும் உண்டு.. அவர்களுக்கு வாழ ஓர் அங்கீகாரம் கொடுத்துவிட்டால் நிச்சயம் அது போன்றவற்றை தவிர்த்து விடுவார்கள் என்பது திண்ணம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஜய் டிவிக்கு ஒரு சலாம்..!



இந்த வார மிக்ஸிங்..!

அமைச்சர் ஆவியானந்தா!


ஒய் மீ ஆல்வேஸ்? 

                           அரும்பாடுபட்டு லைசன்ஸில் முகவரி மாற்றி வந்த எனக்கு வந்தது மற்றொரு சோதனை. சில பொருட்கள் வாங்க RS புரம் சென்ற நான் அனாமிகாவை (எனது i20) அங்கு ஒரு ஹோட்டலின் முன் இருந்த பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இன்ஜினை ஆப் செய்தேன். அதே நேரம் வண்டியே குலுங்கும் அளவுக்கு ஏதோ இடித்தது போல உணர்ந்தேன். சீட் பெல்டை கழற்றிவிட்டு வெளியே இறங்க, அதற்குள் ஒருவன் டூவீலரை அவசர அவசரமாக கிளப்பி எதிர் திசையில் சென்றான். ஒன்றும் புரியாமல் காரை சுற்றி வந்த எனக்கு தலை சுற்றியது. காரின் முன்புறம் இருந்த பம்பர் உடைந்தும் , Fog லைட் தொங்கிக் கொண்டும் இருந்தது. டூ வீலரை பார்க் செய்ய வந்தவன் இடித்து விட்டு அப்படியே ஓடிவிட்டான். அவனை சிறிது நேரம் திட்டிவிட்டு தண்டச் செலவு அழுதுவிட்டு வந்தேன். வானத்தை நோக்கி ஒரே கேள்வி கேட்டேன்.. ஒய் மீ ஆல்வேஸ்?


இணையத்தில் 'பிடித்தது':


ஆகச்சிறந்த ரணம் எதுவெனில்,

பிரியங்கள் நிறைந்திருந்த தருணங்களை

பிரியமற்ற தருணத்தில் நினைப்பது தான்.



ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று..

                           அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருந்த சமயம், சென்னை ஏர்போர்ட்டில் டாக்ஸிக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்நேரம் அங்கு வந்த ஒருவன் திண்டிவனத்திலிருந்து வந்ததாகவும், பர்ஸை திருடிவிட்டார்கள் என்றும், ஏதாவது உதவி செய்யுமாறும் கேட்டு நின்றான். அவன் உடையும் கோலமும் பரிதாபப்பட வைத்தது. அழைத்து சென்று அருகிலுள்ள டீக்கடையில் இருவருக்கும் டீ சொல்லி, அவனுக்கு வடையும் வாங்கிக் கொடுத்து பின் அவன் கையில் நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினேன். பின்னர் மூன்று வாரங்களுக்கு பிறகு திரும்ப அமெரிக்கா செல்ல ஏர்போர்ட் வந்தபோது அதே ஆள் மீண்டும் யாரிடமோ காசு கேட்டுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் எதிர்திசையில் சென்று மறைந்துவிட்டான். சென்ற மாதம் நண்பன் ஒருவன் யு.எஸ்ஸிலிருந்து வந்திருந்தான். அவனைப் பார்க்க விருதுநகர் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் இதுபோன்றே வந்து பணம் கேட்க, நான் கொடுக்க மறுத்ததோடு நண்பனையும் கொடுக்க விடவில்லை. "பார்த்தா Genuine ஆ தெரியராண்டா" என்ற அவனிடம் எனக்கு நடந்த கதையை கூறினேன். சமீபத்தில் மஞ்சப்பை என்ற படம் பார்த்த போது அதில் இதுபோன்ற காட்சி வந்ததும் எனக்கு இந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது.. உஷார் மக்களே.. இதுபோல நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள்..
                   

சமீபத்தில் ரசித்த பாடல்:

சத்தியமா நஸ்ரியாவுக்காக அல்ல..! ஹிஹிஹி..





கிஸு கிஸு கார்னர்: இவங்களுக்குள்ள மெய்யாலுமே 'அதுவா'?


                     சாதாரணமா விளையாடிக்கிட்டுருந்த ஒருத்தன் மரண அடி அடிக்கிறான்னா ஒண்ணு அவன் யூசுப் பதானா இருக்கணும்.. இல்லீன்னா பையன் லவ்வுல விழுந்திருக்கணும்.. குவாலிபையர் மேட்சுல அடி பின்னுனத பார்த்தா அப்படித்தான் தோணுது..இவங்களுக்குள்ள மெய்யாலுமே அதுவான்னு கேட்டா, உலக நாயகன், நாயகன்ல சொல்ற அதே பதில்தான்.. "தெர்லியேபா"..!

உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க, வர்ட்டா...!
              
                                  ***************** X *******************





How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...