Thursday, September 16, 2010

எந்திரன் - ட்ரைலர்





                   எந்திரன் தணிக்கை (சென்சார்) குழுவிடமிருந்து "U"  சான்றிதழ் பெற்று விட்டது. இந்த புதிய ட்ரைலர் எந்திரன் எனும் பிரம்மாண்ட படத்தின் முன்னோட்டத்தை நமக்கு அளிக்கிறது. திரைப்படம் அக்டோபர் 1 ம் தேதி வெளியிடபோவதாக சொல்லப் படுவதாக நம்பப் படுகிறது.. 


நன்றி சன் டிவி, YouTube 


.

Wednesday, September 15, 2010

57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு!!



இசைஞானி இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்துள்ளது. "பா" திரைப்படத்தில் சிறுவனாக நடித்த அமிதாப் பச்சனுக்கு "சிறந்த நடிகர்" விருதும், "பசங்க" திரைப்படத்தில் பெரியவர்களுக்கு ஈடாக நடித்த பட்டி மற்றும் கேஷு சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


மற்ற விருதுகள் பின்வருமாறு..

Best Film - 'Kutty Shrank'
Best Director - Rituparno Ghosh for Abohoman
Best Supporting Actress - Arundhati Nag for ‘Paa’
Best Supporting Actor - Farooq Sheikh for 'Lahore'
Best Popular Film, Best Director and Best Producer – ‘3 Idiots’
Best Film on Social Issues - Shyam Benegal's 'Well Done Abba'
Best Film on National Integration - Rakeysh Omprakash Mehra's 'Dilli-6'
Best Camerawork - Anjali Shukla.
Best Music Director - Amit Trivedi for Dev D
Best Playback Singer (Male) - Rupam Islam
Best Playback Singer (Female) - Niranjana Sarkar (Housefull)
Best Sound Engineer - Oscar winner Resul Pookutty
Best lyrics - Swananad Kirkirey for 3 Idiots
Best Choreography - K Shivashankar for film Magadheera


.                              

Monday, September 13, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்

                    எந்திரன் ரிலீசாக இன்னும் சில வாரங்களே இருக்க, கம்பீரமாக வெளிவந்திருக்கிறான் பாஸ் என்கிற பாஸ்கரன். தமிழில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ஒரு முழு நீள காமெடிப் படம்..


                     வேலை வெட்டி எதுவும் இல்லாத, நண்பனின் சலூனில் அரட்டை அடித்தும், ஊர் சுற்றியும், பல முறை அரியர் எழுதியும் பாசாக முடியாமல் தவிக்கும் பாஸ்கரன், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவது தான் கதை.. இந்த மெல்லிய கதைக்கு பலம் மூன்று பேர் - ஒன்று நாயகன் ஆர்யா.. இரண்டு கிட்டத்தட்ட நாயகனுக்கு சமமாக நடித்திருக்கும் சந்தானம். மூன்றாவது டைரக்டர் ராஜேஷ். 

                        படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆர்யாவும் சந்தானமும் செய்யும் காமெடி சேட்டைகள் அட்டகாசம். குறிப்பாக "நண்பேண்டா " என ரஜினி ஸ்டைலில் இவர்கள் மாறி மாறி சொல்லும் போது விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள். "ஊர்ல அவனவன் பத்து பதினைந்து நண்பார்களை வச்சுட்டு சந்தோசமா இருக்கான். நான் ஒரே ஒரு பிரெண்ட வச்சுட்டு முடியலே" என்று சந்தானம் புலம்புமிடம் தியேட்டரில் விசில் பார்க்கிறது. 

                         இசை யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை அருமை. பாடல்கள் பரவாயில்லை ரகம். "யார் இந்தப் பெண்தான் என்று" பாடல் இனிமை. இடையிடையே இளையராஜாவின் இசையை பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம்.. நாயகி நயன்தாரா,  நல்ல கேரக்டர், அம்சமாக வந்து போயிருக்கிறார். அண்ணன் கேரக்டரில் வருபவர் நல்ல குணச்சித்திர நடிகராக வர வாய்ப்பிருக்கிறது.  

                             "அரியர் மேட்" , "தல தளபதி", "அப்பா டக்கர்", "டோகோமோ கம்பெனி ஓனர்", "பாடன்" இப்படி பல ஒன் லைனர்களின் மூலம் கிச்சு கிச்சு மூட்டியிருக்கிறார்கள்.மொத்தத்தில் பாஸ் என்கிற பாஸ்கரன் டிஸ்டிங்ஷனில் பாஸ் பண்ணியிருக்கிறார்..

75 / 100

Saturday, September 11, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 5






அண்ணா விமான நிலையம்.. சென்னை 


                              விமானத்தில் இருந்து இறங்கி பெட்டிகளை பெற்றுக் கொண்டபின் தன் மனைவியுடன் வெளியே வர எத்தனித்த போது தூரத்தில் தன் தாயையும் தந்தையையும் பார்த்தான் ரிஷ்விக்.. வயதான இவர்களை தனியே தவிக்க விட்டுவிட்டு தான் மட்டும் அந்நிய தேசத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டிருப்பதை நினைத்து ஒரு நொடி கண்ணீர் சிந்தினான். 
                                   
                                 அவர்கள் நின்றிருந்த இடத்தை நெருங்க முயன்ற போது ஒரு பெருங்கூட்டம் ஒன்று அவனை சுற்றி வளைத்தது. அவனுக்கு எண்ணற்ற மாலைகள் அணிவித்து திக்கு முக்காடச் செய்தனர்..அவன் கணிப்பொறி உலகில் செய்த சாதனைகளுக்காக அமெரிக்காவில் உள்ள கார்நிகி-மெலன் பல்கலைக்கழகம் அவனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்ததை கொண்டாடும் விதமாக இந்திய அரசாங்கம் அவனுக்கு பத்மபூஷன் விருதை அறிவித்திருந்தது. 


                                 அடுத்த வாரம் ஜனாதிபதி டெல்லியில் இந்த விருதை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.மறுநாள் மாலை தமிழக முதல்வருடன் தேநீர் விருந்து, இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த திரைப்படத்தின் கம்ப்யுட்டர் கிராபிக்ஸ் செய்வதற்கு நவீன யுத்திகளை பற்றி பேசுவதற்காக நேரம் கேட்டிருந்தார்.. அவருக்கு நாளை மறுநாள் வருவதாக சொல்லிவிட்டு கைபேசியை அமர்த்திய போது அம்மாவின் குரல் கேட்டது.. "ரிஷ்விக், டே ரிஷ்விக்" 


                                 தன் வளர்ச்சிக்கு மூல காரணமான தன் அன்னைக்கும் தந்தைக்கும்  ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணினான்.. "நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன்.. என்னன்னு கேக்குறானா பாருங்க". அம்மா ஏதோ சொல்வதற்காக கூப்பிடுகிறாள்.. வாசலில் பக்கத்து வீட்டு கவிதா நின்று கொண்டிருக்கிறாள். இவள் இப்போது எதற்காக இங்கே வந்திருக்கிறாள். ஹாலில் ரேஷ்மா அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். டீப்பாயில் ஆரஞ்சு பழச்சாறு பாதி மட்டும் இருக்கிறது. 


                                 லாவண்யாவும் வந்திருக்கிறாளா? என்ன விசேஷம் இன்னைக்கு என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே யாரோ பிரம்பால் அடிப்பது போன்ற உணர்வு.. துவண்டு எழுந்த போது எதிரில் அப்பா.. "எட்டு மணியாச்சு.. இன்னும் என்னடா தூக்கம். செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு ராத்திரி பூராவும் உளறிகிட்டு இருக்கே.. ஆறாவது வகுப்பிலயே ரெண்டு வருஷமா படிச்சு கிட்டு இருக்கே.. இந்த வருசமாவது பாஸ் பண்ற வழியப் பாரு!!!"


                                                                     முற்றும்...


"ஆவ்வ்வ்வ்வ் .. இப்படி எல்லோரும் ஒட்டு மொத்தமா அடிக்க கிளம்பப் பெடாது.. எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்.."


Friday, September 10, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 4










"வுட் யு லைக் டு ஹேவ் சம்திங்?"  என்ற குரல் கேட்டு கண்விழித்த போது விமானப் பணிப்பெண் குளிர் பான வண்டியுடன் நின்றிருந்தாள். 


"ஆரஞ்ச் ஜூஸ் ப்ளீஸ்"   என்றதும் அவன் கைகளில் ஆரஞ்சுப் பழச்சாறு ஊற்றிய ஒரு கோப்பையை திணித்துவிட்டு அடுத்த பயணியை நோக்கி நகர்ந்தாள் அவள். ரிஷ்விக் அருகில் உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை எழுப்ப மனமின்றி அவள் விழித்திராத வண்ணம் மெதுவாக அவள் தலையை தன் தோள்களில் இருந்து விலக்கி தான் கொண்டு வந்திருந்த "பயணத் தலையணையை" வைத்துவிட்டு சற்றே இளைப்பாறினான். சில்லென்ற ஆரஞ்சுப் பழச்சாற்றை தொட்ட போது அவனுக்கு கவுன்சிலிங் தினத்தன்று லாவண்யாவுடன் அங்கிருந்த கேண்டீனில் பழச்சாறு குடித்தது நினைவுக்கு வந்தது.


" ஆரஞ்ச் ஜுசுண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு ?"


" எனக்கும் பிடிக்கும்"   இப்போதும் ஒற்றை வார்த்தையில் நிறுத்தி கொண்டான். மனதுக்குள் பட்டாம்பூச்சிக் கூட்டம். அவளிடம் சொல்வதற்கான சரியான சமயத்திற்காகக் காத்திருந்தான்.


"என்னடா, என்னவோ சொல்லனும்னு கூட்டிட்டு வந்திட்டு சும்மா உக்காந்து கிட்டு இருக்கறே?"   பட்டென்று அவள் கேட்டதும் அவன் படபடப்பு அதிகமாகியது..

" அது வந்து ..."   அவன் நா வறண்டது. சொல்ல வந்த வார்த்தைகள் நாக்கின் அடியில் ஒளிந்து கொண்டு வர மறுத்தது.. சேரன் டவரில் ஜோடி ஜோடியாய் சுற்றித் திரியும் காதலர்கள் எல்லோரும் எவ்வளவு மனத்திடம் மிக்கவர்கள் என எண்ணிக்கொண்டான்.


"ஒண்ணுமில்ல.." என்று அவன் ஆரம்பிப்பதற்குள் அவள் இடைமறித்து..

"டேய் .. லவ் கிவ்வுன்னு எதாவது சொல்லி தொலைச்சுராதே. உன் அமைதியான கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் லொட லொடன்னு இப்படி பேசிக்கிட்டே இருக்கேன். நீ பொறுமையா எல்லாத்தையும் கேட்டது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சுது. கண்டிப்பா நமக்குள்ள ஒரு நல்ல வேவ் லெங்க்த் இருக்கு. அத ஒரு நல்ல நட்பா மாத்திக்கணும்னு நான் நினைக்கறேன். அதுக்கு காதல்ன்னு சாயம் பூச நீ நினைச்சா அதுக்கு நான் ஆள் இல்லே. என்ன என்கூட பிரெண்டா இருக்கியா? "

அவளுடைய பதில் அவனுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் அவளுடைய அணுகுமுறை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளைப் போன்ற ஒரு தோழியை கொடுத்ததற்கு கடவுளிடம் நன்றி கூறினான். 


கடைசி சொட்டு பழச்சாறு காலியானதும் அவன் தன் நினைவுகளிலிருந்து கலைந்து விமான சிப்பந்தி கூறிய அறிவிப்பை கேட்டான். இன்னும் பதினைந்து நிமிடங்களில் சென்னை விமான நிலையத்தை அடையும் என்ற அறிவிப்பை கேட்டு மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் தோன்றியது. ஆறு வருடங்களுக்குப் பின் அன்னை பூமியை மிதிக்கப் போகும் அவன் அங்கே நடக்கப் போகும் எதையும் அப்போது அறிந்திருக்கவில்லை..





 

Wednesday, September 8, 2010

"இதய" அஞ்சலி

                    
                          தமிழ் சினிமாவை நீண்ட காலமாக ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் ஆக்கிரமித்து இருந்தாலும் தன்னுடைய திறமையான நடிப்பால் மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் முரளி.. நேற்று இருதயத்தில் ஏற்பட்ட வலி காரணமாக இயற்கை எய்தினார்.
                        அவர் நடித்த திரைப்படங்களில் எப்போதும் காதலை வெளிப்படுத்தியது இல்லையென்றாலும் நிஜ வாழ்க்கையில் அவர் திருமணம் செய்தது அவர் காதலியை. 46 வயதான அவருக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர் சமீபத்தில் அவர் மகன் அதர்வா  அறிமுகமான "பாணா காத்தாடி" படத்தில் நடித்திருந்தார்.


Friday, September 3, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 3




"என்னங்க, என்ன ஒரே யோசனைல இருக்கீங்க. நம்ம பிளைட் போர்டிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.. " நினைவுகளிலிருந்து மீண்ட போது எதிரில் ரேஷ்மா நின்று கொண்டிருந்தாள்.


"அப்புறம் இதோ இந்த அம்மாவோட பசங்க ரெண்டு பேரும் இங்க யு.எஸ் ல தான் இருக்காங்க. அவங்க இங்கயே சிட்டிசன்ஷிப் வாங்கியிருக்காங்க.. ஆனா இந்தம்மாவுக்கு நம்ம ஊர்ல இருக்கத்தான் பிரியமாம். ஆனாலும் பசங்க இல்லாம தனியா இருக்க கஷ்டமா இருக்காம்"


"ரிஷ்விக், நீ எங்களையெல்லாம் விட்டுட்டு தனியா இருக்கப் போறேன்னு நினைக்காதே! உன்னப் பத்தி இப்போ  தாழ்வா நினைக்கிறவங்க முன்னாடி நீ ஜெயிச்சு காட்டணும். உன் அம்மா நான், உன்கூட எப்பவும் இருப்பேன். தைரியமா போயிட்டு வா."
அம்மாவின் குரல் இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.


போர்டிங் பாஸை காண்பித்து விட்டு பிளைட்டினுள் இருவரும் ஏறினர். வழக்கம் போல் விண்டோ சீட்டில் உட்கார்ந்து கொண்டாள் ரேஷ்மா.


"மீறிப் போனா ஒரு பத்து நிமிஷம். அதுக்குள்ள தூங்கிடுவே. அதுக்கெதுக்கு விண்டோ சீட்?" என்றவாறே அருகிலிருந்த சீட்டில் அமர்ந்தான்.


தனது ஐ-போனை சுவிட்ச் ஆப் செய்ய எத்தனித்த போது தனது நண்பன் வலைப்பதிவில் பிரசுரித்திருந்த ஒரு கவிதையைப் படித்தான்.  சில நொடிகளில் எண்ண வலையில் சிறைப்பட்டிருந்தான்.


_______________________________________________________________________
"நல்லா கவிதை எழுதற ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அம்மாகிட்டே சொன்னியாமே, உண்மையா?"


"கவிதா, உன் பேரே ஒரு அழகான கவிதை. உனக்கு கவிதை எழுதத் தெரியாட்டியும் பரவாயில்லே, உன்னையே கல்யாணம் செய்துக்கறேன்."
_______________________________________________________________________
"லைப்ல காதல் ஒரு சின்ன பாகம் மட்டும் தான். உனக்கு டேலன்ட் இருக்கு, நல்ல வேலைக்கு வருவேன்னு ஒரு தப்புக் கணக்கு போட்டுட்டேன். இப்படி வருசத்துக்கு மூணு கம்பனில வேலைய விட்டுட்டு வந்து நிக்கற உன்னை நம்பி நான் எப்படி கழுத்த நீட்டுவேன். நீயே சொல்லு"


"என்ன கவி, இப்படியெல்லாம் பேசுறே. நான் மனசுக்கு பிடிக்காம சும்மா கோடிங் எழுதி பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லே. இதே நம்ம கல்யாணத்துக்கு பின்னாடி நடந்திருந்தா, என்ன பண்ணியிருப்பே?"


"கண்டிப்பா டைவர்ஸ் பண்ணியிருப்பேன்" 

_______________________________________________________________________
"ரிஷ்விக், எனக்கு தெரியும், நீ எப்படியும் லைப்ல மேல வந்துடுவேன்னு. உனக்கு இன்னும் எம்மேல கோபமா?"

"கவி, இப்போ எனக்கு அமெரிக்காவுல வேலை கிடைச்சிருக்கு. மறுபடியும் என்ன தேடி வந்து பேசறே. இப்போ இந்த வேலையும் வேண்டான்னு சொல்லிட்டா இப்போவே திரும்பி போயிடுவ தானே!!"
_______________________________________________________________________
"ரேஷ்மா, என் பேரு கவிதா. ரிஷ்விக்கை பத்தி ஒரு விஷயம் சொல்லணும்"
"சொல்லுங்க"
"...................."
"இத பாருங்க, என் கணவரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவரை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எட்டு வருஷம் முன்னாடியே தெரியும். அவருக்கு நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்கலாம். ஆனா யார்கிட்டயும் தவறான முறையில் பழகினது இல்லே. உங்களைப் பத்தியும் சொல்லியிருக்கார். அவர் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு!"
_______________________________________________________________________
தன் அன்னைக்கு அடுத்தபடியாக தன் மேல் முழு நம்பிக்கை வைத்திருக்கும் தன் மனைவியை பெருமையுடன் பார்த்தான் ரிஷ்விக். மெல்ல அவள் தலையை தன் தோள்களில் சாய்த்துக்கொண்டு கண்ணயர்ந்தான்.

(பி.கு. என்னடா, லாவண்யாவப்  பத்தி ஒண்ணுமே சொல்லலேன்னு பாக்கறீங்களா. லாங் ஜேர்னி. ரிஷ்விக் இப்போதான் தூங்கப் போயிருக்கான்.  அவன் எழுந்த உடனே கேட்கலாமே, ப்ளீஸ்!!)






Thursday, September 2, 2010

விடை இல்லா விடுகதை - பாகம் 2

பாகம் 1





ரிஷ்விக் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு லுப்தான்சா விமானத்தை பார்த்தான். தன்னையும் அறியாமல் லாவண்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.

"எனக்கும் லுப்தான்சாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா?.. ரெண்டு பேரும் "எல்" ல ஆரம்பிச்சு "ஏ" ல முடியும்".

 "ஜேர்னி டைம் அரைமணி நேரம் தான்னாலும் எனக்கு தூங்கவோ, பாட்டு கேக்கவோ பிடிக்காது. யார் கூடவாவது பேசிகிட்டு வரணும். ஏம் ஐ டிஸ்டர்பிங் யு?"

"இல்லங்க"

"பை தி பை.. ஐயாம் லாவண்யா.. நீங்க"

"ரிஷ்விக்"    
     
என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாலும் அவளுடன் பேசிக்கொண்டு வரவே அவன் விரும்பினான். பேச வேண்டும் என்ற ஆசை, ஆனால் என்ன பேசுவது என்றும் அறியாமல் தவித்துக் கொண்டிருந்த போது அவளே ஆரம்பித்தாள்.

"பர்ஸ்ட் டைம் ப்ளை பண்ணறீங்களா?"

"ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்?"

"ப்ளைட் டேக் ஆப் ஆகி பத்து நிமிடம் ஆன பின்னும் பெல்ட் கழட்டாம இருக்கீங்களே!"

"ஒ.. மறந்துட்டேன்.. தேங்க்ஸ்"

" யு ஆர் வெல்கம். என்ன விஷயமா சென்னை போறீங்க?"

"நாளைக்கு இன்ஜினியரிங் கவுன்சலிங்"

"வாவ்... வாட் எ சர்ப்ரைஸ்... நானும் கவுன்சிலிங்குக்கு தான் போறேன். ஆமா உங்க நேடிவ் எது"

"கோயம்புத்தூர் தான்! நீங்க"

" நான் பக்கம்தான்- ஈரோடு. படிச்சதெல்லாம் Presentation ல தான். நீங்க"

" நான் மைக்கேல்ஸ். ஒரு காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் தான்!!"

"அமேசிங்.. ஐ ஜஸ்ட் கான்ட் பிலீவ் இட்.."


அவள் நுனி நாக்கு ஆங்கிலத்தை கேட்ட போது இவளைப்போல ஒரு பெண் தனக்கு மனைவியாய் அமைந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தான். அவள் அணிந்திருந்த டி-ஷர்டும், கையில் வைத்திருந்த செல்போனும் அவள் நிச்சயம் ஒரு வசதியான வீட்டுப் பெண் என்பதை காட்டியது. அதனால் தானோ என்னவோ அவளிடம் நட்பு பாராட்ட மனம் இணங்க மறுத்தது. இருந்த போதும் அவள் முகத்தை திரும்பத் திரும்ப பார்க்காமல் இருக்க அவனால் முடியவில்லை.

"பேசிட்டு இருந்ததில நேரம் போனதே தெரியல. பிளைட் எறங்க போவுது. பெல்ட் போட்டுக்குங்க"

ப்ளைட் தரை இறங்கியதும் மறுநாள் பார்ப்பதாக சொல்லிவிட்டு அவள் வேகமாக இறங்கிச் சென்றாள். அவளிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்ற உணர்வு . அது நட்பா, காதலா, பருவத்தின் ஈர்ப்பா? - ஒரு விடுகதையாய் தோன்றியது அவனுக்கு.அவள் உருவம் புள்ளியாய் தேயும் வரை பார்த்துவிட்டு பின் அவள் போன் நம்பர் எதுவும் வாங்கிக் கொள்ளாததை நினைத்து தன்னைத்தானே திட்டிக் கொண்டான். நாளை கவுன்சிலிங்குக்கு வரும்போது தன் மனதில் உள்ளதை சொல்லி விட வேண்டும் என எண்ணினான்.

அவன் சொன்னானா? அவள் ஏற்றாளா? -- தொடரும்...






How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...